முகப்பு | தொடக்கம் |
முதலை (கரா, கராம்) |
37 |
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, |
|
வேக வெந் திறல், நாகம் புக்கென, |
|
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப் |
|
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு, |
|
5 |
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல், |
சினம் கெழு தானை, செம்பியன் மருக! |
|
கராஅம் கலித்த குண்டு கண் அகழி, |
|
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி, |
|
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் |
|
10 |
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி, |
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர், |
|
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின், |
|
'நல்ல' என்னாது, சிதைத்தல் |
|
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே. |
|
திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
104 |
போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை: |
|
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் |
|
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் |
|
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை |
|
5 |
நுண் பல் கருமம் நினையாது, |
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
283 |
ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி, |
|
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப் |
|
பௌவ உறை அளவா, |
|
..................................................................... வி மயக்கி, |
|
5 |
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் |
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும், |
|
வலம் புரி கோசர் அவைக் களத்தானும், |
|
மன்றுள் என்பது கெட... |
|
...........................................£னே பாங்கற்கு |
|
10 |
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க, |
உயிர் புறப்படாஅ அளவைத் தெறுவர, |
|
தெற்றிப் பாவை திணி மணல் அயரும் |
|
மென் தோள் மகளிர் நன்று புரப்ப, |
|
.....................................................ண்ட பாசிலைக் |
|
15 |
கவிழ் பூந் தும்பை நுதல் அசைத்தோனே. |
திணை தும்பை; துறை பாண் பாட்டு.
| |
அடை நெடுங் கல்வியார் பாடியது.
|