முகப்பு | தொடக்கம் |
குதிரை (மா, பரி, கலிமா, கலிமான், புரவி, இவுளி) |
2 |
மண் திணிந்த நிலனும், |
|
நிலன் ஏந்திய விசும்பும், |
|
விசும்பு தைவரு வளியும், |
|
வளித் தலைஇய தீயும், |
|
5 |
தீ முரணிய நீரும், என்றாங்கு |
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல |
|
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், |
|
வலியும், தெறலும், அளியும், உடையோய்! |
|
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் |
|
10 |
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும், |
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந! |
|
வான வரம்பனை! நீயோ, பெரும! |
|
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ, |
|
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை |
|
15 |
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய, |
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்! |
|
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், |
|
நாஅல் வேத நெறி திரியினும், |
|
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி, |
|
20 |
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து, |
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை, |
|
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும் |
|
முத் தீ விளக்கின், துஞ்சும் |
|
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே! |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
| |
சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்பாடியது.
|
4 |
வாள், வலம் தர, மறுப் பட்டன |
|
செவ் வானத்து வனப்புப் போன்றன; |
|
தாள், களம் கொள, கழல் பறைந்தன |
|
கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன; |
|
5 |
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ, |
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; |
|
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட, |
|
கறுழ் பொருத செவ் வாயான், |
|
எருத்து வவ்விய புலி போன்றன; |
|
10 |
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய், |
நுதி மழுங்கிய வெண் கோட்டான், |
|
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; |
|
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப் |
|
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, |
|
15 |
மாக் கடல் நிவந்து எழுதரும் |
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ |
|
அனையை ஆகன்மாறே, |
|
தாய் இல் தூவாக் குழவி போல, |
|
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
| |
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.
|
15 |
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், |
|
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, |
|
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்; |
|
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல், |
|
5 |
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத் |
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து; |
|
துளங்கு இயலான், பணை எருத்தின், |
|
பாவு அடியான், செறல் நோக்கின், |
|
ஒளிறு மருப்பின் களிறு அவர |
|
10 |
காப்பு உடைய கயம் படியினை; |
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின், |
|
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு |
|
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார் |
|
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார், |
|
15 |
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய, |
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல் |
|
நல் பனுவல், நால் வேதத்து, |
|
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை |
|
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண் |
|
20 |
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, |
யூபம் நட்ட வியன் களம் பலகொல்? |
|
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று |
|
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின் |
|
பாடினி பாடும் வஞ்சிக்கு |
|
25 |
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே. |
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
16 |
வினை மாட்சிய விரை புரவியொடு, |
|
மழை உருவின தோல் பரப்பி, |
|
முனை முருங்கத் தலைச் சென்று, அவர் |
|
விளை வயல் கவர்பூட்டி, |
|
5 |
மனை மரம் விறகு ஆகக் |
கடி துறை நீர்க் களிறு படீஇ, |
|
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் |
|
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற, |
|
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை, |
|
10 |
துணை வேண்டாச் செரு வென்றி, |
புலவு வாள், புலர் சாந்தின், |
|
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்! |
|
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், |
|
பனிப் பகன்றை, கனிப் பாகல், |
|
15 |
கரும்பு அல்லது காடு அறியாப் |
பெருந் தண் பணை பாழ் ஆக, |
|
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை, |
|
நாம நல் அமர் செய்ய, |
|
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே. |
|
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.
|
39 |
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி |
|
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக் |
|
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக! |
|
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல் |
|
5 |
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல் |
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், |
|
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று, |
|
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
|
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால் |
|
10 |
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு |
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள், |
|
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ! |
|
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய |
|
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு |
|
15 |
இமயம் சூட்டிய ஏம விற்பொறி, |
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய, |
|
வாடா வஞ்சி வாட்டும் நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
53 |
முதிர் வார் இப்பி முத்த வார் மணல், |
|
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து, |
|
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் |
|
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற |
|
5 |
களம் கொள் யானை, கடு மான், பொறைய! |
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; |
|
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை |
|
கைம்முற்றல, நின் புகழே, என்றும்; |
|
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து |
|
10 |
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது |
செறுத்த செய்யுள் செய் செந் நாவின், |
|
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன் |
|
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின் |
|
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப, |
|
15 |
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே. |
திணையும் துறையும் அவை.
