முகப்பு | தொடக்கம் |
வையாவிக் கோப்பெரும் பேகன் |
141 |
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை |
|
மாண் இழை விறலி மாலையொடு விளங்க, |
|
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ, |
|
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்! |
|
5 |
யாரீரோ?' என, வினவல் ஆனா, |
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! |
|
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே, |
|
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே, |
|
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும் |
|
10 |
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், |
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, |
|
கடாஅ யானைக் கலி மான் பேகன், |
|
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என, |
|
மறுமை நோக்கின்றோ அன்றே, |
|
15 |
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே. |
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
| |
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.
|
142 |
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும், |
|
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும், |
|
வரையா மரபின் மாரிபோல, |
|
கடாஅ யானைக் கழல் கால் பேகன் |
|
5 |
கொடைமடம் படுதல் அல்லது, |
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
143 |
'மலை வான் கொள்க!' என, உயர் பலி தூஉய், |
|
'மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க!' எனக் |
|
கடவுள் பேணிய குறவர் மாக்கள், |
|
பெயல் கண்மாறிய உவகையர், சாரல் |
|
5 |
புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க் |
கை வள் ஈகைக் கடு மான் பேக! |
|
யார்கொல் அளியள்தானே நெருநல், |
|
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென, |
|
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி |
|
10 |
நளி இருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண், |
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று, |
|
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது |
|
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள், |
|
முலையகம் நனைப்ப, விம்மி, |
|
15 |
குழல் இனைவதுபோல் அழுதனள், பெரிதே? |
திணை பெருந்திணை; துறை குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
| |
அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர் பாடியது.
|
144 |
அருளாய் ஆகலோ கொடிதே; இருள் வர, |
|
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின் |
|
கார் எதிர் கானம் பாடினேமாக, |
|
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் |
|
5 |
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப, |
இனைதல் ஆனாளாக, 'இளையோய்! |
|
கிளையைமன், எம் கேள் வெய்யோற்கு?' என, |
|
யாம் தன் தொழுதனம் வினவ, காந்தள் |
|
முகை புரை விரலின் கண்ணீர் துடையா, |
|
10 |
'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி: |
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும், |
|
வரூஉம்' என்ப 'வயங்கு புகழ்ப் பேகன் |
|
ஒல்லென ஒலிக்கும் தேரொடு, |
|
முல்லை வேலி, நல் ஊரானே.' |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாகப் பரணர் பாடியது.
|
145 |
'மடத் தகை மா மயில் பனிக்கும்' என்று அருளி, |
|
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை, |
|
கடாஅ யானைக் கலி மான் பேக! |
|
பசித்தும் வாரேம்; பாரமும் இலமே; |
|
5 |
களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ் |
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி, |
|
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்!' என, |
|
இஃது யாம் இரந்த பரிசில்: அஃது இருளின், |
|
இன மணி நெடுந் தேர் ஏறி, |
|
10 |
இன்னாது உறைவி அரும் படர் களைமே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாக அவர் பாடியது.
|
146 |
அன்ன ஆக: நின் அருங் கல வெறுக்கை |
|
அவை பெறல் வேண்டேம்; அடு போர்ப் பேக! |
|
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன் புல |
|
நல் நாடு பாட, என்னை நயந்து |
|
5 |
பரிசில் நல்குவைஆயின், குரிசில்! நீ |
நல்காமையின் நைவரச் சாஅய், |
|
அருந் துயர் உழக்கும் நின் திருந்துஇழை அரிவை |
|
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன, |
|
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ, |
|
10 |
தண் கமழ் கோதை புனைய, |
வண் பரி நெடுந் தேர் பூண்க, நின் மாவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது.
|
147 |
கல் முழை அருவிப் பல் மலை நீந்தி, |
|
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை, |
|
கார் வான் இன் உறை தமியள் கேளா, |
|
நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும் |
|
5 |
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை |
நெய்யொடு துறந்த மை இருங் கூந்தல் |
|
மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி, |
|
புது மலர் கஞல, இன்று பெயரின், |
|
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவள் காரணமாக அவனைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
|