முகப்பு | தொடக்கம் |
பசு (ஆ,ஆன், நிரை, கறவை) |
5 |
எருமை அன்ன கருங் கல் இடை தோறு, |
|
ஆனின் பரக்கும் யானைய, முன்பின், |
|
கானக நாடனை! நீயோ, பெரும! |
|
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்: |
|
5 |
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா |
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல், |
|
குழவி கொள்பவரின், ஓம்புமதி! |
|
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே. |
|
திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
| |
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
|
9 |
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், |
|
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் |
|
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் |
|
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், |
|
5 |
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என, |
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின் |
|
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் |
|
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச் |
|
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த, |
|
10 |
முந்நீர் விழவின், நெடியோன் |
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
34 |
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், |
|
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், |
|
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும், |
|
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என, |
|
5 |
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் |
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என, |
|
அறம் பாடின்றே ஆயிழை கணவ! |
|
'காலை அந்தியும், மாலை அந்தியும், |
|
புறவுக் கரு அன்ன புன் புல வரகின் |
|
10 |
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, |
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, |
|
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து, |
|
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, |
|
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு |
|
15 |
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், |
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின், |
|
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்; |
|
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து, |
|
20 |
சான்றோர் செய்த நன்று உண்டாயின், |
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி, |
|
கொண்டல் மா மழை பொழிந்த |
|
நுண் பல் துளியினும் வாழிய, பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
117 |
மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும், |
|
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், |
|
வயலகம் நிறைய, புதல் பூ மலர, |
|
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண் |
|
5 |
ஆமா நெடு நிரை நன் புல் ஆர, |
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, |
|
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே |
|
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் |
|
பாசிலை முல்லை முகைக்கும் |
|
10 |
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
138 |
ஆனினம் கலித்த அதர் பல கடந்து, |
|
மானினம் கலித்த மலை பின் ஒழிய, |
|
மீனினம் கலித்த துறை பல நீந்தி, |
|
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ், |
|
5 |
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண! |
நீயே, பேர் எண்ணலையே; நின் இறை, |
|
'மாறி வா' என மொழியலன் மாதோ; |
|
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன் |
|
கிளி மரீஇய வியன் புனத்து |
|
10 |
மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின், |
நின்னை வருதல் அறிந்தனர் யாரே? |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
|
152 |
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி |
|
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ, |
|
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக் |
|
கேழற் பன்றி வீழ, அயலது |
|
5 |
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும், |
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன், |
|
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும் |
|
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன் |
|
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்; |
|
10 |
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின், |
சாரல் அருவிப் பய மலைக் கிழவன், |
|
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ? |
|
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் |
|
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்; |
|
15 |
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்; |
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்; |
|
பதலை ஒரு கண் பையென இயக்குமின்; |
|
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று, |
|
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, |
|
20 |
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி, |
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது |
|
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம் |
|
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர் |
|
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என, |
|
25 |
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் |
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு, |
|
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி, |
|
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன், |
|
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என, |
|
30 |
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை |
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன், |
|
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே! |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.
|
168 |
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் |
|
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் |
|
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, |
|
கடுங் கண் கேழல் உழுத பூழி, |
|
5 |
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் |
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை |
|
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் |
|
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், |
|
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி |
|
10 |
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, |
சாந்த விறகின் உவித்த புன்கம் |
|
கூதளம் கவினிய குளவி முன்றில், |
|
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் |
|
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், |
|
15 |
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, |
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! |
|
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! |
|
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, |
|
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் |
|
20 |
பாடுப என்ப பரிசிலர், நாளும் |
ஈயா மன்னர் நாண, |
|
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
| |
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.
|
204 |
'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர், |
|
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று; |
|
'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர், |
|
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று; |
|
5 |
தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல் |
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே; |
|
ஆவும் மாவும் சென்று உண, கலங்கி, |
|
சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும், |
|
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்; |
|
10 |
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, |
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால் |
|
புலவேன் வாழியர், ஓரி! விசும்பில் |
|
கருவி வானம் போல |
|
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.
|
224 |
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்; |
|
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி, |
|
இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்; |
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து, |
5 |
முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த |
தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு, |
|
பருதி உருவின் பல் படைப் புரிசை, |
|
எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண், |
|
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்; |
|
10 |
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்: |
இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்! |
|
அருவி மாறி, அஞ்சு வரக் கருகி, |
|
பெரு வறங் கூர்ந்த வேனில் காலை, |
|
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார், |
|
15 |
பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக் |
கொய்து கட்டு அழித்த வேங்கையின், |
|
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
|
230 |
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும், |
|
வெங் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும், |
|
களம் மலி குப்பை காப்பு இல வைகவும், |
|
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல், |
|
5 |
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள், |
பொய்யா எழினி பொருது களம் சேர |
|
ஈன்றோள் நீத்த குழவி போல, |
|
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய, |
|
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு |
|
10 |
நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி |
நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்! |
|
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான், |
|
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு |
|
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின், |
|
15 |
நேரார் பல் உயிர் பருகி, |
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே. |
|
திணை அது; துறை கையறு நிலை.
