முகப்பு | தொடக்கம் |
காளை (ஏறு, பகடு, எருது) |
1 |
கண்ணி கார் நறுங் கொன்றை; காமர் |
|
வண்ண மார்பின் தாரும் கொன்றை: |
|
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த |
|
சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப: |
|
5 |
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை |
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே: |
|
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத் |
|
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்: |
|
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை |
|
10 |
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே |
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய, |
|
நீர் அறவு அறியாக் கரகத்து, |
|
தாழ் சடைப் பொலிந்த, அருந் தவத்தோற்கே. |
|
கடவுள் வாழ்த்து.
| |
பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியது.
|
4 |
வாள், வலம் தர, மறுப் பட்டன |
|
செவ் வானத்து வனப்புப் போன்றன; |
|
தாள், களம் கொள, கழல் பறைந்தன |
|
கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன; |
|
5 |
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ, |
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; |
|
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட, |
|
கறுழ் பொருத செவ் வாயான், |
|
எருத்து வவ்விய புலி போன்றன; |
|
10 |
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய், |
நுதி மழுங்கிய வெண் கோட்டான், |
|
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; |
|
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப் |
|
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, |
|
15 |
மாக் கடல் நிவந்து எழுதரும் |
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ |
|
அனையை ஆகன்மாறே, |
|
தாய் இல் தூவாக் குழவி போல, |
|
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
| |
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.
|
35 |
நளி இரு முந்நீர் ஏணி ஆக, |
|
வளி இடை வழங்கா வானம் சூடிய |
|
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், |
|
முரசு முழங்கு தானை மூவருள்ளும், |
|
5 |
அரசு எனப்படுவது நினதே, பெரும! |
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், |
|
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும், |
|
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட, |
|
தோடு கொள் வேலின் தோற்றம் போல, |
|
10 |
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் |
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க |
|
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! |
|
நினவ கூறுவல்; எனவ கேண்மதி! |
|
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து |
|
15 |
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு |
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே; |
|
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ |
|
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு, |
|
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை |
|
20 |
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய |
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ! |
|
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப, |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து, |
|
25 |
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை |
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; |
|
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், |
|
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், |
|
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்; |
|
30 |
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும் |
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, |
|
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, |
|
குடி புறந்தருகுவை ஆயின், நின் |
|
அடி புறந்தருகுவர், அடங்காதோரே. |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.
|
60 |
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல, |
|
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் |
|
உச்சி நின்ற உவவு மதி கண்டு, |
|
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த, |
|
5 |
சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து, |
தொழுதனெம் அல்லமோ, பலவே கானல் |
|
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் |
|
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் |
|
உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன், |
|
10 |
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன், |
வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின் |
|
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே? |
|
திணை அது; துறை குடை மங்கலம்.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
90 |
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் |
|
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல், |
|
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ? |
|
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய |
|
5 |
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? |
அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய |
|
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, |
|
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும் |
|
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? |
|
10 |
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை |
வழு இல் வன் கை, மழவர் பெரும! |
|
இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும் |
|
பொருநரும் உளரோ, நீ களம் புகினே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
102 |
'எருதே இளைய; நுகம் உணராவே; |
|
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே; |
|
அவல் இழியினும், மிசை ஏறினும், |
|
அவணது அறியுநர் யார்?' என, உமணர் |
|
5 |
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன, |
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள் |
|
நாள் நிறை மதியத்து அனையை; இருள் |
|
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
|
125 |
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, |
|
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை, |
|
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர |
|
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே, |
|
5 |
நள்ளாதார் மிடல் சாய்த்த |
வல்லாள! நின் மகிழ் இருக்கையே. |
|
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு |
|
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே; |
|
குன்றத்து அன்ன களிறு பெயர, |
|
10 |
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே; |
'வெலீஇயோன் இவன்' என, |
|
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு |
|
விரைந்து வந்து, சமம் தாங்கிய, |
|
வல் வேல் மலையன் அல்லன் ஆயின், |
|
15 |
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத் |
தோற்றோன்தானும், நிற் கூறும்மே, |
|
'தொலைஇயோன் இவன்' என, |
|
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு |
|
இருக்கை சான்ற உயர் மலைத் |
|
20 |
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே. |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.
|
259 |
ஏறுடைப் பெரு நிரை பெயர்தர, பெயராது, |
|
இலை புதை பெருங் காட்டுத் தலை கரந்து இருந்த |
|
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்; |
|
செல்லல், செல்லல்; சிறக்க, நின் உள்ளம், |
|
5 |
முருகு மெய்ப் பட்ட புலைத்தி போலத் |
தாவுபு தெறிக்கும் ஆன்மேல் |
|
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே! |
|
திணை கரந்தை; துறை செரு மலைதல்; பிள்ளைப் பெயர்ச்சியும் ஆம்.
