முகப்பு | தொடக்கம் |
கோங்கம் |
321 |
பொறிப் புறப் பூழின் போர் வல் சேவல் |
|
மேந் தோல் களைந்த தீம் கோள் வெள் எள் |
|
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு, உடன் |
|
வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன |
|
5 |
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட, |
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும், |
|
வன் புல வைப்பினதுவே சென்று |
|
தின் பழம் பசீஇ ..........னனோ, பாண! |
|
வாள் வடு விளங்கிய சென்னிச் |
|
10 |
செரு வெங் குருசில் ஓம்பும் ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
336 |
வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே; |
|
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்; |
|
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் |
|
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த |
|
5 |
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே; |
இயவரும் அறியாப் பல் இயம் கறங்க, |
|
அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங் கடி மூதூர்; |
|
அறன் இலள் மன்ற தானே விறல் மலை |
|
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் |
|
10 |
முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் |
தகை வளர்த்து எடுத்த நகையொடு, |
|
பகை வளர்த்திருந்த இப் பண்பு இல் தாயே. |
|
திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
| |
பரணர் பாடியது.
|