| முகப்பு | தொடக்கம் | 
பனை (பெண்ணை, போந்தை)  | 
 24  | 
நெல் அரியும் இருந் தொழுவர்  | 
|
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,  | 
|
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து;  | 
|
திண் திமில் வன் பரதவர்  | 
|
5  | 
வெப்பு உடைய மட்டு உண்டு,  | 
தண் குரவைச் சீர் தூங்குந்து;  | 
|
தூவல் கலித்த தேம் பாய் புன்னை  | 
|
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்  | 
|
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து;  | 
|
10  | 
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல்  | 
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர்  | 
|
இரும் பனையின் குரும்பை நீரும்,  | 
|
பூங் கரும்பின் தீம் சாறும்,  | 
|
ஓங்கு மணல் குவவுத் தாழைத்  | 
|
15  | 
தீம் நீரொடு உடன் விராஅய்,  | 
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;  | 
|
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய  | 
|
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி  | 
|
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக்  | 
|
20  | 
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்,  | 
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர்,  | 
|
குப்பை நெல்லின், முத்தூறு தந்த  | 
|
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய!  | 
|
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது  | 
|
25  | 
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே  | 
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு  | 
|
நின்று மூத்த யாக்கை அன்ன, நின்  | 
|
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த  | 
|
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த,  | 
|
30  | 
இரவல் மாக்கள் ஈகை நுவல,  | 
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய  | 
|
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து,  | 
|
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது  | 
|
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை,  | 
|
35  | 
மலர் தலை உலகத்துத் தோன்றி,  | 
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே.  | 
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
  | |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
  | 
 35  | 
நளி இரு முந்நீர் ஏணி ஆக,  | 
|
வளி இடை வழங்கா வானம் சூடிய  | 
|
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,  | 
|
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,  | 
|
5  | 
அரசு எனப்படுவது நினதே, பெரும!  | 
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,  | 
|
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும்,  | 
|
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட,  | 
|
தோடு கொள் வேலின் தோற்றம் போல,  | 
|
10  | 
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும்  | 
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க  | 
|
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே!  | 
|
நினவ கூறுவல்; எனவ கேண்மதி!  | 
|
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து  | 
|
15  | 
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு  | 
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே;  | 
|
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ  | 
|
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு,  | 
|
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை  | 
|
20  | 
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய  | 
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ!  | 
|
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப,  | 
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,  | 
|
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து,  | 
|
25  | 
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை  | 
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே;  | 
|
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,  | 
|
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,  | 
|
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்;  | 
|
30  | 
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும்  | 
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது,  | 
|
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி,  | 
|
குடி புறந்தருகுவை ஆயின், நின்  | 
|
அடி புறந்தருகுவர், அடங்காதோரே.  | 
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
  | |
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.
  | 
 45  | 
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்;  | 
|
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்;  | 
|
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு  | 
|
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே;  | 
|
5  | 
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;  | 
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,  | 
|
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர்  | 
|
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு  | 
|
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே.  | 
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
  | |
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
  | 
 56  | 
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,  | 
|
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;  | 
|
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,  | 
|
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;  | 
|
5  | 
மண்ணுறு திரு மணி புரையும் மேனி,  | 
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,  | 
|
மணி மயில் உயரிய மாறா வென்றி,  | 
|
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என  | 
|
ஞாலம் காக்கும் கால முன்பின்,  | 
|
10  | 
தோலா நல் இசை, நால்வருள்ளும்,  | 
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;  | 
|
வலி ஒத்தீயே, வாலியோனை;  | 
|
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;  | 
|
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;  | 
|
15  | 
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்  | 
அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,  | 
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,  | 
|
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்  | 
|
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்  | 
|
20  | 
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,  | 
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!  | 
|
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்  | 
|
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்  | 
|
தண் கதிர் மதியம் போலவும்,  | 
|
25  | 
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!  | 
திணை அது; துறை பூவை நிலை.
  | |
அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
  | 
 58  | 
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே,  | 
|
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக்  | 
|
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு,  | 
|
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது,  | 
|
5  | 
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ,  | 
இளையது ஆயினும் கிளை அரா எறியும்  | 
|
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்  | 
|
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,  | 
|
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,  | 
|
10  | 
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,  | 
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,  | 
|
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்  | 
|
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;  | 
|
பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,  | 
|
15  | 
நீல் நிற உருவின் நேமியோனும், என்று  | 
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,  | 
|
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,  | 
|
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?  | 
|
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே;  | 
|
20  | 
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்  | 
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப்  | 
|
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம்  | 
|
கையகப்படுவது பொய் ஆகாதே;  | 
|
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,  | 
|
25  | 
தொல்லோர் சென்ற நெறிய போலவும்,  | 
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்  | 
|
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது,  | 
|
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று  | 
|
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக்  | 
|
30  | 
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி  | 
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த  | 
|
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.  | 
|
திணை பாடாண் திணை; துறை உடனிலை.
  | |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
  | 
 61  | 
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர்  | 
|
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,  | 
|
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட  | 
|
பழன வாளைப் பரூஉக் கண் துணியல்  | 
|
| 
5 | 
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,  | 
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும்  | 
|
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர்  | 
|
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர்  | 
|
10  | 
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து  | 
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும்,  | 
|
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன்,  | 
|
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி,  | 
|
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்,  | 
|
15  | 
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன்  | 
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர்  | 
|
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,  | 
|
திருந்து அடி பொருந்த வல்லோர்  | 
|
வருந்தக் காண்டல், அதனினும் இலமே.  | 
திணை வாகை; துறை அரச வாகை.
