முகப்பு | ![]() |
பொதுவியல் |
18 |
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் |
|
பரந்துபட்ட வியல் ஞாலம் |
|
தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ, |
|
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்! |
|
5 |
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய |
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே! |
|
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் |
|
பூக் கதூஉம் இன வாளை, |
|
நுண் ஆரல், பரு வரால், |
|
10 |
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி; |
வான் உட்கும் வடி நீள் மதில்; |
|
மல்லல் மூதூர் வய வேந்தே! |
|
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், |
|
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி, |
|
15 |
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த |
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன் |
|
தகுதி கேள், இனி, மிகுதியாள! |
|
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் |
|
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; |
|
20 |
உண்டி முதற்றே உணவின் பிண்டம்; |
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே; |
|
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு |
|
உடம்பும் உயிரும் படைத்திசினோரே; |
|
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன் |
|
25 |
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் |
இறைவன் தாட்கு உதவாதே; அதனால், |
|
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே |
|
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத் |
|
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே; |
|
30 |
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. |
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
| |
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.
|
24 |
நெல் அரியும் இருந் தொழுவர் |
|
செஞ் ஞாயிற்று வெயில் முனையின், |
|
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; |
|
திண் திமில் வன் பரதவர் |
|
5 |
வெப்பு உடைய மட்டு உண்டு, |
தண் குரவைச் சீர் தூங்குந்து; |
|
தூவல் கலித்த தேம் பாய் புன்னை |
|
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் |
|
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; |
|
10 |
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் |
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் |
|
இரும் பனையின் குரும்பை நீரும், |
|
பூங் கரும்பின் தீம் சாறும், |
|
ஓங்கு மணல் குவவுத் தாழைத் |
|
15 |
தீம் நீரொடு உடன் விராஅய், |
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; |
|
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய |
|
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி |
|
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் |
|
20 |
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், |
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், |
|
குப்பை நெல்லின், முத்தூறு தந்த |
|
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! |
|
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது |
|
25 |
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே |
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு |
|
நின்று மூத்த யாக்கை அன்ன, நின் |
|
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த |
|
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, |
|
30 |
இரவல் மாக்கள் ஈகை நுவல, |
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய |
|
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, |
|
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது |
|
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை, |
|
35 |
மலர் தலை உலகத்துத் தோன்றி, |
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
27 |
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், |
|
நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன, |
|
வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து, |
|
வீற்றிருந்தோரை எண்ணும்காலை, |
|
5 |
உரையும் பாட்டும் உடையோர் சிலரே; |
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே; |
|
'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் |
|
வலவன் ஏவா வான ஊர்தி |
|
எய்துப என்ப, தம் செய் வினை முடித்து' எனக் |
|
10 |
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! |
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், |
|
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், |
|
அறியாதோரையும் அறியக் காட்டி, |
|
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து, |
|
15 |
வல்லார் ஆயினும், வல்லுநர்ஆயினும், |
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, |
|
அருள, வல்லை ஆகுமதி; அருள் இலர் |
|
கொடாஅமை வல்லர் ஆகுக; |
|
கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை முதுமொழிக்காஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
|
28 |
'சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும், |
|
கூனும், குறளும், ஊமும், செவிடும், |
|
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு |
|
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் |
|
5 |
பேதைமை அல்லது ஊதியம் இல்' என, |
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும், |
|
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது |
|
வட்ட வரிய செம் பொறிச் சேவல் |
|
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் |
|
10 |
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே, |
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர் |
|
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப் |
|
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர் |
|
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே; |
|
15 |
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் |
ஆற்றும், பெரும! நின் செல்வம்; |
|
ஆற்றாமை நிற் போற்றாமையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
29 |
அழல் புரிந்த அடர் தாமரை |
|
ஐது அடர்ந்த நூல் பெய்து, |
|
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் |
|
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி, |
|
5 |
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை! |
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் |
|
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க |
|
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப, |
|
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும், |
|
10 |
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி, |
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும் |
|
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்! |
|
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர் |
|
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு, |
|
15 |
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின் |
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு |
|
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள் |
|
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து, |
|
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச் |
|
20 |
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு |
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை |
|
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில் |
|
கோடியர் நீர்மை போல முறைமுறை |
|
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய |
|
25 |
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்! |
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
65 |
மண் முழா மறப்ப, பண் யாழ் மறப்ப, |
|
இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப, |
|
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப, |
|
உழவர் ஓதை மறப்ப, விழவும் |
|
5 |
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, |
உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து, |
|
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் |
|
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு, |
|
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த |
|
10 |
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன் |
வாள் வடக்கிருந்தனன்; ஈங்கு, |
|
நாள் போல் கழியல, ஞாயிற்றுப் பகலே. |
|
|
சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது, புறப் புண் நாணி, வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.
