முகப்பு | தொடக்கம் |
ஆலமரம் (ஆலம்) |
58 |
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே, |
|
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக் |
|
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு, |
|
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது, |
|
5 |
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ, |
இளையது ஆயினும் கிளை அரா எறியும் |
|
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச் |
|
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே, |
|
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே, |
|
10 |
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என, |
வரைய சாந்தமும், திரைய முத்தமும், |
|
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் |
|
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே; |
|
பால் நிற உருவின் பனைக் கொடியோனும், |
|
15 |
நீல் நிற உருவின் நேமியோனும், என்று |
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு, |
|
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி, |
|
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ? |
|
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே; |
|
20 |
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் |
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப் |
|
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம் |
|
கையகப்படுவது பொய் ஆகாதே; |
|
அதனால், நல்ல போலவும், நயவ போலவும், |
|
25 |
தொல்லோர் சென்ற நெறிய போலவும், |
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் |
|
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது, |
|
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று |
|
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக் |
|
30 |
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி |
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த |
|
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே. |
|
திணை பாடாண் திணை; துறை உடனிலை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
199 |
கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம் |
|
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும் |
|
செலவு ஆனாவே, கலி கொள் புள்ளினம்; |
|
அனையர் வாழியோ இரவலர்; அவரைப் |
|
5 |
புரவு எதிர்கொள்ளும் பெருஞ் செய் ஆடவர் |
உடைமை ஆகும், அவர் உடைமை; |
|
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பெரும்பதுமனார் பாட்டு.
|
254 |
இளையரும் முதியரும் வேறு புலம் படர, |
|
எடுப்ப எழாஅய், மார்பம் மண் புல்ல, |
|
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளர்த்த |
|
வளை இல் வறுங் கை ஓச்சி, கிளையுள், |
|
5 |
'இன்னன் ஆயினன், இளையோன்' என்று, |
நின் உரை செல்லும் ஆயின், 'மற்று |
|
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து, |
|
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகன் |
|
வளனும் செம்மலும் எமக்கு' என, நாளும் |
|
10 |
ஆனாது புகழும் அன்னை |
யாங்கு ஆகுவள்கொல்? அளியள் தானே! |
|
திணையும் துறையும் அவை.
| |
...................கயமனார் பாடியது.
|