முகப்பு | தொடக்கம் |
புலி (உழுவை, ஒருத்தல், வரி, வரிவயம்) |
4 |
வாள், வலம் தர, மறுப் பட்டன |
|
செவ் வானத்து வனப்புப் போன்றன; |
|
தாள், களம் கொள, கழல் பறைந்தன |
|
கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன; |
|
5 |
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ, |
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; |
|
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட, |
|
கறுழ் பொருத செவ் வாயான், |
|
எருத்து வவ்விய புலி போன்றன; |
|
10 |
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய், |
நுதி மழுங்கிய வெண் கோட்டான், |
|
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; |
|
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப் |
|
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, |
|
15 |
மாக் கடல் நிவந்து எழுதரும் |
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ |
|
அனையை ஆகன்மாறே, |
|
தாய் இல் தூவாக் குழவி போல, |
|
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
| |
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.
|
13 |
'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே |
|
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய, |
|
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின், |
|
மறலி அன்ன களிற்று மிசையோனே; |
|
5 |
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், |
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும், |
|
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப, |
|
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே; |
|
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! |
|
10 |
பழன மஞ்ஞை உகுத்த பீலி |
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும், |
|
கொழு மீன், விளைந்த கள்ளின், |
|
விழு நீர் வேலி நாடு கிழவோனே. |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
சோழன் முடித் தலைக் கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து,உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.
|
19 |
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை, |
|
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து, |
|
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும், |
|
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய! |
|
5 |
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய |
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி, |
|
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக் |
|
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல, |
|
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத் |
|
10 |
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து, |
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள, |
|
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் |
|
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்; |
|
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என, |
|
15 |
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி, |
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை, |
|
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின் |
|
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே? |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
23 |
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ, |
|
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்; |
|
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், |
|
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் |
|
5 |
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் |
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் |
|
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்; |
|
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் |
|
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர் |
|
10 |
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப, |
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி, |
|
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று, |
|
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும் |
|
துன்னல் போகிய துணிவினோன்' என, |
|
15 |
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை |
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட |
|
கால முன்ப! நின் கண்டனென் வருவல் |
|
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை |
|
20 |
பூளை நீடிய வெருவரு பறந்தலை |
வேளை வெண் பூக் கறிக்கும் |
|
ஆள் இல் அத்தம் ஆகிய காடே. |
|
திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
33 |
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் |
|
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் |
|
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய, |
|
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் |
|
5 |
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் |
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் |
|
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், |
|
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் |
|
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; |
|
10 |
பாடுநர் வஞ்சி பாட, படையோர் |
தாது எரு மறுகின் பாசறை பொலிய, |
|
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த |
|
மலரா மாலைப் பந்து கண்டன்ன |
|
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் |
|
15 |
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை |
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற |
|
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப, |
|
காம இருவர் அல்லது, யாமத்துத் |
|
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், |
|
20 |
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி |
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப, |
|
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
42 |
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் |
|
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் |
|
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை |
|
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து |
|
5 |
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின், |
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே; |
|
தண் புனல் பூசல் அல்லது, நொந்து, |
|
'களைக, வாழி, வளவ!' என்று, நின் |
|
முனைதரு பூசல் கனவினும் அறியாது, |
|
10 |
புலி புறங்காக்கும் குருளை போல, |
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப, |
|
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர் |
|
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர் |
|
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர் |
|
15 |
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை |
நீர் தரு மகளிர் குற்ற குவளையும், |
|
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும் |
|
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! |
|
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி, |
|
20 |
நில வரை இழிதரும் பல் யாறு போல, |
புலவர் எல்லாம் நின் நோக்கினரே; |
|
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக் |
|
கூற்று வெகுண்டன்ன முன்பொடு, |
|
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே. |
|
திணை வாகை; துறை அரசவாகை.
| |
அவனை இடைக்காடனார் பாடியது.
|
52 |
அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் முனைஇ, |
|
முணங்கு நிமிர் வயமான் முழு வலி ஒருத்தல், |
|
ஊன் நசை உள்ளம் துரப்ப, இரை குறித்து, |
|
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்தாங்கு, |
|
5 |
வட புல மன்னர் வாட, அடல் குறித்து, |
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி! |
|
இது நீ கண்ணியது ஆயின், இரு நிலத்து |
|
யார்கொல் அளியர்தாமே? ஊர்தொறும் |
|
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடுங் கொடி |
|
10 |
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் |
பெரு நல் யாணரின் ஒரீஇ, இனியே |
|
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப் |
|
பலி கண் மாறிய பாழ்படு பொதியில், |
|
நரை மூதாளர் நாய் இடக் குழிந்த |
|
15 |
வல்லின் நல் அகம் நிறைய, பல் பொறிக் |
கான வாரணம் ஈனும் |
|
காடு ஆகி விளியும் நாடு உடையோரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மருதன் இளநாகனார் பாடியது.