|
74 |
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், |
|
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்; |
|
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய |
|
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம், |
|
5 |
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய, |
தாம் இரந்து உண்ணும் அளவை |
|
ஈன்மரோ, இவ் உலகத்தானே? |
|
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி. |
|
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, 'தண்ணீர் தா' என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து
| |
உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.
|
75 |
'மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென, |
|
பால் தர வந்த பழ விறல் தாயம் |
|
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு' எனக் |
|
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச் |
|
5 |
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே; |
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் |
|
விழுமியோன் பெறுகுவனாயின், தாழ் நீர் |
|
அறு கயமருங்கின் சிறு கோல் வெண் கிடை |
|
என்றூழ் வாடு வறல் போல, நன்றும் |
|
10 |
நொய்தால் அம்ம தானே மை அற்று, |
விசும்புற ஓங்கிய வெண் குடை, |
|
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே. |
|
திணை அது; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி பாட்டு.
|
112 |
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின், |
|
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; |
|
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், |
|
வென்று எறி முரசின் வேந்தர் எம் |
|
5 |
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! |
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
| |
பாரி மகளிர் பாடியது.
|
113 |
மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், |
|
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும் |
|
பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி, |
|
நட்டனை மன்னோ, முன்னே; இனியே, |
|
5 |
பாரி மாய்ந்தென, கலங்கிக் கையற்று, |
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச் |
|
சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே! |
|
கோல் திரள் முன் கைக் குறுந் தொடி மகளிர் |
|
நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.
|
114 |
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை |
|
சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற |
|
களிறு மென்று இட்ட கவளம் போல, |
|
நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல் |
|
5 |
வார் அசும்பு ஒழுகும் முன்றில், |
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.
|
115 |
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் |
|
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார், |
|
வாக்க உக்க தேக் கள் தேறல் |
|
கல் அலைத்து ஒழுகும்மன்னே! பல் வேல், |
|
5 |
அண்ணல் யானை, வேந்தர்க்கு |
இன்னான் ஆகிய இனியோன் குன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
116 |
தீம் நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் |
|
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல், |
|
ஏந்து எழில் மழைக் கண், இன் நகை, மகளிர் |
|
புல் மூசு கவலைய முள் மிடை வேலி, |
|
5 |
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், |
பீரை நாறிய சுரை இவர் மருங்கின், |
|
ஈத்து இலைக் குப்பை ஏறி, உமணர் |
|
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ; |
|
நோகோ யானே; தேய்கமா, காலை! |
|
10 |
பயில் பூஞ் சோலை மயில் எழுந்து ஆலவும், |
பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும், |
|
கலையும் கொள்ளாவாக, பலவும் |
|
காலம் அன்றியும் மரம் பயம் பகரும் |
|
யாணர் அறாஅ வியல் மலை அற்றே |
|
15 |
அண்ணல் நெடு வரை ஏறி, தந்தை |
பெரிய நறவின், கூர் வேல் பாரியது |
|
அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த |
|
வலம் படு தானை வேந்தர் |
|
பொலம் படைக் கலி மா எண்ணுவோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
117 |
மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும், |
|
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், |
|
வயலகம் நிறைய, புதல் பூ மலர, |
|
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண் |
|
5 |
ஆமா நெடு நிரை நன் புல் ஆர, |
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, |
|
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே |
|
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் |
|
பாசிலை முல்லை முகைக்கும் |
|
10 |
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
118 |
அறையும் பொறையும் மணந்த தலைய, |
|
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத் |
|
தெள் நீர்ச் சிறு குளம் கீள்வது மாதோ |
|
கூர் வேல் குவைஇய மொய்ம்பின் |
|
5 |
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
119 |
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை, |
|
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப, |
|
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து; |
|
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ |
|
5 |
நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல, |
பணை கெழு வேந்தரை இறந்தும் |
|
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
120 |
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல் |
|
கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து, |
|
பூழி மயங்கப் பல உழுது, வித்தி, |
|
பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக் |
|
5 |
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, |
மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி, |
|
கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து, |
|
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து, |
|
வாலிதின் விளைந்த புது வரகு அரிய, |
|
10 |
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக் |
கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக, |
|
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல் |
|
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து, |
|
நறு நெய்க் கடலை விசைப்ப, சோறு அட்டு, |
|
15 |
பெருந்தோள் தாலம் பூசல் மேவர, |
வருந்தா யாணர்த்து; நந்தும்கொல்லோ |
|
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை |
|
ஆடு கழை நரலும் சேட் சிமை, புலவர் |
|
பாடி ஆனாப் பண்பின் பகைவர் |
|
20 |
ஓடு கழல் கம்பலை கண்ட |
செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
121 |
ஒரு திசை ஒருவனை உள்ளி, நால் திசைப் |
|
பலரும் வருவர், பரிசில் மாக்கள்; |
|
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும் |
|
ஈதல் எளிதே; மா வண் தோன்றல்! |
|
5 |
அது நற்கு அறிந்தனைஆயின், |
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே! |
|
திணை அது; துறை பொருண் மொழிக் காஞ்சி.
