முகப்பு | ![]() |
பாடாண் திணை |
2 |
மண் திணிந்த நிலனும், |
|
நிலன் ஏந்திய விசும்பும், |
|
விசும்பு தைவரு வளியும், |
|
வளித் தலைஇய தீயும், |
|
5 |
தீ முரணிய நீரும், என்றாங்கு |
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல |
|
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், |
|
வலியும், தெறலும், அளியும், உடையோய்! |
|
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் |
|
10 |
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும், |
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந! |
|
வான வரம்பனை! நீயோ, பெரும! |
|
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ, |
|
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை |
|
15 |
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய, |
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்! |
|
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், |
|
நாஅல் வேத நெறி திரியினும், |
|
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி, |
|
20 |
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து, |
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை, |
|
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும் |
|
முத் தீ விளக்கின், துஞ்சும் |
|
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே! |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
| |
சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்பாடியது.
|
3 |
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை |
|
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற, |
|
ஏம முரசம் இழுமென முழங்க, |
|
நேமி உய்த்த நேஎ நெஞ்சின், |
|
5 |
தவிரா ஈகை, கவுரியர் மருக! |
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ! |
|
பொன் ஓடைப் புகர் அணி நுதல், |
|
துன் அருந் திறல், கமழ் கடாஅத்து, |
|
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ, |
|
10 |
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின், |
பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து, |
|
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக் |
|
கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி! |
|
நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்; |
|
15 |
பொலங் கழற் கால், புலர் சாந்தின் |
விலங்கு அகன்ற வியல் மார்ப! |
|
ஊர் இல்ல, உயவு அரிய, |
|
நீர் இல்ல, நீள் இடைய, |
|
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின், |
|
20 |
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர் |
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை, |
|
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும் |
|
உன்ன மரத்த துன் அருங் கவலை, |
|
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது |
|
25 |
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் |
இன்மை தீர்த்தல் வன்மையானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் கருங் கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார்பாடியது.
|
5 |
எருமை அன்ன கருங் கல் இடை தோறு, |
|
ஆனின் பரக்கும் யானைய, முன்பின், |
|
கானக நாடனை! நீயோ, பெரும! |
|
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்: |
|
5 |
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா |
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல், |
|
குழவி கொள்பவரின், ஓம்புமதி! |
|
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே. |
|
திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
| |
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
|
6 |
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும், |
|
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும், |
|
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும், |
|
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும், |
|
5 |
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின் |
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது |
|
ஆனிலை உலகத்தானும், ஆனாது, |
|
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த் |
|
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம் |
|
10 |
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க! |
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து, |
|
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச் |
|
சிறு கண் யானை செவ்விதின் ஏவி, |
|
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து, |
|
15 |
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம் |
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி, |
|
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர் |
|
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே! |
|
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த |
|
20 |
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே! |
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார் |
|
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே! |
|
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை |
|
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே! |
|
25 |
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய |
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி! |
|
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர் |
|
ஒண் கதிர் ஞாயிறு போலவும், |
|
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே! |
|
திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.
|
8 |
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக, |
|
போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது, |
|
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, |
|
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை, |
|
5 |
கடந்து அடு தானைச் சேரலாதனை |
யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்! |
|
பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி; |
|
மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி; |
|
அகல் இரு விசும்பினானும் |
|
10 |
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே. |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
| |
சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.
|
9 |
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், |
|
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் |
|
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் |
|
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், |
|
5 |
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என, |
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின் |
|
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் |
|
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச் |
|
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த, |
|
10 |
முந்நீர் விழவின், நெடியோன் |
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
10 |
வழிபடுவோரை வல் அறிதீயே; |
|
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே; |
|
நீ மெய் கண்ட தீமை காணின்; |
|
ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி; |
|
5 |
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், |
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே |
|
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில் |
|
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை |
|
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் |
|
10 |
மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப! |
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ், |
|
நெய்தலங்கானல் நெடியோய்! |
|
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
|
11 |
அரி மயிர்த் திரள் முன்கை, |
|
வால் இழை, மட மங்கையர் |
|
வரி மணல் புனை பாவைக்குக் |
|
குலவுச் சினைப் பூக் கொய்து, |
|
5 |
தண் பொருநைப் புனல் பாயும், |
விண் பொரு புகழ், விறல் வஞ்சி, |
|
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே, |
|
வெப்பு உடைய அரண் கடந்து, |
|
துப்பு உறுவர் புறம் பெற்றிசினே; |
|
10 |
புறம் பெற்ற வய வேந்தன் |
மறம் பாடிய பாடினியும்மே, |
|
ஏர் உடைய விழுக் கழஞ்சின், |
|
சீர் உடைய இழை பெற்றிசினே; |
|
இழை பெற்ற பாடினிக்குக் |
|
15 |
குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே, |
என ஆங்கு, | |
ஒள் அழல் புரிந்த தாமரை |
|
வெள்ளி நாரால் பூ பெற்றிசினே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
| |
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது.
|
12 |
பாணர் தாமரை மலையவும், புலவர் |
|
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும், |
|
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி! |
|
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு, |
|
5 |
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே? |
திணை அது; துறை இயன்மொழி.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
13 |
'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே |
|
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய, |
|
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின், |
|
மறலி அன்ன களிற்று மிசையோனே; |
|
5 |
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், |
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும், |
|
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப, |
|
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே; |
|
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! |
|
10 |
பழன மஞ்ஞை உகுத்த பீலி |
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும், |
|
கொழு மீன், விளைந்த கள்ளின், |
|
விழு நீர் வேலி நாடு கிழவோனே. |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
சோழன் முடித் தலைக் கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து,உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.
|
14 |
கடுங் கண்ண கொல் களிற்றால் |
|
காப்பு உடைய எழு முருக்கி, |
|
பொன் இயல் புனை தோட்டியால் |
|
முன்பு துரந்து, சமம் தாங்கவும்; |
|
5 |
பார் உடைத்த குண்டு அகழி |
நீர் அழுவ நிவப்புக் குறித்து, |
|
நிமிர் பரிய மா தாங்கவும்; |
|
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச் |
|
சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்; |
|
10 |
பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்! |
வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை. |
|
புலவு நாற்றத்த பைந் தடி |
|
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை |
|
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது, |
|
15 |
பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும் |
மெல்லிய பெரும! தாமே. நல்லவர்க்கு |
|
ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு |
|
இரு நிலத்து அன்ன நோன்மை, |
|
செரு மிகு சேஎய்! நிற் பாடுநர் கையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப் பற்றி, 'மெல்லியவாமால் நூம்கை' என, கபிலர் பாடியது.
|
15 |
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், |
|
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, |
|
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்; |
|
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல், |
|
5 |
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத் |
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து; |
|
துளங்கு இயலான், பணை எருத்தின், |
|
பாவு அடியான், செறல் நோக்கின், |
|
ஒளிறு மருப்பின் களிறு அவர |
|
10 |
காப்பு உடைய கயம் படியினை; |
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின், |
|
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு |
|
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார் |
|
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார், |
|
15 |
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய, |
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல் |
|
நல் பனுவல், நால் வேதத்து, |
|
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை |
|
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண் |
|
20 |
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, |
யூபம் நட்ட வியன் களம் பலகொல்? |
|
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று |
|
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின் |
|
பாடினி பாடும் வஞ்சிக்கு |
|
25 |
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே. |
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
30 |
செஞ் ஞாயிற்றுச் செலவும், |
|
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், |
|
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், |
|
வளி திரிதரு திசையும், |
|
5 |
வறிது நிலைஇய காயமும், என்று இவை |
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும் |
|
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் |
|
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, |
|
களிறு கவுள் அடுத்த எறிகல் போல |
|
10 |
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட |
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு |
|
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது |
|
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர் |
|
இடைப் புலப் பெரு வழிச் சொரியும் |
|
15 |
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே! |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி
| |
அவனை அவர் பாடியது.
|
32 |
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் |
|
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ? |
|
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள், |
|
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என, |
|
5 |
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் |
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! |
|
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி |
|
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த |
|
பசு மண் குரூஉத் திரள் போல, அவன் |
|
10 |
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. |
திணை பாடாண்திணை; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
34 |
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், |
|
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், |
|
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும், |
|
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என, |
|
5 |
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் |
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என, |
|
அறம் பாடின்றே ஆயிழை கணவ! |
|
'காலை அந்தியும், மாலை அந்தியும், |
|
புறவுக் கரு அன்ன புன் புல வரகின் |
|
10 |
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, |
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, |
|
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து, |
|
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, |
|
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு |
|
15 |
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், |
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின், |
|
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்; |
|
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து, |
|
20 |
சான்றோர் செய்த நன்று உண்டாயின், |
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி, |
|
கொண்டல் மா மழை பொழிந்த |
|
நுண் பல் துளியினும் வாழிய, பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
35 |
நளி இரு முந்நீர் ஏணி ஆக, |
|
வளி இடை வழங்கா வானம் சூடிய |
|
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், |
|
முரசு முழங்கு தானை மூவருள்ளும், |
|
5 |
அரசு எனப்படுவது நினதே, பெரும! |
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், |
|
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும், |
|
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட, |
|
தோடு கொள் வேலின் தோற்றம் போல, |
|
10 |
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் |
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க |
|
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! |
|
நினவ கூறுவல்; எனவ கேண்மதி! |
|
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து |
|
15 |
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு |
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே; |
|
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ |
|
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு, |
|
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை |
|
20 |
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய |
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ! |
|
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப, |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து, |
|
25 |
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை |
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; |
|
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், |
|
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், |
|
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்; |
|
30 |
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும் |
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, |
|
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, |
|
குடி புறந்தருகுவை ஆயின், நின் |
|
அடி புறந்தருகுவர், அடங்காதோரே. |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.
|
38 |
வரை புரையும் மழ களிற்றின் மிசை, |
|
வான் துடைக்கும் வகைய போல, |
|
விரவு உருவின கொடி நுடங்கும் |
|
வியன் தானை விறல் வேந்தே! |
|
5 |
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ, |
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப, |
|
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், |
|
வெண் திங்களுள் வெயில் வேண்டினும், |
|
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின், |
|
10 |
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த, |
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப் |
|
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும் |
|
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை, |
|
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் |
|
15 |
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என, |
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், |
|
நின் நாடு உள்ளுவர், பரிசிலர் |
|
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|
39 |
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி |
|
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக் |
|
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக! |
|
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல் |
|
5 |
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல் |
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், |
|
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று, |
|
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
|
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால் |
|
10 |
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு |
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள், |
|
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ! |
|
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய |
|
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு |
|
15 |
இமயம் சூட்டிய ஏம விற்பொறி, |
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய, |
|
வாடா வஞ்சி வாட்டும் நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
40 |
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில் |
|
ஓம்பாது கடந்து அட்டு, அவர் |
|
முடி புனைந்த பசும் பொன் நின் |
|
அடி பொலியக் கழல் தைஇய |
|
5 |
வல்லாளனை; வய வேந்தே! |
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க, |
|
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, |
|
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும் |
|
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும! |
|
10 |
ஒரு பிடி படியும் சீறிடம் |
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை ஆவூர் முலங்கிழார் பாடியது.
