முகப்பு | தொடக்கம் |
யானை (களிறு, பிடி, வேழம், பகடு, கைமா,கைமான்) |
3 |
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை |
|
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற, |
|
ஏம முரசம் இழுமென முழங்க, |
|
நேமி உய்த்த நேஎ நெஞ்சின், |
|
5 |
தவிரா ஈகை, கவுரியர் மருக! |
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ! |
|
பொன் ஓடைப் புகர் அணி நுதல், |
|
துன் அருந் திறல், கமழ் கடாஅத்து, |
|
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ, |
|
10 |
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின், |
பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து, |
|
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக் |
|
கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி! |
|
நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்; |
|
15 |
பொலங் கழற் கால், புலர் சாந்தின் |
விலங்கு அகன்ற வியல் மார்ப! |
|
ஊர் இல்ல, உயவு அரிய, |
|
நீர் இல்ல, நீள் இடைய, |
|
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின், |
|
20 |
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர் |
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை, |
|
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும் |
|
உன்ன மரத்த துன் அருங் கவலை, |
|
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது |
|
25 |
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் |
இன்மை தீர்த்தல் வன்மையானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் கருங் கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார்பாடியது.
|
5 |
எருமை அன்ன கருங் கல் இடை தோறு, |
|
ஆனின் பரக்கும் யானைய, முன்பின், |
|
கானக நாடனை! நீயோ, பெரும! |
|
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்: |
|
5 |
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா |
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல், |
|
குழவி கொள்பவரின், ஓம்புமதி! |
|
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே. |
|
திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
| |
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
|
6 |
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும், |
|
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும், |
|
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும், |
|
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும், |
|
5 |
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின் |
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது |
|
ஆனிலை உலகத்தானும், ஆனாது, |
|
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த் |
|
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம் |
|
10 |
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க! |
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து, |
|
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச் |
|
சிறு கண் யானை செவ்விதின் ஏவி, |
|
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து, |
|
15 |
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம் |
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி, |
|
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர் |
|
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே! |
|
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த |
|
20 |
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே! |
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார் |
|
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே! |
|
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை |
|
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே! |
|
25 |
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய |
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி! |
|
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர் |
|
ஒண் கதிர் ஞாயிறு போலவும், |
|
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே! |
|
திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.
|
7 |
களிறு கடைஇய தாள், |
|
கழல் உரீஇய திருந்து அடி, |
|
கணை பொருது கவி வண் கையால், |
|
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து, |
|
5 |
மா மறுத்த மலர் மார்பின், |
தோல் பெயரிய எறுழ் முன்பின், |
|
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர் |
|
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக் |
|
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல |
|
10 |
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ! |
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து |
|
மீனின் செறுக்கும் யாணர்ப் |
|
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை; மழபுல வஞ்சியும் ஆம்.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
|
9 |
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், |
|
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் |
|
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் |
|
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், |
|
5 |
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என, |
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின் |
|
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் |
|
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச் |
|
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த, |
|
10 |
முந்நீர் விழவின், நெடியோன் |
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
12 |
பாணர் தாமரை மலையவும், புலவர் |
|
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும், |
|
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி! |
|
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு, |
|
5 |
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே? |
திணை அது; துறை இயன்மொழி.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
13 |
'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே |
|
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய, |
|
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின், |
|
மறலி அன்ன களிற்று மிசையோனே; |
|
5 |
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், |
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும், |
|
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப, |
|
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே; |
|
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! |
|
10 |
பழன மஞ்ஞை உகுத்த பீலி |
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும், |
|
கொழு மீன், விளைந்த கள்ளின், |
|
விழு நீர் வேலி நாடு கிழவோனே. |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
சோழன் முடித் தலைக் கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து,உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.
|
14 |
கடுங் கண்ண கொல் களிற்றால் |
|
காப்பு உடைய எழு முருக்கி, |
|
பொன் இயல் புனை தோட்டியால் |
|
முன்பு துரந்து, சமம் தாங்கவும்; |
|
5 |
பார் உடைத்த குண்டு அகழி |
நீர் அழுவ நிவப்புக் குறித்து, |
|
நிமிர் பரிய மா தாங்கவும்; |
|
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச் |
|
சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்; |
|
10 |
பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்! |
வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை. |
|
புலவு நாற்றத்த பைந் தடி |
|
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை |
|
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது, |
|
15 |
பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும் |
மெல்லிய பெரும! தாமே. நல்லவர்க்கு |
|
ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு |
|
இரு நிலத்து அன்ன நோன்மை, |
|
செரு மிகு சேஎய்! நிற் பாடுநர் கையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப் பற்றி, 'மெல்லியவாமால் நூம்கை' என, கபிலர் பாடியது.
|
15 |
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், |
|
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, |
|
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்; |
|
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல், |
|
5 |
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத் |
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து; |
|
துளங்கு இயலான், பணை எருத்தின், |
|
பாவு அடியான், செறல் நோக்கின், |
|
ஒளிறு மருப்பின் களிறு அவர |
|
10 |
காப்பு உடைய கயம் படியினை; |
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின், |
|
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு |
|
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார் |
|
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார், |
|
15 |
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய, |
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல் |
|
நல் பனுவல், நால் வேதத்து, |
|
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை |
|
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண் |
|
20 |
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, |
யூபம் நட்ட வியன் களம் பலகொல்? |
|
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று |
|
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின் |
|
பாடினி பாடும் வஞ்சிக்கு |
|
25 |
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே. |
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
16 |
வினை மாட்சிய விரை புரவியொடு, |
|
மழை உருவின தோல் பரப்பி, |
|
முனை முருங்கத் தலைச் சென்று, அவர் |
|
விளை வயல் கவர்பூட்டி, |
|
5 |
மனை மரம் விறகு ஆகக் |
கடி துறை நீர்க் களிறு படீஇ, |
|
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் |
|
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற, |
|
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை, |
|
10 |
துணை வேண்டாச் செரு வென்றி, |
புலவு வாள், புலர் சாந்தின், |
|
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்! |
|
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், |
|
பனிப் பகன்றை, கனிப் பாகல், |
|
15 |
கரும்பு அல்லது காடு அறியாப் |
பெருந் தண் பணை பாழ் ஆக, |
|
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை, |
|
நாம நல் அமர் செய்ய, |
|
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே. |
|
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.
|
17 |
தென் குமரி, வட பெருங்கல், |
|
குண குட கடலா எல்லை, |
|
குன்று, மலை, காடு, நாடு, |
|
ஒன்று பட்டு வழிமொழிய, |
|
5 |
கொடிது கடிந்து, கோல் திருத்தி, |
படுவது உண்டு, பகல் ஆற்றி, |
|
இனிது உருண்ட சுடர் நேமி |
|
முழுது ஆண்டோர் வழி காவல! |
|
குலை இறைஞ்சிய கோள் தாழை |
|
10 |
அகல் வயல், மலை வேலி, |
நிலவு மணல் வியன் கானல், |
|
தெண் கழிமிசைத் தீப் பூவின், |
|
தண் தொண்டியோர் அடு பொருந! |
|
மாப் பயம்பின் பொறை போற்றாது, |
|
15 |
நீடு குழி அகப்பட்ட |
பீடு உடைய எறுழ் முன்பின், |
|
கோடு முற்றிய கொல் களிறு |
|
நிலை கலங்கக் குழி கொன்று, |
|
கிளை புகலத் தலைக்கூடியாங்கு |
|
20 |
நீ பட்ட அரு முன்பின் |
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப, |
|
பிறிது சென்று, மலர் தாயத்துப் |
|
பலர் நாப்பண் மீக்கூறலின், |
|
'உண்டாகிய உயர் மண்ணும், |
|
25 |
சென்று பட்ட விழுக் கலனும், |
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும், |
|
'ஏந்து கொடி இறைப்புரிசை, |
|
வீங்கு சிறை, வியல்அருப்பம், |
|
இழந்து வைகுதும், இனி நாம் இவன் |
|
30 |
உடன்று நோக்கினன், பெரிது' எனவும், |
வேற்று அரசு பணி தொடங்கு நின் |
|
ஆற்றலொடு புகழ் ஏத்தி, |
|
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய |
|
மழை என மருளும் பல் தோல், மலை எனத் |
|
35 |
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை, |
உடலுநர் உட்க வீங்கி, கடல் என |
|
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது |
|
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப, |
|
இடி என முழங்கும் முரசின், |
|
40 |
வரையா ஈகைக் குடவர் கோவே! |
திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
|
19 |
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை, |
|
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து, |
|
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும், |
|
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய! |
|
5 |
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய |
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி, |
|
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக் |
|
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல, |
|
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத் |
|
10 |
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து, |
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள, |
|
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் |
|
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்; |
|
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என, |
|
15 |
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி, |
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை, |
|
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின் |
|
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே? |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
22 |
தூங்கு கையான் ஓங்கு நடைய, |
|
உறழ் மணியான் உயர் மருப்பின, |
|
பிறை நுதலான் செறல் நோக்கின, |
|
பா அடியான் பணை எருத்தின, |
|
5 |
தேன் சிதைந்த வரை போல, |
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து, |
|
அயறு சோரும் இருஞ் சென்னிய, |
|
மைந்து மலிந்த மழ களிறு |
|
கந்து சேர்பு நிலைஇ வழங்க; |
|
10 |
பாஅல் நின்று கதிர் சோரும் |
வான் உறையும் மதி போலும் |
|
மாலை வெண் குடை நீழலான், |
|
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க; |
|
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த |
|
15 |
ஆய் கரும்பின் கொடிக் கூரை, |
சாறு கொண்ட களம் போல, |
|
வேறு வேறு பொலிவு தோன்ற; |
|
குற்று ஆனா உலக்கையான் |
|
கலிச் சும்மை வியல் ஆங்கண், |
|
20 |
பொலந் தோட்டுப் பைந் தும்பை |
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ, |
|
சின மாந்தர் வெறிக் குரவை |
|
ஓத நீரின் பெயர்பு பொங்க; |
|
வாய் காவாது பரந்து பட்ட |
|
25 |
வியன் பாசறைக் காப்பாள! |
வேந்து தந்த பணி திறையான் |
|
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும், |
|
ஓங்கு கொல்லியோர், அடு பொருந! |
|
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்! |
|
30 |
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே, |
நிற் பாடிய வயங்கு செந் நாப் |
|
பின் பிறர் இசை நுவலாமை, |
|
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ! |
|
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே |
|
35 |
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து, |
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை, |
|
வேறு புலத்து இறுக்கும் தானையொடு, |
|
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே! |
|
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
| |
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
|
23 |
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ, |
|
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்; |
|
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், |
|
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் |
|
5 |
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் |
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் |
|
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்; |
|
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் |
|
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர் |
|
10 |
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப, |
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி, |
|
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று, |
|
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும் |
|
துன்னல் போகிய துணிவினோன்' என, |
|
15 |
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை |
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட |
|
கால முன்ப! நின் கண்டனென் வருவல் |
|
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை |
|
20 |
பூளை நீடிய வெருவரு பறந்தலை |
வேளை வெண் பூக் கறிக்கும் |
ஆள் இல் அத்தம் ஆகிய காடே. |
|
திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
24 |
நெல் அரியும் இருந் தொழுவர் |
|
செஞ் ஞாயிற்று வெயில் முனையின், |
|
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; |
|
திண் திமில் வன் பரதவர் |
|
5 |
வெப்பு உடைய மட்டு உண்டு, |
தண் குரவைச் சீர் தூங்குந்து; |
|
தூவல் கலித்த தேம் பாய் புன்னை |
|
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் |
|
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; |
|
10 |
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் |
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் |
|
இரும் பனையின் குரும்பை நீரும், |
|
பூங் கரும்பின் தீம் சாறும், |
|
ஓங்கு மணல் குவவுத் தாழைத் |
|
15 |
தீம் நீரொடு உடன் விராஅய், |
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; |
|
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய |
|
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி |
|
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் |
|
20 |
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், |
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், |
|
குப்பை நெல்லின், முத்தூறு தந்த |
|
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! |
|
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது |
|
25 |
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே |
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு |
|
நின்று மூத்த யாக்கை அன்ன, நின் |
|
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த |
|
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, |
|
30 |
இரவல் மாக்கள் ஈகை நுவல, |
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய |
|
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, |
|
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது |
|
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை, |
|
35 |
மலர் தலை உலகத்துத் தோன்றி, |
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
26 |
நளி கடல் இருங் குட்டத்து |
|
வளி புடைத்த கலம் போல, |
|
களிறு சென்று களன் அகற்றவும், |
|
களன் அகற்றிய வியல் ஆங்கண் |
|
5 |
ஒளிறு இலைய எஃகு ஏந்தி, |
அரைசு பட அமர் உழக்கி, |
|
உரை செல முரசு வௌவி, |
|
முடித் தலை அடுப்பு ஆக, |
|
புனல் குருதி உலைக் கொளீஇ, |
|
10 |
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின், |
அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய! |
|
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை, |
|
நான் மறை முதல்வர் சுற்றம் ஆக, |
|
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய |
|
15 |
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே! |
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு |
|
மாற்றார் என்னும் பெயர் பெற்று, |
|
ஆற்றார் ஆயினும், ஆண்டு வாழ்வோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
30 |
செஞ் ஞாயிற்றுச் செலவும், |
|
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், |
|
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், |
|
வளி திரிதரு திசையும், |
|
5 |
வறிது நிலைஇய காயமும், என்று இவை |
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும் |
|
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் |
|
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, |
|
களிறு கவுள் அடுத்த எறிகல் போல |
|
10 |
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட |
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு |
|
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது |
|
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர் |
|
இடைப் புலப் பெரு வழிச் சொரியும் |
|
15 |
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே! |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி
| |
அவனை அவர் பாடியது.