| |
மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது.
|
182 |
உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர் |
|
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத் |
|
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்; |
|
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி, |
|
5 |
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின், |
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; |
|
அன்ன மாட்சி அனையர் ஆகி, |
|
தமக்கு என முயலா நோன் தாள், |
|
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பாட்டு.
|
183 |
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும், |
|
பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே; |
|
பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும், |
|
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; |
|
5 |
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், |
'மூத்தோன் வருக' என்னாது, அவருள் |
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; |
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், |
|
கீழ்ப்பால் ஒருவன் கற்பின், |
|
10 |
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே. |
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு.
|
185 |
கால் பார் கோத்து, ஞாலத்து இயக்கும் |
|
காவற் சாகாடு கைப்போன் மாணின், |
|
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே; |
|
உய்த்தல் தேற்றானாயின், வைகலும், |
|
5 |
பகைக் கூழ் அள்ளற் பட்டு, |
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
தொண்டைமான் இளந்திரையன் பாட்டு.
|
186 |
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; |
|
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்: |
|
அதனால், யான் உயிர் என்பது அறிகை |
|
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மோசிகீரனார் பாடியது.
|
187 |
நாடா கொன்றோ; காடா கொன்றோ; |
|
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ; |
|
எவ் வழி நல்லவர் ஆடவர், |
|
அவ் வழி நல்லை; வாழிய நிலனே! |
|
திணையும் துறையும் அவை.
| |
ஒளவையார் பாடியது.
|
188 |
படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் |
|
உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக் |
|
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி, |
|
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், |
|
5 |
நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும், |
மயக்குறு மக்களை இல்லோர்க்குப் |
|
பயக் குறை இல்லை தாம் வாழு நாளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.
|
189 |
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி |
|
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும், |
|
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான் |
|
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், |
|
5 |
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; |
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே; |
|
செல்வத்துப் பயனே ஈதல்; |
|
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
|
190 |
விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர் |
|
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும் |
|
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம் |
|
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு |
|
5 |
இயைந்த கேண்மை இல்லாகியரோ! |
கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென, |
|
அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள், |
|
பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து, |
|
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் |
|
10 |
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து |
உரனுடையாளர் கேண்மையொடு |
|
இயைந்த வைகல் உள ஆகியரோ! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நல்லுருத்திரன் பாட்டு.
|
191 |
'யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல் |
|
யாங்கு ஆகியர்?' என வினவுதிர் ஆயின், |
|
மாண்ட என் மனைவியொடு, மக்களும் நிரம்பினர்; |
|
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும் |
|
5 |
அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை |
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் |
|
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரை,'கேட்கும் காலம் பலவாலோ? நரை நுமக்கு இல்லையாலோ?' என்ற சான்றோர்க்கு அவர் சொற்றது.
|
192 |
யாதும் ஊரே; யாவரும் கேளிர்; |
|
தீதும் நன்றும் பிறர் தர வாரா; |
|
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; |
|
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் |
|
5 |
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், |
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு |
|
வானம் தண் துளி தலை இ, ஆனாது |
|
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று |
|
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர் |
|
10 |
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர் |
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் |
|
பெரியோரை வியத்தலும் இலமே; |
|
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கணியன் பூங்குன்றன் பாட்டு.
