முகப்பு | தொடக்கம் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
34 |
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், |
|
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், |
|
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும், |
|
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என, |
|
5 |
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் |
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என, |
|
அறம் பாடின்றே ஆயிழை கணவ! |
|
'காலை அந்தியும், மாலை அந்தியும், |
|
புறவுக் கரு அன்ன புன் புல வரகின் |
|
10 |
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, |
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, |
|
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து, |
|
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, |
|
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு |
|
15 |
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், |
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின், |
|
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்; |
|
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து, |
|
20 |
சான்றோர் செய்த நன்று உண்டாயின், |
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி, |
|
கொண்டல் மா மழை பொழிந்த |
|
நுண் பல் துளியினும் வாழிய, பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
35 |
நளி இரு முந்நீர் ஏணி ஆக, |
|
வளி இடை வழங்கா வானம் சூடிய |
|
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், |
|
முரசு முழங்கு தானை மூவருள்ளும், |
|
5 |
அரசு எனப்படுவது நினதே, பெரும! |
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், |
|
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும், |
|
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட, |
|
தோடு கொள் வேலின் தோற்றம் போல, |
|
10 |
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் |
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க |
|
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! |
|
நினவ கூறுவல்; எனவ கேண்மதி! |
|
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து |
|
15 |
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு |
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே; |
|
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ |
|
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு, |
|
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை |
|
20 |
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய |
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ! |
|
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப, |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து, |
|
25 |
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை |
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; |
|
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், |
|
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், |
|
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்; |
|
30 |
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும் |
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, |
|
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, |
|
குடி புறந்தருகுவை ஆயின், நின் |
|
அடி புறந்தருகுவர், அடங்காதோரே. |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.
|
36 |
அடுநை ஆயினும், விடுநை ஆயினும், |
|
நீ அளந்து அறிதி, நின் புரைமை வார் கோல், |
|
செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர் |
|
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் |
|
5 |
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய, |
கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய் |
|
நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து, |
|
வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப, காவுதொறும் |
|
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் |
|
10 |
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப, |
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின் |
|
சிலைத் தார் முரசம் கறங்க, |
|
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
37 |
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, |
|
வேக வெந் திறல், நாகம் புக்கென, |
|
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப் |
|
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு, |
|
5 |
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல், |
சினம் கெழு தானை, செம்பியன் மருக! |
|
கராஅம் கலித்த குண்டு கண் அகழி, |
|
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி, |
|
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் |
|
10 |
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி, |
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர், |
|
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின், |
|
'நல்ல' என்னாது, சிதைத்தல் |
|
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே. |
|
திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
38 |
வரை புரையும் மழ களிற்றின் மிசை, |
|
வான் துடைக்கும் வகைய போல, |
|
விரவு உருவின கொடி நுடங்கும் |
|
வியன் தானை விறல் வேந்தே! |
|
5 |
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ, |
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப, |
|
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், |
|
வெண் திங்களுள் வெயில் வேண்டினும், |
|
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின், |
|
10 |
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த, |
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப் |
|
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும் |
|
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை, |
|
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் |
|
15 |
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என, |
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், |
|
நின் நாடு உள்ளுவர், பரிசிலர் |
|
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|
39 |
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி |
|
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக் |
|
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக! |
|
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல் |
|
5 |
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல் |
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், |
|
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று, |
|
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
|
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால் |
|
10 |
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு |
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள், |
|
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ! |
|
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய |
|
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு |
|
15 |
இமயம் சூட்டிய ஏம விற்பொறி, |
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய, |
|
வாடா வஞ்சி வாட்டும் நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
40 |
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில் |
|
ஓம்பாது கடந்து அட்டு, அவர் |
|
முடி புனைந்த பசும் பொன் நின் |
|
அடி பொலியக் கழல் தைஇய |
|
5 |
வல்லாளனை; வய வேந்தே! |
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க, |
|
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, |
|
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும் |
|
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும! |
|
10 |
ஒரு பிடி படியும் சீறிடம் |
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை ஆவூர் முலங்கிழார் பாடியது.
|
41 |
காலனும் காலம் பார்க்கும்; பாராது, |
|
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய, |
|
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே! |
|
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும், |
|
5 |
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும், |
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும், |
|
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும், |
|
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும், |
|
10 |
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும், |
கனவின் அரியன காணா, நனவில் |
|
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி, |
|
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர், |
|
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு |
|
15 |
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு |
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு |
|
எரி நிகழ்ந்தன்ன செலவின் |
|
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
42 |
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் |
|
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் |
|
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை |
|
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து |
|
5 |
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின், |
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே; |
|
தண் புனல் பூசல் அல்லது, நொந்து, |
|
'களைக, வாழி, வளவ!' என்று, நின் |
|
முனைதரு பூசல் கனவினும் அறியாது, |
|
10 |
புலி புறங்காக்கும் குருளை போல, |
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப, |
|
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர் |
|
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர் |
|
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர் |
|
15 |
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை |
நீர் தரு மகளிர் குற்ற குவளையும், |
|
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும் |
|
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! |
|
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி, |
|
20 |
நில வரை இழிதரும் பல் யாறு போல, |
புலவர் எல்லாம் நின் நோக்கினரே; |
|
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக் |
|
கூற்று வெகுண்டன்ன முன்பொடு, |
|
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே. |
|
திணை வாகை; துறை அரசவாகை.
| |
அவனை இடைக்காடனார் பாடியது.
|
46 |
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் |
|
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, |
|
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி, |
|
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்; |
|
5 |
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த |
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி, |
|
விருந்தின் புன்கண் நோவுடையர்; |
|
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.