|
31 |
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் |
|
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, |
|
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை, |
|
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க, |
|
5 |
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் |
பாசறை அல்லது நீ ஒல்லாயே; |
|
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் |
|
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே; |
|
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர், |
|
10 |
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய; |
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென் |
|
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து, |
|
குண கடல் பின்னது ஆக, குட கடல் |
|
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, |
|
15 |
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து, |
நெஞ்சு நடுங்கு அவலம் பாய, |
|
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே. |
|
திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
35 |
நளி இரு முந்நீர் ஏணி ஆக, |
|
வளி இடை வழங்கா வானம் சூடிய |
|
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், |
|
முரசு முழங்கு தானை மூவருள்ளும், |
|
5 |
அரசு எனப்படுவது நினதே, பெரும! |
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், |
|
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும், |
|
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட, |
|
தோடு கொள் வேலின் தோற்றம் போல, |
|
10 |
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் |
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க |
|
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! |
|
நினவ கூறுவல்; எனவ கேண்மதி! |
|
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து |
|
15 |
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு |
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே; |
|
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ |
|
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு, |
|
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை |
|
20 |
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய |
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ! |
|
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப, |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து, |
|
25 |
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை |
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; |
|
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், |
|
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், |
|
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்; |
|
30 |
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும் |
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, |
|
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, |
|
குடி புறந்தருகுவை ஆயின், நின் |
|
அடி புறந்தருகுவர், அடங்காதோரே. |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.
|
37 |
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த, |
|
வேக வெந் திறல், நாகம் புக்கென, |
|
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப் |
|
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு, |
|
5 |
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல், |
சினம் கெழு தானை, செம்பியன் மருக! |
|
கராஅம் கலித்த குண்டு கண் அகழி, |
|
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி, |
|
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் |
|
10 |
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி, |
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர், |
|
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின், |
|
'நல்ல' என்னாது, சிதைத்தல் |
|
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே. |
|
திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
38 |
வரை புரையும் மழ களிற்றின் மிசை, |
|
வான் துடைக்கும் வகைய போல, |
|
விரவு உருவின கொடி நுடங்கும் |
|
வியன் தானை விறல் வேந்தே! |
|
5 |
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ, |
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப, |
|
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், |
|
வெண் திங்களுள் வெயில் வேண்டினும், |
|
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின், |
10 |
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த, |
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப் |
|
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும் |
|
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை, |
|
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் |
|
15 |
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என, |
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், |
|
நின் நாடு உள்ளுவர், பரிசிலர் |
|
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|
39 |
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி |
|
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக் |
|
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக! |
|
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல் |
|
5 |
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல் |
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், |
|
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று, |
|
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
|
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால் |
|
10 |
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு |
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள், |
|
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ! |
|
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய |
|
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு |
|
15 |
இமயம் சூட்டிய ஏம விற்பொறி, |
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய, |
|
வாடா வஞ்சி வாட்டும் நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
40 |
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில் |
|
ஓம்பாது கடந்து அட்டு, அவர் |
|
முடி புனைந்த பசும் பொன் நின் |
|
அடி பொலியக் கழல் தைஇய |
|
5 |
வல்லாளனை; வய வேந்தே! |
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க, |
|
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, |
|
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும் |
|
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும! |
|
10 |
ஒரு பிடி படியும் சீறிடம் |
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை செவியறிவுறூஉ.
| |
அவனை ஆவூர் முலங்கிழார் பாடியது.
|
41 |
காலனும் காலம் பார்க்கும்; பாராது, |
|
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய, |
|
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே! |
|
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும், |
|
5 |
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும், |
வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும், |
|
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும், |
|
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும், |
|
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும், |
|
10 |
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும், |
கனவின் அரியன காணா, நனவில் |
|
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி, |
|
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர், |
|
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு |
|
15 |
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு |
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு |
|
எரி நிகழ்ந்தன்ன செலவின் |
|
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
42 |
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் |
|
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் |
|
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை |
|
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து |
|
5 |
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின், |
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே; |
|
தண் புனல் பூசல் அல்லது, நொந்து, |
|
'களைக, வாழி, வளவ!' என்று, நின் |
|
முனைதரு பூசல் கனவினும் அறியாது, |
|
10 |
புலி புறங்காக்கும் குருளை போல, |
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப, |
|
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர் |
|
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர் |
|
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர் |
|
15 |
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை |
நீர் தரு மகளிர் குற்ற குவளையும், |
|
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும் |
|
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! |
|
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி, |
|
20 |
நில வரை இழிதரும் பல் யாறு போல, |
புலவர் எல்லாம் நின் நோக்கினரே; |
|
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக் |
|
கூற்று வெகுண்டன்ன முன்பொடு, |
|
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே. |
|
திணை வாகை; துறை அரசவாகை.
| |
அவனை இடைக்காடனார் பாடியது.
|
44 |
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா, |
|
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ, |
|
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி, |
|
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து, |
|
5 |
அலமரல் யானை உரும் என முழங்கவும், |
பால் இல் குழவி அலறவும், மகளிர் |
|
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல் |
|
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும், |
|
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; |
|
10 |
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்! |
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்; |
|
மறவை ஆயின், போரொடு திறத்தல்; |
|
அறவையும் மறவையும் அல்லையாக, |
|
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் |
|
15 |
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் |
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
46 |
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் |
|
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, |
|
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி, |
|
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்; |
|
5 |
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த |
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி, |
|
விருந்தின் புன்கண் நோவுடையர்; |
|
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.
|
53 |
முதிர் வார் இப்பி முத்த வார் மணல், |
|
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து, |
|
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் |
|
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற |
|
5 |
களம் கொள் யானை, கடு மான், பொறைய! |
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; |
|
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை |
|
கைம்முற்றல, நின் புகழே, என்றும்; |
|
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து |
|
10 |
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது |
செறுத்த செய்யுள் செய் செந் நாவின், |
|
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன் |
|
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின் |
|
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப, |
|
15 |
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே. |
திணையும் துறையும் அவை.
| |
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது.
|
55 |
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, |
|
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி, |
|
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த |
|
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் |
|
5 |
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல, |
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற! |
|
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும், |
|
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என |
|
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட |
|
10 |
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்; |
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது, |
|
'பிறர்' எனக் குணம் கொல்லாது, |
|
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும், |
|
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும், |
|
15 |
வானத்து அன்ன வண்மையும், மூன்றும், |
உடையை ஆகி, இல்லோர் கையற, |
|
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர் |
|
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் |
|
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை, |
|
20 |
கடு வளி தொகுப்ப ஈண்டிய |
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
|
57 |
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், |
|
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, |
|
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! |
|
நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின், |
|
5 |
நீயே, பிறர் நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு |
இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க; |
|
நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க; |
|
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் |
|
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம் |
|
10 |
கடிமரம் தடிதல் ஓம்பு நின் |
நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே. |
|
திணை வஞ்சி; துறை துணை வஞ்சி.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
63 |
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி, |
|
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே; |
|
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் |
|
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே; |
|
5 |
தேர் தர வந்த சான்றோர் எல்லாம், |
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே; |
|
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம், |
|
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே; |
|
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென, |
|
10 |
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, |
என் ஆவதுகொல்தானே கழனி |
|
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
|
பாசவல் முக்கி, தண் புனல் பாயும், |
|
யாணர் அறாஅ வைப்பின் |
|
15 |
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே? |
திணையும் துறையும் அவை.
| |
அவரை அக் களத்தில் பரணர் பாடியது.
|
64 |
நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி, |
|
செல்லாமோதில் சில் வளை விறலி! |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப, |
|
5 |
பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின் |
குடுமிக் கோமாற் கண்டு, |
|
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே? |
|
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
| |
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.
|
66 |
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி, |
|
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக! |
|
களி இயல் யானைக் கரிகால்வளவ! |
|
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற |
|
5 |
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே |
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை, |
|
மிகப் புகழ் உலகம் எய்தி, |
|
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே? |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது.