|
193 |
அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின் |
|
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல, |
|
ஓடி உய்தலும் கூடும்மன்; |
|
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஓரேருழவர் பாட்டு.
|
194 |
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல் |
|
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப, |
|
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர் |
|
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, |
|
5 |
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்! |
இன்னாது அம்ம, இவ் உலகம்; |
|
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே. |
|
திணை அது; துறை பெருங் காஞ்சி.
| |
பக்குடுக்கை நன்கணியார் பாடியது.
|
195 |
பல் சான்றீரே! பல் சான்றீரே! |
|
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள், |
|
பயன் இல் மூப்பின், பல் சான்றீரே! |
|
கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன் |
|
5 |
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; |
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், |
|
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் |
|
எல்லாரும் உவப்பது; அன்றியும், |
|
நல் ஆற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே. |
|
திணை அது; துறை பொருண் மொழிக் காஞ்சி.
| |
நரிவெரூஉத்தலையார் பாடியது.
|
214 |
'செய்குவம்கொல்லோ, நல்வினை?' எனவே |
|
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி |
|
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே; |
|
யானை வேட்டுவன் யானையும் பெறுமே; |
|
5 |
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே: |
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு, |
|
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின், |
|
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்; |
|
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின், |
|
10 |
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; |
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக் |
|
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு, |
|
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவன் வடக்கிருந்தான் சொற்றது.
|
217 |
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, |
|
எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்; |
|
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் |
|
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, |
|
5 |
இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக, |
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்; |
|
'வருவன்' என்ற கோனது பெருமையும், |
|
அது பழுது இன்றி வந்தவன் அறிவும், |
|
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே; |
|
10 |
அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் |
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை |
|
அன்னோனை இழந்த இவ் உலகம் |
|
என் ஆவதுகொல்? அளியது தானே! |
|
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
| |
அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது.
|
218 |
பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய |
|
மா மலை பயந்த காமரு மணியும், |
|
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து, |
|
அரு விலை நன் கலம் அமைக்கும்காலை, |
|
5 |
ஒரு வழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர் |
சான்றோர் பாலர் ஆப; |
|
சாலார் சாலார் பாலர் ஆகுபவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது.
|
219 |
உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல், |
|
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள! |
|
புலவுதி மாதோ நீயே |
|
பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது.
|
220 |
பெருஞ் சோறு பயந்து, பல் யாண்டு புரந்த |
|
பெருங் களிறு இழந்த பைதல் பாகன் |
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை, |
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு, |
|
5 |
கலங்கினென் அல்லனோ, யானே பொலந் தார்த் |
தேர் வண் கிள்ளி போகிய |
|
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.
|
221 |
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே; |
|
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே; |
|
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே; |
|
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே; |
|
5 |
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; |
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்; |
|
அனையன் என்னாது, அத் தக்கோனை, |
|
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று; |
|
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை |
|
10 |
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்! |
'நனந் தலை உலகம் அரந்தை தூங்க, |
|
கெடு இல் நல் இசை சூடி, |
|
நடுகல் ஆயினன் புரவலன்' எனவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் நடுகல் கண்டு அவர் பாடியது.
|
222 |
'அழல் அவிர் வயங்கு இழைப் பொலிந்த மேனி, |
|
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த |
|
புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா' என, |
|
என் இவண் ஒழித்த அன்பிலாள! |
|
5 |
எண்ணாது இருக்குவை அல்லை; |
என் இடம் யாது? மற்று இசை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை, தன் மகன் பிறந்த பின் பெயர்த்துச் சென்று, பொத்தியார், 'எனக்கு இடம் தா' என்று சொற்றது.
|
223 |
பலர்க்கு நிழல் ஆகி, உலகம் மீக்கூறி, |
|
தலைப்போகன்மையின் சிறு வழி மடங்கி, |
|
நிலை பெறு நடுகல் ஆகியக் கண்ணும், |
|
இடம் கொடுத்து அளிப்ப, மன்ற உடம்போடு |
|
5 |
இன் உயிர் விரும்பும் கிழமைத் |
தொல் நட்புடையார் தம் உழைச் செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.
