முகப்பு | தொடக்கம் |
நெல் (ஐவனம், மூங்கில் நெல், செந்நெல், வெண்ணெல்) |
22 |
தூங்கு கையான் ஓங்கு நடைய, |
|
உறழ் மணியான் உயர் மருப்பின, |
|
பிறை நுதலான் செறல் நோக்கின, |
|
பா அடியான் பணை எருத்தின, |
|
5 |
தேன் சிதைந்த வரை போல, |
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து, |
|
அயறு சோரும் இருஞ் சென்னிய, |
|
மைந்து மலிந்த மழ களிறு |
|
கந்து சேர்பு நிலைஇ வழங்க; |
|
10 |
பாஅல் நின்று கதிர் சோரும் |
வான் உறையும் மதி போலும் |
|
மாலை வெண் குடை நீழலான், |
|
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க; |
|
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த |
|
15 |
ஆய் கரும்பின் கொடிக் கூரை, |
சாறு கொண்ட களம் போல, |
|
வேறு வேறு பொலிவு தோன்ற; |
|
குற்று ஆனா உலக்கையான் |
|
கலிச் சும்மை வியல் ஆங்கண், |
|
20 |
பொலந் தோட்டுப் பைந் தும்பை |
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ, |
|
சின மாந்தர் வெறிக் குரவை |
|
ஓத நீரின் பெயர்பு பொங்க; |
|
வாய் காவாது பரந்து பட்ட |
|
25 |
வியன் பாசறைக் காப்பாள! |
வேந்து தந்த பணி திறையான் |
|
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும், |
|
ஓங்கு கொல்லியோர், அடு பொருந! |
|
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்! |
|
30 |
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே, |
நிற் பாடிய வயங்கு செந் நாப் |
|
பின் பிறர் இசை நுவலாமை, |
|
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ! |
|
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே |
|
35 |
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து, |
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை, |
|
வேறு புலத்து இறுக்கும் தானையொடு, |
|
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே! |
|
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
| |
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
|
24 |
நெல் அரியும் இருந் தொழுவர் |
|
செஞ் ஞாயிற்று வெயில் முனையின், |
|
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; |
|
திண் திமில் வன் பரதவர் |
|
5 |
வெப்பு உடைய மட்டு உண்டு, |
தண் குரவைச் சீர் தூங்குந்து; |
|
தூவல் கலித்த தேம் பாய் புன்னை |
|
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் |
|
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; |
|
10 |
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் |
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் |
|
இரும் பனையின் குரும்பை நீரும், |
|
பூங் கரும்பின் தீம் சாறும், |
|
ஓங்கு மணல் குவவுத் தாழைத் |
|
15 |
தீம் நீரொடு உடன் விராஅய், |
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; |
|
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய |
|
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி |
|
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் |
|
20 |
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், |
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், |
|
குப்பை நெல்லின், முத்தூறு தந்த |
|
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! |
|
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது |
|
25 |
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே |
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு |
|
நின்று மூத்த யாக்கை அன்ன, நின் |
|
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த |
|
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, |
|
30 |
இரவல் மாக்கள் ஈகை நுவல, |
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய |
|
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, |
|
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது |
|
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை, |
|
35 |
மலர் தலை உலகத்துத் தோன்றி, |
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
29 |
அழல் புரிந்த அடர் தாமரை |
|
ஐது அடர்ந்த நூல் பெய்து, |
|
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் |
|
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி, |
|
5 |
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை! |
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் |
|
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க |
|
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப, |
|
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும், |
|
10 |
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி, |
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும் |
|
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்! |
|
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர் |
|
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு, |
|
15 |
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின் |
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு |
|
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள் |
|
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து, |
|
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச் |
|
20 |
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு |
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை |
|
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில் |
|
கோடியர் நீர்மை போல முறைமுறை |
|
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய |
|
25 |
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்! |
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
33 |
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் |
|
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் |
|
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய, |
|
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் |
|
5 |
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் |
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் |
|
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், |
|
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் |
|
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; |
|
10 |
பாடுநர் வஞ்சி பாட, படையோர் |
தாது எரு மறுகின் பாசறை பொலிய, |
|
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த |
|
மலரா மாலைப் பந்து கண்டன்ன |
|
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் |
|
15 |
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை |
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற |
|
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப, |
|
காம இருவர் அல்லது, யாமத்துத் |
|
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், |
|
20 |
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி |
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப, |
|
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
44 |
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா, |
|
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ, |
|
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி, |
|
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து, |
|
5 |
அலமரல் யானை உரும் என முழங்கவும், |
பால் இல் குழவி அலறவும், மகளிர் |
|
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல் |
|
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும், |
|
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; |
|
10 |
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்! |
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்; |
|
மறவை ஆயின், போரொடு திறத்தல்; |
|
அறவையும் மறவையும் அல்லையாக, |
|
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் |
|
15 |
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் |