|
68 |
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின் |
|
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது, |
|
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து, |
|
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து, |
|
5 |
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து |
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் |
|
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை, |
|
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச் |
|
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் |
|
10 |
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன், |
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு |
|
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என, |
|
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப, |
|
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி, |
|
15 |
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த |
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை |
|
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும் |
|
உறந்தையோனே குருசில்; |
|
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே. |
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
| |
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
|
69 |
கையது, கடன் நிறை யாழே; மெய்யது, |
|
புரவலர் இன்மையின் பசியே; அரையது, |
|
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் |
|
ஓம்பி உடுத்த உயவல் பாண! |
|
5 |
பூட்கை இல்லோன் யாக்கை போலப் |
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை; |
|
வையகம் முழுதுடன் வளைஇ, பையென |
|
என்னை வினவுதி ஆயின், மன்னர் |
|
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை, |
|
10 |
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி, |
புலாக் களம் செய்த கலாஅத் தானையன் |
|
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே; |
|
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப் |
|
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார் |
|
15 |
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் |
கிள்ளி வளவற் படர்குவை ஆயின், |
|
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல் |
|
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி, |
|
நீ அவற் கண்ட பின்றை, பூவின் |
|
20 |
ஆடு வண்டு இமிராத் தாமரை |
சூடாயாதல் அதனினும் இலையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
72 |
'நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர்; |
|
இளையன் இவன்' என உளையக் கூறி, |
|
'படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள் |
|
நெடு நல் யானையும், தேரும், மாவும், |
|
5 |
படை அமை மறவரும், உடையம் யாம்' என்று |
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கி, |
|
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை |
|
அருஞ் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு |
|
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய |
|
10 |
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது, |
'கொடியன் எம் இறை' எனக் கண்ணீர் பரப்பி, |
|
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக; |
|
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி |
|
மாங்குடி மருதன் தலைவன் ஆக, |
|
15 |
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் |
புலவர் பாடாது வரைக, என் நிலவரை; |
|
புரப்போர் புன்கண் கூர, |
|
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பாட்டு.
|
73 |
மெல்ல வந்து, என் நல் அடி பொருந்தி, |
|
'ஈ' என இரக்குவர் ஆயின், சீருடை |
|
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்; |
|
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென், இந் நிலத்து; |
|
5 |
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் |
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் |
|
துஞ்சு புலி இடறிய சிதடன் போல, |
|
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக் |
|
கழை தின் யானைக் கால் அகப்பட்ட |
|
10 |
வன் திணி நீள் முளை போல, சென்று, அவண் |
வருந்தப் பொரேஎன்ஆயின், பொருந்திய |
|
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் |
|
பல் இருங் கூந்தல் மகளிர் |
|
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளி பாட்டு.
|
79 |
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி, |
|
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து, |
|
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி, |
|
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த |
|
5 |
வம்ப மள்ளரோ பலரே; |
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
80 |
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், |
|
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, |
|
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் |
|
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே |
|
5 |
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் |
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம |
|
பசித்துப் பணை முயலும் யானை போல, |
|
இரு தலை ஒசிய எற்றி, |
|
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. |
|
திணை தும்பை; துறை எருமை மறம்.
| |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.
|
81 |
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே |
|
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே; |
|
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச் |
|
செறியத் தொடுத்த கண்ணிக் |
|
5 |
கவி கை மள்ளன் கைப்பட்டோரே? |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
93 |
திண் பிணி முரசம் இழுமென முழங்கச் |
|
சென்று, அமர் கடத்தல் யாவது? வந்தோர் |
|
தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு, |
|
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் |
|
5 |
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ, |
காதல் மறந்து, அவர் தீது மருங்கு அறுமார், |
|
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் |
|
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி, |
|
'மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த |
|
10 |
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!' என |
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ |
|
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து |
|
அண்ணல் யானை அடு களத்து ஒழிய, |
|
அருஞ் சமம் ததைய நூறி, நீ, |
|
15 |
பெருந் தகை! விழுப் புண் பட்ட மாறே. |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவன் பொருது புண்பட்டு நின்றோனை அவர் பாடியது.
|
94 |
ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின், |
|
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல |
|
இனியை, பெரும! எமக்கே; மற்று அதன் |
|
துன் அருங் கடாஅம் போல |
|
5 |
இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
96 |
அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின், |
|
திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு |
|
இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே, |
|
பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, |
|
5 |
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, |
'விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது, |
|
மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் |
|
கைமான் கொள்ளுமோ?' என, |
|
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
|
97 |
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், |
|
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், |
|
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே; |
|
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர் |
|
5 |
நறுங் கள்ளின் நாடு நைத்தலின், |
சுரை தழீஇய இருங் காழொடு |
|
மடை கலங்கி நிலை திரிந்தனவே; |
|
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் |
|
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், |
|
10 |
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே; |
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர் |
|
பொலம் பைந் தார் கெடப் பரிதலின், |
|
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே; |
|
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப் |
|
15 |
பொலந் தும்பைக் கழல் பாண்டில் |
கணை பொருத துளைத் தோலன்னே. |
|
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள், |
|
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் |
|
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு |
|
20 |
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின், |
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச் |
|
சொல்லவும் தேறீராயின், மெல் இயல், |
|
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி, |
|
குறுந் தொடி மகளிர் தோள் விடல் |
|
25 |
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே. |
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
|
98 |
முனைத் தெவ்வர் முரண் அவியப் |
|
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின் |
|
இனக் களிறு செலக் கண்டவர் |
|
மதில் கதவம் எழுச் செல்லவும், |
|
5 |
பிணன் அழுங்கக் களன் உழக்கிச் |
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் |
|
இன நல் மாச் செலக் கண்டவர் |
|
கவை முள்ளின் புழை அடைப்பவும், |
|
மார்புறச் சேர்ந்து ஒல்காத் |
|
10 |
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் |
தோல் கழியொடு பிடி செறிப்பவும், |
|
வாள் வாய்த்த வடுப் பரந்த நின் |
|
மற மைந்தர் மைந்து கண்டவர் |
|
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், |
|
15 |
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, |
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் |
|
கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார் |
|
இரங்க விளிவதுகொல்லோ வரம்பு அணைந்து |
|
இறங்குகதிர் அலம்வரு கழனி, |
|
20 |
பெரும் புனல் படப்பை, அவர் அகன் தலை நாடே! |
திணை வாகை; துறை அரச வாகை; திணை வஞ்சியும், துறை கொற்ற வள்ளையும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|
100 |
கையது வேலே; காலன புனை கழல்; |
|
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்; |
|
வட்கர் போகிய வளர் இளம் போந்தை |
|
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு, |
|
5 |
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ, |
சுரி இரும் பித்தை பொலியச் சூடி, |
|
வரிவயம் பொருத வயக் களிறு போல, |
|
இன்னும் மாறாது சினனே; அன்னோ! |
|
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே; |
|
10 |
செறுவர் நோக்கிய கண், தன் |
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே. |
|
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
| |
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.
|
101 |
ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்; |
|
பல நாள் பயின்று, பலரொடு செல்லினும், |
|
தலை நாள் போன்ற விருப்பினன்மாதோ |
|
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி |
|
5 |
அதியமான்; பரிசில் பெறூஉம் காலம் |
நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன் |
|
கோட்டு இடை வைத்த கவளம் போலக் |
|
கையகத்தது; அது பொய் ஆகாதே; |
|
அருந்த ஏமாந்த நெஞ்சம்! |
|
10 |
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே! |
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனை அவர் பாடியது.
|
103 |
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத் |
|
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி, |
|
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச் |
|
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி! |
|
5 |
செல்வைஆயின், சேணோன் அல்லன்; |
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை |
|
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும் |
|
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி; |
|
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை |
|
10 |
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப, |
அலத்தற் காலை ஆயினும், |
|
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே! |
|
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
|
104 |
போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை: |
|
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் |
|
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் |
|
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை |
|
5 |
நுண் பல் கருமம் நினையாது, |
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
109 |
அளிதோதானே, பாரியது பறம்பே! |
|
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், |
|
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே: |
|
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே; |
|
5 |
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே; |
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; |
|
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து, |
|
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே. |
|
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து, |
|
10 |
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, |
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், |
|
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், |
|
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்; |
|
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே: |
|
15 |
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, |
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர, |
|
ஆடினிர் பாடினிர் செலினே, |
|
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. |
|
திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
| |
அவனை அவர் பாடியது.
|
114 |
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை |
|
சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற |
|
களிறு மென்று இட்ட கவளம் போல, |
|
நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல் |
|
5 |
வார் அசும்பு ஒழுகும் முன்றில், |
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.
|
115 |
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார், |
|
வாக்க உக்க தேக் கள் தேறல் |
|
கல் அலைத்து ஒழுகும்மன்னே! பல் வேல், |
|
5 |
அண்ணல் யானை, வேந்தர்க்கு |
இன்னான் ஆகிய இனியோன் குன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
119 |
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை, |
|
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப, |
|
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து; |
|
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ |
|
5 |
நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல, |
பணை கெழு வேந்தரை இறந்தும் |
|
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
125 |
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, |
|
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை, |
|
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர |
|
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே, |
|
5 |
நள்ளாதார் மிடல் சாய்த்த |
வல்லாள! நின் மகிழ் இருக்கையே. |
|
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு |
|
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே; |
|
குன்றத்து அன்ன களிறு பெயர, |
|
10 |
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே; |
'வெலீஇயோன் இவன்' என, |
|
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு |
|
விரைந்து வந்து, சமம் தாங்கிய, |
|
வல் வேல் மலையன் அல்லன் ஆயின், |
|
15 |
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத் |
தோற்றோன்தானும், நிற் கூறும்மே, |
|
'தொலைஇயோன் இவன்' என, |
|
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு |
|
இருக்கை சான்ற உயர் மலைத் |
|
20 |
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே. |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.
|
126 |
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, |
|
பாணர் சென்னி பொலியத் தைஇ, |
|
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர் |
|
ஓடாப் பூட்கை உரவோன் மருக! |
|
5 |
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே |
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல் |
|
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின், |
|
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந! |
|
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய, |
|
10 |
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் |
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன், |
|
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி, |
|
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு |
|
சினம் மிகு தானை வானவன் குட கடல், |
|
15 |
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி, |
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை, |
|
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று |
|
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப, |
|
20 |
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய, |
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும் |
|
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் |
|
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே! |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
| |
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
127 |
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப் |
|
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென, |
|
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில், |
|
கான மஞ்ஞை கணனொடு சேப்ப, |
|
5 |
ஈகை அரிய இழை அணி மகளிரொடு |
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்; |
|
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில் |
|
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி, |
|
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய |
|
10 |
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே. |
திணை அது; துறை கடைநிலை.
| |
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|
129 |
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள் |
|
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து, |
|
வேங்கை முன்றில் குரவை அயரும், |
|
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன் |
|
5 |
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் |
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று, |
|
வானம் மீன் பல பூப்பின், ஆனாது |
|
ஒரு வழிக் கரு வழி இன்றிப் |
|
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
130 |
விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு |
|
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ? |
|
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு, |
|
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த |
|
5 |
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் |
குட கடல் ஓட்டிய ஞான்றைத் |
|
தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
131 |
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன், |
|
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன், |
|
குன்றம் பாடினகொல்லோ |
|
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
135 |
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை, |
|
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி, |
|
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின், |
|
வளைக் கை விறலி என் பின்னள் ஆக, |
|
5 |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் |
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப, |
|
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் |
|
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ, |
|
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி, |
|
10 |
வந்தனென் எந்தை! யானே: என்றும், |
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு |
|
கறை அடி யானை இரியல் போக்கும் |
|
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்! |
|
களிறும் அன்றே; மாவும் அன்றே; |
|
15 |
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே; |
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர், |
|
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப் |
|
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு, |
|
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக் |
|
20 |
காண்டல் வேண்டிய அளவை வேண்டார் |
உறு முரண் கடந்த ஆற்றல் |
|
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடியது.
|
137 |
இரங்கு முரசின், இனம்சால் யானை, |
|
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை |
|
இன்னும் ஓர் யான் அவா அறியேனே; |
|
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய |
|
5 |
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது, |
கழைக் கரும்பின் ஒலிக்குந்து, |
|
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும், |
|
கண் அன்ன மலர் பூக்குந்து, |
|
கருங் கால் வேங்கை மலரின், நாளும் |
|
10 |
பொன் அன்ன வீ சுமந்து, |
மணி அன்ன நீர் கடல் படரும்; |
|
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந! |
|
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை! |
|
நீ வாழியர்! நின் தந்தை |
|
15 |
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே! |
திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
| |
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.
