முகப்பு | தொடக்கம் |
சிறுகுடி கிழான் பண்ணன் |
173 |
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! |
|
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை; |
|
யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன |
|
ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்; |
|
5 |
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, |
முட்டை கொண்டு வன் புலம் சேரும் |
|
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப, |
|
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும் |
|
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும், |
|
10 |
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றென; |
பசிப்பிணி மருத்துவன் இல்லம் |
|
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.
|
388 |
வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல், |
|
பள்ளம், வாடிய பயன் இல் காலை, |
|
இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர் |
|
........................................................பொருந்தி, |
|
5 |
தன் நிலை அறியுநனாக, அந் நிலை, |
இடுக்கண் இரியல் போக, உடைய |
|
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல், |
|
.......................................................னாமருப்பாக, |
|
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி |
|
10 |
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென, |
வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா, |
|
நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா |
|
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன், |
|
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை |
|
15 |
அண்ணல் யானை வழுதி, |
கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே! |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.
|