முகப்பு | தொடக்கம் |
அணில் |
246 |
பல் சான்றீரே! பல் சான்றீரே! |
|
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும், |
|
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே! |
|
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட |
|
5 |
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது, |
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம், |
|
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட |
|
வேளை வெந்தை, வல்சி ஆக, |
|
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும் |
|
10 |
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ; |
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம் |
|
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம் |
|
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற |
|
வள் இதழ் அவிழ்ந்த தாமரை |
|
15 |
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! |
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
| |
பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப் பாய்வாள் சொல்லியது.
|
307 |
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
|
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்; |
|
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்; |
|
வேனல் வரி அணில் வாலத்து அன்ன, |
|
5 |
கான ஊகின் கழன்று உகு முது வீ |
அரியல் வான் குழல் சுரியல் தங்க, |
|
நீரும் புல்லும் ஈயாது, உமணர் |
|
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த |
|
வாழா வான் பகடு ஏய்ப்ப, தெறுவர் |
|
10 |
பேர் உயிர் கொள்ளும் மாதோ; அது கண்டு, |
வெஞ் சின யானை வேந்தனும், 'இக் களத்து, |
|
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என, |
|
பண் கொளற்கு அருமை நோக்கி, |
|
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே. |
|
திணை தும்பை; துறை களிற்றுடனிலை.
| |
........................................................................
|