|
140 |
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன் |
|
மடவன், மன்ற; செந் நாப் புலவீர்! |
|
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த |
|
அடகின் கண்ணுறைஆக யாம் சில |
|
5 |
அரிசி வேண்டினேமாக, தான் பிற |
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி, |
|
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் |
|
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர் |
|
தேற்றா ஈகையும் உளதுகொல்? |
|
10 |
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே? |
திணை அது; துறை பரிசில் விடை.
| |
அவனை ஒளவையார் பாடியது.
|
141 |
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை |
|
மாண் இழை விறலி மாலையொடு விளங்க, |
|
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ, |
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்! |
5 |
யாரீரோ?' என, வினவல் ஆனா, |
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல! |
|
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே, |
|
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே, |
|
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும் |
|
10 |
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், |
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ, |
|
கடாஅ யானைக் கலி மான் பேகன், |
|
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என, |
|
மறுமை நோக்கின்றோ அன்றே, |
|
15 |
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே. |
திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
| |
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.
|
142 |
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும், |
|
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும், |
|
வரையா மரபின் மாரிபோல, |
|
கடாஅ யானைக் கழல் கால் பேகன் |
|
5 |
கொடைமடம் படுதல் அல்லது, |
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
145 |
'மடத் தகை மா மயில் பனிக்கும்' என்று அருளி, |
|
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை, |
|
கடாஅ யானைக் கலி மான் பேக! |
|
பசித்தும் வாரேம்; பாரமும் இலமே; |
|
5 |
களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ் |
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி, |
|
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்!' என, |
|
இஃது யாம் இரந்த பரிசில்: அஃது இருளின், |
|
இன மணி நெடுந் தேர் ஏறி, |
|
10 |
இன்னாது உறைவி அரும் படர் களைமே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாக அவர் பாடியது.
|
148 |
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின் |
|
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி, |
|
நாள்தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து, |
|
கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்ப; |
|
5 |
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி, |
செய்யா கூறிக் கிளத்தல் |
|
எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
| |
கண்டீரக் கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது.
|
151 |
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, |
|
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து, |
|
புன் தலை மடப் பிடி பரிசிலாக, |
|
5 |
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க் |
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும் |
|
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர் |
|
நன்னன் மருகன் அன்றியும், நீயும் |
|
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப் |
|
10 |
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை |
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் |
|
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.
|
152 |
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி |
|
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ, |
|
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக் |
|
கேழற் பன்றி வீழ, அயலது |
|
5 |
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும், |
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன், |
|
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும் |
|
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன் |
|
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்; |
|
10 |
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின், |
சாரல் அருவிப் பய மலைக் கிழவன், |
|
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ? |
|
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் |
|
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்; |
|
15 |
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்; |
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்; |
|
பதலை ஒரு கண் பையென இயக்குமின்; |
|
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று, |
|
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, |
|
20 |
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி, |
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது |
|
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம் |
|
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர் |
|
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என, |
|
25 |
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் |
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு, |
|
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி, |
|
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன், |
|
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என, |
|
30 |
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை |
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன், |
|
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே! |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.
|
153 |
மழை அணி குன்றத்துக் கிழவன், நாளும், |
|
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும், |
|
சுடர் விடு பசும் பூண், சூர்ப்பு அமை முன் கை, |
|
அடு போர் ஆனா, ஆதன் ஓரி |
|
5 |
மாரி வண் கொடை காணிய, நன்றும் |
சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே; |
|
பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை |
|
வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும், |
|
யானை இனத்தொடு பெற்றனர், நீங்கி, |
|
10 |
பசியாராகல் மாறுகொல் விசி பிணிக் |
கூடு கொள் இன் இயம் கறங்க, |
|
ஆடலும் ஒல்லார், தம் பாடலும் மறந்தே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
159 |
'வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின், |
|
தீர்தல் செல்லாது, என் உயிர்' எனப் பல புலந்து, |
|
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி, |
|
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று, |
|
5 |
முன்றில் போகா முதிர்வினள் யாயும்; |
பசந்த மேனியொடு படர் அட வருந்தி, |
|
மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள் |
|
பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து, |
|
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த |
|
10 |
முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று, |
நீர் உலைஆக ஏற்றி, மோர் இன்று, |
|
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து, |
|
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா, |
|
துவ்வாளாகிய என் வெய்யோளும்; |
|
15 |
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் |
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை, |
|
ஐவனம் வித்தி, மையுறக் கவினி, |
|
ஈனல்செல்லா ஏனற்கு இழுமெனக் |
|
கருவி வானம் தலைஇ யாங்கும், |
|
20 |
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என், |
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப |
|
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும், |
|
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ |
|
இன்புற விடுதிஆயின், சிறிது |
|
25 |
குன்றியும் கொள்வல், கூர் வேல் குமண! |
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ் |
|
வசை இல் விழுத் திணைப் பிறந்த |
|
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே. |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
அவனை அவர் பாடியது.
|
161 |
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு, |
|
ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ, |
|
பெரு மலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு, |
|
உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து, |
|
5 |
வள மழை மாறிய என்றூழ்க் காலை, |
மன்பதை எல்லாம் சென்று உண, கங்கைக் |
|
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு, |
|
எமக்கும் பிறர்க்கும் செம்மலைஆகலின், |
|
'அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவர, |
|
10 |
சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று, |
வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு, |
|
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர' எனக் |
|
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து, |
|
அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின் |
|
15 |
தாள் படு செல்வம் காண்தொறும் மருள, |
பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய |
|
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, |
|
ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில் |
|
படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து, |
|
20 |
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்! |
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி! |
|
வல்லினும், வல்லேன்ஆயினும், வல்லே, |
|
என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த |
|
25 |
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும் |
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப் |
|
பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம் |
|
மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல, |
|
நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின் |
|
30 |
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப, |
வாள் அமர் உழந்த நின் தானையும், |
|
சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.
|
162 |
இரவலர் புரவலை நீயும் அல்லை; |
|
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; |
|
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு |
|
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க் |
|
5 |
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த |
நெடு நல் யானை எம் பரிசில்; |
|
கடுமான் தோன்றல்! செல்வல் யானே. |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி,குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளிமான் ஊர்க் கடிமரத்து யாத்துச் சென்று,
|
165 |
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் |
|
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே; |
|
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர், |
|
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின், |
|
5 |
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; |
தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல், |
|
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக் |
|
கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப் |
|
பாடி நின்றனெனாக, 'கொன்னே |
|
10 |
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என |
நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என, |
|
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய, |
|
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்; |
|
ஆடு மலி உவகையொடு வருவல், |
|
15 |
ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே. |
திணை அது; துறை பரிசில் விடை.
| |
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
170 |
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி, |
|
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர், |
|
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி |
|
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென, |
|
5 |
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப, |
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி |
|
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் |
|
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன், |
|
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே |
|
10 |
சிறு கண் யானை வெண் கோடு பயந்த |
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, |
|
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல் |
|
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி, |
|
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு |
|
15 |
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன் |
விசைத்து எறி கூடமொடு பொரூஉம் |
|
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
| |
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
171 |
இன்று செலினும் தருமே; சிறு வரை |
|
நின்று செலினும் தருமே; பின்னும், |
|
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி |
|
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி, |
|
5 |
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்; |
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப |
|
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்; |
|
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும், |
|
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும், |
|
10 |
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை |
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே. |
|
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி |
|
முள்ளும் நோவ உறாற்கதில்ல! |
|
ஈவோர் அரிய இவ் உலகத்து, |
|
15 |
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.
|
177 |
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர், |
|
வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கி, |
|
பாடிப் பெற்ற பொன் அணி யானை, |
|
தமர்எனின், யாவரும் புகுப; அமர் எனின், |
|
5 |
திங்களும் நுழையா எந்திரப் படு புழை, |
கள் மாறு நீட்ட நணி நணி இருந்த |
|
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி, |
|
புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர் |
|
தீம் புளிக் களாவொடு துடரி முனையின், |
|
10 |
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி, |
கருங் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும், |
|
பெரும் பெயர் ஆதி, பிணங்குஅரில் குட நாட்டு, |
|
எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப் |
|
பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை, |
|
15 |
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, |
இரும் பனங் குடையின் மிசையும் |
|
பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|
178 |
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு, பணை முனிந்து |
|
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண், |
|
மணல் மலி முற்றம் புக்க சான்றோர் |
|
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று, |
|
5 |
'உண்ம்' என இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன் |
ஈண்டோ இன் சாயலனே; வேண்டார் |
|
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின், |
|
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய |
|
நெடுமொழி மறந்த சிறு பேராளர் |
|
10 |
அஞ்சி நீங்கும்காலை, |
ஏமமாகத் தான் முந்துறுமே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை.
| |
பாண்டியன் கீரஞ்சாத்தனை அவர் பாடியது.
|
181 |
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில், |
|
கருங் கண் எயிற்றி காதல் மகனொடு, |
|
கான இரும் பிடிக் கன்று தலைக் கொள்ளும் |
|
பெருங் குறும்பு உடுத்த வன் புல இருக்கை, |
|
5 |
புலாஅ அம்பின், போர் அருங் கடி மிளை, |
வலாஅரோனே, வாய் வாள் பண்ணன்; |
|
உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின், |
|
இன்னே சென்மதி, நீயே சென்று, அவன் |
|
பகைப் புலம் படராஅளவை, நின் |
|
10 |
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. |
திணையும் துறையும் அவை.
| |
வல்லார் கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியார் பாடியது.
|
184 |
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, |
|
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; |
|
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, |
|
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; |
|
5 |
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, |
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்; |
|
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் |
|
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, |
|
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், |
|
10 |
யானை புக்க புலம் போல, |
தானும் உண்ணான், உலகமும் கெடுமே. |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
| |
பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.
|
190 |
விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர் |
|
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும் |
|
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம் |
|
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு |
|
5 |
இயைந்த கேண்மை இல்லாகியரோ! |
கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென, |
|
அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள், |
|
பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து, |
|
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் |
|
10 |
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து |
உரனுடையாளர் கேண்மையொடு |
|
இயைந்த வைகல் உள ஆகியரோ! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நல்லுருத்திரன் பாட்டு.
|
197 |
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு |
|
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ, |
|
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு |
|
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ, |
|
5 |
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு |
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ, |
|
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர் |
|
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே; |
|
எம்மால் வியக்கப்படூஉமோரே, |
|
10 |
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த |
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு, |
|
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம், |
|
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின் |
|
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே; |
|
15 |
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும் |
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்; |
|
நல் அறிவு உடையோர் நல்குரவு |
|
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
200 |
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் |
|
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் |
|
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி, |
|
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து, |
|
5 |
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! |
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல், |
|
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை, |
|
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே! |
|
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை |
|
10 |
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும், |
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த |
|
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்; |
|
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே, |
|
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்; |
|
15 |
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர் |
அடங்கா மன்னரை அடக்கும் |
|
மடங்கா விளையுள் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
201 |
'இவர் யார்?' என்குவைஆயின், இவரே, |
|
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன் |
|
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை, |
|
படு மணி யானை, பறம்பின் கோமான் |
|
5 |
நெடு மாப் பாரி மகளிர்; யானே |
தந்தை தோழன்; இவர் என் மகளிர்; |
|
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே. |
|
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, |
|
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, |
|
10 |
உவரா ஈகை, துவரை ஆண்டு, |
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த |
|
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்! |
|
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே! |
|
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய |
|
15 |
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! |
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து |
|
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல் |
|
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல் |
|
உடலுநர் உட்கும் தானை, |
|
20 |
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே! |
திணையும் துறையும் அவை.
