முகப்பு | தொடக்கம் |
ஆம்பல் |
16 |
வினை மாட்சிய விரை புரவியொடு, |
|
மழை உருவின தோல் பரப்பி, |
|
முனை முருங்கத் தலைச் சென்று, அவர் |
|
விளை வயல் கவர்பூட்டி, |
|
5 |
மனை மரம் விறகு ஆகக் |
கடி துறை நீர்க் களிறு படீஇ, |
|
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் |
|
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற, |
|
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை, |
|
10 |
துணை வேண்டாச் செரு வென்றி, |
புலவு வாள், புலர் சாந்தின், |
|
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்! |
|
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், |
|
பனிப் பகன்றை, கனிப் பாகல், |
|
15 |
கரும்பு அல்லது காடு அறியாப் |
பெருந் தண் பணை பாழ் ஆக, |
|
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை, |
|
நாம நல் அமர் செய்ய, |
|
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே. |
|
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.
|
209 |
பொய்கை நாரை போர்வில் சேக்கும் |
|
நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர் |
|
கூம்பு விடு மெண் பிணி அவிழ்ந்த ஆம்பல் |
|
அகல் அடை அரியல் மாந்தி, தெண் கடல் |
|
5 |
படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும் |
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! |
|
பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து, |
|
பெரு மலை விடரகம் சிலம்ப முன்னி, |
|
பழனுடைப் பெரு மரம் தீர்ந்தென, கையற்று, |
|
10 |
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் |
நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென் |
|
வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந! |
|
ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லேன்; |
|
நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள் |
|
15 |
குறு நணி காண்குவதாக நாளும், |
நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தே மொழி, |
|
தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும் |
|
பெரு வரை அன்ன மார்பின், |
|
செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே! |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
248 |
அளியதாமே, சிறு வெள் ஆம்பல்! |
|
இளையமாகத் தழை ஆயினவே; |
|
இனியே, பெரு வளக் கொழுநன் மாய்ந்தென, பொழுது மறுத்து, |
|
இன்னா வைகல் உண்ணும் |
|
5 |
அல்லிப் படூஉம் புல் ஆயினவே. |
திணை அது; துறை தாபத நிலை.
| |
.......................... ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.
|