| |
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது.
|
55 |
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, |
|
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி, |
|
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த |
|
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் |
|
5 |
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல, |
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற! |
|
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும், |
|
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என |
|
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட |
|
10 |
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்; |
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது, |
|
'பிறர்' எனக் குணம் கொல்லாது, |
|
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும், |
|
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும், |
|
15 |
வானத்து அன்ன வண்மையும், மூன்றும், |
உடையை ஆகி, இல்லோர் கையற, |
|
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர் |
|
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் |
|
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை, |
20 |
கடு வளி தொகுப்ப ஈண்டிய |
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
|
63 |
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி, |
|
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே; |
|
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் |
|
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே; |
|
5 |
தேர் தர வந்த சான்றோர் எல்லாம், |
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே; |
|
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம், |
|
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே; |
|
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென, |
|
10 |
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, |
என் ஆவதுகொல்தானே கழனி |
|
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
|
பாசவல் முக்கி, தண் புனல் பாயும், |
|
யாணர் அறாஅ வைப்பின் |
|
15 |
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே? |
திணையும் துறையும் அவை.
| |
அவரை அக் களத்தில் பரணர் பாடியது.
|
72 |
'நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர்; |
|
இளையன் இவன்' என உளையக் கூறி, |
|
'படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள் |
|
நெடு நல் யானையும், தேரும், மாவும், |
|
5 |
படை அமை மறவரும், உடையம் யாம்' என்று |
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கி, |
|
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை |
|
அருஞ் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு |
|
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய |
|
10 |
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது, |
'கொடியன் எம் இறை' எனக் கண்ணீர் பரப்பி, |
|
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக; |
|
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி |
|
மாங்குடி மருதன் தலைவன் ஆக, |
|
15 |
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் |
புலவர் பாடாது வரைக, என் நிலவரை; |
|
புரப்போர் புன்கண் கூர, |
|
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பாட்டு.
|
97 |
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், |
|
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், |
|
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே; |
|
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர் |
|
5 |
நறுங் கள்ளின் நாடு நைத்தலின், |
சுரை தழீஇய இருங் காழொடு |
|
மடை கலங்கி நிலை திரிந்தனவே; |
|
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் |
|
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், |
|
10 |
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே; |
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர் |
|
பொலம் பைந் தார் கெடப் பரிதலின், |
|
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே; |
|
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப் |
|
15 |
பொலந் தும்பைக் கழல் பாண்டில் |
கணை பொருத துளைத் தோலன்னே. |
|
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள், |
|
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் |
|
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு |
|
20 |
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின், |
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச் |
|
சொல்லவும் தேறீராயின், மெல் இயல், |
|
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி, |
|
குறுந் தொடி மகளிர் தோள் விடல் |
|
25 |
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே. |
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
|
116 |
தீம் நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் |
|
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல், |
|
ஏந்து எழில் மழைக் கண், இன் நகை, மகளிர் |
|
புல் மூசு கவலைய முள் மிடை வேலி, |
|
5 |
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், |
பீரை நாறிய சுரை இவர் மருங்கின், |
|
ஈத்து இலைக் குப்பை ஏறி, உமணர் |
|
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ; |
|
நோகோ யானே; தேய்கமா, காலை! |
|
10 |
பயில் பூஞ் சோலை மயில் எழுந்து ஆலவும், |
பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும், |
|
கலையும் கொள்ளாவாக, பலவும் |
|
காலம் அன்றியும் மரம் பயம் பகரும் |
|
யாணர் அறாஅ வியல் மலை அற்றே |
|
15 |
அண்ணல் நெடு வரை ஏறி, தந்தை |
பெரிய நறவின், கூர் வேல் பாரியது |
|
அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த |
|
வலம் படு தானை வேந்தர் |
|
பொலம் படைக் கலி மா எண்ணுவோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
135 |
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை, |
|
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி, |
|
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின், |
|
வளைக் கை விறலி என் பின்னள் ஆக, |
|
5 |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் |
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப, |
|
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் |
|
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ, |
|
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி, |
|
10 |
வந்தனென் எந்தை! யானே: என்றும், |
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு |
|
கறை அடி யானை இரியல் போக்கும் |
|
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்! |
|
களிறும் அன்றே; மாவும் அன்றே; |
|
15 |
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே; |
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர், |
|
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப் |
|
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு, |
|
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக் |
|
20 |
காண்டல் வேண்டிய அளவை வேண்டார் |
உறு முரண் கடந்த ஆற்றல் |
|
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடியது.
