முகப்பு | தொடக்கம் |
பண்ணன் |
70 |
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண! |
|
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன |
|
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை |
|
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி; |
|
5 |
வினவல் ஆனா முது வாய் இரவல! |
தைஇத் திங்கள் தண் கயம் போல, |
|
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர், |
|
அடுதீ அல்லது சுடுதீ அறியாது; |
|
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன், |
|
10 |
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி, |
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை |
|
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் |
|
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப் |
|
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல், |
|
15 |
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச் |
செல்வைஆயின், செல்வை ஆகுவை; |
|
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் |
|
தலைப்பாடு அன்று, அவன் ஈகை; |
|
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
173 |
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! |
|
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை; |
|
யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன |
|
ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்; |
|
5 |
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, |
முட்டை கொண்டு வன் புலம் சேரும் |
|
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப, |
|
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும் |
|
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும், |
|
10 |
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றென; |
பசிப்பிணி மருத்துவன் இல்லம் |
|
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.
|
181 |
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில், |
|
கருங் கண் எயிற்றி காதல் மகனொடு, |
|
கான இரும் பிடிக் கன்று தலைக் கொள்ளும் |
|
பெருங் குறும்பு உடுத்த வன் புல இருக்கை, |
|
5 |
புலாஅ அம்பின், போர் அருங் கடி மிளை, |
வலாஅரோனே, வாய் வாள் பண்ணன்; |
|
உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின், |
|
இன்னே சென்மதி, நீயே சென்று, அவன் |
|
பகைப் புலம் படராஅளவை, நின் |
|
10 |
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. |
திணையும் துறையும் அவை.
| |
வல்லார் கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியார் பாடியது.
|
388 |
வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல், |
|
பள்ளம், வாடிய பயன் இல் காலை, |
|
இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர் |
|
........................................................பொருந்தி, |
|
5 |
தன் நிலை அறியுநனாக, அந் நிலை, |
இடுக்கண் இரியல் போக, உடைய |
|
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல், |
|
.......................................................னாமருப்பாக, |
|
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி |
|
10 |
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென, |
வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா, |
|
நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா |
|
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன், |
|
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை |
|
15 |
அண்ணல் யானை வழுதி, |
கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே! |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.
|