முகப்பு | ![]() |
வஞ்சி |
4 |
வாள், வலம் தர, மறுப் பட்டன |
|
செவ் வானத்து வனப்புப் போன்றன; |
|
தாள், களம் கொள, கழல் பறைந்தன |
|
கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன; |
|
5 |
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ, |
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; |
|
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட, |
|
கறுழ் பொருத செவ் வாயான், |
|
எருத்து வவ்விய புலி போன்றன; |
|
10 |
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய், |
நுதி மழுங்கிய வெண் கோட்டான், |
|
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; |
|
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப் |
|
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, |
|
15 |
மாக் கடல் நிவந்து எழுதரும் |
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ |
|
அனையை ஆகன்மாறே, |
|
தாய் இல் தூவாக் குழவி போல, |
|
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
| |
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.
|
7 |
களிறு கடைஇய தாள், |
|
கழல் உரீஇய திருந்து அடி, |
|
கணை பொருது கவி வண் கையால், |
|
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து, |
|
5 |
மா மறுத்த மலர் மார்பின், |
தோல் பெயரிய எறுழ் முன்பின், |
|
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர் |
|
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக் |
|
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல |
|
10 |
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ! |
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து |
|
மீனின் செறுக்கும் யாணர்ப் |
|
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை; மழபுல வஞ்சியும் ஆம்.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
|
16 |
வினை மாட்சிய விரை புரவியொடு, |
|
மழை உருவின தோல் பரப்பி, |
|
முனை முருங்கத் தலைச் சென்று, அவர் |
|
விளை வயல் கவர்பூட்டி, |
|
5 |
மனை மரம் விறகு ஆகக் |
கடி துறை நீர்க் களிறு படீஇ, |
|
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் |
|
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற, |
|
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை, |
|
10 |
துணை வேண்டாச் செரு வென்றி, |
புலவு வாள், புலர் சாந்தின், |
|
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்! |
|
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், |
|
பனிப் பகன்றை, கனிப் பாகல், |
|
15 |
கரும்பு அல்லது காடு அறியாப் |
பெருந் தண் பணை பாழ் ஆக, |
|
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை, |
|
நாம நல் அமர் செய்ய, |
|
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே. |
|
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.
|
36 |
அடுநை ஆயினும், விடுநை ஆயினும், |
|
நீ அளந்து அறிதி, நின் புரைமை வார் கோல், |
|
செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர் |
|
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் |
|
5 |
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய, |
கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய் |
|
நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து, |
|
வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப, காவுதொறும் |
|
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் |
|
10 |
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப, |
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின் |
|
சிலைத் தார் முரசம் கறங்க, |
|
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
41 |
காலனும் காலம் பார்க்கும்; பாராது, |
|
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய, |
|
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே! |
|
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும், |
|
5 |
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும், |
வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும், |
|
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும், |
|
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும், |
|
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும், |
|
10 |
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும், |
கனவின் அரியன காணா, நனவில் |
|
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி, |
|
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர், |
|
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு |
|
15 |
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு |
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு |
|
எரி நிகழ்ந்தன்ன செலவின் |
|
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
45 |
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; |
|
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; |
|
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு |
|
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; |
|
5 |
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; |
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், |
|
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் |
|
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு |
|
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
|
46 |
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் |
|
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, |
|
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி, |
|
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்; |
|
5 |
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த |
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி, |
|
விருந்தின் புன்கண் நோவுடையர்; |
|
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.
|
47 |
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, |
|
'நெடிய' என்னாது சுரம் பல கடந்து |
|
வடியா நாவின் வல்லாங்குப் பாடி, |
|
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி, |
|
5 |
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, |
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை |
|
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? இன்றே; திறப்பட |
|
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, |
|
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ் |
|
10 |
மண் ஆள் செல்வம் எய்திய |
நும் ஓரன்ன செம்மலும் உடைத்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நளங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, 'ஒற்று வந்தான்' என்று கொல்லப் புக்குழி, கோவூர் கிழார் பாடி, உய்யக்கொண்டது.
