முகப்பு | ![]() |
காஞ்சி |
71 |
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து, |
|
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து, |
|
என்னொடு பொருதும் என்ப; அவரை |
|
ஆர் அமர் அலறத் தாக்கி, தேரொடு |
|
5 |
அவர்ப் புறங்காணேன் ஆயின் சிறந்த |
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக; |
|
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து, |
|
திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து |
|
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ் |
|
10 |
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் |
பொய்யா யாணர் மையல் கோமான் |
|
மாவனும், மன் எயில் ஆந்தையும், உரை சால் |
|
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும், |
|
வெஞ் சின இயக்கனும், உளப்படப் பிறரும், |
|
15 |
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த |
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ, |
|
மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த |
|
தென் புலம் காவலின் ஒரீஇ, பிறர் |
|
வன் புலம் காவலின் மாறி யான் பிறக்கே! |
|
திணை காஞ்சி; துறை வஞ்சினக் காஞ்சி.
| |
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் பாட்டு.
|
72 |
'நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர்; |
|
இளையன் இவன்' என உளையக் கூறி, |
|
'படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள் |
|
நெடு நல் யானையும், தேரும், மாவும், |
|
5 |
படை அமை மறவரும், உடையம் யாம்' என்று |
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கி, |
|
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை |
|
அருஞ் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு |
|
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய |
|
10 |
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது, |
'கொடியன் எம் இறை' எனக் கண்ணீர் பரப்பி, |
|
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக; |
|
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி |
|
மாங்குடி மருதன் தலைவன் ஆக, |
|
15 |
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் |
புலவர் பாடாது வரைக, என் நிலவரை; |
|
புரப்போர் புன்கண் கூர, |
|
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பாட்டு.
|
73 |
மெல்ல வந்து, என் நல் அடி பொருந்தி, |
|
'ஈ' என இரக்குவர் ஆயின், சீருடை |
|
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்; |
|
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென், இந் நிலத்து; |
|
5 |
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் |
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் |
|
துஞ்சு புலி இடறிய சிதடன் போல, |
|
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக் |
|
கழை தின் யானைக் கால் அகப்பட்ட |
|
10 |
வன் திணி நீள் முளை போல, சென்று, அவண் |
வருந்தப் பொரேஎன்ஆயின், பொருந்திய |
|
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் |
|
பல் இருங் கூந்தல் மகளிர் |
|
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளி பாட்டு.
|
281 |
தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ, |
|
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க, |
|
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி, |
|
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, |
|
5 |
இசை மணி எறிந்து, காஞ்சி பாடி, |
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ, |
|
காக்கம் வம்மோ காதலம் தோழி! |
|
வேந்துறு விழுமம் தாங்கிய |
|
பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே. |
|
திணை காஞ்சி; துறை பேய்க்காஞ்சி.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
293 |
நிறப் படைக்கு ஒல்கா யானை மேலோன் |
|
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை |
|
நாண் உடை மாக்கட்கு இரங்குமாயின், |
|
எம்மினும் பேர் எழில் இழந்து, வினை எனப் |
|
5 |
பிறர் மனை புகுவள்கொல்லோ |
அளியள் தானே, பூவிலைப் பெண்டே! |
|
திணை காஞ்சி; துறை பூக்கோட் காஞ்சி.
| |
நொச்சி நியமங் கிழார் பாடியது.
|
336 |
வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே; |
|
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்; |
|
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் |
|
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த |
|
5 |
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே; |
இயவரும் அறியாப் பல் இயம் கறங்க, |
|
அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங் கடி மூதூர்; |
|
அறன் இலள் மன்ற தானே விறல் மலை |
|
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் |
|
10 |
முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் |
தகை வளர்த்து எடுத்த நகையொடு, |
|
பகை வளர்த்திருந்த இப் பண்பு இல் தாயே. |
|
திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
| |
பரணர் பாடியது.