|
224 |
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்; |
|
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி, |
|
இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்; |
|
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து, |
|
5 |
முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த |
தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு, |
|
பருதி உருவின் பல் படைப் புரிசை, |
|
எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண், |
|
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்; |
|
10 |
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்: |
இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்! |
|
அருவி மாறி, அஞ்சு வரக் கருகி, |
|
பெரு வறங் கூர்ந்த வேனில் காலை, |
|
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார், |
|
15 |
பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக் |
கொய்து கட்டு அழித்த வேங்கையின், |
|
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
|
225 |
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய, |
|
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த, |
|
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர, |
|
நில மலர் வையத்து வல முறை வளைஇ, |
|
5 |
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு, |
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி: |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும் |
|
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என, |
|
10 |
இன் இசைப் பறையொடு வென்றி நுவல, |
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப |
|
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி, |
|
ஞாலங் காவலர் கடைத்தலை, |
|
காலைத் தோன்றினும் நோகோ யானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
226 |
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும், |
|
உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ; |
|
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி, |
|
இரந்தன்றாகல் வேண்டும் பொலந் தார் |
|
5 |
மண்டு அமர் கடக்கும் தானைத் |
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
227 |
நனி பேதையே, நயன் இல் கூற்றம்! |
|
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை; |
|
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்; |
|
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும், |
|
5 |
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய, |
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின் |
|
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல் |
|
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் |
|
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி |
|
10 |
இனையோற் கொண்டனைஆயின், |
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.
|
228 |
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! |
|
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை |
|
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை, |
|
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! |
|
5 |
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்? |
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப் |
|
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை, |
|
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன |
|
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன் |
|
10 |
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன் |
தேவர் உலகம் எய்தினன்ஆதலின், |
|
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி |
|
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம் |
|
இரு நிலம் திகிரியா, பெரு மலை |
|
15 |
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? |
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
| |
அவனை ஐயூர் முடவனார் பாடியது.
|
229 |
ஆடு இயல் அழல் குட்டத்து |
|
ஆர் இருள் அரை இரவில், |
|
முடப் பனையத்து வேர் முதலாக் |
|
கடைக் குளத்துக் கயம் காய, |
|
5 |
பங்குனி உயர் அழுவத்து, |
தலை நாள்மீன் நிலை திரிய, |
|
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர, |
|
தொல் நாள்மீன் துறை படிய, |
|
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது, |
|
10 |
அளக்கர்த் திணை விளக்காகக் |
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி, |
|
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே; |
|
அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர், |
|
'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் |
|
15 |
நோய் இலனாயின் நன்றுமன் தில்' என |
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப, |
|
அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே; |
|
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும், |
|
திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும், |
|
20 |
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும், |
கால் இயல் கலி மாக் கதி இல வைகவும், |
|
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின், |
|
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி, |
|
தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோ |
|
25 |
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு |
அளந்து கொடை அறியா ஈகை, |
|
மணி வரை அன்ன மாஅயோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.
|
230 |
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும், |
|
வெங் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும், |
|
களம் மலி குப்பை காப்பு இல வைகவும், |
|
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல், |
|
5 |
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள், |
பொய்யா எழினி பொருது களம் சேர |
|
ஈன்றோள் நீத்த குழவி போல, |
|
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய, |
|
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு |
|
10 |
நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி |
நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்! |
|
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான், |
|
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு |
|
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின், |
|
15 |
நேரார் பல் உயிர் பருகி, |
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே. |
|
திணை அது; துறை கையறு நிலை.
| |
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.
|
231 |
எறி புனக் குறவன் குறையல் அன்ன |
|
கரி புற விறகின் ஈம ஒள் அழல், |
|
குறுகினும் குறுகுக; குறுகாது சென்று, |
|
விசும்புற நீளினும் நீள்க பசுங் கதிர்த் |
|
5 |
திங்கள் அன்ன வெண்குடை |
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
232 |
இல்லாகியரோ, காலை மாலை! |
|
அல்லாகியர், யான் வாழும் நாளே! |
|
நடுகல் பீலி சூட்டி, நார் அரி |
|
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்கொல்லோ |
|
5 |
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய |
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
233 |
பொய்யாகியரோ! பொய்யாகியரோ! |
|
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச் |
|
சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய |
|
பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ! |
|
5 |
'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண், |
போர் அடு தானை, எவ்வி மார்பின் |
|
எஃகுறு விழுப்புண் பல' என |
|
வைகுறு விடியல், இயம்பிய குரலே. |
|
திணயும் துறையும் அவை.
| |
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.
