முகப்பு | தொடக்கம் |
எலி |
190 |
விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர் |
|
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும் |
|
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம் |
|
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு |
|
5 |
இயைந்த கேண்மை இல்லாகியரோ! |
கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென, |
|
அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள், |
|
பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து, |
|
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் |
|
10 |
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து |
உரனுடையாளர் கேண்மையொடு |
|
இயைந்த வைகல் உள ஆகியரோ! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நல்லுருத்திரன் பாட்டு.
|
211 |
அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு |
|
அணங்குடை அரவின் அருந் தலை துமிய, |
|
நின்று காண்பன்ன நீள் மலை மிளிர, |
|
குன்று தூவ எறியும் அரவம் போல, |
|
5 |
முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று, |
அரைசு படக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின் |
|
உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென், |
|
'வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்' என, |
|
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின் |
|
10 |
உள்ளியது முடித்தோய் மன்ற; முன் நாள் |
கை உள்ளது போல் காட்டி, வழி நாள் |
|
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் |
|
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என் |
|
நுணங்கு செந் நா அணங்க ஏத்தி, |
|
15 |
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின் |
ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச் |
|
செல்வல் அத்தை, யானே வைகலும், |
|
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி, |
|
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின், |
|
20 |
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து, |
முலைக்கோள் மறந்த புதல்வனொடு, |
|
மனைத் தொலைந்திருந்த என் வாள்நுதல் படர்ந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
237 |
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, |
|
பாடி நின்ற பசி நாட்கண்ணே, |
|
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, |
|
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் |
|
5 |
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என |
நச்சி இருந்த நசை பழுதாக, |
|
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு, |
|
'அளியர்தாமே ஆர்க' என்னா |
|
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, |
|
10 |
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் |
வாழைப் பூவின் வளை முறி சிதற, |
|
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க, |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: |
|
15 |
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் |
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், |
|
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் |
|
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, |
|
நனியுடைப் பரிசில் தருகம், |
|
20 |
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|
321 |
பொறிப் புறப் பூழின் போர் வல் சேவல் |
|
மேந் தோல் களைந்த தீம் கோள் வெள் எள் |
|
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு, உடன் |
|
வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன |
|
5 |
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட, |
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும், |
|
வன் புல வைப்பினதுவே சென்று |
|
தின் பழம் பசீஇ ..........னனோ, பாண! |
|
வாள் வடு விளங்கிய சென்னிச் |
|
10 |
செரு வெங் குருசில் ஓம்பும் ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|