முகப்பு | தொடக்கம் |
மூங்கில் (கழை) |
121 |
ஒரு திசை ஒருவனை உள்ளி, நால் திசைப் |
|
பலரும் வருவர், பரிசில் மாக்கள்; |
|
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும் |
|
ஈதல் எளிதே; மா வண் தோன்றல்! |
|
5 |
அது நற்கு அறிந்தனைஆயின், |
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே! |
|
திணை அது; துறை பொருண் மொழிக் காஞ்சி.
| |
மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது.
|
158 |
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், |
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, |
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் |
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் |
|
5 |
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; |
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, |
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; |
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், |
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; |
|
10 |
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, |
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, |
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி |
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று |
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர, |
|
15 |
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, |
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு |
|
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் |
|
பாடி வருநரும் பிறரும் கூடி |
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் |
|
20 |
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் |
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, |
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, |
|
முள் புற முது கனி பெற்ற கடுவன் |
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், |
|
25 |
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! |
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! |
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு, |
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
| |
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
|
168 |
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் |
|
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் |
|
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, |
|
கடுங் கண் கேழல் உழுத பூழி, |
|
5 |
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் |
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை |
|
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் |
|
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், |
|
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி |
|
10 |
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, |
சாந்த விறகின் உவித்த புன்கம் |
|
கூதளம் கவினிய குளவி முன்றில், |
|
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் |
|
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், |
|
15 |
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, |
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! |
|
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! |
|
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, |
|
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் |
|
20 |
பாடுப என்ப பரிசிலர், நாளும் |
ஈயா மன்னர் நாண, |
|
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
| |
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.
|
200 |
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் |
|
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் |
|
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி, |
|
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து, |
|
5 |
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! |
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல், |
|
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை, |
|
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே! |
|
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை |
|
10 |
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும், |
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த |
|
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்; |
|
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே, |
|
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்; |
|
15 |
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர் |
அடங்கா மன்னரை அடக்கும் |
|
மடங்கா விளையுள் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
251 |
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில், |
|
பாவை அன்ன குறுந் தொடி மகளிர் |
|
இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும் |
|
கழைக் கண் நெடு வரை அருவி ஆடி, |
|
5 |
கான யானை தந்த விறகின் |
கடுந் தெறல் செந் தீ வேட்டு, |
|
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே! |
|
திணை வாகை; துறை தாபத வாகை.
| |
....................மாற்பித்தியார் பாடியது.
|
253 |
என் திறத்து அவலம் கொள்ளல், இனியே; |
|
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப, |
|
'நகாஅல்' என வந்த மாறே, எழா நெல் |
|
பைங் கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின், |
|
5 |
வளை இல், வறுங் கை ஓச்சி, |
கிளையுள் ஒய்வலோ? கூறு நின் உரையே! |
|
திணை பொதுவியல்; துறை முதுபாலை.
| |
....................குளம்பாதாயனார் பாடியது.
|
277 |
'மீன் உண் கொக்கின் தூவி அன்ன |
|
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் |
|
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை |
|
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர் |
|
5 |
நோன் கழை துயல்வரும் வெதிரத்து |
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே. |
|
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
| |
பூங்கண் உத்திரையார் பாடியது.
|
302 |
வெடி வேய் கொள்வது போல ஓடி, |
|
தாவுபு உகளும், மாவே; பூவே, |
|
விளங்குஇழை மகளிர் கூந்தல் கொண்ட; |
|
நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய |
|
5 |
ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ்க் |
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய, |
|
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்; |
|
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, |
|
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், |
|
10 |
விண் இவர் விசும்பின் மீனும், |
தண் பெயல் உறையும், உறை ஆற்றாவே. |
|
திணை அது; துறை குதிரை மறம்.
| |
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.
|
370 |
...............................................................................................................ளி, |
|
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப் |
|
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு |
|
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ, |
|
5 |
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து, |
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல், |
|
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் |
|
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண், |
|
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை, |
|
10 |
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட, |
பழுமரம் உள்ளிய பறவை போல, |
|
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென, |
|
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப, |
|
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து, |
|
15 |
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி, |
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி, |
|
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி, |
|
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி, |
|
20 |
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் |
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும! |
|
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த |
|
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார் |
|
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி, |
|
25 |
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு |
செஞ் செவி எருவை திரிதரும், |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
|
383 |
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து, |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், | |
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி, |
|
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி, |
|
5 |
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து, |
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி, |
|
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் |
|
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள, |
|
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் |
|
10 |
கழை படு சொலியின் இழை அணி வாரா, |
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண் |
|
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி, |
|
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல, |
|
எற் பெயர்ந்த நோக்கி..................................... |
|
15 |
.................................................கல் கொண்டு, |
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி, |
|
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே; |
|
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி, |
|
நரை முக ஊகமொடு, உகளும், சென................ |
|
20 |
.......................கன்று பல கெழீஇய |
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என |
|
ஒருவனை உடையேன்மன்னே, யானே; |
|
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே? |
|
திணையும் துறையும் அவை.
| |
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.
|
399 |
அடு மகள் முகந்த அளவா வெண்ணெல் |
|
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி |
|
காடி வெள் உலைக் கொளீஇ, நீழல் |
|
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி, |
|
5 |
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை, |
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல், |
|
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன |
|
மெய் களைந்து, இனனொடு விரைஇ, |
|
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல், |
|
10 |
அழிகளின் படுநர் களி அட வைகின், |
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக் |
|
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக் |
|
கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்; |
|
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்; |
|
15 |
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து, |
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் |
|
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு, |
|
ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே, |
|
அறவர் அறவன், மறவர் மறவன், |
|
20 |
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன், |
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என, |
|
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி, |
|
வள் பரிந்து கிடந்த.......................மணக்க |
|
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை, |
|
25 |
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து, |
கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன், |
|
'கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் |
|
பகடே அத்தை யான் வேண்டி வந்தது' என, |
|
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே |
|
30 |
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின் |
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை |
|
ஊர்தியொடு நல்கியோனே; சீர் கொள |
|
இழுமென இழிதரும் அருவி, |
|
வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே. |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.
|