முகப்பு | தொடக்கம் |
பனை (பெண்ணை, போந்தை) |
24 |
நெல் அரியும் இருந் தொழுவர் |
|
செஞ் ஞாயிற்று வெயில் முனையின், |
|
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; |
|
திண் திமில் வன் பரதவர் |
|
5 |
வெப்பு உடைய மட்டு உண்டு, |
தண் குரவைச் சீர் தூங்குந்து; |
|
தூவல் கலித்த தேம் பாய் புன்னை |
|
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் |
|
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; |
|
10 |
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் |
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் |
|
இரும் பனையின் குரும்பை நீரும், |
|
பூங் கரும்பின் தீம் சாறும், |
|
ஓங்கு மணல் குவவுத் தாழைத் |
|
15 |
தீம் நீரொடு உடன் விராஅய், |
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; |
|
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய |
|
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி |
|
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் |
|
20 |
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், |
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், |
|
குப்பை நெல்லின், முத்தூறு தந்த |
|
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! |
|
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது |
|
25 |
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே |
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு |
|
நின்று மூத்த யாக்கை அன்ன, நின் |
|
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த |
|
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, |
|
30 |
இரவல் மாக்கள் ஈகை நுவல, |
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய |
|
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, |
|
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது |
|
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை, |
|
35 |
மலர் தலை உலகத்துத் தோன்றி, |
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
35 |
நளி இரு முந்நீர் ஏணி ஆக, |
|
வளி இடை வழங்கா வானம் சூடிய |
|
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், |
|
முரசு முழங்கு தானை மூவருள்ளும், |
|
5 |
அரசு எனப்படுவது நினதே, பெரும! |
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், |
|
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும், |
|
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட, |
|
தோடு கொள் வேலின் தோற்றம் போல, |
|
10 |
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் |
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க |
|
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! |
|
நினவ கூறுவல்; எனவ கேண்மதி! |
|
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து |
|
15 |
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு |
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே; |
|
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ |
|
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு, |
|
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை |
|
20 |
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய |
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ! |
|
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப, |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து, |
|
25 |
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை |
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; |
|
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், |
|
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், |
|
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்; |
|
30 |
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும் |
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, |
|
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, |
|
குடி புறந்தருகுவை ஆயின், நின் |
|
அடி புறந்தருகுவர், அடங்காதோரே. |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.
|
45 |
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; |
|
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; |
|
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு |
|
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; |
|
5 |
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; |
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், |
|
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் |
|
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு |
|
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
|
56 |
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை, |
|
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்; |
|
கடல் வளர் புரி வளை புரையும் மேனி, |
|
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்; |
|
5 |
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, |
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும், |
|
மணி மயில் உயரிய மாறா வென்றி, |
|
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என |
|
ஞாலம் காக்கும் கால முன்பின், |
|
10 |
தோலா நல் இசை, நால்வருள்ளும், |
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்; |
|
வலி ஒத்தீயே, வாலியோனை; |
|
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை; |
|
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்; |
|
15 |
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும் |
அரியவும் உளவோ, நினக்கே? அதனால், |
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா, |
|
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் |
|
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும் |
|
20 |
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, |
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற! |
|
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் |
|
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத் |
|
தண் கதிர் மதியம் போலவும், |
|
25 |
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! |
திணை அது; துறை பூவை நிலை.
| |
அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
|
58 |
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே, |
|
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக் |
|
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு, |
|
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது, |
|
5 |
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ, |
இளையது ஆயினும் கிளை அரா எறியும் |
|
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச் |
|
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே, |
|
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே, |
|
10 |
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என, |
வரைய சாந்தமும், திரைய முத்தமும், |
|
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் |
|
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே; |
|
பால் நிற உருவின் பனைக் கொடியோனும், |
|
15 |
நீல் நிற உருவின் நேமியோனும், என்று |
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு, |
|
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி, |
|
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ? |
|
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே; |
|
20 |
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் |
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப் |
|
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம் |
|
கையகப்படுவது பொய் ஆகாதே; |
|
அதனால், நல்ல போலவும், நயவ போலவும், |
|
25 |
தொல்லோர் சென்ற நெறிய போலவும், |
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் |
|
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது, |
|
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று |
|
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக் |
|
30 |
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி |
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த |
|
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே. |
|
திணை பாடாண் திணை; துறை உடனிலை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
61 |
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் |
|
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், |
|
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட |
|
பழன வாளைப் பரூஉக் கண் துணியல் |
|
5 |
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, |
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் |
|
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் |
|
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர் |
|
10 |
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து |
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும், |
|
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன், |
|
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி, |
|
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், |
|
15 |
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன் |
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் |
|
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, |
|
திருந்து அடி பொருந்த வல்லோர் |
|
வருந்தக் காண்டல், அதனினும் இலமே. |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
85 |
என்னைக்கு ஊர் இஃது அன்மையானும், |
|
என்னைக்கு நாடு இஃது அன்மையானும், |
|
'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே; |
|
'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே; |
|
5 |
நல்ல, பல்லோர் இரு நன் மொழியே; |
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல், |
|
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று, |
|
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
99 |
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், |
|
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், |
|
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய |
|
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல, |
|
5 |
ஈகை அம் கழல் கால், இரும் பனம் புடையல், |
பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல், |
|
எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம் |
|
வழு இன்று எய்தியும் அமையாய், செரு வேட்டு, |
|
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச் |
|
10 |
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய |
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும் |
|
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ |
|
முரண் மிகு கோவலூர் நூறி, நின் |
|
அரண் அடு திகிரி ஏந்திய தோளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.
