| முகப்பு | தொடக்கம் | 
பலா (பலவு)  | 
 109  | 
அளிதோதானே, பாரியது பறம்பே!  | 
|
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,  | 
|
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே:  | 
|
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே;  | 
|
5  | 
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே;  | 
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;  | 
|
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து,  | 
|
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே.  | 
|
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து,  | 
|
10  | 
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,  | 
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,  | 
|
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,  | 
|
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;  | 
|
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே:  | 
|
15  | 
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,  | 
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர,  | 
|
ஆடினிர் பாடினிர் செலினே,  | 
|
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே.  | 
|
திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
  | |
அவனை அவர் பாடியது.
  | 
 128  | 
மன்றப் பலவின் மாச் சினை மந்தி  | 
|
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்  | 
|
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின்,  | 
|
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,  | 
|
5  | 
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்  | 
ஆடுமகள் குறுகின் அல்லது,  | 
|
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.  | 
|
திணை அது; துறை வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
  | |
அவனை அவர் பாடியது.
  | 
 129  | 
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள்  | 
|
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,  | 
|
வேங்கை முன்றில் குரவை அயரும்,  | 
|
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன்  | 
|
5  | 
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல்  | 
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று,  | 
|
வானம் மீன் பல பூப்பின், ஆனாது  | 
|
ஒரு வழிக் கரு வழி இன்றிப்  | 
|
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே.  | 
|
திணை அது; துறை இயன்மொழி.
  | |
அவனை அவர் பாடியது.
  | 
 140  | 
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்  | 
|
மடவன், மன்ற; செந் நாப் புலவீர்!  | 
|
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த  | 
|
அடகின் கண்ணுறைஆக யாம் சில  | 
|
5  | 
அரிசி வேண்டினேமாக, தான் பிற  | 
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி,  | 
|
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்  | 
|
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர்  | 
|
தேற்றா ஈகையும் உளதுகொல்?  | 
|
10  | 
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே?  | 
திணை அது; துறை பரிசில் விடை.
  | |
அவனை ஒளவையார் பாடியது.
  | 
 150  | 
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன  | 
|
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி,  | 
|
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என்  | 
|
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி,  | 
|
5  | 
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால்,  | 
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி,  | 
|
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன்,  | 
|
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ,  | 
|
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை,  | 
|
10  | 
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே  | 
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத்  | 
|
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின்  | 
|
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின்,  | 
|
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,  | 
|
15  | 
நல் மரன் நளிய நறுந் தண் சாரல்,  | 
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி,  | 
|
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே,  | 
|
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம்  | 
|
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என,  | 
|
20  | 
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்  | 
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்;  | 
|
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்;  | 
|
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்;  | 
|
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே  | 
|
25  | 
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி  | 
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின்,  | 
|
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர்,  | 
|
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே.  | 
|
திணை அது; துறை இயன்மொழி.
  | |
அவனை அவர் பாடியது.
  | 
 158  | 
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,  | 
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை,  | 
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்  | 
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்  | 
|
5  | 
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்;  | 
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த,  | 
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்;  | 
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல்,  | 
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்;  | 
|
10  | 
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை,  | 
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை,  | 
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி  | 
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று  | 
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர,  | 
|
15  | 
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை,  | 
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு  | 
|
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப்  | 
|
பாடி வருநரும் பிறரும் கூடி  | 
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண்  | 
|
20  | 
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக்  | 
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி,  | 
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,  | 
|
முள் புற முது கனி பெற்ற கடுவன்  | 
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,  | 
|
25  | 
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!  | 
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண!  | 
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு,  | 
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே!  | 
|
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
  | |
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
  | 
 200  | 
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்  | 
|
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்  | 
|
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி,  | 
|
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து,  | 
|
5  | 
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப!  | 
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல்,  | 
|
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை,  | 
|
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே!  | 
|
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை  | 
|
10  | 
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,  | 
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த  | 
|
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்;  | 
|
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே,  | 
|
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்;  | 
|
15  | 
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர்  | 
அடங்கா மன்னரை அடக்கும்  | 
|
மடங்கா விளையுள் நாடு கிழவோயே!  | 
|
திணை அது; துறை பரிசில் துறை.
  | |
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
  | 
 320  | 
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,  | 
|
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,  | 
|
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,  | 
|
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்  | 
|
5  | 
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,  | 
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்  | 
|
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே  | 
|
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,  | 
|
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து,  | 
|
10  | 
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி  | 
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென,  | 
|
ஆர நெருப்பின், ஆரல் நாற,  | 
|
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்  | 
|
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,  | 
|
15  | 
தங்கினை சென்மோ, பாண! தங்காது,  | 
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும்  | 
|
அருகாது ஈயும் வண்மை  | 
|
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
வீரை வெளியனார் பாடியது.
  | 
 374  | 
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்  | 
|
புல்வாய் இரலை நெற்றி அன்ன,  | 
|
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத்  | 
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,  | 
|
5  | 
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என்  | 
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,  | 
|
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர,  | 
|
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட,  | 
|
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர்  | 
|
10  | 
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா  | 
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை,  | 
|
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம்,  | 
|
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும்,  | 
|
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ,  | 
|
15  | 
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன்,  | 
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல,  | 
|
வண்மையும் உடையையோ? ஞாயிறு!  | 
|
கொன் விளங்குதியால் விசும்பினானே!  | 
|
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
  | |
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
  | 
 380  | 
தென் பவ்வத்து முத்துப் பூண்டு,  | 
|
வட குன்றத்துச் சாந்தம் உரீஇ,  | 
|
........................................ங் கடல் தானை,  | 
|
இன் இசைய விறல் வென்றி,  | 
|
5  | 
தென்னவர் வய மறவன்;  | 
மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து,  | 
|
நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய,  | 
|
வேறுபெ.....................................................................த்துந்து,  | 
|
தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்;  | 
|
10  | 
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்;  | 
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்;  | 
|
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல,  | 
|
.....................த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்;  | 
|
அன்னன் ஆகன்மாறே, இந் நிலம்  | 
|
15  | 
இலம்படு காலை ஆயினும்,  | 
புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே.  | 
|
திணை அது; துறை இயன்மொழி.
  | |
நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.
  |