|
48 |
கோதை மார்பின் கோதையானும், |
|
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும், |
|
மாக் கழி மலர்ந்த நெய்தலானும், |
|
கள் நாறும்மே, கானலம் தொண்டி; |
|
5 |
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்; |
அன்னோற் படர்தியாயின், நீயும் |
|
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல! |
|
'அமர் மேம்படூஉம் காலை, நின் |
|
புகழ் மேம்படுநனைக் கண்டனம்' எனவே. |
|
திணை பாடாண் திணை; துறை புலவராற்றுப் படை.
| |
சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.
|
49 |
நாடன் என்கோ? ஊரன் என்கோ? |
|
பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ? |
|
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை? |
|
புனவர் தட்டை புடைப்பின், அயலது |
|
5 |
இறங்கு கதிர் அலமரு கழனியும், |
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே! |
|
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|
50 |
மாசு அற விசித்த வார்புறு வள்பின் |
|
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை |
|
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார், |
|
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி, |
|
5 |
குருதி வேட்கை உரு கெழு முரசம் |
மண்ணி வாரா அளவை, எண்ணெய் |
|
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை |
|
அறியாது ஏறிய என்னைத் தெறுவர, |
|
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை |
|
10 |
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்; |
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் |
|
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென |
|
வீசியோயே; வியலிடம் கமழ, |
|
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது |
|
15 |
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை |
விளங்கக் கேட்ட மாறுகொல் |
|
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.
|
55 |
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, |
|
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி, |
|
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த |
|
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் |
|
5 |
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல, |
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற! |
|
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும், |
|
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என |
|
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட |
|
10 |
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்; |
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது, |
|
'பிறர்' எனக் குணம் கொல்லாது, |
|
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும், |
|
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும், |
|
15 |
வானத்து அன்ன வண்மையும், மூன்றும், |
உடையை ஆகி, இல்லோர் கையற, |
|
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர் |
|
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் |
|
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை, |
|
20 |
கடு வளி தொகுப்ப ஈண்டிய |
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
|
56 |
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை, |
|
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்; |
|
கடல் வளர் புரி வளை புரையும் மேனி, |
|
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்; |
|
5 |
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, |
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும், |
|
மணி மயில் உயரிய மாறா வென்றி, |
|
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என |
|
ஞாலம் காக்கும் கால முன்பின், |
|
10 |
தோலா நல் இசை, நால்வருள்ளும், |
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்; |
|
வலி ஒத்தீயே, வாலியோனை; |
|
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை; |
|
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்; |
|
15 |
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும் |
அரியவும் உளவோ, நினக்கே? அதனால், |
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா, |
|
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் |
|
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும் |
|
20 |
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, |
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற! |
|
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் |
|
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத் |
|
தண் கதிர் மதியம் போலவும், |
|
25 |
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! |
திணை அது; துறை பூவை நிலை.
| |
அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
|
58 |
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே, |
|
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக் |
|
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு, |
|
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது, |
|
5 |
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ, |
இளையது ஆயினும் கிளை அரா எறியும் |
|
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச் |
|
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே, |
|
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே, |
|
10 |
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என, |
வரைய சாந்தமும், திரைய முத்தமும், |
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் |
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே; |
|
பால் நிற உருவின் பனைக் கொடியோனும், |
|
15 |
நீல் நிற உருவின் நேமியோனும், என்று |
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு, |
|
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி, |
|
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ? |
|
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே; |
|
20 |
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் |
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப் |
|
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம் |
|
கையகப்படுவது பொய் ஆகாதே; |
|
அதனால், நல்ல போலவும், நயவ போலவும், |
|
25 |
தொல்லோர் சென்ற நெறிய போலவும், |
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் |
|
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது, |
|
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று |
|
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக் |
|
30 |
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி |
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த |
|
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே. |
|
திணை பாடாண் திணை; துறை உடனிலை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
59 |
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின், |
|
தாள் தோய் தடக் கை, தகை மாண் வழுதி! |
|
வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்; |
|
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும் |
|
5 |
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் |
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு; |
|
திங்கள் அனையை, எம்மனோர்க்கே. |
|
திணை அது; துறை பூவை நிலை.
| |
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியது.
|
60 |
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல, |
|
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் |
|
உச்சி நின்ற உவவு மதி கண்டு, |
|
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த, |
|
5 |
சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து, |
தொழுதனெம் அல்லமோ, பலவே கானல் |
|
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் |
|
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் |
|
உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன், |
|
10 |
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன், |
வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின் |
|
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே? |
|
திணை அது; துறை குடை மங்கலம்.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
64 |
நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி, |
|
செல்லாமோதில் சில் வளை விறலி! |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப, |
|
5 |
பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின் |
குடுமிக் கோமாற் கண்டு, |
|
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே? |
|
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
| |
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.
|
67 |
அன்னச் சேவல்! அன்னச் சேவல்! |
|
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் |
|
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல, |
|
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் |
|
5 |
மையல் மாலை, யாம் கையறுபு இனைய, |
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி, |
|
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது |
|
சோழ நல் நாட்டுப் படினே, கோழி |
|
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ, |
|
10 |
வாயில் விடாது கோயில் புக்கு, எம் |
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர் |
|
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின் |
|
இன்புறு பேடை அணிய, தன் |
|
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
|
68 |
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின் |
|
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது, |
|
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து, |
|
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து, |
|
5 |
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து |
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் |
|
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை, |
|
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச் |
|
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் |
|
10 |
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன், |
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு |
|
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என, |
|
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப, |
|
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி, |
|
15 |
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த |
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை |
|
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும் |
|
உறந்தையோனே குருசில்; |
|
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே. |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
69 |
கையது, கடன் நிறை யாழே; மெய்யது, |
|
புரவலர் இன்மையின் பசியே; அரையது, |
|
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் |
|
ஓம்பி உடுத்த உயவல் பாண! |
|
5 |
பூட்கை இல்லோன் யாக்கை போலப் |
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை; |
|
வையகம் முழுதுடன் வளைஇ, பையென |
|
என்னை வினவுதி ஆயின், மன்னர் |
|
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை, |
|
10 |
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி, |
புலாக் களம் செய்த கலாஅத் தானையன் |
|
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே; |
|
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப் |
|
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார் |
|
15 |
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் |
கிள்ளி வளவற் படர்குவை ஆயின், |
|
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல் |
|
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி, |
|
நீ அவற் கண்ட பின்றை, பூவின் |
|
20 |
ஆடு வண்டு இமிராத் தாமரை |
சூடாயாதல் அதனினும் இலையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
70 |
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண! |
|
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன |
|
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை |
|
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி; |
|
5 |
வினவல் ஆனா முது வாய் இரவல! |
தைஇத் திங்கள் தண் கயம் போல, |
|
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர், |
|
அடுதீ அல்லது சுடுதீ அறியாது; |
|
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன், |
|
10 |
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி, |
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை |
|
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் |
|
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப் |
|
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல், |
|
15 |
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச் |
செல்வைஆயின், செல்வை ஆகுவை; |
|
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் |
|
தலைப்பாடு அன்று, அவன் ஈகை; |
|
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
91 |
வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் |
|
களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை, |
|
ஆர் கலி நறவின், அதியர் கோமான்! |
|
போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி! |
|
5 |
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி |
நீலமணி மிடற்று ஒருவன் போல |
|
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப் |
|
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட |
|
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது, |
|
10 |
ஆதல் நின் அகத்து அடக்கி, |
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.
|
92 |
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; |
|
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு |
|
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை; |
|
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் |
|
5 |
கடி மதில் அரண் பல கடந்த |
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
95 |
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி, |
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து, |
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே, |
|
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து, |
|
5 |
கொல் துறைக் குற்றில மாதோ என்றும் |
உண்டாயின் பதம் கொடுத்து, |
|
இல்லாயின் உடன் உண்ணும், |
|
இல்லோர் ஒக்கல் தலைவன், |
|
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே. |
|
திணை பாடாண் திணை; துறை வாள் மங்கலம்.
| |
அவன் தூதுவிட, தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.
|
96 |
அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின், |
|
திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு |
|
இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே, |
|
பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, |
|
5 |
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, |
'விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது, |
|
மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் |
|
கைமான் கொள்ளுமோ?' என, |
|
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
|
97 |
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், |
|
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், |
|
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே; |
|
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர் |
|
5 |
நறுங் கள்ளின் நாடு நைத்தலின், |
சுரை தழீஇய இருங் காழொடு |
|
மடை கலங்கி நிலை திரிந்தனவே; |
|
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் |
|
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், |
|
10 |
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே; |
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர் |
|
பொலம் பைந் தார் கெடப் பரிதலின், |
|
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே; |
|
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப் |
|
15 |
பொலந் தும்பைக் கழல் பாண்டில் |
கணை பொருத துளைத் தோலன்னே. |
|
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள், |
|
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் |
|
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு |
|
20 |
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின், |
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச் |
|
சொல்லவும் தேறீராயின், மெல் இயல், |
|
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி, |
|
குறுந் தொடி மகளிர் தோள் விடல் |
|
25 |
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே. |
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
|
101 |
ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்; |
|
பல நாள் பயின்று, பலரொடு செல்லினும், |
|
தலை நாள் போன்ற விருப்பினன்மாதோ |
|
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி |
|
5 |
அதியமான்; பரிசில் பெறூஉம் காலம் |
நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன் |
|
கோட்டு இடை வைத்த கவளம் போலக் |
|
கையகத்தது; அது பொய் ஆகாதே; |
|
அருந்த ஏமாந்த நெஞ்சம்! |
|
10 |
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே! |
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனை அவர் பாடியது.
|
102 |
'எருதே இளைய; நுகம் உணராவே; |
|
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே; |
|
அவல் இழியினும், மிசை ஏறினும், |
|
அவணது அறியுநர் யார்?' என, உமணர் |
|
5 |
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன, |
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள் |
|
நாள் நிறை மதியத்து அனையை; இருள் |
|
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
|
103 |
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத் |
|
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி, |
|
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச் |
|
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி! |
|
5 |
செல்வைஆயின், சேணோன் அல்லன்; |
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை |
|
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும் |
|
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி; |
|
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை |
|
10 |
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப, |
அலத்தற் காலை ஆயினும், |
|
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே! |
|
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
|
105 |
சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி! |
|
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை |
|
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப் |
|
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி |
|
5 |
கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக, |
மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும் |
|
நீரினும் இனிய சாயல் |
|
பாரி வேள்பால் பாடினை செலினே. |
|
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
| |
வேள் பாரியைக் கபிலர் பாடியது.