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
58 |
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே, |
|
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக் |
|
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு, |
|
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது, |
|
5 |
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ, |
இளையது ஆயினும் கிளை அரா எறியும் |
|
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச் |
|
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே, |
|
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே, |
|
10 |
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என, |
வரைய சாந்தமும், திரைய முத்தமும், |
|
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் |
|
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே; |
|
பால் நிற உருவின் பனைக் கொடியோனும், |
|
15 |
நீல் நிற உருவின் நேமியோனும், என்று |
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு, |
|
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி, |
|
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ? |
|
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே; |
|
20 |
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் |
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப் |
|
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம் |
|
கையகப்படுவது பொய் ஆகாதே; |
|
அதனால், நல்ல போலவும், நயவ போலவும், |
|
25 |
தொல்லோர் சென்ற நெறிய போலவும், |
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் |
|
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது, |
|
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று |
|
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக் |
|
30 |
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி |
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த |
|
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே. |
|
திணை பாடாண் திணை; துறை உடனிலை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
61 |
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் |
|
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், |
|
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட |
|
பழன வாளைப் பரூஉக் கண் துணியல் |
|
5 |
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, |
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, |
|
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் |
|
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் |
|
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர் |
|
10 |
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து |
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும், |
|
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன், |
|
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி, |
|
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், |
|
15 |
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன் |
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் |
|
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, |
|
திருந்து அடி பொருந்த வல்லோர் |
|
வருந்தக் காண்டல், அதனினும் இலமே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
97 |
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், |
|
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், |
|
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே; |
|
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர் |
|
5 |
நறுங் கள்ளின் நாடு நைத்தலின், |
சுரை தழீஇய இருங் காழொடு |
|
மடை கலங்கி நிலை திரிந்தனவே; |
|
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் |
|
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், |
|
10 |
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே; |
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர் |
|
பொலம் பைந் தார் கெடப் பரிதலின், |
|
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே; |
|
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப் |
|
15 |
பொலந் தும்பைக் கழல் பாண்டில் |
கணை பொருத துளைத் தோலன்னே. |
|
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள், |
|
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் |
|
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு |
|
20 |
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின், |
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச் |
|
சொல்லவும் தேறீராயின், மெல் இயல், |
|
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி, |
|
குறுந் தொடி மகளிர் தோள் விடல் |
|
25 |
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே. |
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
|
109 |
அளிதோதானே, பாரியது பறம்பே! |
|
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், |
|
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே: |
|
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே; |
|
5 |
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே; |
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; |
|
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து, |
|
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே. |
|
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து, |
|
10 |
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, |
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், |
|
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், |
|
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்; |
|
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே: |
|
15 |
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, |
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர, |
|
ஆடினிர் பாடினிர் செலினே, |
|
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. |
|
திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
| |
அவனை அவர் பாடியது.
|
159 |
'வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின், |
|
தீர்தல் செல்லாது, என் உயிர்' எனப் பல புலந்து, |
|
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி, |
|
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று, |
|
5 |
முன்றில் போகா முதிர்வினள் யாயும்; |
பசந்த மேனியொடு படர் அட வருந்தி, |
|
மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள் |
|
பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து, |
|
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த |
|
10 |
முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று, |
நீர் உலைஆக ஏற்றி, மோர் இன்று, |
|
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து, |
|
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா, |
|
துவ்வாளாகிய என் வெய்யோளும்; |
|
15 |
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் |
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை, |
|
ஐவனம் வித்தி, மையுறக் கவினி, |
|
ஈனல்செல்லா ஏனற்கு இழுமெனக் |
|
கருவி வானம் தலைஇ யாங்கும், |
|
20 |
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என், |
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப |
|
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும், |
|
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ |
|
இன்புற விடுதிஆயின், சிறிது |
|
25 |
குன்றியும் கொள்வல், கூர் வேல் குமண! |
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ் |
|
வசை இல் விழுத் திணைப் பிறந்த |
|
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே. |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
அவனை அவர் பாடியது.