| |
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.
|
258 |
முள் கால் காரை முது பழன் ஏய்ப்பத் |
|
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் |
|
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு, |
|
பச்சூன் தின்று, பைந் நிணம் பெருத்த |
|
5 |
எச்சில் ஈர்ங் கை வில்புறம் திமிரி, |
புலம் புக்கனனே, புல் அணல் காளை; |
|
ஒரு முறை உண்ணாஅளவை, பெரு நிரை |
|
ஊர்ப் புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும் |
|
தொடுதல் ஓம்புமதி, முது கள் சாடி; |
|
10 |
ஆ தரக் கழுமிய துகளன், |
காய்தலும் உண்டு, அக் கள் வெய்யோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................உலோச்சனார் பாடியது.
|
259 |
ஏறுடைப் பெரு நிரை பெயர்தர, பெயராது, |
|
இலை புதை பெருங் காட்டுத் தலை கரந்து இருந்த |
|
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்; |
|
செல்லல், செல்லல்; சிறக்க, நின் உள்ளம், |
|
5 |
முருகு மெய்ப் பட்ட புலைத்தி போலத் |
தாவுபு தெறிக்கும் ஆன்மேல் |
|
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே! |
|
திணை கரந்தை; துறை செரு மலைதல்; பிள்ளைப் பெயர்ச்சியும் ஆம்.
| |
.......................கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.
|
260 |
வளரத் தொடினும், வௌவுபு திரிந்து, |
|
விளரி உறுதரும் தீம் தொடை நினையா, |
|
தளரும் நெஞ்சம் தலைஇ, மனையோள் |
|
உளரும் கூந்தல் நோக்கி, களர |
|
5 |
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி, |
பசி படு மருங்குலை, கசிபு, கைதொழாஅ, |
|
'காணலென்கொல்?' என வினவினை வரூஉம் |
|
பாண! கேண்மதி, யாணரது நிலையே: |
|
புரவுத் தொடுத்து உண்குவைஆயினும், இரவு எழுந்து |
|
10 |
எவ்வம் கொள்குவைஆயினும், இரண்டும், |
கையுள் போலும்; கடிது அண்மையவே |
|
முன் ஊர்ப் பூசலின் தோன்றி, தன் ஊர் |
|
நெடு நிரை தழீஇய மீளியாளர் |
|
விடு கணை நீத்தம் துடி புணை ஆக, |
|
15 |
வென்றி தந்து, கொன்று கோள் விடுத்து, |
வையகம் புலம்ப வளைஇய பாம்பின் |
|
வை எயிற்று உய்ந்த மதியின், மறவர் |
|
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன் |
|
நிரையொடு வந்த உரையன் ஆகி, |
|
20 |
உரி களை அரவம் மான, தானே |
அரிது செல் உலகில் சென்றனன்; உடம்பே, |
|
கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்று, |
|
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல, |
|
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே; |
|
25 |
உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே, |
மடம்சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி, |
|
இடம் பிறர் கொள்ளாச் சிறு வழி, |
|
படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே. |
|
திணை அது; துறை கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.
| |
......................வடமோதங் கிழார் பாடியது.
|
261 |
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்! |
|
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு |
|
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம், |
|
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக் |
|
5 |
கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே; |
வையம் காவலர் வளம் கெழு திரு நகர், |
|
மையல் யானை அயாவுயிர்த்தன்ன |
|
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை |
|
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப் |
|
10 |
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே |
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் |
|
உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி, |
|
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை |
|
விரகு அறியாளர் மரபின் சூட்ட, |
|
15 |
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய |
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி, |
|
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய |
|
கழி கல மகடூஉப் போலப் |
|
புல்லென்றனையால், பல் அணி இழந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|
262 |
நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; |
|
பாசுவல் இட்ட புன் கால் பந்தர்ப் |
|
புனல் தரும் இள மணல் நிறையப் பெய்ம்மின் |
|
ஒன்னார் முன்னிலை முருக்கி, பின் நின்று, |
|
5 |
நிரையொடு வரூஉம் என்னைக்கு |
உழையோர் தன்னினும் பெருஞ் சாயலரே. |
|
திணை வெட்சி; துறை உண்டாட்டு; தலைத்தோற்றமும் ஆம்.
| |
....................மதுரைப் பேராலவாயார் பாடியது.