| |
.......................கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.
|
288 |
மண் கொள வரிந்த வைந் நுதி மருப்பின் |
|
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து, |
|
வென்றதன் பச்சை சீவாது போர்த்த |
|
திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க, |
|
5 |
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, |
நெடு வேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து, |
|
அருகுகை ...................................... மன்ற |
|
குருதியொடு துயல்வரு மார்பின் |
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. |
திணை தும்பை; துறை மூதில் முல்லை.
| |
கழாத்தலையார் பாடியது.
|
289 |
ஈரச் செவ்வி உதவினஆயினும், |
|
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி, |
|
வீறு வீறு ஆயும் உழவன் போல, |
|
பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய |
|
5 |
மூதிலாளருள்ளும், காதலின் |
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை, |
|
'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே; |
|
கேட்டியோ வாழி பாண! பாசறை, |
|
'பூக் கோள் இன்று' என்று அறையும் |
|
10 |
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே? |
திணை ...............; துறை ................முல்லை.
| |
கழாத்தலையார் பாடியது.
|
307 |
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
|
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்; |
|
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்; |
|
வேனல் வரி அணில் வாலத்து அன்ன, |
|
5 |
கான ஊகின் கழன்று உகு முது வீ |
அரியல் வான் குழல் சுரியல் தங்க, |
|
நீரும் புல்லும் ஈயாது, உமணர் |
|
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த |
|
வாழா வான் பகடு ஏய்ப்ப, தெறுவர் |
|
10 |
பேர் உயிர் கொள்ளும் மாதோ; அது கண்டு, |
வெஞ் சின யானை வேந்தனும், 'இக் களத்து, |
|
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என, |
|
பண் கொளற்கு அருமை நோக்கி, |
|
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே. |
|
திணை தும்பை; துறை களிற்றுடனிலை.
| |
........................................................................
|
309 |
இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார் |
|
இருஞ் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே; |
|
நல் அரா உறையும் புற்றம் போலவும், |
|
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும், |
|
5 |
மாற்று அருந் துப்பின் மாற்றோர், 'பாசறை |
உளன்' என வெரூஉம் ஓர் ஒளி |
|
வலன் உயர் நெடு வேல் என்னைகண்ணதுவே. |
|
திணை தும்பை; துறை நூழிலாட்டு.
| |
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் பாடியது.
|
322 |
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன |
|
கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்தி, |
|
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் |
|
புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின், |
|
5 |
பெருங் கண் குறு முயல் கருங் கலன் உடைய |
மன்றில் பாயும் வன் புலத்ததுவே |
|
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது. |
|
இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண், |
|
தண் பணை ஆளும் வேந்தர்க்குக் |
|
10 |
கண் படை ஈயா வேலோன் ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
ஆவூர் கிழார் பாடியது.
|
327 |
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற |
|
சில் விளை வரகின் புல்லென் குப்பை, |
|
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் |
|
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின், |
|
5 |
ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச் |
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி, |
|
வரகு கடன் இரக்கும் நெடுந் தகை |
|
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|
339 |
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு |
|
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர் |
|
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல் |
|
5 |
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; |
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் |
|
கடல் ஆடிக் கயம் பாய்ந்து, |
|
கழி நெய்தல் பூக்குறூஉந்து; |
|
பைந் தழை துயல்வரும் செறு விறற.............. |
|
10 |
............................................................................லத்தி |
வளர வேண்டும், அவளே, என்றும் |
|
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி, |
|
முறம் செவி யானை வேந்தர் |
|
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|
342 |
'கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும் |
|
மயிலைக் கண்ணி, பெருந் தோள் குறுமகள், |
|
ஏனோர் மகள்கொல் இவள்?' என விதுப்புற்று, |
|
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை! |
|
5 |
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே |
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; |
|
பைங் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை |
|
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின், |
|
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, |
|
10 |
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், |
தண் பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும் |
|
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின், |
|
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா, |
|
வாள் தக வைகலும் உழக்கும் |
|
15 |
மாட்சியவர், இவள் தன்னைமாரே. |
திணையும் துறையும் அவை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
366 |
விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம் |
|
ஒழுக்குடை மருங்கின் ஒரு மொழித்து ஆக, |
|
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப, |
|
ஒரு தாம் ஆகிய பெருமையோரும், |
|
5 |
தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே; |
அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்! |
|
.............................உரைப்பக் கேண்மதி: |
|
நின் ஊற்றம் பிறர் அறியாது, |
|
பிறர் கூறிய மொழி தெரியா, |
|
10 |
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, |
இரவின் எல்லை வருவது நாடி, |
|
உரை..................................................... |
|
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்றாங்கு, |
|
செங் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ, |
|
15 |
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப, |
கெடல் அருந் திருவ! |
|
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது, |
|
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி, |
|
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப, |
|
20 |
நீர் நிலை பெருத்த வார் மணல் அடை கரை, |
காவுதொறும் |
|
மடங்கல் உண்மை மாயமோ அன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது.
