முகப்பு | ![]() |
நொச்சி |
109 |
அளிதோதானே, பாரியது பறம்பே! |
|
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், |
|
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே: |
|
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே; |
|
5 |
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே; |
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; |
|
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து, |
|
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே. |
|
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து, |
|
10 |
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, |
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், |
|
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், |
|
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்; |
|
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே: |
|
15 |
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, |
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர, |
|
ஆடினிர் பாடினிர் செலினே, |
|
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. |
|
திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
| |
அவனை அவர் பாடியது.
|
110 |
கடந்து அடு தானை மூவிரும் கூடி |
|
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே; |
|
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு; |
|
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; |
|
5 |
யாமும் பாரியும் உளமே; |
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது.
|
111 |
அளிதோ தானே, பேர் இருங் குன்றே! |
|
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; |
|
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண் |
|
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
271 |
நீர் அறவு அறியா நிலமுதல் கலந்த |
|
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை, |
|
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல், |
|
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே, |
|
5 |
வெருவரு குருதியொடு மயங்கி, உருவு கரந்து, |
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்து, |
|
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் |
|
மறம் புகல் மைந்தன் மலைந்தமாறே! |
|
திணை நொச்சி; துறை செருவிடை வீழ்தல்.
| |
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.
|
272 |
மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி! |
|
போது விரி பல் மரனுள்ளும் சிறந்த |
|
காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே! |
|
கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த |
|
5 |
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி; |
காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின், |
|
ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை |
|
பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மோசி சாத்தனார் பாடியது.
|
299 |
பருத்தி வேலிச் சீறூர் மன்னன் |
|
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி, |
|
கடல் மண்டு தோணியின், படை முகம் போழ |
|
நெய்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின், |
|
5 |
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, |
அணங்குடை முருகன் கோட்டத்துக் |
|
கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே. |
|
திணை நொச்சி; துறை குதிரை மறம்.
| |
பொன்முடியார் பாடியது.
|