முகப்பு | தொடக்கம் |
பிட்டங்கொற்றன் |
168 |
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் |
|
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் |
|
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, |
|
கடுங் கண் கேழல் உழுத பூழி, |
|
5 |
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் |
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை |
|
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் |
|
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், |
|
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி |
|
10 |
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, |
சாந்த விறகின் உவித்த புன்கம் |
|
கூதளம் கவினிய குளவி முன்றில், |
|
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் |
|
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், |
|
15 |
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, |
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! |
|
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! |
|
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, |
|
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் |
|
20 |
பாடுப என்ப பரிசிலர், நாளும் |
ஈயா மன்னர் நாண, |
|
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
| |
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.
|
169 |
நும் படை செல்லும்காலை, அவர் படை |
|
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ, |
|
அவர் படை வரூஉம்காலை, நும் படைக் |
|
கூழை தாங்கிய, அகல் யாற்றுக் |
|
5 |
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ, |
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்; |
|
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை; |
|
இன்னே விடுமதி பரிசில்! வென் வேல் |
|
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார், |
|
10 |
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் |
பெரு மரக் கம்பம் போல, |
|
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே! |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
170 |
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி, |
|
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர், |
|
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி |
|
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென, |
|
5 |
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப, |
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி |
|
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் |
|
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன், |
|
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே |
|
10 |
சிறு கண் யானை வெண் கோடு பயந்த |
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, |
|
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல் |
|
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி, |
|
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு |
|
15 |
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன் |
விசைத்து எறி கூடமொடு பொரூஉம் |
|
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
| |
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
171 |
இன்று செலினும் தருமே; சிறு வரை |
|
நின்று செலினும் தருமே; பின்னும், |
|
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி |
|
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி, |
|
5 |
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்; |
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப |
|
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்; |
|
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும், |
|
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும், |
|
10 |
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை |
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே. |
|
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி |
|
முள்ளும் நோவ உறாற்கதில்ல! |
|
ஈவோர் அரிய இவ் உலகத்து, |
|
15 |
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.
|
172 |
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; |
|
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப் |
|
பாடு வல் விறலியர் கோதையும் புனைக; |
|
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம் |
|
5 |
பரியல் வேண்டா; வரு பதம் நாடி, |
ஐவனம் காவலர் பெய் தீ நந்தின், |
|
ஒளி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும் |
|
வன் புல நாடன், வய மான் பிட்டன்: |
|
ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை |
|
10 |
மா வள் ஈகைக் கோதையும், |
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது.
|