|
337 |
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்; |
|
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும், |
|
வாள் வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர், |
|
வரல்தோறு அகம் மலர, |
|
5 |
ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக் கைப் |
பாரி பறம்பின் பனிச் சுனை போல, |
|
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட |
|
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய |
|
துகில் விரி கடுப்ப நுடங்கி, தண்ணென |
|
10 |
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய |
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு, |
|
மனைச் செறிந்தனளே, வாணுதல்; இனியே, |
|
அற்றன்றுஆகலின், தெற்றெனப் போற்றி, |
|
காய் நெல் கவளம் தீற்றி, காவுதொறும் |
|
15 |
கடுங்கண் யானை காப்பனர் அன்றி, |
வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர் |
|
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் |
|
குருதி பற்றிய வெருவரு தலையர்; |
|
மற்று இவர் மறனும் இற்றால்; தெற்றென |
|
20 |
யார் ஆகுவர்கொல் தாமே நேரிழை |
உருத்த பல சுணங்கு அணிந்த |
|
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கபிலர் பாடியது.
|
338 |
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின், |
|
நெல் மலிந்த மனை, பொன் மலிந்த மறுகின், |
|
படு வண்டு ஆர்க்கும் பல் மலர்க் காவின், |
|
நெடு வேள் ஆதன் போந்தை அன்ன, |
|
5 |
பெருஞ் சீர் அருங் கொண்டியளே; கருஞ் சினை |
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் |
|
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர், |
|
கொற்ற வேந்தர் வரினும், தன் தக |
|
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப் |
|
10 |
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று |
உணங்கு கலன் ஆழியின் தோன்றும் |
|
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
குன்றூர் கிழார் மகனார் பாடியது.
|
339 |
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு |
|
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர் |
|
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல் |
|
5 |
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; |
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் |
|
கடல் ஆடிக் கயம் பாய்ந்து, |
|
கழி நெய்தல் பூக்குறூஉந்து; |
|
பைந் தழை துயல்வரும் செறு விறற.............. |
|
10 |
............................................................................லத்தி |
வளர வேண்டும், அவளே, என்றும் |
|
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி, |
|
முறம் செவி யானை வேந்தர் |
|
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|
340 |
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக் |
|
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள், |
|
மா மகள் |
|
....................... ல் என வினவுதி, கேள், நீ: |
|
5 |
எடுப்பவெ...,.................................................. |
..........................மைந்தர் தந்தை |
இரும் பனை அன்ன பெருங் கை யானை |
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் |
|
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அ............................... பாடியது.
|
341 |
வேந்து குறையுறவும் கொடாஅன், ஏந்து கோட்டு |
|
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல், |
|
செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை, |
|
எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின் |
|
5 |
அரை மண் இஞ்சி நாட் கொடி நுடங்கும் |
.......................................................................................................... |
|
புலிக் கணத்து அன்ன கடுங் கண் சுற்றமொடு, |
|
மாற்றம் மாறான், மறலிய சினத்தன், |
|
'பூக் கோள்' என ஏஎய், கயம் புக்கனனே; |
|
10 |
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல் இயல், |
சுணங்கு அணி வன முலை, அவளொடு நாளை |
|
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ |
|
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின், |
|
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு |
|
15 |
வாரா உலகம் புகுதல் ஒன்று எனப் |
படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக் |
|
களிறு பொரக் கலங்கிய தண் கயம் போல, |
|
பெருங் கவின் இழப்பது கொல்லோ, |
|
மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
342 |
'கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும் |
|
மயிலைக் கண்ணி, பெருந் தோள் குறுமகள், |
|
ஏனோர் மகள்கொல் இவள்?' என விதுப்புற்று, |
|
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை! |
|
5 |
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே |
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; |
|
பைங் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை |
|
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின், |
|
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, |
|
10 |
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், |
தண் பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும் |
|
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின், |
|
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா, |
|
வாள் தக வைகலும் உழக்கும் |
|
15 |
மாட்சியவர், இவள் தன்னைமாரே. |
திணையும் துறையும் அவை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
343 |
'மீன் நொடுத்து நெல் குவைஇ, |
|
மிசை அம்பியின் மனை மறுக்குந்து, |
|
மனைக் குவைஇய கறி மூடையால், |
|
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து; |
|
5 |
கலம் தந்த பொற் பரிசம் |
கழித் தோணியான், கரை சேர்க்குந்து; |
|
மலைத் தாரமும் கடல் தாரமும் |
|
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும் |
|
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன் |
|
10 |
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன, |
நலம்சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும், |
|
புரையர் அல்லோர் வரையலள், இவள்' எனத் |
|
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர், |
|
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை |
|
15 |
வருந்தின்று கொல்லோ தானே பருந்து உயிர்த்து |
இடை மதில் சேக்கும் புரிசை, |
|
படை மயங்கு ஆர் இடை, நெடு நல் ஊரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
344 |
செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை, |
|
செறி வளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து, |
|
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு, |
|
நிறைசால் விழுப் பொருள் தருதல் ஒன்றோ |
|
5 |
புகை படு கூர் எரி பரப்பிப் பகை செய்து, |
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ |
|
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே, |
|
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி.................. |
|
கணி மேவந்தவள் அல்குல் அவ் வரியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...............அடைநெடுங் கல்வியார் பாடியது.
