முகப்பு | தொடக்கம் |
கண்டீரக்கோப் பெரு நள்ளி |
148 |
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின் |
|
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி, |
|
நாள்தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து, |
|
கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்ப; |
|
5 |
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி, |
செய்யா கூறிக் கிளத்தல் |
|
எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
| |
கண்டீரக் கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது.
|
149 |
நள்ளி! வாழியோ; நள்ளி! நள்ளென் |
|
மாலை மருதம் பண்ணி, காலை |
|
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி, |
|
வரவு எமர் மறந்தனர் அது நீ |
|
5 |
புரவுக் கடன் பூண்ட வண்மையானே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
150 |
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன |
|
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி, |
|
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என் |
|
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி, |
|
5 |
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால், |
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி, |
|
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன், |
|
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ, |
|
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை, |
|
10 |
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே |
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத் |
|
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின் |
|
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின், |
|
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, |
|
15 |
நல் மரன் நளிய நறுந் தண் சாரல், |
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி, |
|
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே, |
|
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம் |
|
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என, |
|
20 |
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் |
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்; |
|
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்; |
|
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்; |
|
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே |
|
25 |
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி |
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின், |
|
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர், |
|
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
151 |
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, |
|
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து, |
|
புன் தலை மடப் பிடி பரிசிலாக, |
|
5 |
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க் |
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும் |
|
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர் |
|
நன்னன் மருகன் அன்றியும், நீயும் |
|
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப் |
|
10 |
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை |
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் |
|
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.
|