|
234 |
நோகோ யானே? தேய்கமா காலை! |
|
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி, |
|
தன் அமர் காதலி புல் மேல் வைத்த |
|
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல் |
|
5 |
உலகு புகத் திறந்த வாயில் |
பலரோடு உண்டல் மரீஇயோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
235 |
சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே! |
|
பெரிய கள் பெறினே, |
|
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே! |
|
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! |
|
5 |
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! |
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே! |
|
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே! |
|
நரந்தம் நாறும் தன் கையால், |
|
புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே! |
|
10 |
அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ, |
இரப்போர் கையுளும் போகி, |
|
புரப்போர் புன்கண் பாவை சோர, |
|
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் |
|
சென்று வீழ்ந்தன்று, அவன் |
|
15 |
அரு நிறத்து இயங்கிய வேலே! |
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
|
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை; |
|
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர் |
|
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று |
|
20 |
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே! |
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
236 |
கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம் |
|
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் |
|
மலை கெழு நாட! மா வண் பாரி! |
|
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் |
|
5 |
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே |
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது, |
|
ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி, |
|
இனையைஆதலின் நினக்கு மற்று யான் |
|
மேயினேன் அன்மையானே; ஆயினும், |
|
10 |
இம்மை போலக் காட்டி, உம்மை |
இடை இல் காட்சி நின்னோடு |
|
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! |
|
திணை அது; துறை கையறுநிலை.
| |
வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.
|
237 |
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, |
|
பாடி நின்ற பசி நாட்கண்ணே, |
|
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, |
|
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் |
|
5 |
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என |
நச்சி இருந்த நசை பழுதாக, |
|
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு, |
|
'அளியர்தாமே ஆர்க' என்னா |
|
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, |
|
10 |
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் |
வாழைப் பூவின் வளை முறி சிதற, |
|
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க, |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: |
|
15 |
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் |
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், |
|
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் |
|
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, |
|
நனியுடைப் பரிசில் தருகம், |
|
20 |
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|
238 |
கவி செந் தாழிக் குவி புறத்து இருந்த |
|
செவி செஞ் சேவலும் பொகுவலும் வெருவா, |
|
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி, |
|
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் |
|
5 |
காடு முன்னினனே, கள் காமுறுநன்; |
தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடி, |
|
பாடுநர் கடும்பும் பையென்றனவே; |
|
தோடு கொள் முரசும் கிழிந்தன, கண்ணே; |
|
ஆள் இல், வரை போல், யானையும் மருப்பு இழந்தனவே; |
|
10 |
வெந் திறல் கூற்றம் பெரும் பேதுறுப்ப, |
எந்தை ஆகுல அதற் படல் அறியேன்; |
|
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற |
|
என் ஆகுவர்கொல், என் துன்னியோரே? |
|
மாரி இரவின், மரம் கவிழ் பொழுதின், |
|
15 |
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஒராங்குக் |
கண் இல் ஊமன் கடல் பட்டாங்கு, |
|
வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து, |
|
அவல மறு சுழி மறுகலின், |
|
தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வெளிமான் துஞ்சிய பின் அவர் பாடியது.
|
239 |
தொடியுடைய தோள் மணந்தனன்; |
|
கடி காவில் பூச் சூடினன்; |
|
தண் கமழும் சாந்து நீவினன்; |
|
செற்றோரை வழி தபுத்தனன்; |
|
5 |
நட்டோரை உயர்பு கூறினன்; |
'வலியர்' என, வழிமொழியலன்; |
|
'மெலியர்' என, மீக்கூறலன்; |
|
பிறரைத் தான் இரப்பு அறியலன்; |
|
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்; |
|
10 |
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்; |
வருபடை எதிர் தாங்கினன்; |
|
பெயர்படை புறங்கண்டனன்; |
|
கடும் பரிய மாக் கடவினன்; |
|
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்; |
|
15 |
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்; |
தீம் செறி தசும்பு தொலைச்சினன்; |
|
பாண் உவப்ப பசி தீர்த்தனன்; |
|
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச் |
|
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் |
|
20 |
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ! |
படு வழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே! |
|
திணையும் துறையும் அவை.
| |
நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியது.
|
240 |
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், |
|
வாடா யாணர் நாடும் ஊரும், |
|
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் |
|
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு, |
|
5 |
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, |
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ, |
|
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை, |
|
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும் |
|
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி, |
|
10 |
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது; |
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, |
|
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் |
|
வாடிய பசியராகி, பிறர் |
|
நாடு படு செலவினர் ஆயினர், இனியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
|
241 |
'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார், |
|
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி |
|
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள், |
|
போர்ப்புறு முரசம் கறங்க, |
|
5 |
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|
242 |
இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்; |
|
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி, |
|
பாணன் சூடான்; பாடினி அணியாள்; |
|
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த |
|
5 |
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை |
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே? |
|
திணையும் துறையும் அவை.
