முகப்பு | தொடக்கம் |
மருதமரம் (மருது) |
52 |
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ, |
|
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல், |
|
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து, |
|
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு, |
|
5 |
வட புல மன்னர் வாட, அடல் குறித்து, |
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி! |
|
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து |
|
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும் |
|
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி |
|
10 |
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் |
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே |
|
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப் |
|
பலி கண் மாறிய பாழ்படு பொதியில், |
|
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த |
|
15 |
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக் |
கான வாரணம் ஈனும் |
|
காடு ஆகி விளியும் நாடு உடையோரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
|
243 |
இனி நினைந்து இரக்கம் ஆகின்று: திணி மணல் |
|
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ, |
|
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து, |
|
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி, |
|
5 |
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு |
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து, |
|
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர் மிக, |
|
கரையவர் மருள, திரைஅகம் பிதிர, |
|
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து, |
|
10 |
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை |
அளிதோதானே! யாண்டு உண்டு கொல்லோ |
|
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று, |
|
இரும் இடை மிடைந்த சில சொல் |
|
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே? |
|
திணையும் துறைஉம் அவை.
| |
தொடித் தலை விழுத்தண்டினார் பாடியது.
|
351 |
படு மணி மருங்கின பணைத் தாள் யானையும், |
|
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும், |
|
படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லென, |
|
கடல் கண்டன்ன கண் அகன் தானை |
|
5 |
வென்று எறி முரசின் வேந்தர், என்றும், |
வண் கை எயினன் வாகை அன்ன |
|
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்; |
|
என் ஆவதுகொல் தானே தெண் நீர்ப் |
|
பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை |
|
10 |
தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின், |
காமரு காஞ்சித் துஞ்சும் |
|
ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.
|