|
54 |
எம் கோன் இருந்த கம்பலை மூதூர், |
|
உடையோர் போல இடையின்று குறுகி, |
|
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல் |
|
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே; |
|
5 |
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து, |
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு |
|
ஆனாது ஈயும் கவி கை வண்மைக் |
|
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த |
|
நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை, |
|
10 |
பாசிலைத் தொடுத்த, உவலைக் கண்ணி, |
மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன் |
|
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப் |
|
புலி துஞ்சு வியன் புலத்தற்றே |
|
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது.
|
73 |
மெல்ல வந்து, என் நல் அடி பொருந்தி, |
|
'ஈ' என இரக்குவர் ஆயின், சீருடை |
|
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்; |
|
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென், இந் நிலத்து; |
|
5 |
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் |
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் |
|
துஞ்சு புலி இடறிய சிதடன் போல, |
|
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக் |
|
கழை தின் யானைக் கால் அகப்பட்ட |
|
10 |
வன் திணி நீள் முளை போல, சென்று, அவண் |
வருந்தப் பொரேஎன்ஆயின், பொருந்திய |
|
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் |
|
பல் இருங் கூந்தல் மகளிர் |
|
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளி பாட்டு.
|
78 |
வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாள், |
|
அணங்கு அருங் கடுந் திறல் என்னை முணங்கு நிமிர்ந்து, |
|
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன |
|
மலைப்பு அரும் அகலம் மதியார், சிலைத்து எழுந்து, |
|
5 |
'விழுமியம், பெரியம், யாமே; நம்மின் |
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது' என, |
|
எள்ளி வந்த வம்ப மள்ளர் |
|
புல்லென் கண்ணர்; புறத்தில் பெயர, |
|
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர் |
|
10 |
மாண் இழை மகளிர் நாணினர் கழிய, |
தந்தை தம் ஊர் ஆங்கண், |
|
தெண் கிணை கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
86 |
சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன் |
|
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன் |
|
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும் |
|
புலி சேர்ந்து போகிய கல் அளை போல, |
|
5 |
ஈன்ற வயிறோ இதுவே; |
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! |
|
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
| |
காவற்பெண்டின் பாட்டு.
|
90 |
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் |
|
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல், |
|
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ? |
|
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய |
|
5 |
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? |
அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய |
|
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, |
|
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும் |
|
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? |
|
10 |
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை |
வழு இல் வன் கை, மழவர் பெரும! |
|
இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும் |
|
பொருநரும் உளரோ, நீ களம் புகினே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
100 |
கையது வேலே; காலன புனை கழல்; |
|
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்; |
|
வட்கர் போகிய வளர் இளம் போந்தை |
|
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு, |
|
5 |
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ, |
சுரி இரும் பித்தை பொலியச் சூடி, |
|
வரிவயம் பொருத வயக் களிறு போல, |
|
இன்னும் மாறாது சினனே; அன்னோ! |
|
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே; |
|
10 |
செறுவர் நோக்கிய கண், தன் |
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே. |
|
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
| |
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.
|
135 |
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை, |
|
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி, |
|
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின், |
|
வளைக் கை விறலி என் பின்னள் ஆக, |
|
5 |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் |
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப, |
|
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் |
|
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ, |
|
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி, |
|
10 |
வந்தனென் எந்தை! யானே: என்றும், |
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு |
|
கறை அடி யானை இரியல் போக்கும் |
|
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்! |
|
களிறும் அன்றே; மாவும் அன்றே; |
|
15 |
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே; |
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர், |
|
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப் |
|
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு, |
|
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக் |
|
20 |
காண்டல் வேண்டிய அளவை வேண்டார் |
உறு முரண் கடந்த ஆற்றல் |
|
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடியது.
|
152 |
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி |
|
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ, |
|
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக் |
|
கேழற் பன்றி வீழ, அயலது |
|
5 |
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும், |
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன், |
|
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும் |
|
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன் |
|
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்; |
|
10 |
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின், |
சாரல் அருவிப் பய மலைக் கிழவன், |
|
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ? |
|
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் |
|
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்; |
|
15 |
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்; |
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்; |
|
பதலை ஒரு கண் பையென இயக்குமின்; |
|
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று, |
|
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, |
|
20 |
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி, |
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது |
|
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம் |
|
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர் |
|
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என, |
|
25 |
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் |
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு, |
|
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி, |
|
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன், |
|
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என, |
|
30 |
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை |
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன், |
|
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே! |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.