| |
பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
205 |
முற்றிய திருவின் மூவர் ஆயினும், |
|
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே; |
|
விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி |
|
உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர் |
|
5 |
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை, |
வெள் வீ வேலிக் கோடைப் பொருந! |
|
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய |
|
மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய், |
|
நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக! |
|
10 |
ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து, |
கடல்வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ |
|
நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு |
|
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் |
|
களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
214 |
'செய்குவம்கொல்லோ, நல்வினை?' எனவே |
|
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி |
|
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே; |
|
யானை வேட்டுவன் யானையும் பெறுமே; |
|
5 |
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே: |
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு, |
|
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின், |
|
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்; |
|
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின், |
|
10 |
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; |
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக் |
|
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு, |
|
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவன் வடக்கிருந்தான் சொற்றது.
|
220 |
பெருஞ் சோறு பயந்து, பல் யாண்டு புரந்த |
|
பெருங் களிறு இழந்த பைதல் பாகன் |
|
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை, |
|
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு, |
|
5 |
கலங்கினென் அல்லனோ, யானே பொலந் தார்த் |
தேர் வண் கிள்ளி போகிய |
|
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.
|
227 |
நனி பேதையே, நயன் இல் கூற்றம்! |
|
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை; |
|
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்; |
|
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும், |
|
5 |
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய, |
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின் |
|
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல் |
|
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் |
|
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி |
|
10 |
இனையோற் கொண்டனைஆயின், |
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.
|
228 |
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! |
|
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை |
|
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை, |
|
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! |
|
5 |
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்? |
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப் |
|
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை, |
|
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன |
|
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன் |
|
10 |
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன் |
தேவர் உலகம் எய்தினன்ஆதலின், |
|
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி |
|
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம் |
|
இரு நிலம் திகிரியா, பெரு மலை |
|
15 |
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? |
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
| |
அவனை ஐயூர் முடவனார் பாடியது.
|
229 |
ஆடு இயல் அழல் குட்டத்து |
|
ஆர் இருள் அரை இரவில், |
|
முடப் பனையத்து வேர் முதலாக் |
|
கடைக் குளத்துக் கயம் காய, |
|
5 |
பங்குனி உயர் அழுவத்து, |
தலை நாள்மீன் நிலை திரிய, |
|
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர, |
|
தொல் நாள்மீன் துறை படிய, |
|
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது, |
|
10 |
அளக்கர்த் திணை விளக்காகக் |
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி, |
|
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே; |
|
அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர், |
|
'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் |
|
15 |
நோய் இலனாயின் நன்றுமன் தில்' என |
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப, |
|
அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே; |
|
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும், |
|
திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும், |
|
20 |
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும், |
கால் இயல் கலி மாக் கதி இல வைகவும், |
|
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின், |
|
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி, |
|
தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோ |
|
25 |
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு |
அளந்து கொடை அறியா ஈகை, |
|
மணி வரை அன்ன மாஅயோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.
|
233 |
பொய்யாகியரோ! பொய்யாகியரோ! |
|
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச் |
|
சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய |
|
பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ! |
|
5 |
'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண், |
போர் அடு தானை, எவ்வி மார்பின் |
|
எஃகுறு விழுப்புண் பல' என |
|
வைகுறு விடியல், இயம்பிய குரலே. |
|
திணயும் துறையும் அவை.
| |
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.
|
234 |
நோகோ யானே? தேய்கமா காலை! |
|
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி, |
|
தன் அமர் காதலி புல் மேல் வைத்த |
|
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல் |
|
5 |
உலகு புகத் திறந்த வாயில் |
பலரோடு உண்டல் மரீஇயோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
237 |
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, |
|
பாடி நின்ற பசி நாட்கண்ணே, |
|
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, |
|
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் |
|
5 |
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என |
நச்சி இருந்த நசை பழுதாக, |
|
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு, |
|
'அளியர்தாமே ஆர்க' என்னா |
|
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, |
|
10 |
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் |
வாழைப் பூவின் வளை முறி சிதற, |
|
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க, |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: |
|
15 |
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் |
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், |
|
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் |
|
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, |
|
நனியுடைப் பரிசில் தருகம், |
|
20 |
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|
239 |
தொடியுடைய தோள் மணந்தனன்; |
|
கடி காவில் பூச் சூடினன்; |
|
தண் கமழும் சாந்து நீவினன்; |
|
செற்றோரை வழி தபுத்தனன்; |
|
5 |
நட்டோரை உயர்பு கூறினன்; |
'வலியர்' என, வழிமொழியலன்; |
|
'மெலியர்' என, மீக்கூறலன்; |
|
பிறரைத் தான் இரப்பு அறியலன்; |
|
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்; |
|
10 |
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்; |
வருபடை எதிர் தாங்கினன்; |
|
பெயர்படை புறங்கண்டனன்; |
|
கடும் பரிய மாக் கடவினன்; |
|
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்; |
|
15 |
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்; |
தீம் செறி தசும்பு தொலைச்சினன்; |
|
பாண் உவப்ப பசி தீர்த்தனன்; |
|
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச் |
|
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் |
|
20 |
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ! |
படு வழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே! |
|
திணையும் துறையும் அவை.
| |
நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியது.
|
240 |
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், |
|
வாடா யாணர் நாடும் ஊரும், |
|
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் |
|
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு, |
|
5 |
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, |
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ, |
|
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை, |
|
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும் |
|
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி, |
|
10 |
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது; |
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, |
|
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் |
|
வாடிய பசியராகி, பிறர் |
|
நாடு படு செலவினர் ஆயினர், இனியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
|
247 |
யானை தந்த முளி மர விறகின் |
|
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து, |
|
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி, |
|
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில், |
|
5 |
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ, |
பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கி, |
|
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் |
|
முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச் |
|
சிறு நனி தமியள் ஆயினும், |
|
10 |
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே! |
திணையும் துறையும் அவை.
| |
அவள் தீப் பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயார் சொல்லியது.
|
251 |
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில், |
|
பாவை அன்ன குறுந் தொடி மகளிர் |
|
இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும் |
|
கழைக் கண் நெடு வரை அருவி ஆடி, |
|
5 |
கான யானை தந்த விறகின் |
கடுந் தெறல் செந் தீ வேட்டு, |
|
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே! |
|
திணை வாகை; துறை தாபத வாகை.
| |
....................மாற்பித்தியார் பாடியது.
|
261 |
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்! |
|
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு |
|
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம், |
|
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக் |
|
5 |
கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே; |
வையம் காவலர் வளம் கெழு திரு நகர், |
|
மையல் யானை அயாவுயிர்த்தன்ன |
|
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை |
|
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப் |
|
10 |
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே |
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் |
|
உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி, |
|
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை |
|
விரகு அறியாளர் மரபின் சூட்ட, |
|
15 |
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய |
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி, |
|
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய |
|
கழி கல மகடூஉப் போலப் |
|
புல்லென்றனையால், பல் அணி இழந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|
263 |
பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் |
|
இரும் பறை இரவல! சேறிஆயின், |
|
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது, |
|
வண்டு மேம்படூஉம், இவ் வறநிலை ஆறே |
|
5 |
பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து, |
கல்லா இளையர் நீங்க நீங்கான், |
|
வில் உமிழ் கடுங் கணை மூழ்க, |
|
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே. |
|
திணை கரந்தை; துறை கையறுநிலை.
| |
......................................................................
|
265 |
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, |
|
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் |
|
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, |
|
பல் ஆன் கோவலர் படலை சூட்ட, |
|
5 |
கல் ஆயினையே கடு மான் தோன்றல்! |
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் |
|
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் |
|
கடும் பகட்டு யானை வேந்தர் |
|
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.
|
270 |
பல் மீன் இமைக்கும் மாக விசும்பின் |
|
இரங்கு முரசின், இனம்சால் யானை, |
|
நிலம் தவ உருட்டிய நேமியோரும் |
|
சமங்கண் கூடித் தாம் வேட்பவ்வே |
|
5 |
நறு விரை துறந்த நாறா நரைத் தலைச் |
சிறுவர் தாயே! பேரில் பெண்டே! |
|
நோகோ யானே; நோக்குமதி நீயே; |
|
மறப் படை நுவலும் அரிக் குரல் தண்ணுமை |
|
இன் இசை கேட்ட துன் அரு மறவர் |
|
10 |
வென்றி தரு வேட்கையர், மன்றம் கொண்மார், |
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை, |
|
விழு நவி பாய்ந்த மரத்தின், |
|
வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே. |
|
திணை கரந்தை; துறை கையறு நிலை. |
|
(கண்டார் தாய்க்குச் சொல்லியது)
| |
கழாத்தலையார் பாடியது.
|
274 |
நீலக் கச்சை, பூ ஆர் ஆடை, |
|
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் |
|
மேல் வருங் களிற்றொடு வேல் துரந்து, இனியே, |
|
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர் |
|
5 |
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர, |
கையின் வாங்கி, தழீஇ, |
|
மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே! |
|
திணை அது; துறை எருமை மறம்.
| |
உலோச்சனார் பாடியது.
|
275 |
கோட்டங் கண்ணியும், கொடுந்திரை ஆடையும், |
|
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும், |
ஒத்தன்று மாதோ, இவற்கே; செற்றிய |
திணி நிலை அலறக் கூவை போழ்ந்து, தன் |
|
5 |
வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி, |
'ஓம்புமின், ஓம்புமின், இவண்!' என, ஓம்பாது, |
|
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப, |
|
கன்று அமர் கறவை மான, |
|
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஒரூஉத்தனார் பாடியது.
|
277 |
'மீன் உண் கொக்கின் தூவி அன்ன |
|
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் |
|
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை |
|
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர் |
|
5 |
நோன் கழை துயல்வரும் வெதிரத்து |
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே. |
|
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
| |
பூங்கண் உத்திரையார் பாடியது.
|
279 |
கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே; |
|
மூதில் மகளிர் ஆதல் தகுமே: |
|
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை, |
|
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே; |
|
5 |
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன், |
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே; |
|
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி, |
|
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ, |
|
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி, |
|
10 |
ஒரு மகன் அல்லது இல்லோள், |
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே! |
|
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.
|
287 |
துடி எறியும் புலைய! |
|
எறி கோல் கொள்ளும் இழிசின! |
|
காலம் மாரியின் அம்பு தைப்பினும், |
|
வயல் கெண்டையின் வேல் பிறழினும், |
|
5 |
பொலம் புனை ஓடை அண்ணல் யானை |
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும், |
|
ஓடல் செல்லாப் பீடுடையாளர் |
|
நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை |
|
நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும், |
|
10 |
தண்ணடை பெறுதல் யாவது? படினே, |
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும், |
|
உயர் நிலை உலகத்து, நுகர்ப; அதனால் |
|
வம்ப வேந்தன் தானை |
|
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே! |
|
திணை கரந்தை; துறை நீண்மொழி.
