| முகப்பு | தொடக்கம் | 
வஞ்சி  | 
 384  | 
மென்பாலான் உடன் அணைஇ,  | 
|
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை  | 
|
அறைக் கரும்பின் பூ அருந்தும்;  | 
|
வன்பாலான் கருங் கால் வரகின்  | 
|
5  | 
......................................................................................  | 
அம் கண் குறு முயல வெருவ, அயல  | 
|
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து;  | 
|
விழவு இன்றாயினும், உழவர் மண்டை  | 
|
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து;  | 
|
10  | 
................................................கிணையேம், பெரும!  | 
நெல் என்னா, பொன் என்னா,  | 
|
கனற்றக் கொண்ட நறவு என்னா,  | 
|
.....................மனை என்னா, அவை பலவும்  | 
|
யான் தண்டவும், தான் தண்டான்,  | 
|
15  | 
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை,  | 
மண் நாணப் புகழ் வேட்டு,  | 
|
நீர் நாண நெய் வழங்கி,  | 
|
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை.....  | 
|
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு  | 
|
20  | 
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட  | 
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும்,  | 
|
தின்ற நண் பல் ஊன் தோண்டவும்,  | 
|
வந்த வைகல் அல்லது,  | 
|
சென்ற எல்லைச் செலவு அறியேனே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
  | 
 387  | 
வள் உகிர வயல் ஆமை  | 
|
வெள் அகடு கண்டன்ன,  | 
|
வீங்கு விசிப் புதுப் போர்வைத்  | 
|
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும்  | 
|
5  | 
மாறு கொண்டோர் மதில் இடறி,  | 
நீறு ஆடிய நறுங் கவுள,  | 
|
பூம் பொறிப் பணை எருத்தின,  | 
|
வேறு வேறு பரந்து இயங்கி,  | 
|
வேந்துடை மிளை அயல் பரக்கும்  | 
|
10  | 
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை,  | 
திருந்து தொழில் பல பகடு  | 
|
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின்  | 
|
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி,  | 
|
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று,  | 
|
15  | 
யான் இசைப்பின், நனி நன்று எனா,  | 
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?.........  | 
|
மருவ இன் நகர் அகன்.................................  | 
|
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி,  | 
|
வென்று இரங்கும் விறல் முரசினோன்,  | 
|
20  | 
என் சிறுமையின், இழித்து நோக்கான்,  | 
தன் பெருமையின் தகவு நோக்கி,  | 
|
குன்று உறழ்ந்த களிறு என்கோ?  | 
|
கொய் உளைய மா என்கோ?  | 
|
மன்று நிறையும் நிரை என்கோ?  | 
|
25  | 
மனைக் களமரொடு களம் என்கோ?  | 
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின்  | 
|
நல்கியோனே, நசைசால் தோன்றல்,  | 
|
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்!  | 
|
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள்  | 
|
30  | 
செல்வக் கடுங்கோ வாழியாதன்  | 
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண்  | 
|
விடுவர் மாதோ நெடிதே நி  | 
|
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும்  | 
|
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்  | 
|
35  | 
பல் ஊர் சுற்றிய கழனி  | 
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.
  |