|
345 |
களிறு அணைப்பக் கலங்கின, காஅ, |
|
தேர் ஓடத் துகள் கெழுமின, தெருவு; |
|
மா மறுகலின் மயக்குற்றன, வழி; |
|
கலம் கழாஅலின், துறை கலக்குற்றன; |
|
5 |
தெறல் மறவர் இறை கூர்தலின், |
பொறை மலிந்து நிலன் நெளிய, |
|
வந்தோர் பலரே, வம்ப வேந்தர், |
|
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் |
|
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி, |
|
10 |
கருங் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை, |
மையல் நோக்கின், தையலை நயந்தோர் |
|
அளியர் தாமே; இவள் தன்னைமாரே |
|
செல்வம் வேண்டார், செருப் புகல் வேண்டி, |
|
'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்' என; |
|
15 |
கழிப் பிணிப் பலகையர், கதுவாய் வாளர், |
குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு |
|
கழாஅத் தலையர், கருங் கடை நெடு வேல் |
|
இன்ன மறவர்த்துஆயினும் அன்னோ! |
|
என் ஆவது கொல்தானே |
|
20 |
பன்னல் வேலி இப் பணை நல் ஊரே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
346 |
பிற ..................... ள பால் என மடுத்தலின், |
|
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்; |
|
கல்வியென் என்னும், வல் ஆண் சிறாஅன்; |
|
ஒல்வேன்அல்லன், அது வாய் ஆகுதல் |
|
5 |
அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் |
பேணுநர்ப் பெறாஅது விளியும் |
|
புன் தலைப் பெரும் பாழ் செயும், இவள் நலனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அண்டர் மகன் குறுவழுதி பாடியது.
|
347 |
உண்போன் தான் நறுங் கள்ளின் இடச் சில |
|
நா இடைப் பல் தேர் கோலச் சிவந்த |
|
ஒளிறு ஒள் வாடக் குழைந்த பைந் தும்பை, |
|
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின், |
|
5 |
மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை, |
குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன |
|
குவை இருங்கூந்தல் வரு முலை சேப்ப, |
|
........................................................................................................... |
|
என் ஆவதுகொல் தானே?..................................... |
|
10 |
விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர் |
வினை நவில் யானை பிணிப்ப, |
|
வேர் துளங்கின, நம் ஊருள் மரனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கபிலர் பாடியது.
|
348 |
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ, |
|
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய, |
|
கள் அரிக்கும் குயம், சிறு சில் |
|
மீன் சீவும் பாண் சேரி, |
|
5 |
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, |
குவளை உண்கண் இவளை, தாயே |
|
ஈனாளாயினள்ஆயின், ஆனாது |
|
நிழல்தொறும் நெடுந் தேர் நிற்ப, வயின்தொறும், |
|
செந் நுதல் யானை பிணிப்ப, |
|
10 |
வருந்தலமன் எம் பெருந் துறை மரனே! |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
349 |
நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையா, |
|
கடிய கூறும், வேந்தே; தந்தையும், |
|
நெடிய அல்லது, பணிந்து மொழியலனே; |
|
இஃது இவர் படிவம்: ஆயின், வை எயிற்று, |
|
5 |
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை, |
மரம் படு சிறு தீப் போல, |
|
அணங்கு ஆயினள், தான் பிறந்த ஊர்க்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
|
350 |
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், |
|
சிதைந்த இஞ்சி, கதுவாய் மூதூர் |
|
யாங்கு ஆவதுகொல் தானே, தாங்காது? |
|
படு மழை உருமின் இரங்கு முரசின் |
|
5 |
கடு மான் வேந்தர் காலை வந்து, எம் |
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ; |
|
பொருதாது அமைகுவர்அல்லர் போர் உழந்து, |
|
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய |
|
வடிவேல் எஃகின் சிவந்த உண்கண், |
|
10 |
தொடி பிறழ் முன்கை, இளையோள் |
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் பாடியது.
