முகப்பு | தொடக்கம் |
எருமை |
5 |
எருமை அன்ன கருங் கல் இடை தோறு, |
|
ஆனின் பரக்கும் யானைய, முன்பின், |
|
கானக நாடனை! நீயோ, பெரும! |
|
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்: |
|
5 |
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா |
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல், |
|
குழவி கொள்பவரின், ஓம்புமதி! |
|
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே. |
|
திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
| |
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
|
297 |
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை |
|
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் |
|
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை, |
|
கன்றுடை மரை ஆத் துஞ்சும் சீறூர்க் |
|
5 |
கோள் இவண் வேண்டேம், புரவே; நார் அரி |
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி, |
|
துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும் |
|
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந் நுதி |
|
நெடு வேல் பாய்ந்த மார்பின், |
|
10 |
மடல் வன் போந்தையின், நிற்குமோர்க்கே. |
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
| |
...........................................................................
|