|
141 |
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை |
|
மாண் இழை விறலி மாலையொடு விளங்க, |
|
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ, |
|
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்! |
|
5 |
யாரீரோ?' என, வினவல் ஆனா, |
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! |
|
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே, |
|
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே, |
|
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும் |
|
10 |
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், |
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, |
|
கடாஅ யானைக் கலி மான் பேகன், |
|
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என, |
|
மறுமை நோக்கின்றோ அன்றே, |
|
15 |
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே. |
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
| |
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.
|
146 |
அன்ன ஆக: நின் அருங் கல வெறுக்கை |
|
அவை பெறல் வேண்டேம்; அடு போர்ப் பேக! |
|
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன் புல |
|
நல் நாடு பாட, என்னை நயந்து |
|
5 |
பரிசில் நல்குவைஆயின், குரிசில்! நீ |
நல்காமையின் நைவரச் சாஅய், |
|
அருந் துயர் உழக்கும் நின் திருந்துஇழை அரிவை |
|
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன, |
|
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ, |
|
10 |
தண் கமழ் கோதை புனைய, |
வண் பரி நெடுந் தேர் பூண்க, நின் மாவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது.
|
158 |
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், |
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, |
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் |
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் |
|
5 |
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; |
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, |
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; |
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், |
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; |
|
10 |
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, |
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, |
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி |
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று |
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர, |
|
15 |
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, |
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு | |
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் |
|
பாடி வருநரும் பிறரும் கூடி |
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் |
|
20 |
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் |
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, |
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, |
|
முள் புற முது கனி பெற்ற கடுவன் |
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், |
|
25 |
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! |
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! |
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு, |
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! |
|
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
|
178 |
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு, பணை முனிந்து |
|
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண், |
|
மணல் மலி முற்றம் புக்க சான்றோர் |
|
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று, |
|
5 |
'உண்ம்' என இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன் |
ஈண்டோ இன் சாயலனே; வேண்டார் |
|
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின், |
|
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய |
|
நெடுமொழி மறந்த சிறு பேராளர் |
|
10 |
அஞ்சி நீங்கும்காலை, |
ஏமமாகத் தான் முந்துறுமே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை.
| |
பாண்டியன் கீரஞ்சாத்தனை அவர் பாடியது.
|
197 |
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு |
|
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ, |
|
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு |
|
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ, |
|
5 |
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு |
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ, |
|
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர் |
|
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே; |
|
எம்மால் வியக்கப்படூஉமோரே, |
|
10 |
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த |
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு, |
|
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம், |
|
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின் |
|
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே; |
|
15 |
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும் |
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்; |
|
நல் அறிவு உடையோர் நல்குரவு |
|
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
205 |
முற்றிய திருவின் மூவர் ஆயினும், |
|
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே; |
|
விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி |
|
உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர் |
|
5 |
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை, |
வெள் வீ வேலிக் கோடைப் பொருந! |
|
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய |
|
மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய், |
|
நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக! |
|
10 |
ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து, |
கடல்வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ |
|
நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு |
|
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் |
|
களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
227 |
நனி பேதையே, நயன் இல் கூற்றம்! |
|
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை; |
|
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்; |
|
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும், |
|
5 |
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய, |
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின் |
|
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல் |
|
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் |
|
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி |
|
10 |
இனையோற் கொண்டனைஆயின், |
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.