|
351 |
படு மணி மருங்கின பணைத் தாள் யானையும், |
|
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும், |
|
படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லென, |
|
கடல் கண்டன்ன கண் அகன் தானை |
|
5 |
வென்று எறி முரசின் வேந்தர், என்றும், |
வண் கை எயினன் வாகை அன்ன |
|
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்; |
|
என் ஆவதுகொல் தானே தெண் நீர்ப் |
|
பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை |
|
10 |
தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின், |
காமரு காஞ்சித் துஞ்சும் |
|
ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.
|
352 |
தேஎம் கொண்ட வெண் மண்டையான், |
|
வீ...................................................................கறக்குந்து; |
|
அவல் வகுத்த பசுங் குடையான், |
|
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
5 |
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
குன்று ஏறிப் புனல் பாயின், |
|
புற வாயால் புனல் வள |
|
............................................................ நொடை நறவின் |
|
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி |
|
10 |
உறந்தை அன்ன உரைசால் நன் கலம் |
கொடுப்பவும் கொளாஅனெ |
|
.......................ர் தந்த நாகு இள வேங்கையின், |
|
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் |
|
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும் |
|
15 |
சிறு கோல் உளையும் புரவி ெ.................. |
...................................................................... யமரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
353 |
ஆசு இல் கம்மியன் மாசு அறப் புனைந்த |
|
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல், |
|
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ, |
|
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி, |
|
5 |
தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை, |
வினவல் ஆனா வெல் போர் அண்ணல்! |
|
'யார் மகள்?' என்போய்; கூறக் கேள், இனி: |
|
குன்று கண்டன்ன நிலைப் பல் போர்பு |
|
நாள் கடா அழித்த நனந் தலைக் குப்பை |
|
10 |
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றாத் |
தொல் குடி மன்னன் மகளே; முன்நாள் |
|
கூறி வந்த மா முது வேந்தர்க்கு |
|
......................................................................................................... |
|
............................................. உழக்கிக் குருதி ஓட்டி, |
|
15 |
கதுவாய் போகிய துதி வாய் எஃகமொடு, |
பஞ்சியும் களையாப் புண்ணர், |
|
அஞ்சுதகவு உடையர், இவள் தன்னைமாரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
354 |
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா |
|
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப் |
|
புரையோர் சேர்ந்தென, தந்தையும் பெயர்க்கும்; |
|
வயல் அமர் கழனி வாயில் பொய்கை, |
|
5 |
கயல் ஆர் நாரை உகைத்த வாளை |
புனலாடு மகளிர் வள மனை ஒய்யும் |
|
ஊர் கவின் இழப்பவும் வருவது கொல்லோ |
|
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை, |
|
வீங்கு இறைப் பணைத் தோள், மடந்தை |
|
10 |
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே? |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
356 |
களரி பரந்து, கள்ளி போகி, |
|
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல், |
|
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு |
|
அஞ்சு வந்தன்று, இம் மஞ்சு படு முதுகாடு; |
|
5 |
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் |
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப, |
|
எல்லார் புறனும் தான் கண்டு, உலகத்து |
|
மன்பதைக்கு எல்லாம் தானாய், |
|
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தாயங் கண்ணனார் பாடியது.
|
357 |
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண், |
|
பொதுமை சுட்டிய மூவர் உலகமும், |
|
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும், |
|
மாண்ட அன்றே, யாண்டுகள்; துணையே |
|
5 |
வைத்தது அன்றே வெறுக்கை; வி................ |
..........................................................................................ணை |
|
புணை கைவிட்டோர்க்கு அரிதே, துணை அழத் |
|
தொக்கு உயிர் வௌவும்காலை, |
|
இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே. |
|
திணை அது; துறை ...................; பெருங்காஞ்சியும் ஆம்.
| |
பிரமனார் பாடியது.
|
358 |
பருதி சூழ்ந்த இப் பயம் கெழு மா நிலம் |
|
ஒரு பகல் எழுவர் எய்தியற்றே; |
|
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு |
|
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின், |
|
5 |
கைவிட்டனரே காதலர்; அதனால் |
விட்டோரை விடாஅள், திருவே; |
|
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே. |
|
திணை அது; துறை மனையறம், துறவறம்.
