முகப்பு | தொடக்கம் |
பிசிராந்தையார் |
67 |
அன்னச் சேவல்! அன்னச் சேவல்! |
|
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் |
|
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல, |
|
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் |
|
5 |
மையல் மாலை, யாம் கையறுபு இனைய, |
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி, |
|
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது |
|
சோழ நல் நாட்டுப் படினே, கோழி |
|
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ, |
|
10 |
வாயில் விடாது கோயில் புக்கு, எம் |
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர் |
|
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின் |
|
இன்புறு பேடை அணிய, தன் |
|
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
|
215 |
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் |
|
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய |
|
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ, |
|
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை |
|
5 |
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் |
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் |
|
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே; |
|
செல்வக் காலை நிற்பினும், |
|
அல்லற் காலை நில்லலன்மன்னே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு, 'அவர் வருவார்' என்று சொல்லியது.
|
216 |
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் |
|
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய, |
|
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும், |
|
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று, |
|
5 |
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்! |
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்; |
|
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே; |
|
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர் |
|
பேதைச் சோழன்' என்னும், சிறந்த |
|
10 |
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை, |
இன்னது ஓர் காலை நில்லலன்; |
|
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க!' என்றது.
|
217 |
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, |
|
எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்; |
|
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் |
|
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, |
|
5 |
இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக, |
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்; |
|
'வருவன்' என்ற கோனது பெருமையும், |
|
அது பழுது இன்றி வந்தவன் அறிவும், |
|
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே; |
|
10 |
அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் |
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை |
|
அன்னோனை இழந்த இவ் உலகம் |
|
என் ஆவதுகொல்? அளியது தானே! |
|
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
| |
அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது.
|
218 |
பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய |
|
மா மலை பயந்த காமரு மணியும், |
|
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து, |
|
அரு விலை நன் கலம் அமைக்கும்காலை, |
|
5 |
ஒரு வழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர் |
சான்றோர் பாலர் ஆப; |
|
சாலார் சாலார் பாலர் ஆகுபவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது.
|