|
229 |
ஆடு இயல் அழல் குட்டத்து |
|
ஆர் இருள் அரை இரவில், |
|
முடப் பனையத்து வேர் முதலாக் |
|
கடைக் குளத்துக் கயம் காய, |
|
5 |
பங்குனி உயர் அழுவத்து, |
தலை நாள்மீன் நிலை திரிய, |
|
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர, |
|
தொல் நாள்மீன் துறை படிய, |
|
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது, |
|
10 |
அளக்கர்த் திணை விளக்காகக் |
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி, |
|
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே; |
|
அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர், |
|
'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் |
|
15 |
நோய் இலனாயின் நன்றுமன் தில்' என |
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப, |
|
அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே; |
|
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும், |
|
திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும், |
|
20 |
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும், |
கால் இயல் கலி மாக் கதி இல வைகவும், |
|
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின், |
|
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி, |
|
தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோ |
|
25 |
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு |
அளந்து கொடை அறியா ஈகை, |
|
மணி வரை அன்ன மாஅயோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.
|
239 |
தொடியுடைய தோள் மணந்தனன்; |
|
கடி காவில் பூச் சூடினன்; |
|
தண் கமழும் சாந்து நீவினன்; |
|
செற்றோரை வழி தபுத்தனன்; |
|
5 |
நட்டோரை உயர்பு கூறினன்; |
'வலியர்' என, வழிமொழியலன்; |
|
'மெலியர்' என, மீக்கூறலன்; |
|
பிறரைத் தான் இரப்பு அறியலன்; |
|
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்; |
|
10 |
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்; |
வருபடை எதிர் தாங்கினன்; |
|
பெயர்படை புறங்கண்டனன்; |
|
கடும் பரிய மாக் கடவினன்; |
|
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்; |
|
15 |
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்; |
தீம் செறி தசும்பு தொலைச்சினன்; |
|
பாண் உவப்ப பசி தீர்த்தனன்; |
|
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச் |
|
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் |
|
20 |
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ! |
படு வழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே! |
|
திணையும் துறையும் அவை.
| |
நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியது.
|
240 |
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், |
|
வாடா யாணர் நாடும் ஊரும், |
|
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் |
|
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு, |
|
5 |
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, |
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ, |
|
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை, |
|
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும் |
|
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி, |
|
10 |
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது; |
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, |
|
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் |
|
வாடிய பசியராகி, பிறர் |
|
நாடு படு செலவினர் ஆயினர், இனியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
|
273 |
மா வாராதே; மா வாராதே; |
|
எல்லார் மாவும் வந்தன; எம் இல், |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் தந்த |
|
செல்வன் ஊரும் மா வாராதே |
|
5 |
இரு பேர் யாற்ற ஒரு பெருங் கூடல் |
விலங்கிடு பெரு மரம் போல, |
|
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே? |
|
திணை தும்பை; துறை குதிரை மறம்.
| |
எருமை வெளியனார் பாடியது.
|
299 |
பருத்தி வேலிச் சீறூர் மன்னன் |
|
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி, |
|
கடல் மண்டு தோணியின், படை முகம் போழ |
|
நெய்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின், |
|
5 |
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, |
அணங்குடை முருகன் கோட்டத்துக் |
|
கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே. |
|
திணை நொச்சி; துறை குதிரை மறம்.
| |
பொன்முடியார் பாடியது.
|
302 |
வெடி வேய் கொள்வது போல ஓடி, |
|
தாவுபு உகளும், மாவே; பூவே, |
|
விளங்குஇழை மகளிர் கூந்தல் கொண்ட; |
|
நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய |
|
5 |
ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ்க் |
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய, |
|
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்; |
|
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, |
|
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், |
|
10 |
விண் இவர் விசும்பின் மீனும், |
தண் பெயல் உறையும், உறை ஆற்றாவே. |
|
திணை அது; துறை குதிரை மறம்.
| |
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.
