கோங்கம்

321
பொறிப் புறப் பூழின் போர் வல் சேவல்
மேந் தோல் களைந்த தீம் கோள் வெள் எள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு, உடன்
வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன
5
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட,
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும்,
வன் புல வைப்பினதுவே சென்று
தின் பழம் பசீஇ ..........னனோ, பாண!
வாள் வடு விளங்கிய சென்னிச்
10
செரு வெங் குருசில் ஓம்பும் ஊரே.

திணையும் துறையும் அவை.
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

336
வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே;
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்;
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
5
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே;
இயவரும் அறியாப் பல் இயம் கறங்க,
அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங் கடி மூதூர்;
அறன் இலள் மன்ற தானே விறல் மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
10
முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகை வளர்த்து எடுத்த நகையொடு,
பகை வளர்த்திருந்த இப் பண்பு இல் தாயே.

திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
பரணர் பாடியது.