|
263 |
பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் |
|
இரும் பறை இரவல! சேறிஆயின், |
|
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது, |
|
வண்டு மேம்படூஉம், இவ் வறநிலை ஆறே |
|
5 |
பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து, |
கல்லா இளையர் நீங்க நீங்கான், |
|
வில் உமிழ் கடுங் கணை மூழ்க, |
|
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே. |
|
திணை கரந்தை; துறை கையறுநிலை.
| |
......................................................................
|
264 |
பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி, |
|
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு, |
|
அணி மயில் பீலி சூட்டி, பெயர் பொறித்து, |
|
இனி நட்டனரே, கல்லும்; கன்றொடு |
|
5 |
கறவை தந்து பகைவர் ஓட்டிய |
நெடுந்தகை கழிந்தமை அறியாது, |
|
இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே? |
|
திணையும் துறையும் அவை.
| |
....................உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.
|
265 |
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, |
|
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் |
|
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, |
|
பல் ஆன் கோவலர் படலை சூட்ட, |
|
5 |
கல் ஆயினையே கடு மான் தோன்றல்! |
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் |
|
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் |
|
கடும் பகட்டு யானை வேந்தர் |
|
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.
|
269 |
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் |
|
பயிலாது அல்கிய பல் காழ் மாலை |
|
மை இரும் பித்தை பொலியச் சூட்டி, |
|
புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர் |
|
5 |
ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை, |
உவலைக் கண்ணித் துடியன் வந்தென, |
|
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது |
|
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி; |
|
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில் |
|
10 |
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர், |
கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப, |
|
தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங் கை வாளே. |
|
|
ஒளவையார் பாடியது.
|
275 |
கோட்டங் கண்ணியும், கொடுந்திரை ஆடையும், |
|
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும், |
|
ஒத்தன்று மாதோ, இவற்கே; செற்றிய |
|
திணி நிலை அலறக் கூவை போழ்ந்து, தன் |
|
5 |
வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி, |
'ஓம்புமின், ஓம்புமின், இவண்!' என, ஓம்பாது, |
|
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப, |
|
கன்று அமர் கறவை மான, |
|
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஒரூஉத்தனார் பாடியது.
|
319 |
பூவல் படுவில் கூவல் தோண்டிய |
|
செங் கண் சில் நீர் பெய்த சீறில் |
|
முன்றில் இருந்த முது வாய்ச் சாடி |
|
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று; |
|
5 |
படலை முன்றில் சிறு தினை உணங்கல் |
புறவும் இதலும் அறவும் உண்கெனப் |
|
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனான், |
|
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம்; புகுதந்து |
|
ஈங்கு இருந்தீமோ, முது வாய்ப் பாண! |
|
10 |
கொடுங் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி |
புன் தலைச் சிறாஅர் கன்று எனப் பூட்டும் |
|
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர், |
|
வேந்து விடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின் |
|
பாடினி மாலை அணிய, |
|
15 |
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. |
திணையும் துறையும் அவை.
| |
ஆலங்குடி வங்கனார் பாடியது.
|
323 |
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் |
|
சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும் |
|
கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... க்கு |
|
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை, |
|
5 |
வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் |
கறையடி யானைக்கு அல்லது |
|
உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே. |
|
........................................................
| |
................டார் கிழார் பாடியது.
|
325 |
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின், |
|
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென, |
|
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின், |
|
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் |
|
5 |
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை, |
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர் |
|
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச் |
|
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார், |
|
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் |
|
10 |
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, |
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், |
|
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும் |
|
அரு மிளை இருக்கையதுவே வென் வேல் |
|
வேந்து தலைவரினும் தாங்கும், |
|
15 |
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
|
339 |
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு |
|
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர் |
|
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல் |
|
5 |
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; |
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் |
|
கடல் ஆடிக் கயம் பாய்ந்து, |
|
கழி நெய்தல் பூக்குறூஉந்து; |
|
பைந் தழை துயல்வரும் செறு விறற.............. |
|
10 |
............................................................................லத்தி |
வளர வேண்டும், அவளே, என்றும் |
|
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி, |
|
முறம் செவி யானை வேந்தர் |
|
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|
386 |
நெடு நீர நிறை கயத்துப் |
|
படு மாரித் துளி போல, |
|
நெய் துள்ளிய வறை முகக்கவும், |
|
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும், |
|
5 |
ஊன் கொண்ட வெண் மண்டை |
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும், |
|
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது, |
|
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை |
|
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக; |
|
10 |
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் |
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின; |
|
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான், |
|
வில் இருந்த வெங் குறும்பின்று; |
|
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர் |
|
15 |
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து; |
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து; |
|
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே; |
|
பொராஅப் பொருநரேம்; |
|
20 |
குண திசை நின்று குடமுதல் செலினும், |
குட திசை நின்று குணமுதல் செலினும், |
|
வட திசை நின்று தென்வயின் செலினும், |
|
தென் திசை நின்று குறுகாது நீடினும், |
|
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம் |
|
25 |
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
|