|
106 |
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் |
|
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை |
|
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு, |
|
மடவர் மெல்லியர் செல்லினும், |
|
5 |
கடவன், பாரி கை வண்மையே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
107 |
'பாரி பாரி' என்று பல ஏத்தி, |
|
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்; |
|
பாரி ஒருவனும் அல்லன்; |
|
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
108 |
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி |
|
ஆரம் ஆதலின், அம் புகை அயலது |
|
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும் |
|
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு, |
|
5 |
பாரியும், பரிசிலர் இரப்பின், |
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
122 |
கடல் கொளப்படாஅது, உடலுநர் ஊக்கார், |
|
கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே; |
|
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே; |
|
வீயாத் திருவின் விறல் கெழு தானை |
|
5 |
மூவருள் ஒருவன், 'துப்பு ஆகியர்' என, |
ஏத்தினர் தரூஉம் கூழே, நும் குடி |
|
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே; |
|
வடமீன் புரையும் கற்பின், மட மொழி, |
|
அரிவை தோள் அளவு அல்லதை, |
|
10 |
நினது என இலை நீ பெருமிதத்தையே. |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
123 |
நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின், |
|
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே; |
|
தொலையா நல் இசை விளங்கு மலையன் |
|
மகிழாது ஈத்த இழை அணி நெடுந் தேர் |
|
5 |
பயன் கெழு முள்ளூர் மீமிசைப் |
பட்ட மாரி உறையினும் பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
124 |
நாள் அன்று போகி, புள் இடை தட்ப, |
|
பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும், |
|
வறிது பெயர்குநர்அல்லர் நெறி கொளப் |
|
பாடு ஆன்று, இரங்கும் அருவிப் |
|
5 |
பீடு கெழு மலையன் பாடியோரே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
126 |
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, |
|
பாணர் சென்னி பொலியத் தைஇ, |
|
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர் |
|
ஓடாப் பூட்கை உரவோன் மருக! |
|
5 |
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே |
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல் |
|
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின், |
|
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந! |
|
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய, |
|
10 |
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் |
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன், |
|
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி, |
|
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு |
|
சினம் மிகு தானை வானவன் குட கடல், |
|
15 |
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி, |
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை, |
|
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று |
|
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப, |
|
20 |
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய, |
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும் |
|
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் |
|
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே! |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
| |
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
127 |
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப் |
|
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென, |
|
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில், |
|
கான மஞ்ஞை கணனொடு சேப்ப, |
|
5 |
ஈகை அரிய இழை அணி மகளிரொடு |
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்; |
|
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில் |
|
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி, |
|
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய |
|
10 |
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே. |
திணை அது; துறை கடைநிலை.
| |
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|
128 |
மன்றப் பலவின் மாச் சினை மந்தி |
|
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் |
|
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின், |
|
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும், |
|
5 |
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் |
ஆடுமகள் குறுகின் அல்லது, |
|
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே. |
|
திணை அது; துறை வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|
129 |
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள் |
|
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து, |
|
வேங்கை முன்றில் குரவை அயரும், |
|
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன் |
|
5 |
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் |
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று, |
|
வானம் மீன் பல பூப்பின், ஆனாது |
|
ஒரு வழிக் கரு வழி இன்றிப் |
|
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
130 |
விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு |
|
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ? |
|
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு, |
|
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த |
|
5 |
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் |
குட கடல் ஓட்டிய ஞான்றைத் |
|
தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
131 |
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன், |
|
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன், |
|
குன்றம் பாடினகொல்லோ |
|
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
132 |
முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே! |
|
ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே! |
|
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே! |
|
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி |
|
5 |
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல |
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும் |
|
வட திசையதுவே வான் தோய் இமயம். |
|
தென் திசை ஆஅய் குடி இன்றாயின், |
|
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
133 |
மெல் இயல் விறலி! நீ நல் இசை செவியின் |
|
கேட்பின் அல்லது, காண்பு அறியலையே; |
|
காண்டல் வேண்டினைஆயின் மாண்ட நின் |
|
விரை வளர் கூந்தல் வரை வளி உளர, |
|
5 |
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, |
மாரி அன்ன வண்மைத் |
|
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே! |
|
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
| |
அவனை அவர் பாடியது.
|
134 |
'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும் |
|
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்; |
|
பிறரும் சான்றோர் சென்ற நெறி என, |
|
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
135 |
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை, |
|
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி, |
|
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின், |
|
வளைக் கை விறலி என் பின்னள் ஆக, |
|
5 |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் |
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப, |
|
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் |
|
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ, |
|
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி, |
|
10 |
வந்தனென் எந்தை! யானே: என்றும், |
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு |
|
கறை அடி யானை இரியல் போக்கும் |
|
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்! |
|
களிறும் அன்றே; மாவும் அன்றே; |
|
15 |
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே; |
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர், |
|
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப் |
|
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு, |
|
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக் |
|
20 |
காண்டல் வேண்டிய அளவை வேண்டார் |
உறு முரண் கடந்த ஆற்றல் |
|
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடியது.
|
136 |
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப |
|
இழை வலந்த பல் துன்னத்து |
|
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ |
|
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த |
|
5 |
பேஎன் பகை என ஒன்று என்கோ? |
உண்ணாமையின் ஊன் வாடி, |
|
தெண் நீரின் கண் மல்கி, |
|
கசிவுற்ற என் பல் கிளையொடு |
|
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ? |
|
10 |
அன்ன தன்மையும் அறிந்து ஈயார், |
'நின்னது தா' என, நிலை தளர, |
|
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில், |
|
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர் |
|
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ? |
|
15 |
'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்' |
எனக் கருதி, பெயர் ஏத்தி, |
|
வாய் ஆர நின் இசை நம்பி, |
|
சுடர் சுட்ட சுரத்து ஏறி, |
|
இவண் வந்த பெரு நசையேம்; |
|
20 |
'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; |
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என, |
|
அனைத்து உரைத்தனன் யான் ஆக, |
|
நினக்கு ஒத்தது நீ நாடி, |
|
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும், |
|
25 |
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை |
நுண் பல மணலினும் ஏத்தி, |
|
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே. |
|
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது.
|
137 |
இரங்கு முரசின், இனம்சால் யானை, |
|
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை |
|
இன்னும் ஓர் யான் அவா அறியேனே; |
|
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய |
|
5 |
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது, |
கழைக் கரும்பின் ஒலிக்குந்து, |
|
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும், |
|
கண் அன்ன மலர் பூக்குந்து, |
|
கருங் கால் வேங்கை மலரின், நாளும் |
|
10 |
பொன் அன்ன வீ சுமந்து, |
மணி அன்ன நீர் கடல் படரும்; |
|
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந! |
|
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை! |
|
நீ வாழியர்! நின் தந்தை |
|
15 |
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே! |
திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
| |
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.
|
138 |
ஆனினம் கலித்த அதர் பல கடந்து, |
|
மானினம் கலித்த மலை பின் ஒழிய, |
|
மீனினம் கலித்த துறை பல நீந்தி, |
|
5 |
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ், சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண! |
நீயே, பேர் எண்ணலையே; நின் இறை, |
|
'மாறி வா' என மொழியலன் மாதோ; |
|
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன் |
|
கிளி மரீஇய வியன் புனத்து |
|
10 |
மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின், |
நின்னை வருதல் அறிந்தனர் யாரே? |
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
|
139 |
சுவல் அழுந்தப் பல காய |
|
சில் ஓதிப் பல் இளைஞருமே, |
|
அடி வருந்த நெடிது ஏறிய |
|
கொடி மருங்குல் விறலியருமே, |
|
5 |
வாழ்தல் வேண்டிப் |
பொய் கூறேன்; மெய் கூறுவல்; |
|
ஓடாப் பூட்கை உரவோர் மருக! |
|
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந! |
|
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி, |
|
10 |
கனி பதம் பார்க்கும் காலை அன்றே; |
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச் |
|
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை, |
|
இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு, ஒரு நாள், |
|
அருஞ் சமம் வருகுவதுஆயின், |
|
15 |
வருந்தலும் உண்டு, என் பைதல் அம் கடும்பே. |
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனை அவர் பாடியது.
|
140 |
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன் |
|
மடவன், மன்ற; செந் நாப் புலவீர்! |
|
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த |
|
அடகின் கண்ணுறைஆக யாம் சில |
|
5 |
அரிசி வேண்டினேமாக, தான் பிற |
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி, |
|
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் |
|
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர் |
|
தேற்றா ஈகையும் உளதுகொல்? |
|
10 |
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே? |
திணை அது; துறை பரிசில் விடை.
| |
அவனை ஒளவையார் பாடியது.
|
141 |
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை |
|
மாண் இழை விறலி மாலையொடு விளங்க, |
|
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ, |
|
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்! |
|
5 |
யாரீரோ?' என, வினவல் ஆனா, |
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! |
|
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே, |
|
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே, |
|
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும் |
|
10 |
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், |
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, |
|
கடாஅ யானைக் கலி மான் பேகன், |
|
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என, |
|
மறுமை நோக்கின்றோ அன்றே, |
|
15 |
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே. |
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
| |
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.
|
142 |
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும், |
|
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும், |
|
வரையா மரபின் மாரிபோல, |
|
கடாஅ யானைக் கழல் கால் பேகன் |
|
5 |
கொடைமடம் படுதல் அல்லது, |
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
148 |
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின் |
|
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி, |
|
நாள்தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து, |
|
கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்ப; |
|
5 |
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி, |
செய்யா கூறிக் கிளத்தல் |
|
எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
| |
கண்டீரக் கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது.
|
149 |
நள்ளி! வாழியோ; நள்ளி! நள்ளென் |
|
மாலை மருதம் பண்ணி, காலை |
|
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி, |
|
வரவு எமர் மறந்தனர் அது நீ |
|
5 |
புரவுக் கடன் பூண்ட வண்மையானே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
150 |
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன |
|
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி, |
|
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என் |
|
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி, |
|
5 |
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால், |
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி, |
|
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன், |
|
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ, |
|
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை, |
|
10 |
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே |
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத் |
|
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின் |
|
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின், |
|
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, |
|
15 |
நல் மரன் நளிய நறுந் தண் சாரல், |
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி, |
|
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே, |
|
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம் |
|
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என, |
|
20 |
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் |
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்; |
|
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்; |
|
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்; |
|
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே |
|
25 |
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி |
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின், |
|
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர், |
|
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
151 |
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, |
|
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து, |
|
புன் தலை மடப் பிடி பரிசிலாக, |
|
5 |
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க் |
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும் |
|
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர் |
|
நன்னன் மருகன் அன்றியும், நீயும் |
|
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப் |
|
10 |
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை |
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் |
|
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.
