முகப்பு | தொடக்கம் |
வேங்கை |
100 |
கையது வேலே; காலன புனை கழல்; |
|
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்; |
|
வட்கர் போகிய வளர் இளம் போந்தை |
|
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு, |
|
5 |
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ, |
சுரி இரும் பித்தை பொலியச் சூடி, |
|
வரிவயம் பொருத வயக் களிறு போல, |
|
இன்னும் மாறாது சினனே; அன்னோ! |
|
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே; |
|
10 |
செறுவர் நோக்கிய கண், தன் |
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே. |
|
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
| |
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.
|
108 |
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி |
|
ஆரம் ஆதலின், அம் புகை அயலது |
|
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும் |
|
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு, |
|
5 |
பாரியும், பரிசிலர் இரப்பின், |
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
137 |
இரங்கு முரசின், இனம்சால் யானை, |
|
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை |
|
இன்னும் ஓர் யான் அவா அறியேனே; |
|
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய |
|
5 |
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது, |
கழைக் கரும்பின் ஒலிக்குந்து, |
|
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும், |
|
கண் அன்ன மலர் பூக்குந்து, |
|
கருங் கால் வேங்கை மலரின், நாளும் |
|
10 |
பொன் அன்ன வீ சுமந்து, |
மணி அன்ன நீர் கடல் படரும்; |
|
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந! |
|
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை! |
|
நீ வாழியர்! நின் தந்தை |
|
15 |
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே! |
திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
| |
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.
|
168 |
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் |
|
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் |
|
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, |
|
கடுங் கண் கேழல் உழுத பூழி, |
|
5 |
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் |
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை |
|
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் |
|
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், |
|
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி |
|
10 |
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, |
சாந்த விறகின் உவித்த புன்கம் |
|
கூதளம் கவினிய குளவி முன்றில், |
|
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் |
|
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், |
|
15 |
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, |
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! |
|
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! |
|
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, |
|
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் |
|
20 |
பாடுப என்ப பரிசிலர், நாளும் |
ஈயா மன்னர் நாண, |
|
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
| |
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.
|
265 |
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, |
|
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் |
|
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, |
|
பல் ஆன் கோவலர் படலை சூட்ட, |
|
5 |
கல் ஆயினையே கடு மான் தோன்றல்! |
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் |
|
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் |
|
கடும் பகட்டு யானை வேந்தர் |
|
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.
|
352 |
தேஎம் கொண்ட வெண் மண்டையான், |
|
வீ...................................................................கறக்குந்து; |
|
அவல் வகுத்த பசுங் குடையான், |
|
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
5 |
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
குன்று ஏறிப் புனல் பாயின், |
|
புற வாயால் புனல் வள |
|
............................................................ நொடை நறவின் |
|
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி |
|
10 |
உறந்தை அன்ன உரைசால் நன் கலம் |
கொடுப்பவும் கொளாஅனெ |
|
.......................ர் தந்த நாகு இள வேங்கையின், |
|
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் |
|
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும் |
|
15 |
சிறு கோல் உளையும் புரவி ª.................. |
...................................................................... யமரே. |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|