|
303 |
நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு குடையூஉ, |
|
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல் |
|
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த |
|
வெந் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப |
|
5 |
ஆட்டிக் காணிய வருமே நெருநை, |
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர், |
|
கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர் |
|
கயந்தலை மடப் பிடி புலம்ப, |
|
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
எருமை வெளியனார் பாடியது.
|
304 |
கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி, |
|
நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி, |
|
வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி |
|
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை, |
|
5 |
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு |
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி, |
|
புன் வயிறு அருத்தலும் செல்லான், வன் மான் |
|
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு, |
|
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் |
|
10 |
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று |
'இரண்டு ஆகாது அவன் கூறியது' எனவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
350 |
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், |
|
சிதைந்த இஞ்சி, கதுவாய் மூதூர் |
|
யாங்கு ஆவதுகொல் தானே, தாங்காது? |
|
படு மழை உருமின் இரங்கு முரசின் |
|
5 |
கடு மான் வேந்தர் காலை வந்து, எம் |
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ; |
|
பொருதாது அமைகுவர்அல்லர் போர் உழந்து, |
|
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய |
|
வடிவேல் எஃகின் சிவந்த உண்கண், |
|
10 |
தொடி பிறழ் முன்கை, இளையோள் |
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் பாடியது.
|
351 |
படு மணி மருங்கின பணைத் தாள் யானையும், |
|
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும், |
|
படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லென, |
|
கடல் கண்டன்ன கண் அகன் தானை |
|
5 |
வென்று எறி முரசின் வேந்தர், என்றும், |
வண் கை எயினன் வாகை அன்ன |
|
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்; |
|
என் ஆவதுகொல் தானே தெண் நீர்ப் |
|
பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை |
|
10 |
தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின், |
காமரு காஞ்சித் துஞ்சும் |
|
ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.
|
352 |
தேஎம் கொண்ட வெண் மண்டையான், |
|
வீ...................................................................கறக்குந்து; |
|
அவல் வகுத்த பசுங் குடையான், |
|
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
5 |
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
குன்று ஏறிப் புனல் பாயின், |
|
புற வாயால் புனல் வள |
|
............................................................ நொடை நறவின் |
|
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி |
|
10 |
உறந்தை அன்ன உரைசால் நன் கலம் |
கொடுப்பவும் கொளாஅனெ |
|
.......................ர் தந்த நாகு இள வேங்கையின், |
|
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் |
|
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும் |
|
15 |
சிறு கோல் உளையும் புரவி ª.................. |
...................................................................... யமரே. |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
361 |
கார் எதிர் உருமின் உரறி, கல்லென, |
|
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்! |
|
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல |
|
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு, |
|
5 |
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத் |
தாயின் நன்று பலர்க்கு ஈத்து, |
|
தெருள் நடை மா களிறொடு தன் |
|
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும், |
|
உருள் நடை ........................£ன்றதன் |
|
10 |
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், |
புரி மாலையர் பாடினிக்குப் |
|
பொலந் தாமரைப் பூம் பாணரொடு |
|
கலந்து அளைஇய நீள் இருக்கையால் |
|
பொறையொ............ மான் நோக்கின், |
|
15 |
வில் என விலங்கிய புருவத்து, வல்லென |
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர் |
|
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென |
|
............................................பொலங்கலத்து ஏந்தி, |
|
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன், |
|
20 |
நில்லா உலகத்து............... மை நீ |
சொல்ல வேண்டா................. முந்தறிந்த |
....................................................................................
| |
...............................................னார் பாடியது.