|
152 |
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி |
|
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ, |
|
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக் |
|
கேழற் பன்றி வீழ, அயலது |
|
5 |
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும், |
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன், |
|
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும் |
|
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன் |
|
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்; |
|
10 |
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின், |
சாரல் அருவிப் பய மலைக் கிழவன், |
|
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ? |
|
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் |
|
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்; |
|
15 |
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்; |
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்; |
|
பதலை ஒரு கண் பையென இயக்குமின்; |
|
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று, |
|
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, |
|
20 |
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி, |
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது |
|
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம் |
|
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர் |
|
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என, |
|
25 |
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் |
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு, |
|
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி, |
|
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன், |
|
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என, |
|
30 |
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை |
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன், |
|
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே! |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.
|
153 |
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும், |
|
சுடர் விடு பசும் பூண், சூர்ப்பு அமை முன் கை, |
|
அடு போர் ஆனா, ஆதன் ஓரி |
|
5 |
மாரி வண் கொடை காணிய, நன்றும் |
சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே; |
|
பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை |
|
வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும், |
|
யானை இனத்தொடு பெற்றனர், நீங்கி, |
|
10 |
பசியாராகல் மாறுகொல் விசி பிணிக் |
கூடு கொள் இன் இயம் கறங்க, |
|
ஆடலும் ஒல்லார், தம் பாடலும் மறந்தே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
154 |
திரை பொரு முந்நீர்க் கரை நணிச் செலினும், |
|
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும் |
|
சில் நீர் வினவுவர், மாந்தர்; அது போல், |
|
அரசர் உழையராகவும், புரை தபு |
|
5 |
வள்ளியோர்ப் படர்குவர், புலவர்: அதனால், |
யானும், 'பெற்றது ஊதியம்; பேறு யாது?' என்னேன்; |
|
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே; |
|
'ஈ' என இரத்தலோ அரிதே; நீ அது |
|
நல்கினும், நல்காய் ஆயினும், வெல் போர் |
|
10 |
எறி படைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் |
தூ விரி கடுப்பத் துவன்றி மீமிசைத் |
|
தண் பல இழிதரும் அருவி நின் |
|
கொண் பெருங் கானம், பாடல் எனக்கு எளிதே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
கொண்கானங்கிழானை மோசிகீரனார் பாடியது.
|
155 |
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ, |
|
'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க?' என, |
|
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின், |
|
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ |
|
5 |
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு, |
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க் |
|
கொண் பெருங் கானத்துக் கிழவன் |
|
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே. |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
அவனை அவர் பாடியது.
|
156 |
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம்; என்றும் |
|
இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்; |
|
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் |
|
தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று |
|
5 |
நிறை அருந் தானை வேந்தரைத் |
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே. |
|
திணை அது; துறை இயன் மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
157 |
தமர் தற் தப்பின் அது நோன்றல்லும், |
|
பிறர் கையறவு தான் நாணுதலும், |
|
படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும், |
|
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும், |
|
5 |
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன், |
சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல், |
|
கோடல் கண்ணி, குறவர் பெருமகன் |
|
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை, |
|
எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி, |
|
10 |
கட்சி காணாக் கடமான் நல் ஏறு |
மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை |
|
இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும் |
|
பெருங் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஏறைக் கோனைக் குறமகள் இளவெயினி பாடியது.
|
158 |
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், |
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, |
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் |
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் |
|
5 |
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; |
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, |
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; |
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், |
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; |
|
10 |
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, |
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, |
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி |
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று |
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர, |
|
15 |
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, |
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு |
|
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் |
|
பாடி வருநரும் பிறரும் கூடி |
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் |
|
20 |
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் |
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, |
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, |
|
முள் புற முது கனி பெற்ற கடுவன் |
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், |
|
25 |
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! |
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! |
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு, |
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
| |
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
|
159 |
'வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின், |
|
தீர்தல் செல்லாது, என் உயிர்' எனப் பல புலந்து, |
|
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி, |
|
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று, |
|
5 |
முன்றில் போகா முதிர்வினள் யாயும்; |
பசந்த மேனியொடு படர் அட வருந்தி, |
|
மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள் |
|
பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து, |
|
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த |
|
10 |
முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று, |
நீர் உலைஆக ஏற்றி, மோர் இன்று, |
|
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து, |
|
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா, |
|
துவ்வாளாகிய என் வெய்யோளும்; |
|
15 |
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் |
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை, |
|
ஐவனம் வித்தி, மையுறக் கவினி, |
|
ஈனல்செல்லா ஏனற்கு இழுமெனக் |
|
கருவி வானம் தலைஇ யாங்கும், |
|
20 |
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என், |
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப |
|
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும், |
|
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ |
|
இன்புற விடுதிஆயின், சிறிது |
|
25 |
குன்றியும் கொள்வல், கூர் வேல் குமண! |
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ் |
|
வசை இல் விழுத் திணைப் பிறந்த |
|
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே. |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
அவனை அவர் பாடியது.
|
160 |
'உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த |
|
முளி புல் கானம் குழைப்ப, கல்லென |
|
அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு, |
|
பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை |
|
5 |
அவிழ் புகுவு அறியாதுஆகலின், வாடிய |
நெறி கொள் வரிக் குடர் குளிப்பத் தண்ணென, |
|
குய் கொள் கொழுந் துவை நெய்யுடை அடிசில், |
|
மதி சேர் நாள்மீன் போல, நவின்ற |
|
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ, |
|
10 |
"கேடு இன்றாக, பாடுநர் கடும்பு" என, |
அரிது பெறு பொலங் கலம் எளிதினின் வீசி, |
|
நட்டோர் நட்ட நல் இசைக் குமணன், |
|
மட்டு ஆர் மறுகின், முதிரத்தோனே; |
|
செல்குவைஆயின், நல்குவன், பெரிது' என, |
|
15 |
பல் புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து, |
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று, |
|
இல் உணாத் துறத்தலின், இல் மறந்து உறையும் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண் |
|
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன், |
|
20 |
கூழும் சோறும் கடைஇ, ஊழின் |
உள் இல் வறுங் கலம் திறந்து, அழக் கண்டு, |
|
மறப் புலி உரைத்தும், மதியம் காட்டியும், |
|
நொந்தனளாகி, 'நுந்தையை உள்ளி, |
|
பொடிந்த நின் செவ்வி காட்டு' எனப் பலவும் |
|
25 |
வினவல் ஆனாளாகி, நனவின் |
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப, |
|
செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே |
|
விடுதல் வேண்டுவல் அத்தை; படு திரை |
|
நீர் சூழ் நிலவரை உயர, நின் |
|
30 |
சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
161 |
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு, |
|
ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ, |
|
பெரு மலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு, |
|
உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து, |
|
5 |
வள மழை மாறிய என்றூழ்க் காலை, மன்பதை எல்லாம் சென்று உண, கங்கைக் |
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு, |
|
எமக்கும் பிறர்க்கும் செம்மலைஆகலின், |
|
'அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவர, |
|
10 |
சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று, |
வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு, |
|
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர' எனக் |
|
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து, |
|
அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின் |
|
15 |
தாள் படு செல்வம் காண்தொறும் மருள, |
பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய |
|
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, |
|
ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில் |
|
படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து, |
|
20 |
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்! |
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி! |
|
வல்லினும், வல்லேன்ஆயினும், வல்லே, |
|
என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த |
|
25 |
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும் |
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப் |
|
பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம் |
|
மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல, |
|
நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின் |
|
30 |
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப, |
வாள் அமர் உழந்த நின் தானையும், |
|
சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே. |
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.
|
162 |
இரவலர் புரவலை நீயும் அல்லை; |
|
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; |
|
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு |
|
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க் |
|
5 |
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த |
நெடு நல் யானை எம் பரிசில்; |
|
கடுமான் தோன்றல்! செல்வல் யானே. |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி,குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளிமான் ஊர்க் கடிமரத்து யாத்துச் சென்று,
|
163 |
நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும், |
|
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும், |
|
கடும்பின் கடும் பசி தீர யாழ நின் |
|
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும், |
|
5 |
இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது, |
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும் |
|
எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே! |
|
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன் |
|
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே. |
|
திணை அது; துறை பரிசில்
| |
பெருஞ் சித்திரனார் குமணனைப் பாடிப் பரிசில் கொணர்ந்து மனையோட்குச் சொல்லியது.
|
164 |
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் |
|
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா, |
|
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி, |
|
இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை |
|
5 |
சுவைத்தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி, |
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என் |
|
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ, |
|
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண! |
|
என் நிலை அறிந்தனைஆயின், இந் நிலைத் |
|
10 |
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய |
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ், |
|
மண் அமை முழவின், வயிரியர் |
|
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே. |
|
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
165 |
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் |
|
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே; |
|
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர், |
|
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின், |
|
5 |
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; |
தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல், |
|
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக் |
|
கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப் |
|
பாடி நின்றனெனாக, 'கொன்னே |
|
10 |
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என |
நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என, |
|
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய, |
|
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்; |
|
ஆடு மலி உவகையொடு வருவல், |
|
15 |
ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே. |
திணை அது; துறை பரிசில் விடை.
| |
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
168 |
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் |
|
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் |
|
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, |
|
கடுங் கண் கேழல் உழுத பூழி, |
|
5 |
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் |
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை |
|
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் |
|
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், |
|
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி |
|
10 |
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, |
சாந்த விறகின் உவித்த புன்கம் |
|
கூதளம் கவினிய குளவி முன்றில், |
|
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் |
|
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், |
|
15 |
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, |
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! |
|
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! |
|
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, |
|
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் |
|
20 |
பாடுப என்ப பரிசிலர், நாளும் |
ஈயா மன்னர் நாண, |
|
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
| |
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.
|
169 |
நும் படை செல்லும்காலை, அவர் படை |
|
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ, |
|
அவர் படை வரூஉம்காலை, நும் படைக் |
|
கூழை தாங்கிய, அகல் யாற்றுக் |
|
5 |
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ, |
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்; |
|
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை; |
|
இன்னே விடுமதி பரிசில்! வென் வேல் |
|
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார், |
|
10 |
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் |
பெரு மரக் கம்பம் போல, |
|
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே! |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
171 |
இன்று செலினும் தருமே; சிறு வரை |
|
நின்று செலினும் தருமே; பின்னும், |
|
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி |
|
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி, |
|
5 |
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்; |
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப |
|
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்; |
|
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும், |
|
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும், |
|
10 |
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை |
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே. |
|
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி |
|
முள்ளும் நோவ உறாற்கதில்ல! |
|
ஈவோர் அரிய இவ் உலகத்து, |
|
15 |
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.