| |
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் பாடியது.
|
243 |
இனி நினைந்து இரக்கம் ஆகின்று: திணி மணல் |
|
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ, |
|
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து, |
|
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி, |
|
5 |
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு |
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து, |
|
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர் மிக, |
|
கரையவர் மருள, திரைஅகம் பிதிர, |
|
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து, |
|
10 |
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை |
அளிதோதானே! யாண்டு உண்டு கொல்லோ |
|
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று, |
|
இரும் இடை மிடைந்த சில சொல் |
|
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே? |
|
திணையும் துறைஉம் அவை.
| |
தொடித் தலை விழுத்தண்டினார் பாடியது.
|
245 |
யாங்குப் பெரிதுஆயினும், நோய் அளவு எனைத்தே, |
|
உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்? |
|
கள்ளி போகிய களரி மருங்கின் |
|
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து, |
|
5 |
ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி, |
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை; |
|
இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டு துஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு.
|
246 |
பல் சான்றீரே! பல் சான்றீரே! |
|
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும், |
|
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே! |
|
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட |
|
5 |
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது, |
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம், |
|
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட |
|
வேளை வெந்தை, வல்சி ஆக, |
|
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும் |
|
10 |
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ; |
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம் |
|
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம் |
|
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற |
|
வள் இதழ் அவிழ்ந்த தாமரை |
|
15 |
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! |
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
| |
பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப் பாய்வாள் சொல்லியது.
|
247 |
யானை தந்த முளி மர விறகின் |
|
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து, |
|
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி, |
|
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில், |
|
5 |
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ, |
பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கி, |
|
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் |
|
முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச் |
|
சிறு நனி தமியள் ஆயினும், |
|
10 |
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே! |
திணையும் துறையும் அவை.
| |
அவள் தீப் பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயார் சொல்லியது.
|
248 |
அளியதாமே, சிறு வெள் ஆம்பல்! |
|
இளையமாகத் தழை ஆயினவே; |
|
இனியே, பெரு வளக் கொழுநன் மாய்ந்தென, பொழுது மறுத்து, |
|
இன்னா வைகல் உண்ணும் |
|
5 |
அல்லிப் படூஉம் புல் ஆயினவே. |
திணை அது; துறை தாபத நிலை.
| |
.......................... ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.
|
249 |
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப, |
|
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, |
|
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் |
|
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர, |
|
5 |
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு, |
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும், |
|
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் |
|
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி, |
|
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, |
|
10 |
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன் புக,.... வரி |
|
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி, |
|
அழுதல் ஆனாக் கண்ணள், |
|
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
|
250 |
குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில் |
|
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர் |
|
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர், |
|
கூந்தல் கொய்து, குறுந் தொடி நீக்கி, |
|
5 |
அல்லி உணவின் மனைவியொடு, இனியே |
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்! |
|
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் |
|
முனித்தலைப் புதல்வர் தந்தை |
|
தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...................தாயங்கண்ணியார் பாடியது.
|
253 |
என் திறத்து அவலம் கொள்ளல், இனியே; |
|
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப, |
|
'நகாஅல்' என வந்த மாறே, எழா நெல் |
|
பைங் கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின், |
|
5 |
வளை இல், வறுங் கை ஓச்சி, |
கிளையுள் ஒய்வலோ? கூறு நின் உரையே! |
|
திணை பொதுவியல்; துறை முதுபாலை.
| |
....................குளம்பாதாயனார் பாடியது.
|
254 |
இளையரும் முதியரும் வேறு புலம் படர, |
|
எடுப்ப எழாஅய், மார்பம் மண் புல்ல, |
|
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளர்த்த |
|
வளை இல் வறுங் கை ஓச்சி, கிளையுள், |
|
5 |
'இன்னன் ஆயினன், இளையோன்' என்று, |
நின் உரை செல்லும் ஆயின், 'மற்று |
|
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து, |
|
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகன் |
|
வளனும் செம்மலும் எமக்கு' என, நாளும் |
|
10 |
ஆனாது புகழும் அன்னை |
யாங்கு ஆகுவள்கொல்? அளியள் தானே! |
|
திணையும் துறையும் அவை.
