முகப்பு | தொடக்கம் |
அத்தி (ஆர்) |
45 |
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; |
|
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; |
|
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு |
|
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; |
|
5 |
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; |
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், |
|
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் |
|
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு |
|
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
|
338 |
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின், |
|
நெல் மலிந்த மனை, பொன் மலிந்த மறுகின், |
|
படு வண்டு ஆர்க்கும் பல் மலர்க் காவின், |
|
நெடு வேள் ஆதன் போந்தை அன்ன, |
|
5 |
பெருஞ் சீர் அருங் கொண்டியளே; கருஞ் சினை |
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் |
|
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர், |
|
கொற்ற வேந்தர் வரினும், தன் தக |
|
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப் |
|
10 |
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று |
உணங்கு கலன் ஆழியின் தோன்றும் |
|
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
குன்றூர் கிழார் மகனார் பாடியது.
|