முகப்பு | தொடக்கம் |
நொச்சி |
271 |
நீர் அறவு அறியா நிலமுதல் கலந்த |
|
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை, |
|
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல், |
|
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே, |
|
5 |
வெருவரு குருதியொடு மயங்கி, உருவு கரந்து, |
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்து, |
|
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் |
|
மறம் புகல் மைந்தன் மலைந்தமாறே! |
|
திணை நொச்சி; துறை செருவிடை வீழ்தல்.
| |
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.
|
272 |
மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி! |
|
போது விரி பல் மரனுள்ளும் சிறந்த |
|
காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே! |
|
கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த |
|
5 |
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி; |
காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின், |
|
ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை |
|
பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மோசி சாத்தனார் பாடியது.
|