|
172 |
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; |
|
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப் |
|
பாடு வல் விறலியர் கோதையும் புனைக; |
|
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம் |
|
5 |
பரியல் வேண்டா; வரு பதம் நாடி, |
ஐவனம் காவலர் பெய் தீ நந்தின், |
|
ஒளி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும் |
|
வன் புல நாடன், வய மான் பிட்டன்: |
|
ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை |
|
10 |
மா வள் ஈகைக் கோதையும், |
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது.
|
173 |
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! |
|
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை; |
|
யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன |
|
ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்; |
|
5 |
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, |
முட்டை கொண்டு வன் புலம் சேரும் |
|
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப, |
|
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும் |
|
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும், |
10 |
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றென; |
பசிப்பிணி மருத்துவன் இல்லம் |
|
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.
|
175 |
எந்தை! வாழி; ஆதனுங்க! என் |
|
நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே; |
|
நின் யான் மறப்பின், மறக்கும் காலை, |
|
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும், |
|
5 |
என்னியான் மறப்பின், மறக்குவென் வென் வேல் |
விண் பொரு நெடுங் குடைக் கொடித் தேர் மோரியர் |
|
திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த |
|
உலக இடைகழி அறை வாய் நிலைஇய |
|
மலர் வாய் மண்டிலத்து அன்ன, நாளும் |
|
10 |
பலர் புரவு எதிர்ந்த அறத் துறை நின்னே. |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
|
176 |
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் |
|
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின், |
|
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத் |
|
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம், |
|
5 |
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின், |
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ் |
|
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை |
|
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே! |
|
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர் |
|
10 |
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல, |
காணாது கழிந்த வைகல், காணா |
|
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன் |
|
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
177 |
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர், |
|
வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கி, |
|
பாடிப் பெற்ற பொன் அணி யானை, |
|
தமர்எனின், யாவரும் புகுப; அமர் எனின், |
|
5 |
திங்களும் நுழையா எந்திரப் படு புழை, |
கள் மாறு நீட்ட நணி நணி இருந்த |
|
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி, |
|
புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர் |
|
தீம் புளிக் களாவொடு துடரி முனையின், |
|
10 |
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி, |
கருங் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும், |
|
பெரும் பெயர் ஆதி, பிணங்குஅரில் குட நாட்டு, |
|
எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப் |
|
பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை, |
|
15 |
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, |
இரும் பனங் குடையின் மிசையும் |
|
பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|
184 |
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, |
|
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; |
|
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, |
|
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; |
|
5 |
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, |
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்; |
|
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் |
|
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, |
|
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், |
|
10 |
யானை புக்க புலம் போல, |
தானும் உண்ணான், உலகமும் கெடுமே. |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
| |
பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.
|
196 |
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் |
|
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும், |
|
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; |
|
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது |
|
5 |
இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே |
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர் |
|
புகழ் குறைபடூஉம் வாயில்அத்தை; |
|
அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும் |
|
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால், |
|
10 |
நோய் இலராக நின் புதல்வர்; யானும், |
வெயில் என முனியேன், பனி என மடியேன், |
|
கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை, |
|
நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல் |
|
மெல் இயல் குறு மகள் உள்ளிச் |
|
15 |
செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே! |
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|
197 |
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு |
|
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ, |
|
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு |
|
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ, |
|
5 |
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு |
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ, |
|
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர் |
|
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே; |
|
எம்மால் வியக்கப்படூஉமோரே, |
|
10 |
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த |
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு, |
|
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம், |
|
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின் |
|
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே; |
|
15 |
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும் |
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்; |
|
நல் அறிவு உடையோர் நல்குரவு |
|
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
198 |
'அருவி தாழ்ந்த பெரு வரை போல |
|
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா, |
|
கடவுள் சான்ற கற்பின், சேயிழை |
|
மடவோள் பயந்த மணி மருள் அவ் வாய்க் |
|
5 |
கிண்கிணிப் புதல்வர் பொலிக!' என்று ஏத்தி, |
திண் தேர் அண்ணல் நிற் பாராட்டி, |
|
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என் |
|
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப, |
|
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம், |
|
10 |
வேல் கெழு குருசில்! கண்டேன்; ஆதலின், |
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த |
|
தண் தமிழ் வரைப்பகம் கொண்டி ஆக, |
|
பனித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங் கடுந் திறல் |
|
நின் ஓரன்ன நின் புதல்வர், என்றும், |
|
15 |
ஒன்னார் வாட அருங் கலம் தந்து, நும் |
பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த நின் |
|
முன்னோர் போல்க, இவர் பெருங் கண்ணோட்டம்! |
|
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டு திரைப் |
|
பெருங் கடல் நீரினும், அக் கடல் மணலினும், |
|
20 |
நீண்டு உயர் வானத்து உறையினும், நன்றும், |
இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும், |
|
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி, |
|
நீடு வாழிய! நெடுந்தகை! யானும் |
|
கேள் இல் சேஎய் நாட்டின், எந்நாளும், |
|
25 |
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின் |
அடி நிழல் பழகிய அடியுறை; |
|
கடுமான் மாற! மறவாதீமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடியது.
|
199 |
கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம் |
|
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும் |
|
செலவு ஆனாவே, கலி கொள் புள்ளினம்; |
|
அனையர் வாழியோ இரவலர்; அவரைப் |
|
5 |
புரவு எதிர்கொள்ளும் பெருஞ் செய் ஆடவர் |
உடைமை ஆகும், அவர் உடைமை; |
|
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பெரும்பதுமனார் பாட்டு.
|
200 |
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் |
|
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் |
|
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி, |
|
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து, |
|
5 |
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! |
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல், |
|
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை, |
|
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே! |
|
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை |
|
10 |
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும், |
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த |
|
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்; |
|
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே, |
|
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்; |
|
15 |
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர் |
அடங்கா மன்னரை அடக்கும் |
|
மடங்கா விளையுள் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
201 |
'இவர் யார்?' என்குவைஆயின், இவரே, |
|
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன் |
|
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை, |
|
படு மணி யானை, பறம்பின் கோமான் |
|
5 |
நெடு மாப் பாரி மகளிர்; யானே |
தந்தை தோழன்; இவர் என் மகளிர்; |
|
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே. |
|
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, |
|
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, |
|
10 |
உவரா ஈகை, துவரை ஆண்டு, |
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த |
|
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்! |
|
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே! |
|
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய |
|
15 |
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! |
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து |
|
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல் |
|
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல் |
|
உடலுநர் உட்கும் தானை, |
|
20 |
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே! |
திணையும் துறையும் அவை.
| |
பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
202 |
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட, |
|
கட்சி காணாக் கடமா நல் ஏறு |
|
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர, |
|
கடிய கதழும் நெடு வரைப் படப்பை |
|
5 |
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, |
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர், |
|
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய |
|
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி: |
|
நுந்தை தாயம் நிறைவுற எய்திய |
|
10 |
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்! |
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் |
|
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை |
|
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்! |
|
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர் |
|
15 |
கை வண் பாரி மகளிர்' என்ற என் |
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும! |
|
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து, |
|
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
|
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல் |
|
20 |
இரும் புலி வரிப் புறம் கடுக்கும் |
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.
|
203 |
'கழிந்தது பொழிந்து' என வான் கண்மாறினும், |
|
'தொல்லது விளைந்து' என நிலம் வளம் கரப்பினும், |
|
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை; |
|
'இன்னும் தம்' என எம்மனோர் இரப்பின், |
|
5 |
'முன்னும் கொண்டிர்' என, நும்மனோர் மறுத்தல் |
இன்னாது அம்ம; இயல் தேர் அண்ணல்! |
|
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும், |
|
உள்ளி வருநர் நசை இழப்போரே; |
|
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார் |
|
10 |
ஆர் எயில் அவர்கட்டாகவும், 'நுமது' எனப் |
பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்! |
|
பூண் கடன், எந்தை! நீ இரவலர்ப் புரவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட்சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது.
|
204 |
'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர், |
|
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று; |
|
'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர், |
|
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று; |
|
5 |
தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல் |
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே; |
|
ஆவும் மாவும் சென்று உண, கலங்கி, |
|
சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும், |
|
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்; |
|
10 |
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, |
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால் |
|
புலவேன் வாழியர், ஓரி! விசும்பில் |
|
கருவி வானம் போல |
|
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.
|
205 |
முற்றிய திருவின் மூவர் ஆயினும், |
|
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே; |
|
விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி |
|
உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர் |
|
5 |
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை, |
வெள் வீ வேலிக் கோடைப் பொருந! |
|
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய |
|
மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய், |
|
நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக! |
|
10 |
ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து, |
கடல்வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ |
|
நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு |
|
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் |
|
களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
206 |
வாயிலோயே! வாயிலோயே! |
|
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம் |
|
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து |
|
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் |
|
5 |
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! |
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி |
|
தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்? |
|
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, |
|
வறுந் தலை உலகமும் அன்றே; அதனால், |
|
10 |
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; |
மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர் |
|
மழுவுடைக் காட்டகத்து அற்றே |
|
எத் திசைச் செலினும், அத் திசைச் சோறே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.
|
207 |
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ, |
|
பருகு அன்ன வேட்கை இல்வழி, |
|
அருகில் கண்டும் அறியார் போல, |
|
அகம் நக வாரா முகன் அழி பரிசில் |
|
5 |
தாள் இலாளர் வேளார் அல்லர்? |
'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே |
|
பெரிதே உலகம்; பேணுநர் பலரே; |
|
மீளி முன்பின் ஆளி போல, |
|
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென |
|
10 |
நோவாதோன்வயின் திரங்கி, |
வாயா வன் கனிக்கு உலமருவோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வெளிமான் துஞ்சிய பின், அவன் தம்பி இள வெளிமானை, 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|
208 |
'குன்றும் மலையும் பல பின் ஒழிய, |
|
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு' என |
|
நின்ற என் நயந்து அருளி, 'ஈது கொண்டு, |
|
ஈங்கனம் செல்க, தான்' என, என்னை |
|
5 |
யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்? |
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர் |
|
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி, |
|
தினை அனைத்துஆயினும், இனிது அவர் |
|
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது,'இது கொண்டு செல்க!' என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது, அவர் சொல்லியது.