|
69 |
கையது, கடன் நிறை யாழே; மெய்யது, |
|
புரவலர் இன்மையின் பசியே; அரையது, |
|
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் |
|
ஓம்பி உடுத்த உயவல் பாண! |
|
5 |
பூட்கை இல்லோன் யாக்கை போலப் |
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை; |
|
வையகம் முழுதுடன் வளைஇ, பையென |
|
என்னை வினவுதி ஆயின், மன்னர் |
|
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை, |
|
10 |
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி, |
புலாக் களம் செய்த கலாஅத் தானையன் |
|
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே; |
|
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப் |
|
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார் |
|
15 |
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் |
கிள்ளி வளவற் படர்குவை ஆயின், |
|
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல் |
|
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி, |
|
நீ அவற் கண்ட பின்றை, பூவின் |
|
20 |
ஆடு வண்டு இமிராத் தாமரை |
சூடாயாதல் அதனினும் இலையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
70 |
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண! |
|
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன |
|
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை |
|
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி; |
|
5 |
வினவல் ஆனா முது வாய் இரவல! |
தைஇத் திங்கள் தண் கயம் போல, |
|
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர், |
|
அடுதீ அல்லது சுடுதீ அறியாது; |
|
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன், |
|
10 |
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி, |
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை |
|
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் |
|
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப் |
|
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல், |
|
15 |
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச் |
செல்வைஆயின், செல்வை ஆகுவை; |
|
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் |
|
தலைப்பாடு அன்று, அவன் ஈகை; |
|
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
226 |
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும், |
|
உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ; |
|
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி, |
|
இரந்தன்றாகல் வேண்டும் பொலந் தார் |
|
5 |
மண்டு அமர் கடக்கும் தானைத் |
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
227 |
நனி பேதையே, நயன் இல் கூற்றம்! |
|
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை; |
|
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்; |
|
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும், |
|
5 |
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய, |
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின் |
|
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல் |
|
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் |
|
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி |
|
10 |
இனையோற் கொண்டனைஆயின், |
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.
|
228 |
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! |
|
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை |
|
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை, |
|
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! |
|
5 |
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்? |
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப் |
|
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை, |
|
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன |
|
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன் |
|
10 |
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன் |
தேவர் உலகம் எய்தினன்ஆதலின், |
|
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி |
|
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம் |
|
இரு நிலம் திகிரியா, பெரு மலை |
|
15 |
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? |
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
| |
அவனை ஐயூர் முடவனார் பாடியது.
|
386 |
நெடு நீர நிறை கயத்துப் |
|
படு மாரித் துளி போல, |
|
நெய் துள்ளிய வறை முகக்கவும், |
|
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும், |
|
5 |
ஊன் கொண்ட வெண் மண்டை |
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும், |
|
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது, |
|
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை |
|
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக; |
|
10 |
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் |
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின; |
|
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான், |
|
வில் இருந்த வெங் குறும்பின்று; |
|
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர் |
|
15 |
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து; |
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து; |
|
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே; |
|
பொராஅப் பொருநரேம்; |
|
20 |
குண திசை நின்று குடமுதல் செலினும், |
குட திசை நின்று குணமுதல் செலினும், |
|
வட திசை நின்று தென்வயின் செலினும், |
|
தென் திசை நின்று குறுகாது நீடினும், |
|
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம் |
|
25 |
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
393 |
பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் |
|
குறு நெடுந் துணையொடு கூமை வீதலின், |
|
குடி முறை பாடி, ஒய்யென வருந்தி, |
|
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் |
|
5 |
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின், |
'வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?' என, |
|
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா, |
|
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென, |
|
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி, |
|
10 |
ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் |
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப, |
|
கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த |
|
மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன, |
|
வெண் நிண மூரி அருள, நாள் உற |
|
15 |
ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என் |
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி, |
|
போது விரி பகன்றைப் புது மலர் அன்ன, |
|
அகன்று மடி கலிங்கம் உடீஇ, செல்வமும், |
|
கேடு இன்று நல்குமதி, பெரும! மாசு இல் |
|
20 |
மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி, |
|
'கோடை ஆயினும், கோடி............................... |
|
காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந! |
|
வாய் வாள் வளவன்! வாழ்க! எனப் |
|
25 |
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே. |
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.
|
397 |
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும்; புள்ளும் |
|
உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே; |
|
பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச் |
|
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து |
|
5 |
இரங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப, |
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, |
|
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை, |
|
வைகறை அரவம் கேளியர்! 'பல கோள் |
|
செய் தார் மார்ப! எழுமதி துயில்' என, |
|
10 |
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
நெடுங் கடைத் தோன்றியேனே; அது நயந்து, |
|
'உள்ளி வந்த பரிசிலன் இவன்' என, |
|
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு, |
|
மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல், |
|
15 |
பாம்பு உரித்தன்ன வான் பூங் கலிங்கமொடு, |
மாரி அன்ன வண்மையின் சொரிந்து, |
|
வேனில் அன்ன என் வெப்பு நீங்க, |
|
அருங் கலம் நல்கியோனே; என்றும், |
|
செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை, |
|
20 |
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த |
தீயொடு விளங்கும் நாடன், வாய் வாள் |
|
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்; |
|
எறி திரைப் பெருங் கடல் இறுதிக்கண் செலினும், |
|
தெறு கதிர்க் கனலி தென் திசைத் தோன்றினும், |
|
25 |
'என்?' என்று அஞ்சலம், யாமே; வென் வேல் |
அருஞ் சமம் கடக்கும் ஆற்றல் அவன் |
|
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே. |
|
திணை அது; துறை பரிசில்விடை; கடைநிலை விடையும் ஆம்.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.
|