முகப்பு | தொடக்கம் |
வேள்பாரி |
105 |
சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி! |
|
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை |
|
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப் |
|
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி |
|
5 |
கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக, |
மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும் |
|
நீரினும் இனிய சாயல் |
|
பாரி வேள்பால் பாடினை செலினே. |
|
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
| |
வேள் பாரியைக் கபிலர் பாடியது.
|
106 |
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் |
|
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை |
|
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு, |
|
மடவர் மெல்லியர் செல்லினும், |
|
5 |
கடவன், பாரி கை வண்மையே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
107 |
'பாரி பாரி' என்று பல ஏத்தி, |
|
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்; |
|
பாரி ஒருவனும் அல்லன்; |
|
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
108 |
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி |
|
ஆரம் ஆதலின், அம் புகை அயலது |
|
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும் |
|
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு, |
|
5 |
பாரியும், பரிசிலர் இரப்பின், |
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
109 |
அளிதோதானே, பாரியது பறம்பே! |
|
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், |
|
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே: |
|
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே; |
|
5 |
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே; |
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; |
|
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து, |
|
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே. |
|
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து, |
|
10 |
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, |
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், |
|
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், |
|
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்; |
|
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே: |
|
15 |
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, |
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர, |
|
ஆடினிர் பாடினிர் செலினே, |
|
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. |
|
திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
| |
அவனை அவர் பாடியது.
|
111 |
அளிதோ தானே, பேர் இருங் குன்றே! |
|
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; |
|
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண் |
|
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
236 |
கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம் |
|
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் |
|
மலை கெழு நாட! மா வண் பாரி! |
|
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் |
|
5 |
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே |
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது, |
|
ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி, |
|
இனையைஆதலின் நினக்கு மற்று யான் |
|
மேயினேன் அன்மையானே; ஆயினும், |
|
10 |
இம்மை போலக் காட்டி, உம்மை |
இடை இல் காட்சி நின்னோடு |
|
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! |
|
திணை அது; துறை கையறுநிலை.
| |
வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.
|