|
209 |
பொய்கை நாரை போர்வில் சேக்கும் |
|
நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர் |
|
கூம்பு விடு மெண் பிணி அவிழ்ந்த ஆம்பல் |
|
அகல் அடை அரியல் மாந்தி, தெண் கடல் |
|
5 |
படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும் |
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! |
|
பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து, |
|
பெரு மலை விடரகம் சிலம்ப முன்னி, |
|
பழனுடைப் பெரு மரம் தீர்ந்தென, கையற்று, |
|
10 |
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் |
நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென் |
|
வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந! |
|
ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லேன்; |
|
நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள் |
|
15 |
குறு நணி காண்குவதாக நாளும், |
நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தே மொழி, |
|
தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும் |
|
பெரு வரை அன்ன மார்பின், |
|
செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே! |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
210 |
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது, |
|
அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு, |
|
நும்மனோரும் மற்று இனையர் ஆயின், |
|
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ; |
|
5 |
செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி |
உயிர் சிறிது உடையள்ஆயின், எம்வயின் |
|
'அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியப் |
|
பிறன் ஆயினன்கொல்? இறீஇயர், என் உயிர்!' என |
|
10 |
நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும் |
இடுக்கண் மனையோள் தீரிய, இந் நிலை |
|
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக் காண்: |
|
அவல நெஞ்சமொடு செல்வல் நிற் கறுத்தோர் |
|
அருங் கடி முனை அரண் போலப் |
|
15 |
பெருங் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங் குன்றூர் கிழார் பாடியது.
|
211 |
அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு |
|
அணங்குடை அரவின் அருந் தலை துமிய, |
|
நின்று காண்பன்ன நீள் மலை மிளிர, |
|
குன்று தூவ எறியும் அரவம் போல, |
|
5 |
முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று, |
அரைசு படக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின் |
|
உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென், |
|
'வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்' என, |
|
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின் |
|
10 |
உள்ளியது முடித்தோய் மன்ற; முன் நாள் |
கை உள்ளது போல் காட்டி, வழி நாள் |
|
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் |
|
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என் |
|
நுணங்கு செந் நா அணங்க ஏத்தி, |
|
15 |
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின் |
ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச் |
|
செல்வல் அத்தை, யானே வைகலும், |
|
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி, |
|
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின், |
|
20 |
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து, |
முலைக்கோள் மறந்த புதல்வனொடு, |
|
மனைத் தொலைந்திருந்த என் வாள்நுதல் படர்ந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
212 |
'நும் கோ யார்?' என வினவின், எம் கோக் |
|
களமர்க்கு அரித்த விளையல் வெங் கள் |
|
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா, |
|
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ, |
|
5 |
வைகு தொழில் மடியும் மடியா விழவின் |
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர் |
|
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி, |
|
கோழியோனே, கோப்பெருஞ்சோழன் |
|
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ, |
|
10 |
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
|
215 |
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் |
|
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய |
|
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ, |
|
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை |
|
5 |
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் |
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் |
|
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே; |
|
செல்வக் காலை நிற்பினும், |
|
அல்லற் காலை நில்லலன்மன்னே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு, 'அவர் வருவார்' என்று சொல்லியது.
|
216 |
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் |
|
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய, |
|
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும், |
|
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று, |
|
5 |
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்! |
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்; |
|
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே; |
|
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர் |
|
பேதைச் சோழன்' என்னும், சிறந்த |
|
10 |
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை, |
இன்னது ஓர் காலை நில்லலன்; |
|
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க!' என்றது.
|
266 |
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி, |
|
கயம் களி முளியும் கோடைஆயினும், |
|
புழல்கால் ஆம்பல் அகல் அடை நீழல், |
|
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை |
|
5 |
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் |
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்! |
|
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி! |
|
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன், |
|
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல, |
|
10 |
வல்லே களைமதிஅத்தை உள்ளிய |
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை, |
|
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என் |
|
அறிவு கெட நின்ற நல்கூர்மையே! |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
| |
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
|
367 |
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் |
|
தமவேஆயினும் தம்மொடு செல்லா; |
|
வேற்றோர்ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; |
|
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப் |
|
5 |
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, |
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய |
|
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, |
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி, |
|
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; |
|
10 |
வாழச் செய்த நல்வினை அல்லது |
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை; |
|
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் |
|
முத்தீப் புரையக் காண்தக இருந்த |
|
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்! |
|
15 |
யான் அறி அளவையோ இதுவே: வானத்து |
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் |
|
பரந்து இயங்கு மா மழை உறையினும், |
|
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.
|
374 |
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் |
|
புல்வாய் இரலை நெற்றி அன்ன, |
|
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத் |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
5 |
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என் |
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
|
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர, |
|
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட, |
|
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர் |
|
10 |
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா |
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை, |
|
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம், |
|
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும், |
|
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ, |
|
15 |
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன், |
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல, |
|
வண்மையும் உடையையோ? ஞாயிறு! |
|
கொன் விளங்குதியால் விசும்பினானே! |
|
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
| |
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|
375 |
அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி, |
|
நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் காற் |
|
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக, |
|
முழாஅரைப் போந்தை அர வாய் மா மடல் |
|
5 |
நாரும் போழும் கிணையொடு சுருக்கி, |
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ, |
|
'ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப் |
|
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?' எனப் |
|
பிரசம் தூங்கும் அறாஅ யாணர், |
|
10 |
வரை அணி படப்பை, நல் நாட்டுப் பொருந! |
பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய்! |
|
யாவரும் இன்மையின் கிணைப்ப, தாவது, |
|
பெரு மழை கடல் பரந்தாஅங்கு, யானும் |
|
ஒரு நின் உள்ளி வந்தனென்; அதனால் |
|
15 |
புலவர் புக்கில் ஆகி, நிலவரை |
நிலீஇயர் அத்தை, நீயே! ஒன்றே |
|
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து, |
|
நிலவன்மாரோ, புரவலர்! துன்னி, |
|
பெரிய ஓதினும் சிறிய உணராப் |
|
20 |
பீடு இன்று பெருகிய திருவின், |
பாடு இல், மன்னரைப் பாடன்மார், எமரே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
அவனை அவர் பாடியது.
|
376 |
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் |
|
பசுங் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி |
|
சிறு நனி பிறந்த பின்றை, செறி பிணிச் |
|
சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ, |
|
5 |
பாணர் ஆரும்அளவை, யான் தன் |
யாணர் நல் மனைக் கூட்டுமுதல் நின்றனென்; |
|
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரென, |
|
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற, |
|
10 |
தொன்று படு துளையொடு பரு இழை போகி, |
நைந்து கரை பறைந்த என் உடையும், நோக்கி, |
|
'விருந்தினன் அளியன், இவன்' என, பெருந்தகை |
|
நின்ற முரற்கை நீக்கி, நன்றும் |
|
அரவு வெகுண்டன்ன தேறலொடு, சூடு தருபு, |
|
15 |
நிரயத்து அன்ன என் வறன் களைந்து, அன்றே, |
இரவினானே, ஈத்தோன் எந்தை; |
|
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும், |
|
இரப்பச் சிந்தியேன், நிரப்பு அடு புணையின்; |
|
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்; |
|
20 |
நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி, |
ஒரு நாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை, |
|
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி, |
|
தோன்றல் செல்லாது, என் சிறு கிணைக் குரலே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
ஒய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
377 |
பனி பழுநிய பல் யாமத்துப் |
|
பாறு தலை மயிர் நனைய, |
|
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின், |
|
இனையல் அகற்ற, என் கிணை தொடாக் குறுகி, |
|
5 |
'அவி உணவினோர் புறங்காப்ப, |
அற நெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று, |
|
அதற் கொண்டு வரல் ஏத்தி, |
|
'''கரவு இல்லாக் கவி வண் கையான், |
|
வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர் |
|
10 |
பிறர்க்கு உவமம் தான் அல்லது, |
தனக்கு உவமம் பிறர் இல்' என, |
|
அது நினைந்து, மதி மழுகி, |
|
ஆங்கு நின்ற எற் காணூஉச் |
|
'சேய் நாட்டுச் செல் கிணைஞனை! |
|
15 |
நீ புரவலை, எமக்கு' என்ன, |
மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், |
|
கடல் பயந்த கதிர் முத்தமும், |
|
வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும், |
|
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப, |
|
20 |
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்; |
நாடு என மொழிவோர், 'அவன் நாடு' என மொழிவோர்; |
|
வேந்து என மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்; |
|
.........................பொற் கோட்டு யானையர், |
|
கவர் பரிக் கச்சை நல் மான், |
|
25 |
வடி மணி, வாங்கு உருள, |
.....................,..........நல் தேர்க் குழுவினர், |
|
கதழ் இசை வன்கணினர், |
|
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி, |
|
கடல் ஒலி கொண்ட தானை |
|
30 |
அடல் வெங் குருசில்! மன்னிய நெடிதே! |
திணை அது; துறை வாழ்த்தியல்.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.
|
378 |
தென் பரதவர் மிடல் சாய, |
|
வட வடுகர் வாள் ஓட்டிய, |
|
தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக் கை, |
|
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின், |
|
5 |
நல் தார், கள்ளின், சோழன் கோயில், |
புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து, |
|
பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என் |
|
அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி, |
|
எஞ்சா மரபின் வஞ்சி பாட, |
|
10 |
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல, |
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை |
|
தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு, |
|
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல், |
|
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும், |
|
15 |
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும், |
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும், |
|
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும், |
|
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை |
|
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, |
|
20 |
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் |
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு, |
|
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே |
|
இருங் கிளைத் தலைமை எய்தி, |
|
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது.
|
379 |
யானே பெறுக, அவன் தாள் நிழல் வாழ்க்கை; |
|
அவனே பெறுக, என் நா இசை நுவறல்; |
|
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின், |
|
பின்னை மறத்தோடு அரிய, கல் செத்து, |
|
5 |
அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும் |
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் |
|
வில்லியாதன் கிணையேம்; பெரும! |
|
'குறுந் தாள் ஏற்றைக் கொழுங் கண் அவ் விளர் |
|
நறு நெய் உருக்கி, நாட் சோறு ஈயா, |
|
10 |
வல்லன், எந்தை, பசி தீர்த்தல்' என, |
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற, |
|
கேட்டதற்கொண்டும் வேட்கை தண்டாது, |
|
விண் தோய் தலைய குன்றம் பின்பட, |
|
......................................ர வந்தனென், யானே |
|
15 |
தாய் இல் தூவாக் குழவி போல, ஆங்கு அத் |
திருவுடைத் திரு மனை, ஐது தோன்று கமழ் புகை |
|
வரு மழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் |
|
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
380 |
தென் பவ்வத்து முத்துப் பூண்டு, |
|
வட குன்றத்துச் சாந்தம் உரீஇ, |
|
........................................ங் கடல் தானை, |
|
இன் இசைய விறல் வென்றி, |
|
5 |
தென்னவர் வய மறவன்; |
மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து, |
|
நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய, |
|
வேறுபெ.....................................................................த்துந்து, |
|
தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்; |
|
10 |
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்; |
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்; |
|
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல, |
|
.....................த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்; |
|
அன்னன் ஆகன்மாறே, இந் நிலம் |
|
15 |
இலம்படு காலை ஆயினும், |
புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.