| |
...................கயமனார் பாடியது.
|
255 |
'ஐயோ!' எனின், யான் புலி அஞ்சுவலே; |
|
அணைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்கவல்லேன்; |
|
என் போல் பெரு விதிர்ப்புறுக, நின்னை |
|
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே! |
|
5 |
நிரை வளை முன் கை பற்றி |
வரை நிழல் சேர்கம் நடத்திசின் சிறிதே! |
|
திணையும் துறையும் அவை.
| |
....................வன்பரணர் பாடியது.
|
256 |
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! |
|
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய |
|
சிறு வெண் பல்லி போல, தன்னொடு |
|
சுரம் பல வந்த எமக்கும் அருளி, |
|
5 |
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி |
அகலிதாக வனைமோ |
|
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|
280 |
என்னை மார்பில் புண்ணும் வெய்ய; |
|
நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்; |
|
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா; |
|
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; |
|
5 |
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; |
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் |
|
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா; |
|
துடிய! பாண! பாடு வல் விறலி! |
|
என் ஆகுவிர்கொல்? அளியிர்; நுமக்கும் |
|
10 |
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும் |
மண்ணுறு மழித் தலைத் தெண் நீர் வார, |
|
தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியல் |
|
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் |
|
கழி கல மகளிர் போல, |
|
15 |
வழி நினைந்திருத்தல், அதனினும் அரிதே! |
திணை பொதுவியல்; துறை ஆனந்தப்பையுள்.
| |
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
362 |
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த |
|
மதி உறழ் ஆரம் மார்பில் புரள, |
|
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்ப, பொழிலகம் பரந்த பெ................. |
|
5 |
.......................கும விசய வெண் கொடி |
அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை, |
|
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின், |
|
ஆக் குரல் காண்பின் அந்தணாளர் |
|
நான்மறைக் குறி .......................... யின் |
|
10 |
அறம் குறித்தன்று; பொருள் ஆகுதலின் |
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇ, |
|
கை பெய்த நீர் கடற் பரப்ப, |
|
ஆம் இருந்த அடை நல்கி, |
|
சோறு கொடுத்து, மிகப் பெரிதும் |
|
15 |
வீறு சான......................... நன்றும் |
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின், |
|
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப் |
|
பகலும் கூவும் அகலுள் ஆங்கண், |
|
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு, |
|
20 |
இல் என்று இல்வயின் பெயர, மெல்ல |
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி, |
|
உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே. |
திணை பொதுவியல்; துறை பெருங்காஞ்சி.
| |
அவனைச் சிறுவெண்டேரையார் பாடியது.
|
363 |
இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மா நிலம் |
|
உடையிலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி, |
|
தாமே ஆண்ட ஏமம் காவலர் |
|
இடு திரை மணலினும் பலரே; சுடு பிணக் |
|
5 |
காடு பதி ஆகப் போகி, தம்தம் |
நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே; |
|
அதனால், நீயும் கேண்மதி அத்தை! வீயாது |
|
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை; |
|
மடங்கல் உண்மை மாயமோ அன்றே; |
|
10 |
கள்ளி வேய்ந்த முள்ளிஅம் புறங்காட்டு, |
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், |
|
உப்பு இலாஅ அவிப் புழுக்கல் |
|
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது, |
|
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று, |
|
15 |
நிலம் கலனாக, இலங்கு பலி மிசையும் |
இன்னா வைகல் வாராமுன்னே, |
|
செய் நீ முன்னிய வினையே, |
|
முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...................... ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.
|
364 |
வாடா மாலை பாடினி அணிய, |
|
பாணன் சென்னிக் கேணி பூவா |
|
எரி மருள் தாமரைப் பெரு மலர் தயங்க, |
|
மை விடை இரும் போத்துச் செந் தீச் சேர்த்தி, |
|
5 |
காயம் கனிந்த கண் அகன் கொழுங் குறை |
நறவு உண் செவ் வாய் நாத் திறம் பெயர்ப்ப, |
|
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும், |
|
மகிழ்கம் வம்மோ, மறப் போரோயே! |
|
அரியஆகலும் உரிய, பெரும! |
|
10 |
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் |
முது மரப் பொத்தின் கதுமென இயம்பும் |
|
கூகைக் கோழி ஆனாத் |
|
தாழிய பெருங் காடு எய்திய ஞான்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனைக் கூகைக் கோழியார் பாடியது.
|