|
157 |
தமர் தற் தப்பின் அது நோன்றல்லும், |
|
பிறர் கையறவு தான் நாணுதலும், |
|
படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும், |
|
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும், |
|
5 |
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன், |
சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல், |
|
கோடல் கண்ணி, குறவர் பெருமகன் |
|
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை, |
|
எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி, |
|
10 |
கட்சி காணாக் கடமான் நல் ஏறு |
மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை |
|
இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும் |
|
பெருங் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஏறைக் கோனைக் குறமகள் இளவெயினி பாடியது.
|
160 |
'உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த |
|
முளி புல் கானம் குழைப்ப, கல்லென |
|
அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு, |
|
பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை |
|
5 |
அவிழ் புகுவு அறியாதுஆகலின், வாடிய |
நெறி கொள் வரிக் குடர் குளிப்பத் தண்ணென, |
|
குய் கொள் கொழுந் துவை நெய்யுடை அடிசில், |
|
மதி சேர் நாள்மீன் போல, நவின்ற |
|
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ, |
|
10 |
"கேடு இன்றாக, பாடுநர் கடும்பு" என, |
அரிது பெறு பொலங் கலம் எளிதினின் வீசி, |
|
நட்டோர் நட்ட நல் இசைக் குமணன், |
|
மட்டு ஆர் மறுகின், முதிரத்தோனே; |
|
செல்குவைஆயின், நல்குவன், பெரிது' என, |
|
15 |
பல் புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து, |
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று, |
|
இல் உணாத் துறத்தலின், இல் மறந்து உறையும் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண் |
|
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன், |
|
20 |
கூழும் சோறும் கடைஇ, ஊழின் |
உள் இல் வறுங் கலம் திறந்து, அழக் கண்டு, |
|
மறப் புலி உரைத்தும், மதியம் காட்டியும், |
|
நொந்தனளாகி, 'நுந்தையை உள்ளி, |
|
பொடிந்த நின் செவ்வி காட்டு' எனப் பலவும் |
|
25 |
வினவல் ஆனாளாகி, நனவின் |
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப, |
|
செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே |
|
விடுதல் வேண்டுவல் அத்தை; படு திரை |
|
நீர் சூழ் நிலவரை உயர, நின் |
|
30 |
சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
170 |
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி, |
|
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர், |
|
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி |
|
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென, |
|
5 |
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப, |
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி |
|
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் |
|
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன், |
|
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே |
|
10 |
சிறு கண் யானை வெண் கோடு பயந்த |
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, |
|
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல் |
|
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி, |
|
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு |
|
15 |
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன் |
விசைத்து எறி கூடமொடு பொரூஉம் |
|
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
| |
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
174 |
அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென, |
|
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது, |
|
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து |
|
இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல் |
|
5 |
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு, |
அரசு இழந்திருந்த அல்லல் காலை, |
|
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது |
|
இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி |
|
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர, |
|
10 |
பொய்யா நாவின் கபிலன் பாடிய, |
மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச் |
|
செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட |
|
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை, |
|
அரு வழி இருந்த பெரு விறல் வளவன் |
|
15 |
மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை |
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந! |
|
விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண், |
|
சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன் |
|
ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர், |
|
20 |
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், |
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் |
|
கவலை நெஞ்சத்து அவலம் தீர, |
|
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்! |
|
கல் கண் பொடிய, கானம் வெம்ப, |
|
25 |
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க, |
கோடை நீடிய பைது அறு காலை, |
|
இரு நிலம் நெளிய ஈண்டி, |
|
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
190 |
விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர் |
|
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும் |
|
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம் |
|
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு |
|
5 |
இயைந்த கேண்மை இல்லாகியரோ! |
கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென, |
|
அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள், |
|
பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து, |
|
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் |
|
10 |
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து |
உரனுடையாளர் கேண்மையொடு |
|
இயைந்த வைகல் உள ஆகியரோ! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நல்லுருத்திரன் பாட்டு.
|
202 |
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட, |
|
கட்சி காணாக் கடமா நல் ஏறு |
|
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர, |
|
கடிய கதழும் நெடு வரைப் படப்பை |
|
5 |
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, |
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர், |
|
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய |
|
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி: |
|
நுந்தை தாயம் நிறைவுற எய்திய |
|
10 |
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்! |
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் |
|
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை |
|
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்! |
|
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர் |
|
15 |
கை வண் பாரி மகளிர்' என்ற என் |
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும! |
|
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து, |
|
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
|
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல் |
|
20 |
இரும் புலி வரிப் புறம் கடுக்கும் |
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.
