முகப்பு | தொடக்கம் |
களங்கனி |
127 |
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப் |
|
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென, |
|
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில், |
|
கான மஞ்ஞை கணனொடு சேப்ப, |
|
5 |
ஈகை அரிய இழை அணி மகளிரொடு |
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்; |
|
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில் |
|
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி, |
|
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய |
|
10 |
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே. |
திணை அது; துறை கடைநிலை.
| |
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|
145 |
'மடத் தகை மா மயில் பனிக்கும்' என்று அருளி, |
|
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை, |
|
கடாஅ யானைக் கலி மான் பேக! |
|
பசித்தும் வாரேம்; பாரமும் இலமே; |
|
5 |
களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ் |
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி, |
|
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்!' என, |
|
இஃது யாம் இரந்த பரிசில்: அஃது இருளின், |
|
இன மணி நெடுந் தேர் ஏறி, |
|
10 |
இன்னாது உறைவி அரும் படர் களைமே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாக அவர் பாடியது.
|