|
381 |
ஊனும் ஊணும் முனையின், இனிது என, |
|
பாலின் பெய்தவும், பாகின் கொண்டவும், |
|
அளவுபு கலந்து, மெல்லிது பருகி, |
|
விருந்துறுத்து, ஆற்றி இருந்தனெமாக, |
|
5 |
'சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு?' என, |
யாம் தன் அறியுநமாக, தான் பெரிது |
|
அன்பு உடைமையின், எம் பிரிவு அஞ்சி, |
|
துணரியது கொளாஅவாகி, பழம் ஊழ்த்து, |
|
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ், |
|
10 |
பெயல் பெய்தன்ன, செல்வத்து ஆங்கண், |
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி, |
|
சிதாஅர் வள்பின் சிதர்ப் புறத் தடாரி |
|
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி, |
|
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின், |
|
15 |
இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு |
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால், |
|
இரு நிலம் கூலம் பாற, கோடை |
|
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை, |
|
சேயைஆயினும், இவணைஆயினும், |
|
20 |
இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ! |
சிறு நனி, ஒரு வழிப் படர்க என்றோனே எந்தை, |
|
ஒலி வெள் அருவி வேங்கட நாடன், |
|
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் |
|
அறத்துறை அம்பியின் மான, மறப்பு இன்று, |
|
25 |
இருங் கோள் ஈராப் பூட்கை, |
கரும்பனூரன் காதல் மகனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது.
|
382 |
கடல்படை அடல் கொண்டி, |
|
மண்டுற்ற மலிர் நோன் தாள், |
|
தண் சோழ நாட்டுப் பொருநன், |
|
அலங்கு உளை அணி இவுளி |
|
5 |
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; |
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்; |
|
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' என; |
|
நெய் குய்ய ஊன் நவின்ற |
|
பல் சோற்றான், இன் சுவைய |
|
10 |
நல்குரவின் பசித் துன்பின் நின் |
முன்னநாள் விட்ட மூது அறி சிறாஅரும், |
|
யானும், ஏழ் மணி, அம் கேழ், அணி உத்தி, |
|
கண் கேள்வி, கவை நாவின், |
|
நிறன் உற்ற, அராஅப் போலும் |
|
15 |
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப, |
விடுமதி அத்தை, கடு மான் தோன்றல்! |
|
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய; |
|
எனதே, கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை |
|
கண் அகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல் |
|
20 |
ஏறிதொறும் நுடங்கியாங்கு, நின் பகைஞர் |
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென், |
|
வென்ற தேர், பிறர் வேத்தவையானே. |
|
திணை அது; துறை கடைநிலை.
| |
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
383 |
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து, |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி, |
|
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி, |
|
5 |
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து, |
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி, |
|
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் |
|
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள, |
|
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் |
|
10 |
கழை படு சொலியின் இழை அணி வாரா, |
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண் |
|
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி, |
|
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல, |
|
எற் பெயர்ந்த நோக்கி..................................... |
|
15 |
.................................................கல் கொண்டு, |
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி, |
|
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே; |
|
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி, |
|
நரை முக ஊகமொடு, உகளும், சென................ |
|
20 |
.......................கன்று பல கெழீஇய |
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என |
|
ஒருவனை உடையேன்மன்னே, யானே; |
|
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே? |
|
திணையும் துறையும் அவை.
| |
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.
|
384 |
மென்பாலான் உடன் அணைஇ, |
|
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை |
|
அறைக் கரும்பின் பூ அருந்தும்; |
|
வன்பாலான் கருங் கால் வரகின் |
|
5 |
...................................................................................... |
அம் கண் குறு முயல வெருவ, அயல |
|
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து; |
|
விழவு இன்றாயினும், உழவர் மண்டை |
|
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து; |
|
10 |
................................................கிணையேம், பெரும! |
நெல் என்னா, பொன் என்னா, |
|
கனற்றக் கொண்ட நறவு என்னா, |
|
.....................மனை என்னா, அவை பலவும் |
|
யான் தண்டவும், தான் தண்டான், |
|
15 |
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, |
மண் நாணப் புகழ் வேட்டு, |
|
நீர் நாண நெய் வழங்கி, |
|
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை..... |
|
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு |
|
20 |
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட |
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும், |
|
தின்ற நண் பல் ஊன் தோண்டவும், |
|
வந்த வைகல் அல்லது, |
|
சென்ற எல்லைச் செலவு அறியேனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
385 |
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப, |
|
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி, |
|
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை, |
|
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி, |
|
5 |
வறன் யான் நீங்கல் வேண்டி, என் அரை |
நீல் நிறச் சிதாஅர் களைந்து, |
|
வெளியது உடீஇ, என் பசி களைந்தோனே; |
|
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை |
|
நெல் விளை கழனி அம்பர் கிழவோன், |
|
10 |
நல் அருவந்தை, வாழியர்! புல்லிய |
வேங்கட விறல் வரைப் பட்ட |
|
ஓங்கல் வானத்து உறையினும் பலவே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்.
| |
அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.
|
386 |
நெடு நீர நிறை கயத்துப் |
|
படு மாரித் துளி போல, |
|
நெய் துள்ளிய வறை முகக்கவும், |
|
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும், |
|
5 |
ஊன் கொண்ட வெண் மண்டை |
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும், |
|
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது, |
|
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை |
|
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக; |
|
10 |
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் |
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின; |
|
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான், |
|
வில் இருந்த வெங் குறும்பின்று; |
|
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர் |
|
15 |
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து; |
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து; |
|
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே; |
|
பொராஅப் பொருநரேம்; |
|
20 |
குண திசை நின்று குடமுதல் செலினும், |
குட திசை நின்று குணமுதல் செலினும், |
|
வட திசை நின்று தென்வயின் செலினும், |
|
தென் திசை நின்று குறுகாது நீடினும், |
|
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம் |
|
25 |
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
387 |
வள் உகிர வயல் ஆமை |
|
வெள் அகடு கண்டன்ன, |
|
வீங்கு விசிப் புதுப் போர்வைத் |
|
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும் |
|
5 |
மாறு கொண்டோர் மதில் இடறி, |
நீறு ஆடிய நறுங் கவுள, |
|
பூம் பொறிப் பணை எருத்தின, |
|
வேறு வேறு பரந்து இயங்கி, |
|
வேந்துடை மிளை அயல் பரக்கும் |
|
10 |
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை, |
திருந்து தொழில் பல பகடு |
|
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின் |
|
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி, |
|
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று, |
|
15 |
யான் இசைப்பின், நனி நன்று எனா, |
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?......... |
|
மருவ இன் நகர் அகன்................................. |
|
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி, |
|
வென்று இரங்கும் விறல் முரசினோன், |
|
20 |
என் சிறுமையின், இழித்து நோக்கான், |
தன் பெருமையின் தகவு நோக்கி, |
|
குன்று உறழ்ந்த களிறு என்கோ? |
|
கொய் உளைய மா என்கோ? |
|
மன்று நிறையும் நிரை என்கோ? |
|
25 |
மனைக் களமரொடு களம் என்கோ? |
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின் |
|
நல்கியோனே, நசைசால் தோன்றல், |
|
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்! |
|
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள் |
|
30 |
செல்வக் கடுங்கோ வாழியாதன் |
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண் |
|
விடுவர் மாதோ நெடிதே நி |
|
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும் |
|
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் |
|
35 |
பல் ஊர் சுற்றிய கழனி |
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.
|
388 |
வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல், |
|
பள்ளம், வாடிய பயன் இல் காலை, |
|
இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர் |
|
................................................................................பொருந்தி, |
|
5 |
தன் நிலை அறியுநனாக, அந் நிலை, |
இடுக்கண் இரியல் போக, உடைய |
|
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல், |
|
.......................................................................னாமருப்பாக, |
|
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி |
|
10 |
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென, |
வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா, |
|
நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா |
|
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன், |
|
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை |
|
15 |
அண்ணல் யானை வழுதி, |
கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே! |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.
|
389 |
'நீர் நுங்கின் கண் வலிப்ப, |
|
கான வேம்பின் காய் திரங்க, |
|
கயம் களியும் கோடை ஆயினும், |
|
ஏலா வெண்பொன் போருறு காலை, |
|
5 |
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!' |
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்; |
|
செலினே, காணா வழியனும் அல்லன்; |
|
புன் தலை மடப் பிடி இனைய, கன்று தந்து, |
|
10 |
குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும் |
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன், |
|
செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன்! |
|
ஆதனுங்கன் போல, நீயும் |
|
பசித்த ஒக்கல் பழங்கண் வீட, |
|
15 |
வீறுசால் நன் கலம் நல்குமதி, பெரும! |
ஐது அகல் அல்குல் மகளிர் |
|
நெய்தல் கேளன்மார், நெடுங் கடையானே! |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
|
390 |
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும் |
|
மறவை நெஞ்சத்து ஆயிவாளர், |
|
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ், |
|
.........................................................மன்ன முற்றத்து, |
|
5 |
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர் |
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர், |
|
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என் |
|
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப் |
|
பாடி நின்ற பல் நாள் அன்றியும், |
|
10 |
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் |
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற |
|
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என, |
|
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை |
|
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து, |
|
15 |
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ, |
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும், |
|
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் |
|
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி, |
|
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை |
|
20 |
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற, |
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன |
|
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி, |
|
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை |
|
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்; |
|
25 |
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி, |
............................................................................................................................. |
|
வான் அறியல என் பாடு பசி போக்கல்; |
|
அண்ணல் யானை வேந்தர் |
|
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
391 |
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் |
|
விண்டு அனைய விண் தோய் பிறங்கல் |
|
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப் |
|
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி, பெற்ற |
|
5 |
திருந்தா மூரி பரந்து படக் கெண்டி, |
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் |
|
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென, |
|
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் |
|
தீர்கை விடுக்கும் பண்பு இல முதுகுடி |
|
10 |
நன...............................................வினவலின், |
'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும் |
|
அளியன் ஆகலின், பொருநன் இவன்' என, |
|
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற, |
|
காண்கு வந்திசின், பெரும!........................... |
|
15 |
..........பெருங் கழி நுழைமீன் அருந்தும் |
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் |
|
ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின், |
|
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு, |
|
இன் துயி........................... ஞ்சால் |
|
20 |
துளி பதன் அறிந்து பொழிய, |
வேலி ஆயிரம் விளைக, நின் வயலே! |
|
திணை அது; துறை கடைநிலை.