|
171 |
இன்று செலினும் தருமே; சிறு வரை |
|
நின்று செலினும் தருமே; பின்னும், |
|
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி |
|
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி, |
|
5 |
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்; |
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப |
|
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்; |
|
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும், |
|
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும், |
|
10 |
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை |
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே. |
|
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி |
|
முள்ளும் நோவ உறாற்கதில்ல! |
|
ஈவோர் அரிய இவ் உலகத்து, |
|
15 |
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.
|
209 |
பொய்கை நாரை போர்வில் சேக்கும் |
|
நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர் |
|
கூம்பு விடு மெண் பிணி அவிழ்ந்த ஆம்பல் |
|
அகல் அடை அரியல் மாந்தி, தெண் கடல் |
|
5 |
படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும் |
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! |
|
பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து, |
|
பெரு மலை விடரகம் சிலம்ப முன்னி, |
|
பழனுடைப் பெரு மரம் தீர்ந்தென, கையற்று, |
|
10 |
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் |
நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென் |
|
வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந! |
|
ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லேன்; |
|
நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள் | |
15 |
குறு நணி காண்குவதாக நாளும், |
நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தே மொழி, |
|
தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும் |
|
பெரு வரை அன்ன மார்பின், |
|
செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே! |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
253 |
என் திறத்து அவலம் கொள்ளல், இனியே; |
|
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப, |
|
'நகாஅல்' என வந்த மாறே, எழா நெல் |
|
பைங் கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின், |
|
5 |
வளை இல், வறுங் கை ஓச்சி, |
கிளையுள் ஒய்வலோ? கூறு நின் உரையே! |
|
திணை பொதுவியல்; துறை முதுபாலை.
| |
....................குளம்பாதாயனார் பாடியது.
|
287 |
துடி எறியும் புலைய! |
|
எறி கோல் கொள்ளும் இழிசின! |
|
காலம் மாரியின் அம்பு தைப்பினும், |
|
வயல் கெண்டையின் வேல் பிறழினும், |
|
5 |
பொலம் புனை ஓடை அண்ணல் யானை |
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும், |
|
ஓடல் செல்லாப் பீடுடையாளர் |
|
நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை |
|
நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும், |
|
10 |
தண்ணடை பெறுதல் யாவது? படினே, |
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும், |
|
உயர் நிலை உலகத்து, நுகர்ப; அதனால் |
|
வம்ப வேந்தன் தானை |
|
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே! |
|
திணை கரந்தை; துறை நீண்மொழி.
| |
சாத்தந்தையார் பாடியது.
|
318 |
கொய் அடகு வாட, தரு விறகு உணங்க, |
|
மயில்அம் சாயல் மாஅயோளொடு |
|
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே |
|
மனை உறை குரீஇக் கறை அணல் சேவல், |
|
5 |
பாணர் நரம்பின் சுகிரொடு, வய மான் |
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை, |
|
பெருஞ் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் |
|
புன் புறப் பெடையொடு வதியும் |
|
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பெருங் குன்றூர் கிழார் பாடியது.
|
328 |
..........டை முதல் புறவு சேர்ந்திருந்த |
|
புன் புலச் சீறூர், நெல் விளையாதே; |
|
வரகும் தினையும் உள்ளவை எல்லாம் |
|
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன; |
|
5 |
................. டு அமைந்தனனே; |
அன்னன் ஆயினும், பாண! நன்றும் |
|
வெள்ளத்திடும் பாலுள் உறை தொட.... |
|
களவுப் புளி அன்ன விளை.... |
|
..............வாடு ஊன் கொழுங் குறை |
|
10 |
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு, |
துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு |
|
உண்டு, இனிது இருந்த பின் |
|
... ... ... ... .... ... தருகுவன் மாதோ |
|
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை |
|
15 |
முயல் வந்து கறிக்கும் முன்றில், |
சீறூர் மன்னனைப் பாடினை செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பங்கு ............................. பாடியது.
|
335 |
அடல் அருந் துப்பின்.................... |
|
...................குருந்தே முல்லை என்று |
|
இந் நான்கு அல்லது பூவும் இல்லை; |
|
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே, |
|
5 |
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு, |
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை; |
|
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று |
|
இந் நான்கு அல்லது குடியும் இல்லை; |
|
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி, |
|
10 |
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென, |
கல்லே பரவின் அல்லது, |
|
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மாங்குடி கிழார் பாடியது.