  | |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
  | 
 85  | 
என்னைக்கு ஊர் இஃது அன்மையானும்,  | 
|
என்னைக்கு நாடு இஃது அன்மையானும்,  | 
|
'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே;  | 
|
'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே;  | 
|
5  | 
நல்ல, பல்லோர் இரு நன் மொழியே;  | 
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல்,  | 
|
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று,  | 
|
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
அவனை அவர் பாடியது.
  | 
 99  | 
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,  | 
|
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்,  | 
|
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய  | 
|
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல,  | 
|
5  | 
ஈகை அம் கழல் கால், இரும் பனம் புடையல்,  | 
பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல்,  | 
|
எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம்  | 
|
வழு இன்று எய்தியும் அமையாய், செரு வேட்டு,  | 
|
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச்  | 
|
10  | 
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய  | 
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும்  | 
|
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ  | 
|
முரண் மிகு கோவலூர் நூறி, நின்  | 
|
அரண் அடு திகிரி ஏந்திய தோளே!  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
அவன் கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.
  | 
 229  | 
ஆடு இயல் அழல் குட்டத்து  | 
|
ஆர் இருள் அரை இரவில்,  | 
|
முடப் பனையத்து வேர் முதலாக்  | 
|
கடைக் குளத்துக் கயம் காய,  | 
|
5  | 
பங்குனி உயர் அழுவத்து,  | 
தலை நாள்மீன் நிலை திரிய,  | 
|
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர,  | 
|
தொல் நாள்மீன் துறை படிய,  | 
|
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது,  | 
|
10  | 
அளக்கர்த் திணை விளக்காகக்  | 
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி,  | 
|
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே;  | 
|
அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர்,  | 
|
'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன்  | 
|
15  | 
நோய் இலனாயின் நன்றுமன் தில்' என  | 
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப,  | 
|
அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே;  | 
|
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,  | 
|
திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும்,  | 
|
20  | 
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்,  | 
கால் இயல் கலி மாக் கதி இல வைகவும்,  | 
|
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,  | 
|
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி,  | 
|
தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோ  | 
|
25  | 
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு  | 
அளந்து கொடை அறியா ஈகை,  | 
|
மணி வரை அன்ன மாஅயோனே?  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.
  | 
 249  | 
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப,  | 
|
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,  | 
|
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர்  | 
|
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர,  | 
|
5  | 
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு,  | 
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்,  | 
|
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்  | 
|
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி,  | 
|
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே,  | 
|
10  | 
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,  | 
உயர் நிலை உலகம் அவன் புக,.... வரி  | 
|
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி,  | 
|
அழுதல் ஆனாக் கண்ணள்,  | 
|
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
  | 
 265  | 
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,  | 
|
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்  | 
|
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து,  | 
|
பல் ஆன் கோவலர் படலை சூட்ட,  | 
|
5  | 
கல் ஆயினையே கடு மான் தோன்றல்!  | 
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப்  | 
|
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க்  | 
|
கடும் பகட்டு யானை வேந்தர்  | 
|
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.
  | 
 297  | 
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை  | 
|
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின்  | 
|
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை,  | 
|
கன்றுடை மரை ஆத் துஞ்சும் சீறூர்க்  | 
|
5  | 
கோள் இவண் வேண்டேம், புரவே; நார் அரி  | 
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி,  | 
|
துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும்  | 
|
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந் நுதி  | 
|
நெடு வேல் பாய்ந்த மார்பின்,  | 
|
10  | 
மடல் வன் போந்தையின், நிற்குமோர்க்கே.  | 
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
  | |
...........................................................................
  | 
 340  | 
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக்  | 
|
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்,  | 
|
மா மகள்  | 
|
....................... ல் என வினவுதி, கேள், நீ:  | 
|
5  | 
எடுப்பவெ...,..................................................  | 
..........................மைந்தர் தந்தை  | 
|
இரும் பனை அன்ன பெருங் கை யானை  | 
|
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்  | 
|
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
அ............................... பாடியது.
  | 
 375  | 
அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி,  | 
|
நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் காற்  | 
|
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக,  | 
|
முழாஅரைப் போந்தை அர வாய் மா மடல்  | 
|
5  | 
நாரும் போழும் கிணையொடு சுருக்கி,  | 
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ,  | 
|
'ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்  | 
|
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?' எனப்  | 
|
பிரசம் தூங்கும் அறாஅ யாணர்,  | 
|
10  | 
வரை அணி படப்பை, நல் நாட்டுப் பொருந!  | 
பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய்!  | 
|
யாவரும் இன்மையின் கிணைப்ப, தாவது,  | 
|
பெரு மழை கடல் பரந்தாஅங்கு, யானும்  | 
|
ஒரு நின் உள்ளி வந்தனென்; அதனால்  | 
|
15  | 
புலவர் புக்கில் ஆகி, நிலவரை  | 
நிலீஇயர் அத்தை, நீயே! ஒன்றே  | 
|
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து,  | 
|
நிலவன்மாரோ, புரவலர்! துன்னி,  | 
|
பெரிய ஓதினும் சிறிய உணராப்  | 
|
20  | 
பீடு இன்று பெருகிய திருவின்,  | 
பாடு இல், மன்னரைப் பாடன்மார், எமரே!  | 
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
  | |
அவனை அவர் பாடியது.
  |