முகப்பு | தொடக்கம் |
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் |
371 |
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது, |
|
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி, |
|
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து, |
|
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடி, |
|
5 |
பறையொடு தகைத்த கலப் பையென், முரவு வாய் |
ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி, |
|
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப, |
|
குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன், |
|
அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி, |
|
10 |
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப, |
வரு கணை வாளி....... அன்பு இன்று தலைஇ, |
|
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, |
|
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி, |
|
குறைத் தலைப் படு பிணன் எதிர, போர்பு அழித்து, |
|
15 |
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி |
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
மதியத்து அன்ன என் விசி உறு தடாரி |
|
அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின், |
|
பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை, |
|
20 |
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும! |
களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி, |
|
விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள், |
|
குடர்த் தலை மாலை சூடி, 'உணத் தின |
|
ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து |
|
25 |
வயங்கு பல் மீனினும் வாழியர், பல' என, |
உரு கெழு பேய்மகள் அயர, |
|
குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
372 |
விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி, |
|
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த |
|
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி, |
|
கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை, |
|
5 |
பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின், |
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல், |
|
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின், |
|
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட |
|
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த, |
|
10 |
'வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் |
வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க' எனப் |
|
புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின் |
|
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே. |
|
திணை வாகை; துறை மறக்கள வேள்வி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|