|
57 |
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், |
|
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, |
|
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! |
|
நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின், |
|
5 |
நீயே, பிறர் நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு |
இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க; |
|
நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க; |
|
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் |
|
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம் |
|
10 |
கடிமரம் தடிதல் ஓம்பு நின் |
நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே. |
|
திணை வஞ்சி; துறை துணை வஞ்சி.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
98 |
முனைத் தெவ்வர் முரண் அவியப் |
|
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின் |
|
இனக் களிறு செலக் கண்டவர் |
|
மதில் கதவம் எழுச் செல்லவும், |
|
5 |
பிணன் அழுங்கக் களன் உழக்கிச் |
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் |
|
இன நல் மாச் செலக் கண்டவர் |
|
கவை முள்ளின் புழை அடைப்பவும், |
|
மார்புறச் சேர்ந்து ஒல்காத் |
|
10 |
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் |
தோல் கழியொடு பிடி செறிப்பவும், |
|
வாள் வாய்த்த வடுப் பரந்த நின் |
|
மற மைந்தர் மைந்து கண்டவர் |
|
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், |
|
15 |
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, |
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் |
|
கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார் |
|
இரங்க விளிவதுகொல்லோ வரம்பு அணைந்து |
|
இறங்குகதிர் அலம்வரு கழனி, |
|
20 |
பெரும் புனல் படப்பை, அவர் அகன் தலை நாடே! |
திணை வாகை; துறை அரச வாகை; திணை வஞ்சியும், துறை கொற்ற வள்ளையும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|
100 |
கையது வேலே; காலன புனை கழல்; |
|
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்; |
|
வட்கர் போகிய வளர் இளம் போந்தை |
|
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு, |
|
5 |
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ, |
சுரி இரும் பித்தை பொலியச் சூடி, |
|
வரிவயம் பொருத வயக் களிறு போல, |
|
இன்னும் மாறாது சினனே; அன்னோ! |
|
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே; |
|
10 |
செறுவர் நோக்கிய கண், தன் |
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே. |
|
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
| |
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.
|
213 |
மண்டு அமர் அட்ட மதனுடை நோன் தாள், |
|
வெண்குடை விளக்கும், விறல் கெழு வேந்தே! |
|
பொங்கு நீர் உடுத்த இம் மலர் தலை உலகத்து, |
|
நின்தலை வந்த இருவரை நினைப்பின், |
|
5 |
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர், |
அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்; |
|
நினையும்காலை, நீயும் மற்றவர்க்கு |
|
அனையை அல்லை; அடு மான் தோன்றல்! |
|
பரந்து படு நல் இசை எய்தி, மற்று நீ |
|
10 |
உயர்ந்தோர் உலகம் எய்தி; பின்னும் |
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே: |
|
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும் |
|
இன்னும் கேண்மதி, இசை வெய்யோயே! |
|
நின்ற துப்பொடு நிற் குறித்து எழுந்த |
|
15 |
எண் இல் காட்சி இளையோர் தோற்பின், |
நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே? |
|
அமர் வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின், |
|
இகழுநர் உவப்ப, பழி எஞ்சுவையே; |
|
அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல் விரைந்து |
|
20 |
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு |
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது |
|
செய்தல் வேண்டுமால், நன்றே வானோர் |
|
அரும் பெறல் உலகத்து ஆன்றவர் |
|
விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
அவன் மக்கள்மேல் சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது.
|
292 |
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் |
|
யாம் தனக்கு உறுமுறை வளாவ, விலக்கி, |
|
'வாய் வாள் பற்றி நின்றனன்' என்று, |
|
சினவல் ஓம்புமின், சிறு புல்லாளர்! |
|
5 |
ஈண்டே போல வேண்டுவன்ஆயின், |
என் முறை வருக என்னான், கம்மென |
|
எழு தரு பெரும் படை விலக்கி, |
|
ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே. |
|
திணை வஞ்சி; துறை பெருஞ்சோற்றுநிலை.
| |
விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.
|