|
337 |
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்; |
|
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும், |
|
வாள் வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர், |
|
வரல்தோறு அகம் மலர, |
|
5 |
ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக் கைப் |
பாரி பறம்பின் பனிச் சுனை போல, |
|
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட |
|
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய |
|
துகில் விரி கடுப்ப நுடங்கி, தண்ணென |
|
10 |
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய |
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு, |
|
மனைச் செறிந்தனளே, வாணுதல்; இனியே, |
|
அற்றன்றுஆகலின், தெற்றெனப் போற்றி, |
|
காய் நெல் கவளம் தீற்றி, காவுதொறும் |
|
15 |
கடுங்கண் யானை காப்பனர் அன்றி, |
வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர் |
|
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் |
|
குருதி பற்றிய வெருவரு தலையர்; |
|
மற்று இவர் மறனும் இற்றால்; தெற்றென |
|
20 |
யார் ஆகுவர்கொல் தாமே நேரிழை |
உருத்த பல சுணங்கு அணிந்த |
|
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கபிலர் பாடியது.
|
338 |
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின், |
|
நெல் மலிந்த மனை, பொன் மலிந்த மறுகின், |
|
படு வண்டு ஆர்க்கும் பல் மலர்க் காவின், |
|
நெடு வேள் ஆதன் போந்தை அன்ன, |
|
5 |
பெருஞ் சீர் அருங் கொண்டியளே; கருஞ் சினை |
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் |
|
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர், |
|
கொற்ற வேந்தர் வரினும், தன் தக |
|
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப் |
|
10 |
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று |
உணங்கு கலன் ஆழியின் தோன்றும் |
|
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
குன்றூர் கிழார் மகனார் பாடியது.
|
344 |
செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை, |
|
செறி வளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து, |
|
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு, |
|
நிறைசால் விழுப் பொருள் தருதல் ஒன்றோ |
|
5 |
புகை படு கூர் எரி பரப்பிப் பகை செய்து, |
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ |
|
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே, |
|
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி.................. |
|
கணி மேவந்தவள் அல்குல் அவ் வரியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...............அடைநெடுங் கல்வியார் பாடியது.
|
348 |
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ, |
|
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய, |
|
கள் அரிக்கும் குயம், சிறு சில் |
|
மீன் சீவும் பாண் சேரி, |
|
5 |
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, |
குவளை உண்கண் இவளை, தாயே |
|
ஈனாளாயினள்ஆயின், ஆனாது |
|
நிழல்தொறும் நெடுந் தேர் நிற்ப, வயின்தொறும், |
|
செந் நுதல் யானை பிணிப்ப, |
|
10 |
வருந்தலமன் எம் பெருந் துறை மரனே! |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
352 |
தேஎம் கொண்ட வெண் மண்டையான், |
|
வீ...................................................................கறக்குந்து; |
|
அவல் வகுத்த பசுங் குடையான், |
|
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
5 |
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
குன்று ஏறிப் புனல் பாயின், |
|
புற வாயால் புனல் வள |
|
............................................................ நொடை நறவின் |
|
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி |
|
10 |
உறந்தை அன்ன உரைசால் நன் கலம் |
கொடுப்பவும் கொளாஅனெ |
|
.......................ர் தந்த நாகு இள வேங்கையின், |
|
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் |
|
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும் |
|
15 |
சிறு கோல் உளையும் புரவி ெ.................. |
...................................................................... யமரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
379 |
யானே பெறுக, அவன் தாள் நிழல் வாழ்க்கை; |
|
அவனே பெறுக, என் நா இசை நுவறல்; |
|
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின், |
|
பின்னை மறத்தோடு அரிய, கல் செத்து, |
5 |
அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும் |
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் |
|
வில்லியாதன் கிணையேம்; பெரும! |
|
'குறுந் தாள் ஏற்றைக் கொழுங் கண் அவ் விளர் |
|
நறு நெய் உருக்கி, நாட் சோறு ஈயா, |
|
10 |
வல்லன், எந்தை, பசி தீர்த்தல்' என, |
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற, |
|
கேட்டதற்கொண்டும் வேட்கை தண்டாது, |
|
விண் தோய் தலைய குன்றம் பின்பட, |
|
......................................ர வந்தனென், யானே |
|
15 |
தாய் இல் தூவாக் குழவி போல, ஆங்கு அத் |
திருவுடைத் திரு மனை, ஐது தோன்று கமழ் புகை |
|
வரு மழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் |
|
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
384 |
மென்பாலான் உடன் அணைஇ, |