|
229 |
ஆடு இயல் அழல் குட்டத்து |
|
ஆர் இருள் அரை இரவில், |
|
முடப் பனையத்து வேர் முதலாக் |
|
கடைக் குளத்துக் கயம் காய, |
|
5 |
பங்குனி உயர் அழுவத்து, |
தலை நாள்மீன் நிலை திரிய, |
|
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர, |
|
தொல் நாள்மீன் துறை படிய, |
|
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது, |
|
10 |
அளக்கர்த் திணை விளக்காகக் |
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி, |
|
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே; |
|
அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர், |
|
'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் |
|
15 |
நோய் இலனாயின் நன்றுமன் தில்' என |
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப, |
|
அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே; |
|
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும், |
|
திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும், |
|
20 |
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும், |
கால் இயல் கலி மாக் கதி இல வைகவும், |
|
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின், |
|
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி, |
|
தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோ |
|
25 |
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு |
அளந்து கொடை அறியா ஈகை, |
|
மணி வரை அன்ன மாஅயோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.
|
249 |
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப, |
|
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, |
|
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் |
|
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர, |
|
5 |
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு, |
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும், |
|
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் |
|
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி, |
|
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, |
|
10 |
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன் புக,.... வரி |
|
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி, |
|
அழுதல் ஆனாக் கண்ணள், |
|
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
|
265 |
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, |
|
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் |
|
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, |
|
பல் ஆன் கோவலர் படலை சூட்ட, |
|
5 |
கல் ஆயினையே கடு மான் தோன்றல்! |
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் |
|
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் |
|
கடும் பகட்டு யானை வேந்தர் |
|
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.
|
297 |
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை |
|
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் |
|
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை, |
|
கன்றுடை மரை ஆத் துஞ்சும் சீறூர்க் |
|
5 |
கோள் இவண் வேண்டேம், புரவே; நார் அரி |
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி, |
|
துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும் |
|
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந் நுதி |
|
நெடு வேல் பாய்ந்த மார்பின், |
|
10 |
மடல் வன் போந்தையின், நிற்குமோர்க்கே. |
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
| |
...........................................................................
|
340 |
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக் |
|
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள், |
|
மா மகள் |
|
....................... ல் என வினவுதி, கேள், நீ: |
|
5 |
எடுப்பவெ...,.................................................. |
..........................மைந்தர் தந்தை |
|
இரும் பனை அன்ன பெருங் கை யானை |
|
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் |
|
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அ............................... பாடியது.
|
375 |
அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி, |
|
நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் காற் |
|
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக, |
|
முழாஅரைப் போந்தை அர வாய் மா மடல் |
|
5 |
நாரும் போழும் கிணையொடு சுருக்கி, |
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ, |
|
'ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப் |
|
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?' எனப் |
|
பிரசம் தூங்கும் அறாஅ யாணர், |
|
10 |
வரை அணி படப்பை, நல் நாட்டுப் பொருந! |
பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய்! |
|
யாவரும் இன்மையின் கிணைப்ப, தாவது, |
|
பெரு மழை கடல் பரந்தாஅங்கு, யானும் |
|
ஒரு நின் உள்ளி வந்தனென்; அதனால் |
|
15 |
புலவர் புக்கில் ஆகி, நிலவரை |
நிலீஇயர் அத்தை, நீயே! ஒன்றே |
|
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து, |
|
நிலவன்மாரோ, புரவலர்! துன்னி, |
|
பெரிய ஓதினும் சிறிய உணராப் |
|
20 |
பீடு இன்று பெருகிய திருவின், |
பாடு இல், மன்னரைப் பாடன்மார், எமரே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
அவனை அவர் பாடியது.
|