முகப்பு | தொடக்கம் |
கழுதை |
15 |
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், |
|
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, |
|
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்; |
|
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல், |
|
5 |
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத் |
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து; |
|
துளங்கு இயலான், பணை எருத்தின், |
|
பாவு அடியான், செறல் நோக்கின், |
|
ஒளிறு மருப்பின் களிறு அவர |
|
10 |
காப்பு உடைய கயம் படியினை; |
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின், |
|
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு |
|
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார் |
|
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார், |
|
15 |
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய, |
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல் |
|
நல் பனுவல், நால் வேதத்து, |
|
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை |
|
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண் |
|
20 |
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, |
யூபம் நட்ட வியன் களம் பலகொல்? |
|
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று |
|
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின் |
|
பாடினி பாடும் வஞ்சிக்கு |
|
25 |
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே. |
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
392 |
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான், |
|
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான் |
|
பசலை நிலவின் பனி படு விடியல், |
|
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை |
|
5 |
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ, |
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து, |
|
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து |
|
அணங்குடை மரபின் இருங் களந்தோறும், |
|
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, |
|
10 |
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் |
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச் |
|
சென்று யான் நின்றனெனாக, அன்றே, |
|
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி |
|
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை |
|
15 |
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத் |
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் |
|
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ, |
|
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை |
|
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து |
|
20 |
அரும் பெறல் அமிழ்தம் அன்ன |
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.
|