முகப்பு | தொடக்கம் |
தந்து மாறன் |
360 |
பெரிது ஆராச் சிறு சினத்தர், |
|
சில சொல்லான் பல கேள்வியர், |
|
நுண் உணர்வினான் பெருங் கொடையர், |
|
கலுழ் நனையான் தண் தேறலர், |
|
5 |
கனி குய்யான் கொழுந் துவையர், |
தாழ் உவந்து தழூஉ மொழியர், |
|
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி, |
|
ஏமம் ஆக இந் நிலம் ஆண்டோர் |
|
சிலரே; பெரும! கேள், இனி: நாளும், |
|
10 |
பலரே, தகையஃது அறியாதோரே; |
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது; |
|
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால், |
|
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில் |
|
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சு வரப் |
|
15 |
பாறு இறை கொண்ட பறந்தலை, மா கத |
கள்ளி போகிய களரி மருங்கின், |
|
வெள்ளில் நிறுத்த பின்றை, கள்ளொடு |
|
புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி, |
|
புலையன் ஏவ, புல் மேல் அமர்ந்து உண்டு, |
|
20 |
அழல் வாய்ப் புக்க பின்னும், |
பலர் வாய்த்து இராஅர், பருத்து உண்டோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தந்துமாறனைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடியது.
|
361 |
கார் எதிர் உருமின் உரறி, கல்லென, |
|
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்! |
|
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல |
|
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு, |
|
5 |
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத் |
தாயின் நன்று பலர்க்கு ஈத்து, |
|
தெருள் நடை மா களிறொடு தன் |
|
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும், |
|
உருள் நடை ........................ான்றதன் |
|
10 |
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், |
புரி மாலையர் பாடினிக்குப் |
|
பொலந் தாமரைப் பூம் பாணரொடு |
|
கலந்து அளைஇய நீள் இருக்கையால் |
|
பொறையொ............ மான் நோக்கின், |
|
15 |
வில் என விலங்கிய புருவத்து, வல்லென |
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர் |
|
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென |
|
............................................பொலங்கலத்து ஏந்தி, |
|
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன், |
|
20 |
நில்லா உலகத்து............... மை நீ |
சொல்ல வேண்டா................. முந்தறிந்த |
|
....................................................
| |
...............................................னார் பாடியது.
|
362 |
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த |
|
மதி உறழ் ஆரம் மார்பில் புரள, |
|
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்ப, |
|
பொழிலகம் பரந்த பெ................. |
|
5 |
.......................கும விசய வெண் கொடி |
அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை, |
|
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின், |
|
ஆக் குரல் காண்பின் அந்தணாளர் |
|
நான்மறைக் குறி .......................... யின் |
|
10 |
அறம் குறித்தன்று; பொருள் ஆகுதலின் |
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇ, |
|
கை பெய்த நீர் கடற் பரப்ப, |
|
ஆம் இருந்த அடை நல்கி, |
|
சோறு கொடுத்து, மிகப் பெரிதும் |
|
15 |
வீறு சான......................... நன்றும் |
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின், |
|
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப் |
|
பகலும் கூவும் அகலுள் ஆங்கண், |
|
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு, |
|
20 |
இல் என்று இல்வயின் பெயர, மெல்ல |
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி, |
|
உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே. |
|
திணை பொதுவியல்; துறை பெருங்காஞ்சி.
| |
அவனைச் சிறுவெண்டேரையார் பாடியது.
|
363 |
இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மா நிலம் |
|
உடையிலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி, |
|
தாமே ஆண்ட ஏமம் காவலர் |
|
இடு திரை மணலினும் பலரே; சுடு பிணக் |
|
5 |
காடு பதி ஆகப் போகி, தம்தம் |
நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே; |
|
அதனால், நீயும் கேண்மதி அத்தை! வீயாது |
|
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை; |
|
மடங்கல் உண்மை மாயமோ அன்றே; |
|
10 |
கள்ளி வேய்ந்த முள்ளிஅம் புறங்காட்டு, |
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், |
|
உப்பு இலாஅ அவிப் புழுக்கல் |
|
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது, |
|
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று, |
|
15 |
நிலம் கலனாக, இலங்கு பலி மிசையும் |
இன்னா வைகல் வாராமுன்னே, |
|
செய் நீ முன்னிய வினையே, |
|
முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...................... ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.
|
364 |
வாடா மாலை பாடினி அணிய, |
|
பாணன் சென்னிக் கேணி பூவா |
|
எரி மருள் தாமரைப் பெரு மலர் தயங்க, |
|
மை விடை இரும் போத்துச் செந் தீச் சேர்த்தி, |
|
5 |
காயம் கனிந்த கண் அகன் கொழுங் குறை |
நறவு உண் செவ் வாய் நாத் திறம் பெயர்ப்ப, |
|
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும், |
|
மகிழ்கம் வம்மோ, மறப் போரோயே! |
|
அரியஆகலும் உரிய, பெரும! |
|
10 |
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் |
முது மரப் பொத்தின் கதுமென இயம்பும் |
|
கூகைக் கோழி ஆனாத் |
|
தாழிய பெருங் காடு எய்திய ஞான்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனைக் கூகைக் கோழியார் பாடியது.
|