முகப்பு | தொடக்கம் |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் |
55 |
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, |
|
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி, |
|
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த |
|
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் |
|
5 |
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல, |
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற! |
|
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும், |
|
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என |
|
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட |
|
10 |
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்; |
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது, |
|
'பிறர்' எனக் குணம் கொல்லாது, |
|
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும், |
|
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும், |
|
15 |
வானத்து அன்ன வண்மையும், மூன்றும், |
உடையை ஆகி, இல்லோர் கையற, |
|
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர் |
|
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் |
|
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை, |
|
20 |
கடு வளி தொகுப்ப ஈண்டிய |
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
|
56 |
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை, |
|
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்; |
|
கடல் வளர் புரி வளை புரையும் மேனி, |
|
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்; |
|
5 |
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, |
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும், |
|
மணி மயில் உயரிய மாறா வென்றி, |
|
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என |
|
ஞாலம் காக்கும் கால முன்பின், |
|
10 |
தோலா நல் இசை, நால்வருள்ளும், |
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்; |
|
வலி ஒத்தீயே, வாலியோனை; |
|
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை; |
|
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்; |
|
15 |
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும் |
அரியவும் உளவோ, நினக்கே? அதனால், |
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா, |
|
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் |
|
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும் |
|
20 |
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, |
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற! |
|
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் |
|
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத் |
|
தண் கதிர் மதியம் போலவும், |
|
25 |
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! |
திணை அது; துறை பூவை நிலை.
| |
அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
|
57 |
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், |
|
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, |
|
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! |
|
நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின், |
|
5 |
நீயே, பிறர் நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு |
இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க; |
|
நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க; |
|
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் |
|
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம் |
|
10 |
கடிமரம் தடிதல் ஓம்பு நின் |
நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே. |
|
திணை வஞ்சி; துறை துணை வஞ்சி.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
196 |
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் |
|
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும், |
|
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; |
|
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது |
|
5 |
இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே |
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர் |
|
புகழ் குறைபடூஉம் வாயில்அத்தை; |
|
அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும் |
|
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால், |
|
10 |
நோய் இலராக நின் புதல்வர்; யானும், |
வெயில் என முனியேன், பனி என மடியேன், |
|
கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை, |
|
நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல் |
|
மெல் இயல் குறு மகள் உள்ளிச் |
|
15 |
செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே! |
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|
198 |
'அருவி தாழ்ந்த பெரு வரை போல |
|
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா, |
|
கடவுள் சான்ற கற்பின், சேயிழை |
|
மடவோள் பயந்த மணி மருள் அவ் வாய்க் |
|
5 |
கிண்கிணிப் புதல்வர் பொலிக!' என்று ஏத்தி, |
திண் தேர் அண்ணல் நிற் பாராட்டி, |
|
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என் |
|
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப, |
|
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம், |
|
10 |
வேல் கெழு குருசில்! கண்டேன்; ஆதலின், |
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த |
|
தண் தமிழ் வரைப்பகம் கொண்டி ஆக, |
|
பனித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங் கடுந் திறல் |
|
நின் ஓரன்ன நின் புதல்வர், என்றும், |
|
15 |
ஒன்னார் வாட அருங் கலம் தந்து, நும் |
பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த நின் |
|
முன்னோர் போல்க, இவர் பெருங் கண்ணோட்டம்! |
|
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டு திரைப் |
|
பெருங் கடல் நீரினும், அக் கடல் மணலினும், |
|
20 |
நீண்டு உயர் வானத்து உறையினும், நன்றும், |
இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும், |
|
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி, |
|
நீடு வாழிய! நெடுந்தகை! யானும் |
|
கேள் இல் சேஎய் நாட்டின், எந்நாளும், |
|
25 |
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின் |
அடி நிழல் பழகிய அடியுறை; |
|
கடுமான் மாற! மறவாதீமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடியது.
|