|
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை |
|
அறைக் கரும்பின் பூ அருந்தும்; |
|
வன்பாலான் கருங் கால் வரகின் |
|
5 |
...................................................................................... |
அம் கண் குறு முயல வெருவ, அயல |
|
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து; |
|
விழவு இன்றாயினும், உழவர் மண்டை |
|
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து; |
|
10 |
................................................கிணையேம், பெரும! |
நெல் என்னா, பொன் என்னா, |
|
கனற்றக் கொண்ட நறவு என்னா, |
|
.....................மனை என்னா, அவை பலவும் |
|
யான் தண்டவும், தான் தண்டான், |
|
15 |
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை, |
மண் நாணப் புகழ் வேட்டு, |
|
நீர் நாண நெய் வழங்கி, |
|
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை..... |
|
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு |
|
20 |
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட |
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும், |
|
தின்ற நண் பல் ஊன் தோண்டவும், |
|
வந்த வைகல் அல்லது, |
|
சென்ற எல்லைச் செலவு அறியேனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
385 |
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப, |
|
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி, |
|
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை, |
|
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி, |
|
5 |
வறன் யான் நீங்கல் வேண்டி, என் அரை |
நீல் நிறச் சிதாஅர் களைந்து, |
|
வெளியது உடீஇ, என் பசி களைந்தோனே; |
|
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை |
|
நெல் விளை கழனி அம்பர் கிழவோன், |
|
10 |
நல் அருவந்தை, வாழியர்! புல்லிய |
வேங்கட விறல் வரைப் பட்ட |
|
ஓங்கல் வானத்து உறையினும் பலவே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்.
| |
அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.
|
386 |
நெடு நீர நிறை கயத்துப் |
|
படு மாரித் துளி போல, |
|
நெய் துள்ளிய வறை முகக்கவும், |
|
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும், |
|
5 |
ஊன் கொண்ட வெண் மண்டை |
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும், |
|
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது, |
|
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை |
|
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக; |
|
10 |
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் |
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின; |
|
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான், |
|
வில் இருந்த வெங் குறும்பின்று; |
|
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர் |
|
15 |
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து; |
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து; |
|
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே; |
|
பொராஅப் பொருநரேம்; |
|
20 |
குண திசை நின்று குடமுதல் செலினும், |
குட திசை நின்று குணமுதல் செலினும், |
|
வட திசை நின்று தென்வயின் செலினும், |
|
தென் திசை நின்று குறுகாது நீடினும், |
|
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம் |
|
25 |
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
387 |
வள் உகிர வயல் ஆமை |
|
வெள் அகடு கண்டன்ன, |
|
வீங்கு விசிப் புதுப் போர்வைத் |
|
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும் |
|
5 |
மாறு கொண்டோர் மதில் இடறி, |
நீறு ஆடிய நறுங் கவுள, |
|
பூம் பொறிப் பணை எருத்தின, |
|
வேறு வேறு பரந்து இயங்கி, |
|
வேந்துடை மிளை அயல் பரக்கும் |
|
10 |
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை, |
திருந்து தொழில் பல பகடு |
|
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின் |
|
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி, |
|
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று, |
|
15 |
யான் இசைப்பின், நனி நன்று எனா, |
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?......... |
|
மருவ இன் நகர் அகன்................................. |
|
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி, |
|
வென்று இரங்கும் விறல் முரசினோன், |
|
20 |
என் சிறுமையின், இழித்து நோக்கான், |
தன் பெருமையின் தகவு நோக்கி, |
|
குன்று உறழ்ந்த களிறு என்கோ? |
|
கொய் உளைய மா என்கோ? |
|
மன்று நிறையும் நிரை என்கோ? |
|
25 |
மனைக் களமரொடு களம் என்கோ? |
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின் |
|
நல்கியோனே, நசைசால் தோன்றல், |
|
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்! |
|
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள் |
|
30 |
செல்வக் கடுங்கோ வாழியாதன் |
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண் |
|
விடுவர் மாதோ நெடிதே நி |
|
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும் |
|
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் |
|
35 |
பல் ஊர் சுற்றிய கழனி |
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.
