முகப்பு | தொடக்கம் |
பாரி மகளிர் |
113 |
மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், |
|
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும் |
|
பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி, |
|
நட்டனை மன்னோ, முன்னே; இனியே, |
|
5 |
பாரி மாய்ந்தென, கலங்கிக் கையற்று, |
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச் |
|
சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே! |
|
கோல் திரள் முன் கைக் குறுந் தொடி மகளிர் |
|
நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.
|
200 |
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் |
|
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் |
|
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி, |
|
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து, |
|
5 |
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! |
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல், |
|
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை, |
|
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே! |
|
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை |
|
10 |
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும், |
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த |
|
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்; |
|
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே, |
|
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்; |
|
15 |
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர் |
அடங்கா மன்னரை அடக்கும் |
|
மடங்கா விளையுள் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
201 |
'இவர் யார்?' என்குவைஆயின், இவரே, |
|
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன் |
|
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை, |
|
படு மணி யானை, பறம்பின் கோமான் |
|
5 |
நெடு மாப் பாரி மகளிர்; யானே |
தந்தை தோழன்; இவர் என் மகளிர்; |
|
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே. |
|
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, |
|
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, |
|
10 |
உவரா ஈகை, துவரை ஆண்டு, |
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த |
|
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்! |
|
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே! |
|
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய |
|
15 |
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! |
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து |
|
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல் |
|
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல் |
|
உடலுநர் உட்கும் தானை, |
|
20 |
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே! |
திணையும் துறையும் அவை.
| |
பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
202 |
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட, |
|
கட்சி காணாக் கடமா நல் ஏறு |
|
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர, |
|
கடிய கதழும் நெடு வரைப் படப்பை |
|
5 |
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, |
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர், |
|
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய |
|
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி: |
|
நுந்தை தாயம் நிறைவுற எய்திய |
|
10 |
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்! |
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் |
|
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை |
|
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்! |
|
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர் |
|
15 |
கை வண் பாரி மகளிர்' என்ற என் |
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும! |
|
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து, |
|
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
|
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல் |
|
20 |
இரும் புலி வரிப் புறம் கடுக்கும் |
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.
|
236 |
கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம் |
|
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் |
|
மலை கெழு நாட! மா வண் பாரி! |
|
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் |
|
5 |
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே |
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது, |
|
ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி, |
|
இனையைஆதலின் நினக்கு மற்று யான் |
|
மேயினேன் அன்மையானே; ஆயினும், |
|
10 |
இம்மை போலக் காட்டி, உம்மை |
இடை இல் காட்சி நின்னோடு |
|
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! |
|
திணை அது; துறை கையறுநிலை.
| |
வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.
|
337 |
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்; |
|
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும், |
|
வாள் வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர், |
|
வரல்தோறு அகம் மலர, |
|
5 |
ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக் கைப் |
பாரி பறம்பின் பனிச் சுனை போல, |
|
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட |
|
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய |
|
துகில் விரி கடுப்ப நுடங்கி, தண்ணென |
|
10 |
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய |
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு, |
|
மனைச் செறிந்தனளே, வாணுதல்; இனியே, |
|
அற்றன்றுஆகலின், தெற்றெனப் போற்றி, |
|
காய் நெல் கவளம் தீற்றி, காவுதொறும் |
|
15 |
கடுங்கண் யானை காப்பனர் அன்றி, |
வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர் |
|
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் |
|
குருதி பற்றிய வெருவரு தலையர்; |
|
மற்று இவர் மறனும் இற்றால்; தெற்றென |
|
20 |
யார் ஆகுவர்கொல் தாமே நேரிழை |
உருத்த பல சுணங்கு அணிந்த |
|
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கபிலர் பாடியது.
|