முகப்பு | தொடக்கம் |
கள்ளி |
225 |
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய, |
|
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த, |
|
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர, |
|
நில மலர் வையத்து வல முறை வளைஇ, |
|
5 |
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு, |
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி: |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும் |
|
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என, |
|
10 |
இன் இசைப் பறையொடு வென்றி நுவல, |
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப |
|
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி, |
|
ஞாலங் காவலர் கடைத்தலை, |
|
காலைத் தோன்றினும் நோகோ யானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
237 |
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, |
|
பாடி நின்ற பசி நாட்கண்ணே, |
|
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, |
|
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் |
|
5 |
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என |
நச்சி இருந்த நசை பழுதாக, |
|
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு, |
|
'அளியர்தாமே ஆர்க' என்னா |
|
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, |
|
10 |
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் |
வாழைப் பூவின் வளை முறி சிதற, |
|
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க, |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: |
|
15 |
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் |
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், |
|
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் |
|
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, |
|
நனியுடைப் பரிசில் தருகம், |
|
20 |
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|
240 |
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், |
|
வாடா யாணர் நாடும் ஊரும், |
|
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் |
|
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு, |
|
5 |
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, |
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ, |
|
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை, |
|
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும் |
|
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி, |
|
10 |
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது; |
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, |
|
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் |
|
வாடிய பசியராகி, பிறர் |
|
நாடு படு செலவினர் ஆயினர், இனியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
|
245 |
யாங்குப் பெரிதுஆயினும், நோய் அளவு எனைத்தே, |
|
உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்? |
|
கள்ளி போகிய களரி மருங்கின் |
|
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து, |
|
5 |
ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி, |
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை; |
|
இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டு துஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு.
|
260 |
வளரத் தொடினும், வௌவுபு திரிந்து, |
|
விளரி உறுதரும் தீம் தொடை நினையா, |
|
தளரும் நெஞ்சம் தலைஇ, மனையோள் |
|
உளரும் கூந்தல் நோக்கி, களர |
|
5 |
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி, |
பசி படு மருங்குலை, கசிபு, கைதொழாஅ, |
|
'காணலென்கொல்?' என வினவினை வரூஉம் |
|
பாண! கேண்மதி, யாணரது நிலையே: |
|
புரவுத் தொடுத்து உண்குவைஆயினும், இரவு எழுந்து |
|
10 |
எவ்வம் கொள்குவைஆயினும், இரண்டும், |
கையுள் போலும்; கடிது அண்மையவே |
|
முன் ஊர்ப் பூசலின் தோன்றி, தன் ஊர் |
|
நெடு நிரை தழீஇய மீளியாளர் |
|
விடு கணை நீத்தம் துடி புணை ஆக, |
|
15 |
வென்றி தந்து, கொன்று கோள் விடுத்து, |
வையகம் புலம்ப வளைஇய பாம்பின் |
|
வை எயிற்று உய்ந்த மதியின், மறவர் |
|
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன் |
|
நிரையொடு வந்த உரையன் ஆகி, |
|
20 |
உரி களை அரவம் மான, தானே |
அரிது செல் உலகில் சென்றனன்; உடம்பே, |
|
கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்று, |
|
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல, |
|
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே; |
|
25 |
உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே, |
மடம்சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி, |
|
இடம் பிறர் கொள்ளாச் சிறு வழி, |
|
படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே. |
|
திணை அது; துறை கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.
| |
......................வடமோதங் கிழார் பாடியது.
|
322 |
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன |
|
கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்தி, |
|
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் |
|
புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின், |
|
5 |
பெருங் கண் குறு முயல் கருங் கலன் உடைய |
மன்றில் பாயும் வன் புலத்ததுவே |
|
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது. |
|
இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண், |
|
தண் பணை ஆளும் வேந்தர்க்குக் |
|
10 |
கண் படை ஈயா வேலோன் ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
ஆவூர் கிழார் பாடியது.
|
356 |
களரி பரந்து, கள்ளி போகி, |
|
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல், |
|
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு |
|
அஞ்சு வந்தன்று, இம் மஞ்சு படு முதுகாடு; |
|
5 |
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் |
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப, |
|
எல்லார் புறனும் தான் கண்டு, உலகத்து |
|
மன்பதைக்கு எல்லாம் தானாய், |
|
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தாயங் கண்ணனார் பாடியது.
|
360 |
பெரிது ஆராச் சிறு சினத்தர், |
|
சில சொல்லான் பல கேள்வியர், |
|
நுண் உணர்வினான் பெருங் கொடையர், |
|
கலுழ் நனையான் தண் தேறலர், |
|
5 |
கனி குய்யான் கொழுந் துவையர், |
தாழ் உவந்து தழூஉ மொழியர், |
|
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி, |
|
ஏமம் ஆக இந் நிலம் ஆண்டோர் |
|
சிலரே; பெரும! கேள், இனி: நாளும், |
|
10 |
பலரே, தகையஃது அறியாதோரே; |
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது; |
|
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால், |
|
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில் |
|
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சு வரப் |
|
15 |
பாறு இறை கொண்ட பறந்தலை, மா கத |
கள்ளி போகிய களரி மருங்கின், |
|
வெள்ளில் நிறுத்த பின்றை, கள்ளொடு |
|
புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி, |
|
புலையன் ஏவ, புல் மேல் அமர்ந்து உண்டு, |
|
20 |
அழல் வாய்ப் புக்க பின்னும், |
பலர் வாய்த்து இராஅர், பருத்து உண்டோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தந்துமாறனைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடியது.
|
363 |
இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மா நிலம் |
|
உடையிலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி, |
|
தாமே ஆண்ட ஏமம் காவலர் |
|
இடு திரை மணலினும் பலரே; சுடு பிணக் |
|
5 |
காடு பதி ஆகப் போகி, தம்தம் |
நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே; |
|
அதனால், நீயும் கேண்மதி அத்தை! வீயாது |
|
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை; |
|
மடங்கல் உண்மை மாயமோ அன்றே; |
|
10 |
கள்ளி வேய்ந்த முள்ளிஅம் புறங்காட்டு, |
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், |
|
உப்பு இலாஅ அவிப் புழுக்கல் |
|
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது, |
|
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று, |
|
15 |
நிலம் கலனாக, இலங்கு பலி மிசையும் |
இன்னா வைகல் வாராமுன்னே, |
|
செய் நீ முன்னிய வினையே, |
|
முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...................... ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.
|