| |
சாத்தந்தையார் பாடியது.
|
290 |
இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர் |
|
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்! |
|
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை, |
|
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன் |
|
5 |
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே; |
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும், |
|
உறைப்புழி ஓலை போல, |
|
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே. |
|
திணை கரந்தை; துறை குடிநிலை உரைத்தல்.
| |
ஒளவையார் பாடியது.
|
293 |
நிறப் படைக்கு ஒல்கா யானை மேலோன் |
|
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை |
|
நாண் உடை மாக்கட்கு இரங்குமாயின், |
|
எம்மினும் பேர் எழில் இழந்து, வினை எனப் |
|
5 |
பிறர் மனை புகுவள்கொல்லோ |
அளியள் தானே, பூவிலைப் பெண்டே! |
|
திணை காஞ்சி; துறை பூக்கோட் காஞ்சி.
| |
நொச்சி நியமங் கிழார் பாடியது.
|
301 |
பல் சான்றீரே! பல் சான்றீரே! |
|
குமரி மகளிர் கூந்தல் புரைய, |
|
அமரின் இட்ட அரு முள் வேலிக் |
|
கல்லென் பாசறைப் பல் சான்றீரே! |
|
5 |
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்புமின்; |
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின்; |
|
எனை நாள் தங்கும் நும் போரே, அனை நாள் |
|
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர் |
|
எதிர் சென்று எறிதலும்செல்லான்; அதனால் |
|
10 |
அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே? |
'பலம்' என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக் காண் |
|
நிலன் அளப்பன்ன நில்லாக் குறு நெறி, |
|
வண் பரிப் புரவிப் பண்பு பாராட்டி, |
|
எல்லிடைப் படர்தந்தோனே; கல்லென |
|
15 |
வேந்து ஊர் யானைக்கு அல்லது, |
ஏந்துவன் போலான், தன் இலங்கு இலை வேலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|
302 |
வெடி வேய் கொள்வது போல ஓடி, |
|
தாவுபு உகளும், மாவே; பூவே, |
|
விளங்குஇழை மகளிர் கூந்தல் கொண்ட; |
|
நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய |
|
5 |
ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ்க் |
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய, |
|
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்; |
|
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, |
|
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், |
|
10 |
விண் இவர் விசும்பின் மீனும், |
தண் பெயல் உறையும், உறை ஆற்றாவே. |
|
திணை அது; துறை குதிரை மறம்.
| |
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.
|
303 |
நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு குடையூஉ, |
|
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல் |
|
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த |
|
வெந் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப |
|
5 |
ஆட்டிக் காணிய வருமே நெருநை, |
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர், |
|
கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர் |
|
கயந்தலை மடப் பிடி புலம்ப, |
|
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
எருமை வெளியனார் பாடியது.
|
305 |
வயலைக் கொடியின் வாடிய மருங்குல், |
|
உயவல் ஊர்தி, பயலைப் பார்ப்பான் |
|
எல்லி வந்து நில்லாது புக்கு, |
|
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே |
|
5 |
ஏணியும் சீப்பும் மாற்றி, |
மாண் வினை யானையும் மணி களைந்தனவே. |
|
திணை வாகை; துறை பார்ப்பன வாகை.
| |
மதுரை வேளாசான் பாடியது.
|
306 |
களிறு பொரக் கலங்கு, கழல் முள் வேலி, |
|
அரிது உண் கூவல், அம் குடிச் சீறூர் |
|
ஒலி மென் கூந்தல் ஒள் நுதல் அரிவை |
|
நடுகல் கை தொழுது பரவும், ஒடியாது; |
|
5 |
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்னையும் |
ஒ ... ... ... ... ... ... ...வேந்தனொடு |
|
நாடுதரு விழுப் பகை எய்துக எனவே. |
|
திணை அது; துறை மூதில் முல்லை.
| |
அள்ளூர் நன்முல்லையார் பாடியது.
|
307 |
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
|
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்; |
|
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்; |
|
வேனல் வரி அணில் வாலத்து அன்ன, |
|
5 |
கான ஊகின் கழன்று உகு முது வீ |
அரியல் வான் குழல் சுரியல் தங்க, |
|
நீரும் புல்லும் ஈயாது, உமணர் |
|
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த |
|
வாழா வான் பகடு ஏய்ப்ப, தெறுவர் |
|
10 |
பேர் உயிர் கொள்ளும் மாதோ; அது கண்டு, |
வெஞ் சின யானை வேந்தனும், 'இக் களத்து, |
|
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என, |
|
பண் கொளற்கு அருமை நோக்கி, |
|
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே. |
|
திணை தும்பை; துறை களிற்றுடனிலை.
| |
........................................................................
|
308 |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின், |
|
மின் நேர் பச்சை, மிஞிற்றுக் குரல் சீறியாழ் |
|
நன்மை நிறைந்த நய வரு பாண! |
|
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் |
|
5 |
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே; |
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை |
|
சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே; |
|
உளம் கழி சுடர்ப் படை ஏந்தி, நம் பெருவிறல் |
|
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன் |
|
10 |
புன் தலை மடப் பிடி நாண, |
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே. |
|
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
கோவூர் கிழார் பாடியது.
|
310 |
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், |
|
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு, |
|
உயவொடு வருந்தும் மன்னே! இனியே |
|
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான், |
|
5 |
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, |
உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு |
|
மான் உளை அன்ன குடுமித் |
|
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பொன்முடியார் பாடியது.
|
312 |
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; |
|
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; |
|
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; |
|
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, |
|
5 |
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி, |
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. |
|
திணை வாகை; துறை மூதில்முல்லை.
| |
பொன்முடியார் பாடியது.
|
313 |
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் |
|
கைப் பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக் |
|
காணிய சென்ற இரவல் மாக்கள் |
|
களிறொடு நெடுந் தேர் வேண்டினும், கடவ; |
|
5 |
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட |
கழி முரி குன்றத்து அற்றே, |
|
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே. |
|
திணை அது; துறை வல்லாண் முல்லை.
| |
மாங்குடி கிழார் பாடியது.
|
316 |
கள்ளின் வாழ்த்தி, கள்ளின் வாழ்த்தி, |
|
காட்டொடு மிடைந்த சீயா முன்றில், |
|
நாட் செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே. |
|
அவன் எம் இறைவன்; யாம் அவன் பாணர்; |
|
5 |
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் |
இரும் புடைப் பழ வாள் வைத்தனன்; இன்று இக் |
|
கருங் கோட்டுச் சீறியாழ் பணையம்; இது கொண்டு |
|
ஈவதிலாளன் என்னாது, நீயும், |
|
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய, |
|
10 |
கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்க, |
சென்று வாய் சிவந்து மேல் வருக |
|
சிறு கண் யானை வேந்து விழுமுறவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.
|
320 |
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி, |
|
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல், |
|
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென, |
|
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர் |
|
5 |
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட, |
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் |
|
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே |
|
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், |
|
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து, |
|
10 |
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி |
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென, |
|
ஆர நெருப்பின், ஆரல் நாற, |
|
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் |
|
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி, |
|
15 |
தங்கினை சென்மோ, பாண! தங்காது, |
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும் |
|
அருகாது ஈயும் வண்மை |
|
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வீரை வெளியனார் பாடியது.
|
323 |
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் |
|
சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும் |
|
கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... க்கு |
|
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை, |
|
5 |
வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் |
கறையடி யானைக்கு அல்லது |
|
உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே. |
|
........................................................
| |
................டார் கிழார் பாடியது.
|
325 |
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின், |
|
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென, |
|
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின், |
|
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் |
|
5 |
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை, |
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர் |
|
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச் |
|
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார், |
|
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் |
|
10 |
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, |
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், |
|
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும் |
|
அரு மிளை இருக்கையதுவே வென் வேல் |
|
வேந்து தலைவரினும் தாங்கும், |
|
15 |
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
|
326 |
ஊர் முது வேலிப் பார் நடை வெருகின் |
|
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை |
|
உயிர் நடுக்குற்றுப் புலா விட்டு அரற்ற, |
|
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த |
|
5 |
பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து, |
கவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும் |
|
அரு மிளை இருக்கையதுவே மனைவியும், |
|
வேட்டச் சிறாஅர் சேண் புலம் படராது, |
|
படப்பைக் கொண்ட குறுந் தாள் உடும்பின் |
|
10 |
விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை, |
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு |
|
வரு விருந்து அயரும் விருப்பினள்; கிழவனும், |
|
அருஞ் சமம் ததையத் தாக்கி, பெருஞ் சமத்து |
|
அண்ணல் யானை அணிந்த |
|
15 |
பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே. |
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
தங்கால் பொற்கொல்லனார் பாடியது.
|
332 |
பிறர் வேல் போலாதாகி, இவ் ஊர் |
|
மறவன் வேலோ பெருந் தகை உடைத்தே; |
|
இரும் புறம் நீறும் ஆடி, கலந்து இடைக் |
|
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; |
|
5 |
மங்கல மகளிரொடு மாலை சூட்டி, |
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப, |
|
தெண் நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து, |
|
மண் முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு, |
|
இருங் கடல் தானை வேந்தர் |
|
10 |
பெருங் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே. |
திணையும் துறையும் அவை.
| |
விரியூர் நக்கனார் பாடியது.
|
334 |
காமரு பழனக் கண்பின் அன்ன |
|
தூ மயிர்க் குறுந் தாள் நெடுஞ் செவிக் குறு முயல், |
|
புன் தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின், |
|
படப்பு ஒடுங்கும்மே ........... பின்பு |
|
5 |
..................... ன் ஊரே மனையோள் |
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும், |
|
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே; |
|
உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த |
|
பொலம் .............................. ப் |
|
10 |
பரிசில் பரிசிலர்க்கு ஈய, |
உரவு வேல் காளையும் கை தூவானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைத் தமிழக் கூத்தனார் பாடியது.
|
335 |
அடல் அருந் துப்பின்.................... |
|
...................குருந்தே முல்லை என்று |
|
இந் நான்கு அல்லது பூவும் இல்லை; |
|
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே, |
|
5 |
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு, |
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை; |
|
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று |
|
இந் நான்கு அல்லது குடியும் இல்லை; |
|
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி, |
|
10 |
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென, |
கல்லே பரவின் அல்லது, |
|
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மாங்குடி கிழார் பாடியது.
|
336 |
வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே; |
|
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்; |
|
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் |
|
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த |
|
5 |
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே; |
இயவரும் அறியாப் பல் இயம் கறங்க, |
|
அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங் கடி மூதூர்; |
|
அறன் இலள் மன்ற தானே விறல் மலை |
|
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் |
|
10 |
முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் |
தகை வளர்த்து எடுத்த நகையொடு, |
|
பகை வளர்த்திருந்த இப் பண்பு இல் தாயே. |
|
திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
| |
பரணர் பாடியது.
