முகப்பு | தொடக்கம் |
வேளைப்பூ |
23 |
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ, |
|
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்; |
|
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், |
|
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் |
|
5 |
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் |
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் |
|
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்; |
|
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் |
|
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர் |
|
10 |
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப, |
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி, |
|
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று, |
|
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும் |
|
துன்னல் போகிய துணிவினோன்' என, |
|
15 |
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை |
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட |
|
கால முன்ப! நின் கண்டனென் வருவல் |
|
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை |
|
20 |
பூளை நீடிய வெருவரு பறந்தலை |
வேளை வெண் பூக் கறிக்கும் |
|
ஆள் இல் அத்தம் ஆகிய காடே. |
|
திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
215 |
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் |
|
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய |
|
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ, |
|
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை |
|
5 |
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் |
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் |
|
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே; |
|
செல்வக் காலை நிற்பினும், |
|
அல்லற் காலை நில்லலன்மன்னே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு, 'அவர் வருவார்' என்று சொல்லியது.
|