|
237 |
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, |
|
பாடி நின்ற பசி நாட்கண்ணே, |
|
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, |
|
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் |
|
5 |
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என |
நச்சி இருந்த நசை பழுதாக, |
|
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு, |
|
'அளியர்தாமே ஆர்க' என்னா |
|
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, |
|
10 |
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் |
வாழைப் பூவின் வளை முறி சிதற, |
|
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க, |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: |
|
15 |
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் |
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், |
|
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் |
|
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, |
|
நனியுடைப் பரிசில் தருகம், |
|
20 |
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|
255 |
'ஐயோ!' எனின், யான் புலி அஞ்சுவலே; |
|
அணைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்கவல்லேன்; |
|
என் போல் பெரு விதிர்ப்புறுக, நின்னை |
|
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே! |
|
5 |
நிரை வளை முன் கை பற்றி |
வரை நிழல் சேர்கம் நடத்திசின் சிறிதே! |
|
திணையும் துறையும் அவை.
| |
....................வன்பரணர் பாடியது.
|
269 |
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் |
|
பயிலாது அல்கிய பல் காழ் மாலை |
|
மை இரும் பித்தை பொலியச் சூட்டி, |
|
புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர் |
|
5 |
ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை, |
உவலைக் கண்ணித் துடியன் வந்தென, |
|
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது |
|
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி; |
|
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில் |
|
10 |
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர், |
கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப, |
|
தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங் கை வாளே. |
|
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
| |
ஒளவையார் பாடியது.
|
323 |
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் |
|
சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும் |
|
கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... க்கு |
|
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை, |
|
5 |
வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் |
கறையடி யானைக்கு அல்லது |
|
உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே. |
|
........................................................
| |
................டார் கிழார் பாடியது.
|
341 |
வேந்து குறையுறவும் கொடாஅன், ஏந்து கோட்டு |
|
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல், |
|
செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை, |
|
எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின் |
|
5 |
அரை மண் இஞ்சி நாட் கொடி நுடங்கும் |
.......................................................................................................... |
|
புலிக் கணத்து அன்ன கடுங் கண் சுற்றமொடு, |
|
மாற்றம் மாறான், மறலிய சினத்தன், |
|
'பூக் கோள்' என ஏஎய், கயம் புக்கனனே; |
|
10 |
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல் இயல், |
சுணங்கு அணி வன முலை, அவளொடு நாளை |
|
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ |
|
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின், |
|
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு |
|
15 |
வாரா உலகம் புகுதல் ஒன்று எனப் |
படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக் |
|
களிறு பொரக் கலங்கிய தண் கயம் போல, |
|
பெருங் கவின் இழப்பது கொல்லோ, |
|
மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
374 |
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் |
|
புல்வாய் இரலை நெற்றி அன்ன, |
|
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத் |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
5 |
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என் |
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
|
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர, |
|
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட, |
|
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர் |
|
10 |
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா |
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை, |
|
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம், |
|
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும், |
|
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ, |
|
15 |
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன், |
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல, |
|
வண்மையும் உடையையோ? ஞாயிறு! |
|
கொன் விளங்குதியால் விசும்பினானே! |
|
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
| |
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|
398 |
மதி நிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர, |
|
வகை மாண் நல் இல்........................ |
|
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப, |
|
பொய்கைப் பூ முகை மலர, பாணர் |
|
5 |
கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க, |
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறை, |
|
பரிசிலர் விசையெ |
|
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன், |
|
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப் |
|
10 |
புலியினம் மடிந்த கல் அளை போல, |
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர், |
|
மதியத்து அன்ன என் அரிக் குரல் தடாரி, |
|
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து, |
|
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்! |
|
15 |
'தள்ளா நிலையை ஆகியர் எமக்கு' என |
என் வரவு அறீஇ, |
|
சிறிதிற்குப் பெரிது உவந்து, |
|
விரும்பிய முகத்தன் ஆகி, என் அரைத் |
|
துரும்பு படு சிதாஅர் நீக்கி, தன் அரைப் |
|
20 |
புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ, |
அழல் கான்றன்ன அரும் பெறல் மண்டை, |
|
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி, |
|
யான் உண அருளல் அன்றியும், தான் உண் |
|
மண்டைய கண்ட மான் வறைக் கருனை, |
|
25 |
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர, |
வரை உறழ் மார்பின், வையகம் விளக்கும், |
|
விரவு மணி ஒளிர்வரும், அரவு உறழ் ஆரமொடு, |
|
புரையோன் மேனிப் பூத்தசல....................... |
|
முரைசெல அருளியோனே |
|
30 |
........................யருவிப் பாயல் கோவே. |
திணை பாடாண் திணை; துறை கடைநிலை.
| |
சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.
|