முகப்பு | தொடக்கம் |
சோழன் நலங்கிள்ளி |
27 |
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், |
|
நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன, |
|
வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து, |
|
வீற்றிருந்தோரை எண்ணும்காலை, |
|
5 |
உரையும் பாட்டும் உடையோர் சிலரே; |
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே; |
|
'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் |
|
வலவன் ஏவா வான ஊர்தி |
|
எய்துப என்ப, தம் செய் வினை முடித்து' எனக் |
|
10 |
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! |
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், |
|
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், |
|
அறியாதோரையும் அறியக் காட்டி, |
|
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து, |
|
15 |
வல்லார் ஆயினும், வல்லுநர்ஆயினும், |
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, |
|
அருள, வல்லை ஆகுமதி; அருள் இலர் |
|
கொடாஅமை வல்லர் ஆகுக; |
|
கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை முதுமொழிக்காஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
|
28 |
'சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும், |
|
கூனும், குறளும், ஊமும், செவிடும், |
|
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு |
|
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் |
|
5 |
பேதைமை அல்லது ஊதியம் இல்' என, |
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும், |
|
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது |
|
வட்ட வரிய செம் பொறிச் சேவல் |
|
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் |
|
10 |
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே, |
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர் |
|
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப் |
|
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர் |
|
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே; |
|
15 |
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் |
ஆற்றும், பெரும! நின் செல்வம்; |
|
ஆற்றாமை நிற் போற்றாமையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
29 |
அழல் புரிந்த அடர் தாமரை |
|
ஐது அடர்ந்த நூல் பெய்து, |
|
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் |
|
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி, |
|
5 |
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை! |
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் |
|
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க |
|
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப, |
|
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும், |
|
10 |
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி, |
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும் |
|
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்! |
|
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர் |
|
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு, |
|
15 |
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின் |
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு |
|
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள் |
|
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து, |
|
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச் |
|
20 |
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு |
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை |
|
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில் |
|
கோடியர் நீர்மை போல முறைமுறை |
|
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய |
|
25 |
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்! |
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
30 |
செஞ் ஞாயிற்றுச் செலவும், |
|
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், |
|
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், |
|
வளி திரிதரு திசையும், |
|
5 |
வறிது நிலைஇய காயமும், என்று இவை |
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும் |
|
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் |
|
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, |
|
களிறு கவுள் அடுத்த எறிகல் போல |
|
10 |
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட |
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு |
|
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது |
|
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர் |
|
இடைப் புலப் பெரு வழிச் சொரியும் |
|
15 |
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே! |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி
| |
அவனை அவர் பாடியது.
|
31 |
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் |
|
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, |
|
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை, |
|
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க, |
|
5 |
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் |
பாசறை அல்லது நீ ஒல்லாயே; |
|
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் |
|
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே; |
|
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர், |
|
10 |
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய; |
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென் |
|
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து, |
|
குண கடல் பின்னது ஆக, குட கடல் |
|
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, |
|
15 |
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து, |
நெஞ்சு நடுங்கு அவலம் பாய, |
|
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே. |
|
திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
32 |
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் |
|
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ? |
|
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள், |
|
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என, |
|
5 |
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் |
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! |
|
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி |
|
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த |
|
பசு மண் குரூஉத் திரள் போல, அவன் |
|
10 |
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. |
திணை பாடாண்திணை; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
33 |
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் |
|
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் |
|
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய, |
|
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் |
|
5 |
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் |
