முகப்பு | தொடக்கம் |
நெடியோன் |
9 |
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், |
|
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் |
|
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் |
|
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், |
|
5 |
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என, |
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின் |
|
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் |
|
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச் |
|
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த, |
|
10 |
முந்நீர் விழவின், நெடியோன் |
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
114 |
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை |
|
சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற |
|
களிறு மென்று இட்ட கவளம் போல, |
|
நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல் |
|
5 |
வார் அசும்பு ஒழுகும் முன்றில், |
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.
|
241 |
'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார், |
|
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி |
|
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள், |
|
போர்ப்புறு முரசம் கறங்க, |
|
5 |
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|