முகப்பு | தொடக்கம் |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் |
23 |
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ, |
|
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்; |
|
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், |
|
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் |
|
5 |
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் |
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் |
|
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்; |
|
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் |
|
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர் |
|
10 |
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப, |
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி, |
|
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று, |
|
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும் |
|
துன்னல் போகிய துணிவினோன்' என, |
|
15 |
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை |
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட |
|
கால முன்ப! நின் கண்டனென் வருவல் |
|
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை |
|
20 |
பூளை நீடிய வெருவரு பறந்தலை |
வேளை வெண் பூக் கறிக்கும் |
|
ஆள் இல் அத்தம் ஆகிய காடே. |
|
திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
24 |
நெல் அரியும் இருந் தொழுவர் |
|
செஞ் ஞாயிற்று வெயில் முனையின், |
|
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; |
|
திண் திமில் வன் பரதவர் |
|
5 |
வெப்பு உடைய மட்டு உண்டு, |
தண் குரவைச் சீர் தூங்குந்து; |
|
தூவல் கலித்த தேம் பாய் புன்னை |
|
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் |
|
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; |
|
10 |
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் |
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் |
|
இரும் பனையின் குரும்பை நீரும், |
|
பூங் கரும்பின் தீம் சாறும், |
|
ஓங்கு மணல் குவவுத் தாழைத் |
|
15 |
தீம் நீரொடு உடன் விராஅய், |
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; |
|
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய |
|
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி |
|
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் |
|
20 |
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், |
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், |
|
குப்பை நெல்லின், முத்தூறு தந்த |
|
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! |
|
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது |
|
25 |
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே |
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு |
|
நின்று மூத்த யாக்கை அன்ன, நின் |
|
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த |
|
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, |
|
30 |
இரவல் மாக்கள் ஈகை நுவல, |
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய |
|
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, |
|
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது |
|
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை, |
|
35 |
மலர் தலை உலகத்துத் தோன்றி, |
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
25 |
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல |
|
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது, |
|
உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு, |
|
நிலவுத் திகழ் மதியமொடு, நிலம் சேர்ந்தாஅங்கு, |
|
5 |
உடல் அருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை |
அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி, |
|
பிணியுறு முரசம் கொண்ட காலை, |
|
நிலை திரிபு எறிய, திண் மடை கலங்கிச் |
|
சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய! |
|
10 |
முலை பொலி ஆகம் உருப்ப நூறி, |
மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல் |
|
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர, |
|
அவிர் அறல் கடுக்கும் அம் மென் |
|
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனைக் கல்லாடனார் பாடியது.
|
26 |
நளி கடல் இருங் குட்டத்து |
|
வளி புடைத்த கலம் போல, |
|
களிறு சென்று களன் அகற்றவும், |
|
களன் அகற்றிய வியல் ஆங்கண் |
|
5 |
ஒளிறு இலைய எஃகு ஏந்தி, |
அரைசு பட அமர் உழக்கி, |
|
உரை செல முரசு வௌவி, |
|
முடித் தலை அடுப்பு ஆக, |
|
புனல் குருதி உலைக் கொளீஇ, |
|
10 |
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின், |
அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய! |
|
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை, |
|
நான் மறை முதல்வர் சுற்றம் ஆக, |
|
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய |
|
15 |
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே! |
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு |
|
மாற்றார் என்னும் பெயர் பெற்று, |
|
ஆற்றார் ஆயினும், ஆண்டு வாழ்வோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
76 |
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், |
|
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; |
|
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை |
|
மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர் |
|
5 |
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, |
செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி, |
|
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடி, |
|
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்தக, |
|
நாடு கெழு திருவின், பசும் பூண், செழியன் |
|
10 |
பீடும் செம்மலும் அறியார் கூடி, |
'பொருதும்' என்று தன்தலை வந்த |
|
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க, |
|
ஒரு தான் ஆகிப் பொருது, களத்து அடலே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை இடைக் குன்றூர் கிழார் பாடியது.
|
77 |
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு, |
|
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர் |
|
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, |
|
குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி, |
|
5 |
நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் |
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு, |
|
தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு |
|
அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின் |
|
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை |
|
10 |
வியந்தன்றும், இழிந்தன்றும், இலனே; அவரை |
அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ, |
|
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை |
|
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும், அதனினும் இலனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
78 |
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாள், |
|
அணங்கு அருங் கடுந் திறல் என்னை முணங்கு நிமிர்ந்து, |
|
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன |
|
மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து, |
|
5 |
'விழுமியம், பெரியம், யாமே; நம்மின் |
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது' என, |
|
எள்ளி வந்த வம்ப மள்ளர் |
|
புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர, |
|
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர் |
|
10 |
மாண் இழை மகளிர் நாணினர் கழிய, |
தந்தை தம் ஊர் ஆங்கண், |
|
தெண் கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
79 |
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி, |
|
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து, |
|
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி, |
|
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த |
|
5 |
வம்ப மள்ளரோ பலரே; |
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|