முகப்பு | தொடக்கம் |
கொண்கானங் கிழான் |
154 |
திரை பொரு முந்நீர்க் கரை நணிச் செலினும், |
|
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும் |
|
சில் நீர் வினவுவர், மாந்தர்; அது போல், |
|
அரசர் உழையராகவும், புரை தபு |
|
5 |
வள்ளியோர்ப் படர்குவர், புலவர்: அதனால், |
யானும், 'பெற்றது ஊதியம்; பேறு யாது?' என்னேன்; |
|
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே; |
|
'ஈ' என இரத்தலோ அரிதே; நீ அது |
|
நல்கினும், நல்காய் ஆயினும், வெல் போர் |
|
10 |
எறி படைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் |
தூ விரி கடுப்பத் துவன்றி மீமிசைத் |
|
தண் பல இழிதரும் அருவி நின் |
|
கொண் பெருங் கானம், பாடல் எனக்கு எளிதே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
கொண்கானங்கிழானை மோசிகீரனார் பாடியது.
|
155 |
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ, |
|
'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க?' என, |
|
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின், |
|
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ |
|
5 |
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு, |
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க் |
|
கொண் பெருங் கானத்துக் கிழவன் |
|
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே. |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
அவனை அவர் பாடியது.
|
156 |
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம்; என்றும் |
|
இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்; |
|
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் |
|
தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று |
|
5 |
நிறை அருந் தானை வேந்தரைத் |
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே. |
|
திணை அது; துறை இயன் மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|