|
370 |
...............................................................................................................ளி, |
|
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப் |
|
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு |
|
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ, |
|
5 |
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து, |
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல், |
|
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் |
|
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண், |
|
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை, |
|
10 |
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட, |
பழுமரம் உள்ளிய பறவை போல, |
|
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென, |
|
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப, |
|
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து, |
|
15 |
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி, |
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி, |
|
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி, |
|
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி, |
|
20 |
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் |
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும! |
|
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த |
|
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார் |
|
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி, |
|
25 |
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு |
செஞ் செவி எருவை திரிதரும், |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
|
383 |
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து, |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி, |
|
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி, |
|
5 |
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து, |
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி, |
|
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் |
|
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள, |
|
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் |
|
10 |
கழை படு சொலியின் இழை அணி வாரா, |
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண் |
|
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி, |
|
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல, |
|
எற் பெயர்ந்த நோக்கி..................................... |
|
15 |
.................................................கல் கொண்டு, |
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி, |
|
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே; |
|
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி, |
|
நரை முக ஊகமொடு, உகளும், சென................ |
|
20 |
.......................கன்று பல கெழீஇய |
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என |
|
ஒருவனை உடையேன்மன்னே, யானே; |
|
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே? |
|
திணையும் துறையும் அவை.
| |
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.
|
385 |
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப, |
|
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி, |
|
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை, |
|
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி, |
|
5 |
வறன் யான் நீங்கல் வேண்டி, என் அரை |
நீல் நிறச் சிதாஅர் களைந்து, |
|
வெளியது உடீஇ, என் பசி களைந்தோனே; |
|
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை |
|
நெல் விளை கழனி அம்பர் கிழவோன், |
|
10 |
நல் அருவந்தை, வாழியர்! புல்லிய |
வேங்கட விறல் வரைப் பட்ட |
|
ஓங்கல் வானத்து உறையினும் பலவே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்.
| |
அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.
|
387 |
வள் உகிர வயல் ஆமை |
|
வெள் அகடு கண்டன்ன, |
|
வீங்கு விசிப் புதுப் போர்வைத் |
|
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும் |
|
5 |
மாறு கொண்டோர் மதில் இடறி, |
நீறு ஆடிய நறுங் கவுள, |
|
பூம் பொறிப் பணை எருத்தின, |
|
வேறு வேறு பரந்து இயங்கி, |
|
வேந்துடை மிளை அயல் பரக்கும் |
|
10 |
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை, |
திருந்து தொழில் பல பகடு |
|
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின் |
|
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி, |
|
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று, |
|
15 |
யான் இசைப்பின், நனி நன்று எனா, |
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?......... |
|
மருவ இன் நகர் அகன்................................. |
|
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி, |
|
வென்று இரங்கும் விறல் முரசினோன், |
|
20 |
என் சிறுமையின், இழித்து நோக்கான், |
தன் பெருமையின் தகவு நோக்கி, |
|
குன்று உறழ்ந்த களிறு என்கோ? |
|
கொய் உளைய மா என்கோ? |
|
மன்று நிறையும் நிரை என்கோ? |
|
25 |
மனைக் களமரொடு களம் என்கோ? |
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின் |
|
நல்கியோனே, நசைசால் தோன்றல், |
|
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்! |
|
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள் |
|
30 |
செல்வக் கடுங்கோ வாழியாதன் |
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண் |
|
விடுவர் மாதோ நெடிதே நி |
|
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும் |
|
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் |
|
35 |
பல் ஊர் சுற்றிய கழனி |
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.
|
388 |
வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல், |
|
பள்ளம், வாடிய பயன் இல் காலை, |
|
இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர் |
|
................................................................................பொருந்தி, |
|
5 |
தன் நிலை அறியுநனாக, அந் நிலை, |
இடுக்கண் இரியல் போக, உடைய |
|
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல், |
|
.......................................................................னாமருப்பாக, |
|
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி |
|
10 |
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென, |
வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா, |
|
நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா |
|
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன், |
|
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை |
|
15 |
அண்ணல் யானை வழுதி, |
கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே! |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.
