முகப்பு | தொடக்கம் |
சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி |
80 |
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், |
|
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, |
|
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் |
|
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே |
|
5 |
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் |
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம |
|
பசித்துப் பணை முயலும் யானை போல, |
|
இரு தலை ஒசிய எற்றி, |
|
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. |
|
திணை தும்பை; துறை எருமை மறம்.
| |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.
|
81 |
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே |
|
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே; |
|
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச் |
|
செறியத் தொடுத்த கண்ணிக் |
|
5 |
கவி கை மள்ளன் கைப்பட்டோரே? |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
82 |
சாறு தலைக்கொண்டென, பெண் ஈற்று உற்றென, |
|
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று, |
|
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது |
|
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ |
|
5 |
ஊர் கொள வந்த பொருநனொடு, |
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
83 |
அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என் |
|
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே; |
|
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே; |
|
என் போல் பெரு விதுப்புறுக என்றும் |
|
5 |
ஒரு பாற் படாஅதாகி, |
இரு பாற் பட்ட இம் மையல் ஊரே! |
|
திணை கைக்கிளை; துறை பழிச்சுதல்.
| |
அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.
|
84 |
என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே; |
|
யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே; |
|
போர் எதிர்ந்து என்னை போர்க் களம் புகினே, |
|
கல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண், |
|
5 |
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு |
உமணர் வெரூஉம் துறையன்னன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
85 |
என்னைக்கு ஊர் இஃது அன்மையானும், |
|
என்னைக்கு நாடு இஃது அன்மையானும், |
|
'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே; |
|
'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே; |
|
5 |
நல்ல, பல்லோர் இரு நன் மொழியே; |
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல், |
|
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று, |
|
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|