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் |
|
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், |
|
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் |
|
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; |
|
10 |
பாடுநர் வஞ்சி பாட, படையோர் |
தாது எரு மறுகின் பாசறை பொலிய, |
|
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த |
|
மலரா மாலைப் பந்து கண்டன்ன |
|
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் |
|
15 |
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை |
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற |
|
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப, |
|
காம இருவர் அல்லது, யாமத்துத் |
|
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், |
|
20 |
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி |
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப, |
|
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
44 |
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா, |
|
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ, |
|
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி, |
|
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து, |
|
5 |
அலமரல் யானை உரும் என முழங்கவும், |
பால் இல் குழவி அலறவும், மகளிர் |
|
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல் |
|
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும், |
|
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; |
|
10 |
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்! |
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்; | |
மறவை ஆயின், போரொடு திறத்தல்; |
|
அறவையும் மறவையும் அல்லையாக, |
|
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் |
|
15 |
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் |
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
45 |
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; |
|
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; |
|
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு |
|
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; |
|
5 |
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; |
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், |
|
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் |
|
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு |
|
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
|
68 |
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின் |
|
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது, |
|
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து, |
|
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து, |
|
5 |
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து |
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் |
|
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை, |
|
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச் |
|
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் |
|
10 |
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன், |
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு |
|
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என, |
|
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப, |
|
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி, |
|
15 |
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த |
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை |
|
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும் |
|
உறந்தையோனே குருசில்; |
|
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே. |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
225 |
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய, |
|
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த, |
|
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர, |
|
நில மலர் வையத்து வல முறை வளைஇ, |
|
5 |
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு, |
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி: |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும் |
|
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என, |
|
10 |
இன் இசைப் பறையொடு வென்றி நுவல, |
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப |
|
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி, |
|
ஞாலங் காவலர் கடைத்தலை, |
|
காலைத் தோன்றினும் நோகோ யானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
382 |
கடல்படை அடல் கொண்டி, |
|
மண்டுற்ற மலிர் நோன் தாள், |
|
தண் சோழ நாட்டுப் பொருநன், |
|
அலங்கு உளை அணி இவுளி |
|
5 |
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; |
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்; |
|
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' என; |
|
நெய் குய்ய ஊன் நவின்ற |
|
பல் சோற்றான், இன் சுவைய |
|
10 |
நல்குரவின் பசித் துன்பின் நின் |
முன்னநாள் விட்ட மூது அறி சிறாஅரும், |
|
யானும், ஏழ் மணி, அம் கேழ், அணி உத்தி, |
|
கண் கேள்வி, கவை நாவின், |
|
நிறன் உற்ற, அராஅப் போலும் |
|
15 |
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப, |
விடுமதி அத்தை, கடு மான் தோன்றல்! |
|
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய; |
|
எனதே, கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை |
|
கண் அகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல் |
|
20 |
ஏறிதொறும் நுடங்கியாங்கு, நின் பகைஞர் |
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென், |
|
வென்ற தேர், பிறர் வேத்தவையானே. |
|
திணை அது; துறை கடைநிலை.
| |
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
400 |
மாக விசும்பின் வெண் திங்கள் |
|
மூ ஐந்தான் முறை முற்ற, |
|
கடல் நடுவண் கண்டன்ன என் |
|
இயம் இசையா, மரபு ஏத்தி, |
|
5 |
கடைத் தோன்றிய கடைக் கங்குலான் |
பலர் துஞ்சவும் தான் துஞ்சான், |
|
உலகு காக்கும் உயர் ª..........க் |
|
கேட்டோன், எந்தை, என் தெண் கிணைக் குரலே; |
|
கேட்டதற்கொண்டும், வேட்கை தண்டாது, |
|
10 |
தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி, |
மிகப் பெருஞ் சிறப்பின் வீறு....... |
|
...................................................லவான |
|
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி, |
|
நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து; |
|
15 |
போது அறியேன், பதிப் பழகவும், |
தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர் |
|
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ; |
|
மறவர் மலிந்த த............................................. |
|
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து, |
|
20 |
இருங் கழி இழிதரு........ கலி வங்கம் |
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து, |
|
துறைதொறும் பிணிக்கும் நல் ஊர், |
|
உறைவு இன் யாணர்,........ கிழவோனே! |
|
திணை அது; துறை இயன்மொழி. |