| |
வான்மீகியார் பாடியது.
|
359 |
பாறுபடப் பறைந்த பல் மாறு மருங்கின், |
|
வேறு படு குரல வெவ் வாய்க் கூகையொடு, |
|
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல, |
|
பேஎய் மகளிர் பிணம் தழூஉப் பற்றி, |
|
5 |
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர், |
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி, |
|
ஈம விளக்கின் வெருவரப் பேரும் |
|
காடு முன்னினரே, நாடு கொண்டோரும்; |
|
நினக்கும் வருதல் வைகல் அற்றே; |
|
10 |
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; |
அதனால், வசை நீக்கி இசை வேண்டியும், |
|
நசை வேண்டாது நன்று மொழிந்தும், |
|
நிலவுக் கோட்டுப் பல களிற்றொடு, |
|
பொலம் படைய மா மயங்கிட, |
|
15 |
இழை கிளர் நெடுந் தேர் இரவலர்க்கு அருகாது, |
'கொள்' என விடுவை ஆயின், வெள்ளென, |
|
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும், |
|
ஈண்டு நீடு விளங்கும், நீ எய்திய புகழே. |
|
திணை அது; துறை பெருங்காஞ்சி.
| |
அந்துவன் கீரனைக் காவட்டனார் பாடியது.
|
360 |
பெரிது ஆராச் சிறு சினத்தர், |
|
சில சொல்லான் பல கேள்வியர், |
|
நுண் உணர்வினான் பெருங் கொடையர், |
|
கலுழ் நனையான் தண் தேறலர், |
|
5 |
கனி குய்யான் கொழுந் துவையர், |
தாழ் உவந்து தழூஉ மொழியர், |
|
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி, |
|
ஏமம் ஆக இந் நிலம் ஆண்டோர் |
|
சிலரே; பெரும! கேள், இனி: நாளும், |
|
10 |
பலரே, தகையஃது அறியாதோரே; |
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது; |
|
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால், |
|
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில் |
|
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சு வரப் |
|
15 |
பாறு இறை கொண்ட பறந்தலை, மா கத |
கள்ளி போகிய களரி மருங்கின், |
|
வெள்ளில் நிறுத்த பின்றை, கள்ளொடு |
|
புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி, |
|
புலையன் ஏவ, புல் மேல் அமர்ந்து உண்டு, |
|
20 |
அழல் வாய்ப் புக்க பின்னும், |
பலர் வாய்த்து இராஅர், பருத்து உண்டோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தந்துமாறனைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடியது.
|
365 |
'மயங்கு இருங் கருவிய விசும்பு முகன் ஆக, |
|
இயங்கிய இரு சுடர் கண் என, பெயரிய |
|
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம், |
|
வயிரக் குறட்டின் வயங்கு மணி ஆரத்துப் |
|
5 |
பொன்அம் திகிரி முன் சமத்து உருட்டி, |
பொருநர்க் காணாச் செரு மிகு முன்பின் |
|
முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும் |
|
விலை நலப் பெண்டிரின் பலர் மீக்கூற, |
|
உள்ளேன் வாழியர், யான்' எனப் பல் மாண் |
|
10 |
நிலமகள் அழுத காஞ்சியும் |
உண்டு என உரைப்பரால், உணர்ந்திசினோரே. |
|
திணை காஞ்சி; துறை பெருங்காஞ்சி.
| |
மார்க்கண்டேயனார் பாடியது.
|
366 |
விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம் |
|
ஒழுக்குடை மருங்கின் ஒரு மொழித்து ஆக, |
|
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப, |
|
ஒரு தாம் ஆகிய பெருமையோரும், |
|
5 |
தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே; |
அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்! |
|
.............................உரைப்பக் கேண்மதி: |
|
நின் ஊற்றம் பிறர் அறியாது, |
|
பிறர் கூறிய மொழி தெரியா, |
|
10 |
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, |
இரவின் எல்லை வருவது நாடி, |
|
உரை..................................................... |
|
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்றாங்கு, |
|
செங் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ, | |
15 |
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப, |
கெடல் அருந் திருவ! |
|
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது, |
|
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி, |
|
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப, |
|
20 |
நீர் நிலை பெருத்த வார் மணல் அடை கரை, |
காவுதொறும் |
|
மடங்கல் உண்மை மாயமோ அன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது.
|