முகப்பு | தொடக்கம் |
பொகுட்டெழினி |
96 |
அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின், |
|
திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு |
|
இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே, |
|
பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, |
|
5 |
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, |
'விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது, |
|
மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் |
|
கைமான் கொள்ளுமோ?' என, |
|
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
|
102 |
'எருதே இளைய; நுகம் உணராவே; |
|
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே; |
|
அவல் இழியினும், மிசை ஏறினும், |
|
அவணது அறியுநர் யார்?' என, உமணர் |
|
5 |
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன, |
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள் |
|
நாள் நிறை மதியத்து அனையை; இருள் |
|
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
|