முகப்பு | தொடக்கம் |
முள்ளம் பன்றி (முளவு) |
325 |
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின், |
|
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென, |
|
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின், |
|
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் |
|
5 |
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை, |
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர் |
|
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச் |
|
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார், |
|
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் |
|
10 |
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, |
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், |
|
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும் |
|
அரு மிளை இருக்கையதுவே வென் வேல் |
|
வேந்து தலைவரினும் தாங்கும், |
|
15 |
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
|
374 |
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் |
|
புல்வாய் இரலை நெற்றி அன்ன, |
|
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத் |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
5 |
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என் |
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
|
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர, |
|
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட, |
|
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர் |
|
10 |
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா |
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை, |
|
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம், |
|
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும், |
|
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ, |
|
15 |
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன், |
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல, |
|
வண்மையும் உடையையோ? ஞாயிறு! |
|
கொன் விளங்குதியால் விசும்பினானே! |
|
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
| |
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|