|
368 |
களிறு முகந்து பெயர்குவம் எனினே, |
|
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல, |
|
கைம்மா எல்லாம் கணை இடத் தொலைந்தன; |
|
கொடுஞ்சி நெடுந் தேர் முகக்குவம் எனினே; |
|
5 |
கடும் பரி நல் மான் வாங்குவயின் ஒல்கி, |
நெடும் பீடு அழிந்து, நிலம் சேர்ந்தனவே; |
|
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே, |
|
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிதாகி, |
|
வளி வழக்கு அறுத்த வங்கம் போல, |
|
10 |
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே; ஆங்க |
முகவை இன்மையின் உகவை இன்றி, |
|
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து, |
|
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ! |
|
கடாஅ யானைக் கால்வழி அன்ன என் |
|
15 |
தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி, |
பாடி வந்தது எல்லாம், கோடியர் |
|
முழவு மருள் திரு மணி மிடைந்த நின் |
|
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே. |
|
திணை வாகை; துறை மறக்களவழி.
| |
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற் பல் தடக் கைப் பெரு நற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.
|
369 |
இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின், |
|
கருங் கை யானை கொண்மூ ஆக, |
|
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த |
|
வாள் மின் ஆக, வயங்கு கடிப்பு அமைந்த |
|
5 |
குருதிப் பலிய முரசு முழக்கு ஆக, |
அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின், |
|
வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக, |
|
விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த |
|
கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை. |
|
10 |
ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக, |
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின் |
|
செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைஞ் சால், |
|
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி, |
|
விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ், |
|
15 |
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு, |
கண நரியோடு கழுது களம் படுப்ப, |
|
பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ, |
|
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள! |
|
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி |
|
20 |
வேய்வை காணா விருந்தின் போர்வை |
அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றி, |
|
பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று |
|
எழிலி தோயும் இமிழ் இசை அருவி, |
|
பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன |
|
25 |
ஓடை நுதல, ஒல்குதல் அறியா, |
துடி அடிக் குழவிய பிடி இடை மிடைந்த |
|
வேழ முகவை நல்குமதி |
|
தாழா ஈகைத் தகை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை; துறை ஏர்க்கள உருவகமும் ஆம்.
|
373 |
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப, |
|
செரு நவில் வேழம் கொண்மூ ஆக, |
|
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக் |
|
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை, |
|
5 |
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் |
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப, |
|
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை, |
|
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே! |
|
................................................தண்ட மாப் பொறி. |
|
10 |
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு, |
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து, |
|
மென் தோள் மகளிர் மன்றம் பேணார், |
|
புண்ணுவ |
|
..........................அணியப் புரவி வாழ்க என, |
|
15 |
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர, |
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர் |
|
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா, |
|
........................................................ற் றொக்கான |
|
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை, |
|
20 |
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு, |
உரும் எறி மலையின், இரு நிலம் சேர, |
|
சென்றோன் மன்ற, சொª |
|
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப, |
|
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, |
|
25 |
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் |
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி; |
|
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்! |
|
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று, |
|
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி, |
|
30 |
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும் |
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற, |
|
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி, |
|
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின், |
|
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும! |
|
35 |
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் |
தா இன்று உதவும் பண்பின், பேயொடு |
|
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து |
|
செஞ் செவி எருவை குழீஇ, |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
40 |
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம். |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
| |
கிழார் பாடியது.
|
377 |
பனி பழுநிய பல் யாமத்துப் |
|
பாறு தலை மயிர் நனைய, |
|
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின், |
|
இனையல் அகற்ற, என் கிணை தொடாக் குறுகி, |
|
5 |
'அவி உணவினோர் புறங்காப்ப, |
அற நெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று, |
|
அதற் கொண்டு வரல் ஏத்தி, |
|
'''கரவு இல்லாக் கவி வண் கையான், |
|
வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர் |
|
10 |
பிறர்க்கு உவமம் தான் அல்லது, |
தனக்கு உவமம் பிறர் இல்' என, |
|
அது நினைந்து, மதி மழுகி, |
|
ஆங்கு நின்ற எற் காணூஉச் |
|
'சேய் நாட்டுச் செல் கிணைஞனை! |
|
15 |
நீ புரவலை, எமக்கு' என்ன, |
மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், |
|
கடல் பயந்த கதிர் முத்தமும், |
|
வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும், |
|
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப, |
|
20 |
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்; |
நாடு என மொழிவோர், 'அவன் நாடு' என மொழிவோர்; |
|
வேந்து என மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்; |
|
.........................பொற் கோட்டு யானையர், |
|
கவர் பரிக் கச்சை நல் மான், |
|
25 |
வடி மணி, வாங்கு உருள, |
.....................,..........நல் தேர்க் குழுவினர், |
|
கதழ் இசை வன்கணினர், |
|
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி, |
|
கடல் ஒலி கொண்ட தானை |
|
30 |
அடல் வெங் குருசில்! மன்னிய நெடிதே! |
திணை அது; துறை வாழ்த்தியல்.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.
