முகப்பு | தொடக்கம் |
நெல்லி |
91 |
வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் |
|
களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை, |
|
ஆர் கலி நறவின், அதியர் கோமான்! |
|
போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி! |
|
5 |
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி |
நீலமணி மிடற்று ஒருவன் போல |
|
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப் |
|
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட |
|
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது, |
|
10 |
ஆதல் நின் அகத்து அடக்கி, |
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.
|
170 |
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி, |
|
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர், |
|
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி |
|
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென, |
|
5 |
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப, |
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி |
|
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் |
|
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன், |
|
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே |
|
10 |
சிறு கண் யானை வெண் கோடு பயந்த |
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, |
|
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல் |
|
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி, |
|
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு |
|
15 |
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன் |
விசைத்து எறி கூடமொடு பொரூஉம் |
|
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
| |
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
314 |
மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன், |
|
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந் தகை, |
|
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை, |
|
புன் காழ் நெல்லி வன் புலச் சீறூர்க் |
|
5 |
குடியும் மன்னும் தானே; கொடி எடுத்து |
நிறை அழிந்து எழுதரு தானைக்குச் |
|
சிறையும் தானே தன் இறை விழுமுறினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஐயூர் முடவனார் பாடியது.
|