|
390 |
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும் |
|
மறவை நெஞ்சத்து ஆயிவாளர், |
|
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ், |
|
.........................................................மன்ன முற்றத்து, |
|
5 |
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர் |
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர், |
|
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என் |
|
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப் |
|
பாடி நின்ற பல் நாள் அன்றியும், |
|
10 |
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் |
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற |
|
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என, |
|
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை |
|
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து, |
|
15 |
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ, |
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும், |
|
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் |
|
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி, |
|
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை |
|
20 |
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற, |
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன |
|
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி, |
|
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை |
|
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்; |
|
25 |
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி, |
............................................................................................................................. |
|
வான் அறியல என் பாடு பசி போக்கல்; |
|
அண்ணல் யானை வேந்தர் |
|
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
391 |
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் |
|
விண்டு அனைய விண் தோய் பிறங்கல் |
|
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப் |
|
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி, பெற்ற |
|
5 |
திருந்தா மூரி பரந்து படக் கெண்டி, |
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் |
|
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென, |
|
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் | |
தீர்கை விடுக்கும் பண்பு இல முதுகுடி |
|
10 |
நன...............................................வினவலின், |
'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும் |
|
அளியன் ஆகலின், பொருநன் இவன்' என, |
|
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற, |
|
காண்கு வந்திசின், பெரும!........................... |
|
15 |
..........பெருங் கழி நுழைமீன் அருந்தும் |
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் |
|
ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின், |
|
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு, |
|
இன் துயி........................... ஞ்சால் |
|
20 |
துளி பதன் அறிந்து பொழிய, |
வேலி ஆயிரம் விளைக, நின் வயலே! |
|
திணை அது; துறை கடைநிலை.
| |
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.
|
395 |
மென் புலத்து வயல் உழவர் |
|
வன் புலத்துப் பகடு விட்டு, |
|
குறு முயலின் குழைச் சூட்டொடு |
|
நெடு வாளைப் பல் உவியல், |
|
5 |
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, |
புதல் தளவின் பூச் சூடி, |
|
................................................................ |
|
...........................அரியலாருந்து; |
|
மனைக் கோழிப் பைம் பயிரின்னே, |
|
10 |
கானக் கோழிக் கவர் குரலொடு |
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; |
|
வேய் அன்ன மென் தோளால், |
|
மயில் அன்ன மென் சாயலார், |
|
கிளி கடியின்னே, |
|
15 |
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; |
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் |
|
சீர் சான்ற விழுச் சிறப்பின், |
|
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் |
|
செல்லா நல் இசை உறந்தைக் குணாது, |
|
20 |
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் |
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! |
|
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, |
|
கதிர் நனி செ ...................................... மாலை, |
|
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், |
|
25 |
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, |
ஆங்கு நின்ற எற்கண்டு, |
|
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், |
|
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, |
|
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப் |
|
30 |
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை |
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு, |
|
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; |
|
அகன் ஞாலம் பெரிது வெம்பினும், |
|
மிக வானுள் எரி தோன்றினும், |
|
35 |
குள மீனொடும் தாள் புகையினும், |
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் |
|
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி, |
|
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என, |
|
உள்ளதும் இல்லதும் அறியாது, |
|
40 |
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
|
399 |
அடு மகள் முகந்த அளவா வெண்ணெல் |
|
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி |
|
காடி வெள் உலைக் கொளீஇ, நீழல் |
|
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி, |
|
5 |
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை, |
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல், |
|
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன |
|
மெய் களைந்து, இனனொடு விரைஇ, |
|
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல், |
|
10 |
அழிகளின் படுநர் களி அட வைகின், |
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக் |
|
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக் |
|
கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்; |
|
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்; |
|
15 |
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து, |
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் |
|
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு, |
|
ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே, |
|
அறவர் அறவன், மறவர் மறவன், |
|
20 |
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன், |
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என, |
|
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி, |
|
வள் பரிந்து கிடந்த.......................மணக்க |
|
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை, |
|
25 |
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து, |
கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன், |
|
'கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் |
|
பகடே அத்தை யான் வேண்டி வந்தது' என, |
|
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே |
|
30 |
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின் |
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை |
|
ஊர்தியொடு நல்கியோனே; சீர் கொள |
|
இழுமென இழிதரும் அருவி, |
|
வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே. |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.
|