|
337 |
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்; |
|
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும், |
|
வாள் வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர், |
|
வரல்தோறு அகம் மலர, |
|
5 |
ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக் கைப் |
பாரி பறம்பின் பனிச் சுனை போல, |
|
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட |
|
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய |
|
துகில் விரி கடுப்ப நுடங்கி, தண்ணென |
|
10 |
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய |
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு, |
|
மனைச் செறிந்தனளே, வாணுதல்; இனியே, |
|
அற்றன்றுஆகலின், தெற்றெனப் போற்றி, |
|
காய் நெல் கவளம் தீற்றி, காவுதொறும் |
|
15 |
கடுங்கண் யானை காப்பனர் அன்றி, |
வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர் |
|
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் |
|
குருதி பற்றிய வெருவரு தலையர்; |
|
மற்று இவர் மறனும் இற்றால்; தெற்றென |
|
20 |
யார் ஆகுவர்கொல் தாமே நேரிழை |
உருத்த பல சுணங்கு அணிந்த |
|
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கபிலர் பாடியது.
|
339 |
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு |
|
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர் |
|
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல் |
|
5 |
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; |
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் |
|
கடல் ஆடிக் கயம் பாய்ந்து, |
|
கழி நெய்தல் பூக்குறூஉந்து; |
|
பைந் தழை துயல்வரும் செறு விறற.............. |
|
10 |
............................................................................லத்தி |
வளர வேண்டும், அவளே, என்றும் |
|
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி, |
|
முறம் செவி யானை வேந்தர் |
|
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|
340 |
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக் |
|
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள், |
|
மா மகள் |
|
....................... ல் என வினவுதி, கேள், நீ: |
|
5 |
எடுப்பவெ...,.................................................. |
..........................மைந்தர் தந்தை |
|
இரும் பனை அன்ன பெருங் கை யானை |
|
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் |
|
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அ............................... பாடியது.
|
341 |
வேந்து குறையுறவும் கொடாஅன், ஏந்து கோட்டு |
|
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல், |
|
செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை, |
|
எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின் |
|
5 |
அரை மண் இஞ்சி நாட் கொடி நுடங்கும் |
.......................................................................................................... |
|
புலிக் கணத்து அன்ன கடுங் கண் சுற்றமொடு, |
|
மாற்றம் மாறான், மறலிய சினத்தன், |
|
'பூக் கோள்' என ஏஎய், கயம் புக்கனனே; |
|
10 |
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல் இயல், |
சுணங்கு அணி வன முலை, அவளொடு நாளை |
|
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ |
|
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின், |
|
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு |
|
15 |
வாரா உலகம் புகுதல் ஒன்று எனப் |
படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக் |
|
களிறு பொரக் கலங்கிய தண் கயம் போல, |
|
பெருங் கவின் இழப்பது கொல்லோ, |
|
மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
342 |
'கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும் |
|
மயிலைக் கண்ணி, பெருந் தோள் குறுமகள், |
|
ஏனோர் மகள்கொல் இவள்?' என விதுப்புற்று, |
|
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை! |
|
5 |
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே |
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; |
|
பைங் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை |
|
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின், |
|
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, |
|
10 |
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், |
தண் பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும் |
|
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின், |
|
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா, |
|
வாள் தக வைகலும் உழக்கும் |
|
15 |
மாட்சியவர், இவள் தன்னைமாரே. |
திணையும் துறையும் அவை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
345 |
களிறு அணைப்பக் கலங்கின, காஅ, |
|
தேர் ஓடத் துகள் கெழுமின, தெருவு; |
|
மா மறுகலின் மயக்குற்றன, வழி; |
|
கலம் கழாஅலின், துறை கலக்குற்றன; |
|
5 |
தெறல் மறவர் இறை கூர்தலின், |
பொறை மலிந்து நிலன் நெளிய, |
|
வந்தோர் பலரே, வம்ப வேந்தர், |
|
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் |
|
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி, |
|
10 |
கருங் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை, |
மையல் நோக்கின், தையலை நயந்தோர் |
|
அளியர் தாமே; இவள் தன்னைமாரே |
|
செல்வம் வேண்டார், செருப் புகல் வேண்டி, |
|
'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்' என; |
|
15 |
கழிப் பிணிப் பலகையர், கதுவாய் வாளர், |
குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு |
|
கழாஅத் தலையர், கருங் கடை நெடு வேல் |
|
இன்ன மறவர்த்துஆயினும் அன்னோ! |
|
என் ஆவது கொல்தானே |
|
20 |
பன்னல் வேலி இப் பணை நல் ஊரே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
347 |
உண்போன் தான் நறுங் கள்ளின் இடச் சில |
|
நா இடைப் பல் தேர் கோலச் சிவந்த |
|
ஒளிறு ஒள் வாடக் குழைந்த பைந் தும்பை, |
|
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின், |
|
5 |
மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை, |
குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன |
|
குவை இருங்கூந்தல் வரு முலை சேப்ப, |
|
........................................................................................................... |
|
என் ஆவதுகொல் தானே?..................................... |
|
10 |
விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர் |
வினை நவில் யானை பிணிப்ப, |
|
வேர் துளங்கின, நம் ஊருள் மரனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கபிலர் பாடியது.
|
348 |
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ, |
|
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய, |
|
கள் அரிக்கும் குயம், சிறு சில் |
|
மீன் சீவும் பாண் சேரி, |
|
5 |
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, |
குவளை உண்கண் இவளை, தாயே |
|
ஈனாளாயினள்ஆயின், ஆனாது |
|
நிழல்தொறும் நெடுந் தேர் நிற்ப, வயின்தொறும், |
|
செந் நுதல் யானை பிணிப்ப, |
|
10 |
வருந்தலமன் எம் பெருந் துறை மரனே! |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|
351 |
படு மணி மருங்கின பணைத் தாள் யானையும், |
|
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும், |
|
படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லென, |
|
கடல் கண்டன்ன கண் அகன் தானை |
|
5 |
வென்று எறி முரசின் வேந்தர், என்றும், |
வண் கை எயினன் வாகை அன்ன |
|
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்; |
|
என் ஆவதுகொல் தானே தெண் நீர்ப் |
|
பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை |
|
10 |
தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின், |
காமரு காஞ்சித் துஞ்சும் |
|
ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.
|
359 |
பாறுபடப் பறைந்த பல் மாறு மருங்கின், |
|
வேறு படு குரல வெவ் வாய்க் கூகையொடு, |
|
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல, |
|
பேஎய் மகளிர் பிணம் தழூஉப் பற்றி, |
|
5 |
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர், |
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி, |
|
ஈம விளக்கின் வெருவரப் பேரும் |
|
காடு முன்னினரே, நாடு கொண்டோரும்; |
|
நினக்கும் வருதல் வைகல் அற்றே; |
|
10 |
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; |
அதனால், வசை நீக்கி இசை வேண்டியும், |
|
நசை வேண்டாது நன்று மொழிந்தும், |
|
நிலவுக் கோட்டுப் பல களிற்றொடு, |
|
பொலம் படைய மா மயங்கிட, |
|
15 |
இழை கிளர் நெடுந் தேர் இரவலர்க்கு அருகாது, |
'கொள்' என விடுவை ஆயின், வெள்ளென, |
|
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும், |
|
ஈண்டு நீடு விளங்கும், நீ எய்திய புகழே. |
|
திணை அது; துறை பெருங்காஞ்சி.
| |
அந்துவன் கீரனைக் காவட்டனார் பாடியது.
|
361 |
கார் எதிர் உருமின் உரறி, கல்லென, |
|
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்! |
|
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல |
|
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு, |
|
5 |
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத் |
தாயின் நன்று பலர்க்கு ஈத்து, |
|
தெருள் நடை மா களிறொடு தன் |
|
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும், |
|
உருள் நடை ........................ான்றதன் |
|
10 |
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், |
புரி மாலையர் பாடினிக்குப் |
|
பொலந் தாமரைப் பூம் பாணரொடு |
|
கலந்து அளைஇய நீள் இருக்கையால் |
|
பொறையொ............ மான் நோக்கின், |
|
15 |
வில் என விலங்கிய புருவத்து, வல்லென |
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர் |
|
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென |
|
............................................பொலங்கலத்து ஏந்தி, |
|
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன், |
|
20 |
நில்லா உலகத்து............... மை நீ |
சொல்ல வேண்டா................. முந்தறிந்த |
|
....................................................................................
| |
...............................................னார் பாடியது.
|
368 |
களிறு முகந்து பெயர்குவம் எனினே, |
|
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல, |
|
கைம்மா எல்லாம் கணை இடத் தொலைந்தன; |
|
கொடுஞ்சி நெடுந் தேர் முகக்குவம் எனினே; |
|
5 |
கடும் பரி நல் மான் வாங்குவயின் ஒல்கி, |
நெடும் பீடு அழிந்து, நிலம் சேர்ந்தனவே; |
|
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே, |
|
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிதாகி, |
|
வளி வழக்கு அறுத்த வங்கம் போல, |
|
10 |
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே; ஆங்க |
முகவை இன்மையின் உகவை இன்றி, |
|
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து, |
|
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ! |
|
கடாஅ யானைக் கால்வழி அன்ன என் |
|
15 |
தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி, |
பாடி வந்தது எல்லாம், கோடியர் |
|
முழவு மருள் திரு மணி மிடைந்த நின் |
|
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே. |
|
திணை வாகை; துறை மறக்களவழி.
| |
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற் பல் தடக் கைப் பெரு நற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.
|
369 |
இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின், |
|
கருங் கை யானை கொண்மூ ஆக, |
|
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த |
|
வாள் மின் ஆக, வயங்கு கடிப்பு அமைந்த |
|
5 |
குருதிப் பலிய முரசு முழக்கு ஆக, |
அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின், |
|
வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக, |
|
விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த |
|
கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை. |
|
10 |
ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக, |
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின் |
|
செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைஞ் சால், |
|
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி, |
|
விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ், |
|
15 |
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு, |
கண நரியோடு கழுது களம் படுப்ப, |
|
பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ, |
|
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள! |
|
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி |
|
20 |
வேய்வை காணா விருந்தின் போர்வை |
அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றி, |
|
பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று |
|
எழிலி தோயும் இமிழ் இசை அருவி, |
|
பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன |
|
25 |
ஓடை நுதல, ஒல்குதல் அறியா, |
துடி அடிக் குழவிய பிடி இடை மிடைந்த |
|
வேழ முகவை நல்குமதி |
|
தாழா ஈகைத் தகை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை; துறை ஏர்க்கள உருவகமும் ஆம்.
| |
சேரமான் கடல் ஓட்டிய வெல் கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.