|
378 |
தென் பரதவர் மிடல் சாய, |
|
வட வடுகர் வாள் ஓட்டிய, |
|
தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக் கை, |
|
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின், |
|
5 |
நல் தார், கள்ளின், சோழன் கோயில், |
புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து, |
|
பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என் |
|
அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி, |
|
எஞ்சா மரபின் வஞ்சி பாட, |
|
10 |
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல, |
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை |
|
தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு, |
|
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல், |
|
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும், |
|
15 |
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும், |
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும், |
|
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும், |
|
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை |
|
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, |
|
20 |
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் |
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு, |
|
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே |
|
இருங் கிளைத் தலைமை எய்தி, |
|
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது.
|
382 |
கடல்படை அடல் கொண்டி, |
|
மண்டுற்ற மலிர் நோன் தாள், |
|
தண் சோழ நாட்டுப் பொருநன், |
|
அலங்கு உளை அணி இவுளி |
|
5 |
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; |
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்; |
|
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' என; |
|
நெய் குய்ய ஊன் நவின்ற |
|
பல் சோற்றான், இன் சுவைய |
|
10 |
நல்குரவின் பசித் துன்பின் நின் |
முன்னநாள் விட்ட மூது அறி சிறாஅரும், |
|
யானும், ஏழ் மணி, அம் கேழ், அணி உத்தி, |
|
கண் கேள்வி, கவை நாவின், |
|
நிறன் உற்ற, அராஅப் போலும் |
|
15 |
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப, |
விடுமதி அத்தை, கடு மான் தோன்றல்! |
|
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய; |
|
எனதே, கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை |
|
கண் அகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல் |
|
20 |
ஏறிதொறும் நுடங்கியாங்கு, நின் பகைஞர் |
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென், |
|
வென்ற தேர், பிறர் வேத்தவையானே. |
|
திணை அது; துறை கடைநிலை.
| |
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
387 |
வள் உகிர வயல் ஆமை |
|
வெள் அகடு கண்டன்ன, |
|
வீங்கு விசிப் புதுப் போர்வைத் |
|
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும் |
|
5 |
மாறு கொண்டோர் மதில் இடறி, |
நீறு ஆடிய நறுங் கவுள, |
|
பூம் பொறிப் பணை எருத்தின, |
|
வேறு வேறு பரந்து இயங்கி, |
|
வேந்துடை மிளை அயல் பரக்கும் |
|
10 |
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை, |
திருந்து தொழில் பல பகடு |
|
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின் |
|
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி, |
|
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று, |
|
15 |
யான் இசைப்பின், நனி நன்று எனா, |
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?......... |
|
மருவ இன் நகர் அகன்................................. |
|
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி, |
|
வென்று இரங்கும் விறல் முரசினோன், |
|
20 |
என் சிறுமையின், இழித்து நோக்கான், |
தன் பெருமையின் தகவு நோக்கி, |
|
குன்று உறழ்ந்த களிறு என்கோ? |
|
கொய் உளைய மா என்கோ? |
|
மன்று நிறையும் நிரை என்கோ? |
|
25 |
மனைக் களமரொடு களம் என்கோ? |
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின் |
|
நல்கியோனே, நசைசால் தோன்றல், |
|
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்! |
|
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள் |
|
30 |
செல்வக் கடுங்கோ வாழியாதன் |
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண் |
|
விடுவர் மாதோ நெடிதே நி |
|
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும் |
|
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் |
|
35 |
பல் ஊர் சுற்றிய கழனி |
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.
|