| |
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.
|
392 |
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான், |
|
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான் |
|
பசலை நிலவின் பனி படு விடியல், |
|
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை |
|
5 |
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ, |
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து, |
|
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து |
|
அணங்குடை மரபின் இருங் களந்தோறும், |
|
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, |
|
10 |
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் |
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச் |
|
சென்று யான் நின்றனெனாக, அன்றே, |
|
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி |
|
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை |
|
15 |
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத் |
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் |
|
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ, |
|
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை |
|
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து |
|
20 |
அரும் பெறல் அமிழ்தம் அன்ன |
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.
|
393 |
பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் |
|
குறு நெடுந் துணையொடு கூமை வீதலின், |
|
குடி முறை பாடி, ஒய்யென வருந்தி, |
|
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் |
|
5 |
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின், |
'வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?' என, |
|
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா, |
|
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென, |
|
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி, |
|
10 |
ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் |
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப, |
|
கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த |
|
மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன, |
|
வெண் நிண மூரி அருள, நாள் உற |
|
15 |
ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என் |
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி, |
|
போது விரி பகன்றைப் புது மலர் அன்ன, |
|
அகன்று மடி கலிங்கம் உடீஇ, செல்வமும், |
|
கேடு இன்று நல்குமதி, பெரும! மாசு இல் |
|
20 |
மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி, |
|
'கோடை ஆயினும், கோடி............................... |
|
காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந! |
|
வாய் வாள் வளவன்! வாழ்க! எனப் |
|
25 |
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே. |
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.
|
394 |
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின், |
|
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன், |
|
வலி துஞ்சு தடக் கை வாய் வாள் குட்டுவன், |
|
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும், |
|
5 |
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்! |
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை, |
|
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
|
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை |
|
வாடா வஞ்சி பாடினேனாக, |
|
10 |
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி, |
கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின் |
|
வெஞ் சின வேழம் நல்கினன்; அஞ்சி |
|
யான் அது பெயர்த்தனெனாக, தான் அது |
|
சிறிது என உணர்ந்தமை நாணி, பிறிதும் ஓர் |
|
15 |
பெருங் களிறு நல்கியோனே; அதற்கொண்டு, |
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்புறினும், |
|
'துன் அரும் பரிசில் தரும்' என, |
|
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே. |
|
திணையும் துறையும் அவை. |
|
கடைநிலை ஆயின எல்லாம் பாடாண் திணை.
| |
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
395 |
மென் புலத்து வயல் உழவர் |
|
வன் புலத்துப் பகடு விட்டு, |
|
குறு முயலின் குழைச் சூட்டொடு |
|
நெடு வாளைப் பல் உவியல், |
|
5 |
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, |
புதல் தளவின் பூச் சூடி, |
|
................................................................ |
|
...........................அரியலாருந்து; |
|
மனைக் கோழிப் பைம் பயிரின்னே, |
|
10 |
கானக் கோழிக் கவர் குரலொடு |
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; |
|
வேய் அன்ன மென் தோளால், |
|
மயில் அன்ன மென் சாயலார், |
|
கிளி கடியின்னே, |
|
15 |
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; |
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் |
|
சீர் சான்ற விழுச் சிறப்பின், |
|
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் |
|
செல்லா நல் இசை உறந்தைக் குணாது, |
|
20 |
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் |
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! |
|
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, |
|
கதிர் நனி செ ...................................... மாலை, |
|
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், |
|
25 |
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, |
ஆங்கு நின்ற எற்கண்டு, |
|
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், |
|
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, |
|
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப் |
|
30 |
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை |
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு, |
|
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; |
|
அகன் ஞாலம் பெரிது வெம்பினும், |
|
மிக வானுள் எரி தோன்றினும், |
|
35 |
குள மீனொடும் தாள் புகையினும், |
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் |
|
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி, |
|
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என, |
|
உள்ளதும் இல்லதும் அறியாது, |
|
40 |
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
|
396 |
கீழ் நீரான் மீன் வழங்குந்து; |
|
மீ நீரான், கண் அன்ன, மலர் பூக்குந்து; |
|
கழி சுற்றிய விளை கழனி, |
|
அரிப் பறையான் புள் ஓப்புந்து; |
|
5 |
நெடுநீர் கூஉம் மணல் தண் கான் |
மென் பறையான் புள் இரியுந்து; |
|
நனைக் கள்ளின் மனைக் கோசர் |
|
தீம் தேறல் நறவு மகிழ்ந்து, |
|
தீம் குரவைக் கொளைத் தாங்குந்து; |
|
10 |
உள் இலோர்க்கு வலி ஆகுவன், |
கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன், |
|
கழுமிய வென் வேல் வேளே, |
|
வள நீர் வாட்டாற்று எழினியாதன்; |
|
கிணையேம், பெரும! |
|
15 |
கொழுந் தடிய சூடு என்கோ? |
வள நனையின் மட்டு என்கோ? |
|
குறு முயலின் நிணம் பெய்தந்த |
|
நறு நெய்ய சோறு என்கோ? |
|
திறந்து மறந்த கூட்டுமுதல் |
|
20 |
முகந்து கொள்ளும் உணவு என்கோ? |
அன்னவை பல பல |
|
...................................................ருநதய |
|
இரும் பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய |
|
அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை; |
|
25 |
எம்மோர் ஆக்கக் கங்குண்டே; |
மாரி வானத்து மீன் நாப்பண், |
|
விரி கதிர வெண் திங்களின், |
|
விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல் இசை! |
|
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும் |
|
30 |
நிரைசால் நன் கலன் நல்கி, |
உரை செலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே! |
|
திணையும் துறையும் அவை.
| |
வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.
|
397 |
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும்; புள்ளும் |
|
உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே; |
|
பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச் |
|
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து |
|
5 |
இரங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப, |
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, |
|
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை, |
|
வைகறை அரவம் கேளியர்! 'பல கோள் |
|
செய் தார் மார்ப! எழுமதி துயில்' என, |
|
10 |
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
நெடுங் கடைத் தோன்றியேனே; அது நயந்து, |
|
'உள்ளி வந்த பரிசிலன் இவன்' என, |
|
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு, |
|
மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல், |
|
15 |
பாம்பு உரித்தன்ன வான் பூங் கலிங்கமொடு, |
மாரி அன்ன வண்மையின் சொரிந்து, |
|
வேனில் அன்ன என் வெப்பு நீங்க, |
|
அருங் கலம் நல்கியோனே; என்றும், |
|
செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை, |
|
20 |
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த |
தீயொடு விளங்கும் நாடன், வாய் வாள் |
|
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்; |
|
எறி திரைப் பெருங் கடல் இறுதிக்கண் செலினும், |
|
தெறு கதிர்க் கனலி தென் திசைத் தோன்றினும், |
|
25 |
'என்?' என்று அஞ்சலம், யாமே; வென் வேல் |
அருஞ் சமம் கடக்கும் ஆற்றல் அவன் |
|
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே. |
|
திணை அது; துறை பரிசில்விடை; கடைநிலை விடையும் ஆம்.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.
|
398 |
மதி நிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர, |
|
வகை மாண் நல் இல்........................ |
|
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப, |
|
பொய்கைப் பூ முகை மலர, பாணர் |
|
5 |
கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க, |
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறை, |
|
பரிசிலர் விசையெ |
|
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன், |
|
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப் |
|
10 |
புலியினம் மடிந்த கல் அளை போல, |
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர், |
|
மதியத்து அன்ன என் அரிக் குரல் தடாரி, |
|
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து, |
|
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்! |
|
15 |
'தள்ளா நிலையை ஆகியர் எமக்கு' என |
என் வரவு அறீஇ, |
|
சிறிதிற்குப் பெரிது உவந்து, |
|
விரும்பிய முகத்தன் ஆகி, என் அரைத் |
|
துரும்பு படு சிதாஅர் நீக்கி, தன் அரைப் |
|
20 |
புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ, |
அழல் கான்றன்ன அரும் பெறல் மண்டை, |
|
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி, |
|
யான் உண அருளல் அன்றியும், தான் உண் |
|
மண்டைய கண்ட மான் வறைக் கருனை, |
|
25 |
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர, |
வரை உறழ் மார்பின், வையகம் விளக்கும், |
|
விரவு மணி ஒளிர்வரும், அரவு உறழ் ஆரமொடு, |
|
புரையோன் மேனிப் பூத்தசல....................... |
|
முரைசெல அருளியோனே |
|
30 |
........................யருவிப் பாயல் கோவே. |
திணை பாடாண் திணை; துறை கடைநிலை.
| |
சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.
|
399 |
அடு மகள் முகந்த அளவா வெண்ணெல் |
|
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி |
|
காடி வெள் உலைக் கொளீஇ, நீழல் |
|
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி, |
|
5 |
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை, |
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல், |
|
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன |
|
மெய் களைந்து, இனனொடு விரைஇ, |
|
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல், |
|
10 |
அழிகளின் படுநர் களி அட வைகின், |
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக் |
|
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக் |
|
கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்; |
|
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்; |
|
15 |
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து, |
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் |
|
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு, |
|
ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே, |
|
அறவர் அறவன், மறவர் மறவன், |
|
20 |
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன், |
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என, |
|
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி, |
|
வள் பரிந்து கிடந்த.......................மணக்க |
|
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை, |
|
25 |
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து, |
கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன், |
|
'கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் |
|
பகடே அத்தை யான் வேண்டி வந்தது' என, |
|
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே |
|
30 |
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின் |
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை |
|
ஊர்தியொடு நல்கியோனே; சீர் கொள |
|
இழுமென இழிதரும் அருவி, |
|
வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே. |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.
|
400 |
மாக விசும்பின் வெண் திங்கள் |
|
மூ ஐந்தான் முறை முற்ற, |
|
கடல் நடுவண் கண்டன்ன என் |
|
இயம் இசையா, மரபு ஏத்தி, |
|
5 |
கடைத் தோன்றிய கடைக் கங்குலான் |
பலர் துஞ்சவும் தான் துஞ்சான், |
|
உலகு காக்கும் உயர் ெ..........க் |
|
கேட்டோன், எந்தை, என் தெண் கிணைக் குரலே; |
|
10 |
தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி, |
மிகப் பெருஞ் சிறப்பின் வீறு....... |
|
...........................................................லவான |
|
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி, |
|
நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து; |
|
15 |
போது அறியேன், பதிப் பழகவும், |
தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர் |
|
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ; |
|
மறவர் மலிந்த த............................................. |
|
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து, |
|
20 |
இருங் கழி இழிதரு........ கலி வங்கம் |
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து, |
|
துறைதொறும் பிணிக்கும் நல் ஊர், |
|
உறைவு இன் யாணர்,........ கிழவோனே! |
|
திணை அது; துறை இயன்மொழி. |
|