|
390 |
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும் |
|
மறவை நெஞ்சத்து ஆயிவாளர், |
|
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ், |
|
.........................................................மன்ன முற்றத்து, |
|
5 |
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர் |
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர், |
|
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என் |
|
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப் |
|
பாடி நின்ற பல் நாள் அன்றியும், |
|
10 |
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் |
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற |
|
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என, |
|
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை |
|
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து, |
|
15 |
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ, |
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும், |
|
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் |
|
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி, |
|
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை |
|
20 |
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற, |
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன |
|
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி, |
|
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை |
|
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்; |
|
25 |
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி, |
............................................................................................................................. |
|
வான் அறியல என் பாடு பசி போக்கல்; |
|
அண்ணல் யானை வேந்தர் |
|
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
391 |
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் |
|
விண்டு அனைய விண் தோய் பிறங்கல் |
|
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப் |
|
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி, பெற்ற |
|
5 |
திருந்தா மூரி பரந்து படக் கெண்டி, |
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் |
|
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென, |
|
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் |
|
தீர்கை விடுக்கும் பண்பு இல முதுகுடி |
|
10 |
நன...............................................வினவலின், |
'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும் |
|
அளியன் ஆகலின், பொருநன் இவன்' என, |
|
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற, |
|
காண்கு வந்திசின், பெரும!........................... |
|
15 |
..........பெருங் கழி நுழைமீன் அருந்தும் |
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் |
|
ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின், |
|
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு, |
|
இன் துயி........................... ஞ்சால் |
|
20 |
துளி பதன் அறிந்து பொழிய, |
வேலி ஆயிரம் விளைக, நின் வயலே! |
|
திணை அது; துறை கடைநிலை.
| |
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.
|
395 |
மென் புலத்து வயல் உழவர் |
|
வன் புலத்துப் பகடு விட்டு, |
|
குறு முயலின் குழைச் சூட்டொடு |
|
நெடு வாளைப் பல் உவியல், |
|
5 |
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, |
புதல் தளவின் பூச் சூடி, |
|
................................................................ |
|
...........................அரியலாருந்து; |
|
மனைக் கோழிப் பைம் பயிரின்னே, |
|
10 |
கானக் கோழிக் கவர் குரலொடு |
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; |
|
வேய் அன்ன மென் தோளால், |
|
மயில் அன்ன மென் சாயலார், |
|
கிளி கடியின்னே, |
|
15 |
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; |
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் |
|
சீர் சான்ற விழுச் சிறப்பின், |
|
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் |
|
செல்லா நல் இசை உறந்தைக் குணாது, |
|
20 |
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் |
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! |
|
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, |
|
கதிர் நனி செ ...................................... மாலை, |
|
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், |
|
25 |
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, |
ஆங்கு நின்ற எற்கண்டு, |
|
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், |
|
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, |
|
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப் |
|
30 |
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை |
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு, |
|
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; |
|
அகன் ஞாலம் பெரிது வெம்பினும், |
|
மிக வானுள் எரி தோன்றினும், |
|
35 |
குள மீனொடும் தாள் புகையினும், |
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் |
|
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி, |
|
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என, |
|
உள்ளதும் இல்லதும் அறியாது, |
|
40 |
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
|
399 |
அடு மகள் முகந்த அளவா வெண்ணெல் |
|
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி |
|
காடி வெள் உலைக் கொளீஇ, நீழல் |
|
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி, |
|
5 |
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை, |
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல், |
|
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன |
|
மெய் களைந்து, இனனொடு விரைஇ, |
|
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல், |
|
10 |
அழிகளின் படுநர் களி அட வைகின், |
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக் |
|
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக் |
|
கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்; |
|
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்; |
|
15 |
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து, |
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் |
|
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு, |
|
ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே, |
|
அறவர் அறவன், மறவர் மறவன், |
|
20 |
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன், |
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என, |
|
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி, |
|
வள் பரிந்து கிடந்த.......................மணக்க |
|
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை, |
|
25 |
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து, |
கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன், |
|
'கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் |
|
பகடே அத்தை யான் வேண்டி வந்தது' என, |
|
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே |
|
30 |
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின் |
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை |
|
ஊர்தியொடு நல்கியோனே; சீர் கொள |
|
இழுமென இழிதரும் அருவி, |
|
வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே. |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.
|