|
370 |
...............................................................................................................ளி, |
|
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப் |
|
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு |
|
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ, |
|
5 |
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து, |
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல், |
|
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் |
|
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண், |
|
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை, |
|
10 |
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட, |
பழுமரம் உள்ளிய பறவை போல, |
|
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென, |
|
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப, |
|
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து, |
|
15 |
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி, |
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி, |
|
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி, |
|
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி, |
|
20 |
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் |
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும! |
|
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த |
|
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார் |
|
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி, |
|
25 |
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு |
செஞ் செவி எருவை திரிதரும், |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
|
371 |
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது, |
|
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி, |
|
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து, |
|
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடி, |
|
5 |
பறையொடு தகைத்த கலப் பையென், முரவு வாய் |
ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி, |
|
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப, |
|
குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன், |
|
அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி, |
|
10 |
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப, |
வரு கணை வாளி....... அன்பு இன்று தலைஇ, |
|
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, |
|
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி, |
|
குறைத் தலைப் படு பிணன் எதிர, போர்பு அழித்து, |
|
15 |
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி |
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
மதியத்து அன்ன என் விசி உறு தடாரி |
|
அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின், |
|
பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை, |
|
20 |
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும! |
களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி, |
|
விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள், |
|
குடர்த் தலை மாலை சூடி, 'உணத் தின |
|
ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து |
|
25 |
வயங்கு பல் மீனினும் வாழியர், பல' என, |
உரு கெழு பேய்மகள் அயர, |
|
குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
373 |
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப, |
|
செரு நவில் வேழம் கொண்மூ ஆக, |
|
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக் |
|
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை, |
|
5 |
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் |
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப, |
|
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை, |
|
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே! |
|
................................................தண்ட மாப் பொறி. |
|
10 |
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு, |
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து, |
|
மென் தோள் மகளிர் மன்றம் பேணார், |
|
புண்ணுவ |
|
..........................அணியப் புரவி வாழ்க என, |
|
15 |
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர, |
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர் |
|
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா, |
|
........................................................ற் றொக்கான |
|
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை, |
|
20 |
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு, |
உரும் எறி மலையின், இரு நிலம் சேர, | |
சென்றோன் மன்ற, சொª |
|
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப, |
|
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, |
|
25 |
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் |
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி; |
|
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்! |
|
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று, |
|
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி, |
|
30 |
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும் |
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற, |
|
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி, |
|
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின், |
|
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும! |
|
35 |
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் |
தா இன்று உதவும் பண்பின், பேயொடு |
|
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து |
|
செஞ் செவி எருவை குழீஇ, |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
40 |
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம். |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
| |
கிழார் பாடியது.
|
373 |
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப, |
|
செரு நவில் வேழம் கொண்மூ ஆக, |
|
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக் |
|
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை, |
|
5 |
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் |
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப, |
|
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை, |
|
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே! |
|
................................................தண்ட மாப் பொறி. |
|
10 |
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு, |
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து, |
|
மென் தோள் மகளிர் மன்றம் பேணார், |
|
புண்ணுவ |
|
..........................அணியப் புரவி வாழ்க என, |
|
15 |
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர, |
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர் |
|
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா, |
|
........................................................ற் றொக்கான |
|
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை, |
|
20 |
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு, |
உரும் எறி மலையின், இரு நிலம் சேர, |
|
சென்றோன் மன்ற, சொெ |
|
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப, |
|
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, |
|
25 |
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் |
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி; |
|
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்! |
|
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று, |
|
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி, |
|
30 |
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும் |
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற, |
|
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி, |
|
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின், |
|
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும! |
|
35 |
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் |
தா இன்று உதவும் பண்பின், பேயொடு |
|
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து |
|
செஞ் செவி எருவை குழீஇ, |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
40 |
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம். |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
| |
கிழார் பாடியது.
|
374 |
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் |
|
புல்வாய் இரலை நெற்றி அன்ன, |
|
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத் |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
5 |
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என் |
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
|
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர, |
|
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட, |
|
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர் |
|
10 |
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா |
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை, |
|
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம், |
|
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும், |
|
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ, |
|
15 |
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன், |
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல, |
|
வண்மையும் உடையையோ? ஞாயிறு! |
|
கொன் விளங்குதியால் விசும்பினானே! |
|
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
| |
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|
377 |
பனி பழுநிய பல் யாமத்துப் |
|
பாறு தலை மயிர் நனைய, |
|
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின், |
|
இனையல் அகற்ற, என் கிணை தொடாக் குறுகி, |
|
5 |
'அவி உணவினோர் புறங்காப்ப, |
அற நெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று, |
|
அதற் கொண்டு வரல் ஏத்தி, |
|
'''கரவு இல்லாக் கவி வண் கையான், |
|
வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர் |
|
10 |
பிறர்க்கு உவமம் தான் அல்லது, |
தனக்கு உவமம் பிறர் இல்' என, |
|
அது நினைந்து, மதி மழுகி, |
|
ஆங்கு நின்ற எற் காணூஉச் |
|
'சேய் நாட்டுச் செல் கிணைஞனை! |
|
15 |
நீ புரவலை, எமக்கு' என்ன, |
மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், |
|
கடல் பயந்த கதிர் முத்தமும், |
|
வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும், |
|
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப, |
|
20 |
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்; |
நாடு என மொழிவோர், 'அவன் நாடு' என மொழிவோர்; |
|
வேந்து என மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்; |
|
.........................பொற் கோட்டு யானையர், |
|
கவர் பரிக் கச்சை நல் மான், |
|
25 |
வடி மணி, வாங்கு உருள, |
.....................,..........நல் தேர்க் குழுவினர், |
|
கதழ் இசை வன்கணினர், |
|
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி, |
|
கடல் ஒலி கொண்ட தானை |
|
30 |
அடல் வெங் குருசில்! மன்னிய நெடிதே! |
திணை அது; துறை வாழ்த்தியல்.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.
|
387 |
வள் உகிர வயல் ஆமை |
|
வெள் அகடு கண்டன்ன, |
|
வீங்கு விசிப் புதுப் போர்வைத் |
|
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும் |
|
5 |
மாறு கொண்டோர் மதில் இடறி, |
நீறு ஆடிய நறுங் கவுள, |
|
பூம் பொறிப் பணை எருத்தின, |
|
வேறு வேறு பரந்து இயங்கி, |
|
வேந்துடை மிளை அயல் பரக்கும் |
|
10 |
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை, |
திருந்து தொழில் பல பகடு |
|
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின் |
|
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி, |
|
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று, |
|
15 |
யான் இசைப்பின், நனி நன்று எனா, |
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?......... |
|
மருவ இன் நகர் அகன்................................. |
|
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி, |
|
வென்று இரங்கும் விறல் முரசினோன், |
|
20 |
என் சிறுமையின், இழித்து நோக்கான், |
தன் பெருமையின் தகவு நோக்கி, |
|
குன்று உறழ்ந்த களிறு என்கோ? |
|
கொய் உளைய மா என்கோ? |
|
மன்று நிறையும் நிரை என்கோ? |
|
25 |
மனைக் களமரொடு களம் என்கோ? |
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின் |
|
நல்கியோனே, நசைசால் தோன்றல், |
|
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்! |
|
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள் |
|
30 |
செல்வக் கடுங்கோ வாழியாதன் |
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண் |
|
விடுவர் மாதோ நெடிதே நி |
|
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும் |
|
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் |
|
35 |
பல் ஊர் சுற்றிய கழனி |
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.
|
388 |
வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல், |
|
பள்ளம், வாடிய பயன் இல் காலை, |
|
இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர் |
|
................................................................................பொருந்தி, |
|
5 |
தன் நிலை அறியுநனாக, அந் நிலை, |
இடுக்கண் இரியல் போக, உடைய |
|
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல், |
|
.......................................................................னாமருப்பாக, |
|
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி |
|
10 |
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென, |
வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா, |
|
நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா |
|
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன், |
|
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை |
|
15 |
அண்ணல் யானை வழுதி, |
கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே! |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.
|
389 |
'நீர் நுங்கின் கண் வலிப்ப, |
|
கான வேம்பின் காய் திரங்க, |
|
கயம் களியும் கோடை ஆயினும், |
|
ஏலா வெண்பொன் போருறு காலை, |
|
5 |
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!' |
என்று ஈத்தனனே, இசைசால் நெடுந்தகை; |
|
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்; |
|
செலினே, காணா வழியனும் அல்லன்; |
|
புன் தலை மடப் பிடி இனைய, கன்று தந்து, |
|
10 |
குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும் |
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன், |
|
செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன்! |
|
ஆதனுங்கன் போல, நீயும் |
|
பசித்த ஒக்கல் பழங்கண் வீட, |
|
15 |
வீறுசால் நன் கலம் நல்குமதி, பெரும! |
ஐது அகல் அல்குல் மகளிர் |
|
நெய்தல் கேளன்மார், நெடுங் கடையானே! |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
|
390 |
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும் |
|
மறவை நெஞ்சத்து ஆயிவாளர், |
|
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ், |
|
.........................................................மன்ன முற்றத்து, |
|
5 |
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர் |
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர், |
|
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என் |
|
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப் |
|
பாடி நின்ற பல் நாள் அன்றியும், |
|
10 |
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் |
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற |
|
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என, |
|
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை |
|
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து, |
|
15 |
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ, |
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும், |
|
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் |
|
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி, |
|
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை |
|
20 |
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற, |
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன |
|
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி, |
|
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை |
|
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்; |
|
25 |
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி, |
............................................................................................................................. |
|
வான் அறியல என் பாடு பசி போக்கல்; |
|
அண்ணல் யானை வேந்தர் |
|
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
392 |
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான், |
|
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான் |
|
பசலை நிலவின் பனி படு விடியல், |
|
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை |
|
5 |
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ, |
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து, |
|
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து |
|
அணங்குடை மரபின் இருங் களந்தோறும், |
|
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, |
|
10 |
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் |
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச் |
|
சென்று யான் நின்றனெனாக, அன்றே, |
|
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி |
|
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை |
|
15 |
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத் |
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் |
|
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ, |
|
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை |
|
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து |
|
20 |
அரும் பெறல் அமிழ்தம் அன்ன |
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.
|
394 |
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின், |
|
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன், |
|
வலி துஞ்சு தடக் கை வாய் வாள் குட்டுவன், |
|
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும், |
|
5 |
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்! |
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை, |
|
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
|
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை |
|
வாடா வஞ்சி பாடினேனாக, |
|
10 |
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி, |
கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின் |
|
வெஞ் சின வேழம் நல்கினன்; அஞ்சி |
|
யான் அது பெயர்த்தனெனாக, தான் அது |
|
சிறிது என உணர்ந்தமை நாணி, பிறிதும் ஓர் |
|
15 |
பெருங் களிறு நல்கியோனே; அதற்கொண்டு, |
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்புறினும், |
|
'துன் அரும் பரிசில் தரும்' என, |
|
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே. |
|
திணையும் துறையும் அவை. |
|
கடைநிலை ஆயின எல்லாம் பாடாண் திணை.
| |
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
395 |
மென் புலத்து வயல் உழவர் |
|
வன் புலத்துப் பகடு விட்டு, |
|
குறு முயலின் குழைச் சூட்டொடு |
|
நெடு வாளைப் பல் உவியல், |
|
5 |
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, |
புதல் தளவின் பூச் சூடி, |
|
................................................................ |
|
...........................அரியலாருந்து; |
|
மனைக் கோழிப் பைம் பயிரின்னே, |
|
10 |
கானக் கோழிக் கவர் குரலொடு |
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; |
|
வேய் அன்ன மென் தோளால், |
|
மயில் அன்ன மென் சாயலார், |
|
கிளி கடியின்னே, |
|
15 |
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; |
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் |
|
சீர் சான்ற விழுச் சிறப்பின், |
|
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் |
|
செல்லா நல் இசை உறந்தைக் குணாது, |
|
20 |
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் |
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! |
|
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, |
|
கதிர் நனி செ ...................................... மாலை, |
|
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், |
|
25 |
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, |
ஆங்கு நின்ற எற்கண்டு, |
|
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், |
|
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, |
|
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப் |
|
30 |
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை |
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு, |
|
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; |
|
அகன் ஞாலம் பெரிது வெம்பினும், |
|
மிக வானுள் எரி தோன்றினும், |
|
35 |
குள மீனொடும் தாள் புகையினும், |
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் |
|
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி, |
|
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என, |
|
உள்ளதும் இல்லதும் அறியாது, |
|
40 |
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
|